தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குரு பெயர்ச்சி

View previous topic View next topic Go down

குரு பெயர்ச்சி Empty குரு பெயர்ச்சி

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 4:48 pm

குரு பெயர்ச்சி - 12 ராசிகளுக்கும் தனித்தனி பலன்கள் - 28.5.2013 முதல் 12.6.2014 வரை
குரு பெயர்ச்சி %E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D

எதிர் வரும், 28ம் தேதி, 28.05.2013 இரவு, 9:00 மணிக்கு, குரு பகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறார்.

மனித வாழ்க்கையின் ஏற்றம்-இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை அளிப்போர் நவகிரஹங்கள் எனப் போற்றப்பெறும் நவநாயகர்களே ஆவர். ஒன்பது கிரஹங்களில் ஐந்தாவதாக - நடு நாயகராகத் திகழ்பவர் குருபகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரஹம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு.

அதனால்தான் ”குரு பார்க்க கோடி நன்மை” ”குரு பார்வை தோஷ நிவர்த்தி” என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப்பெறுகின்றது. குரு பெயர்ச்சி என்பது குருபகவான் ராசி மண்டலத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றோர் ராசிக்குச் செல்லும் நிகழ்வாகும். இந்த குருப்பெயர்ச்சி என்பது சுமாராக ஓர் ஆண்டிற்கு ஒருமுறை நிகழ்வது ஆகும். நவகிரகங்களில் பூரண சுபகிரகமான குருபகவான், ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் பன்னிரண்டு ராசிகளைச் சேர்ந்த அன்பர்களுக்கு ஏற்படக்கூடிய பலாபலன்களே கோசார பலன்கள் எனப்படும்.

பொதுவாக குருபகவான் ஒரு ராசிக்கு 2, 5, 7, 9, 11 போன்ற இடங்களில் சஞ்சரிக்கும்போது சுப பலன்களையும் 1, 3, 4, 5, 8, 10, 12 இடங்களில் சஞ்சரிக்கும்போது அசுப பலன்களையும் வழங்குவார் என்பது விதி. ஆனால், இது பொதுவான விதிதான். அவரவருடைய சுய ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலைகளின்படியும், தசாபுத்திகளின் படியும் கோசார பலன்கள் மாறுபடும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குரு பெயர்ச்சி Empty Re: குரு பெயர்ச்சி

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 4:50 pm

மேஷம்: அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

புது வேலை கிடைக்கும்

அடங்கிப் படுத்திருக்கும் நாய், அலையின்றி கிடக்கும் நீர்நிலை இரண்டிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பதை உணர்ந்த நீங்கள், சுற்றுச் சூழ்நிலை அறிந்து அதற்கேற்ப காய் நகர்த்துவதில் வல்லவர்கள். உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் இதுவரை உங்களின் தன வீடான 2ம் வீட்டில் அமர்ந்து செல்வாக்கையும் பணவரவையும் தந்தார். வெளிவட்டாரத்திலும் உங்கள் கை ஓங்கியிருந்தது. பலரும் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால், 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்களின் விரய, பாக்ய ஸ்தானாதிபதியான குருபகவான் மூன்றாம் வீட்டில் மறைவதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். பல வேலைகளை முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டியிருக்கும். முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவினங்களும் துரத்தும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். திடீரென்று புதிதாக அறிமுகமாகும் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வரவேண்டாம்.

வசதி, செல்வாக்கை கண்டு மயங்கி தவறானவர்களுடன் சென்றுவிட வேண்டாம். அசைவ மற்றும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது. மூச்சுத் திணறல், வாயுத் தொந்தரவால் நெஞ்சுவலி வந்துபோகும். மருத்துவரை ஆலோசித்து மருந்து உட்கொள்வது நல்லது. மனைவிவழி உறவினர்களால் செலவினங்களும் அலைச்சலும் இருக்கும். ஏழாம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வரும். அன்பும் அன்யோன்யமும் குறையாது. விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். குருபகவான் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஓரளவு பணவரவு உண்டு. பழைய கடன் பிரச்னையால் நிம்மதியிழப்பீர்கள். தந்தையாருடன் இருந்த கருத்து மோதல்கள் குறையும். வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உறவினர், நண்பர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். குருபகவான் 11ம் வீட்டைப் பார்ப்பதால் கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் செல்வதால் திறமைகள் வெளிப்படும். எதிரிகளும் நண்பர்களாவார்கள். சொத்துகள் மூலம் திடீர் பணவரவு உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உடன்பிறந்தவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தாயாரின் உடல்நிலை சீராகும். வாகனம் வாங்குவீர்கள்.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகுபகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள், வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் பிரிவு ஏற்படக் கூடும். கொஞ்சம் விட்டுக் கொடுத்து போங்கள். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து நீங்கும். வேற்றுமொழி பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் பாக்ய விரயாதிபதியான குருவின் சாரத்திலேயே குருபகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் ஓரளவு கைக்கு வரும்.

குழந்தை பாக்யம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு புதுவேலை கிடைக்கும். திருமணம், கோயில் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

உங்களின் அடிப்படை வசதிகள் பெருகும். மகனின் திருமணத்தை விமரிசையாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பாதியில் நின்ற வீட்டை கட்டி முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள். சரக்குகளை கொள்முதல் செய்யும்போது கவனம் தேவை. சந்தை நிலவரத்தை தெரிந்து செயல்படப் பாருங்கள்.

வேலையாட்களால் பிரச்னைகள் வரும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டி வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் சிலர் தன் பங்கைக் கேட்டுத் தொந்தரவு தருவார்கள். உணவு, டிராவல்ஸ், பப்ளிகேஷன், அழகு சாதனப் பொருட்களால் லாபமடைவீர்கள். அதிக முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களும் வீண் பழியும் வந்து செல்லும். திறமை இருந்தும் கடினமாக உழைத்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள்.

அதிகாரிகள் ஆதரவாகப் பேசினாலும் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது. சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றமும் வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்று தாமதமாகக் கிடைக்கும். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டாம்.

கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். காதல் கசந்து இனிக்கும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். உங்களின் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். மாணவ-மாணவிகளே! விடைகளை எழுதிப் பாருங்கள். கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப் பாருங்கள். படிப்பில் ஆர்வம் காட்டுங்கள். கட்டுரை, பேச்சு, இலக்கிய போட்டிகளில் பரிசு பெறுவீர்கள்.

நீங்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் போராடி இடம் பிடிப்பீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் ஆதரவு கிட்டும். போட்டிகள் இருக்கும். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். உங்கள் உழைப்பிற்கு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். அரசியல்வாதிகளே! எதிர்க்கட்சியினரை தகுந்த ஆதாரமில்லாமல் தாக்கிப் பேச வேண்டாம். சகாக்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை அதிகரிக்கும். அக்கம்-பக்க நிலத்தாரை அனுசரித்துப் போங்கள். மரப்பயிர் லாபம் தரும்.

இந்த குரு மாற்றம் ஏமாற்றங்களையும் எதிலும் தாமதத்தையும் ஏற்படுத்தினாலும் விட்டுக் கொடுத்துப் போகும் குணத்தால் மகிழ்ச்சியை தரும்.

பரிகாரம்

மதுரை - திருப்பரங்குன்றம் முருகப் பெருமானை சஷ்டி திதியன்று சென்று தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குரு பெயர்ச்சி Empty Re: குரு பெயர்ச்சி

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 4:53 pm

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீர்ஷம் 1, 2 பாதங்கள் வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

வெற்றிகள் குவியும்

வனத்தில் மேய்ந்தாலும் இனத்தில் வந்து சேரணும் என்ற பழமொழியை அறிந்த நீங்கள், பல நாடு நகரம் சென்றாலும் தாய்மண்ணை மறக்க மாட்டீர்கள். இயற்கையை அதிகம் நேசிக்கும் நீங்கள், எதிர்நீச்சல் போடுவதில் வல்லவர்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்குள் உட்கார்ந்து கொண்டு எப்போதும் மருந்து, மாத்திரையுமாக உங்களை பாடாய்ப்படுத்தினாரே குருபகவான். குடும்பத்தில் சாதாரணமாகப் பேசினாலும் சண்டையில் முடிந்ததே! திறமை இருந்தும் அங்கீகாரம் கிடைக்காமல் அவதிப் பட்டீர்களே!

சந்தேகத்தால் கணவன்-மனைவி பிரிந்தீர்களே! ஈகோவால் சில நல்ல வாய்ப்புகளை இழந்தீர்களே! தாழ்வு மனப்பான்மையால் தள்ளியிருந்தீர்களே! இப்படி உங்களை சிக்கவைத்து வேடிக்கை பார்த்த குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரையுள்ள காலகட்டத்தில் உங்கள் ராசியை விட்டு விலகி தனவீடான 2ம் வீட்டில் அமர்வதால் சோர்ந்திருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள்.

எதிர்பார்த்த வகையில் பணம் வந்து எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் புயல் வீசிய வீட்டில் அமைதி திரும்பும். எப்போது பார்த்தாலும் முக வாட்டத்துடனும் ஒருவித பதட்டத்துடனும் வலம் வந்தீர்களே! இனி அந்த பயம் நீங்கும். முகம் மலரும். தோற்றப் பொலிவு கூடும். பெரிய நோய் இருப்பதை போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். உடல் நலம் சீராகும். பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள்.

அவர்களின் பிடிவாதம் தளரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். எதிர்மறை எண்ணங்கள், கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களிடமிருந்து விலகுவீர்கள். முன்கோபத்தால் நல்ல நண்பர்கள், விஐபிகளை எல்லாம் இழந்தீர்கள்! இனி கனிவாகப் பேசுவீர்கள்.

ஆடை, ஆபரணம் சேரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதிதாக வாங்குவீர்கள். குருபகவான் ஆறாவது வீட்டை பார்ப்பதால் கடன் பிரச்னையால் கௌரவம் குறைந்துவிடுமோ என்ற பயம் நீங்கும். எதிர்ப்புகள் அடங்கும். வழக்கு சாதகமாகும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சருமத்தில் இருந்த நமைச்சல், தேமல், முடி உதிர்தல் நீங்கும். குருபகவான் எட்டாவது வீட்டை பார்ப்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

மூச்சுத் திணறல், மூச்சுப் பிடிப்பு, சளித் தொந்தரவுகள் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குருபகவான் பத்தாவது வீட்டையும் பார்ப்பதால் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு புகழடைவீர்கள். புதுவேலை கிடைக்கும். சங்கம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்களின் சப்தம, விரயாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் சகோதரர் உதவுவார். உங்களின் பலவீனத்தை சரி செய்து கொள்வீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மாமனார், மாமியார் உதவுவார்கள். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக முடியும்.

மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. மறைமுக எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். ஷேர் மூலம் பணம் வரும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். சொத்து சேரும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள்.

வாகனம் வாங்குவீர்கள். 29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்களின் அஷ்டம, லாபாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். புது பொறுப்புகள், பதவிகளை ஏற்க வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள்.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலகட்டத்தில் திடீர் பயணங்கள், வீண் செலவுகள், ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் வந்து செல்லும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள்.

வியாபாரத்தில் கடந்த ஓராண்டு காலமாக ஏற்பட்ட நஷ்டங்களை சரி செய்வீர்கள். புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். பற்று வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேலையாட்களை நீக்கி விட்டு தகுதியான, அனுபவமிக்க, பொறுப்புணர்வு வாய்ந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பங்குதாரர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.

சந்தையில் மதிப்பு கூடும். ரியல் எஸ்டேட், கணினி உதிரி பாகங்கள், கட்டிடம், கெமிக்கல் வகைகளால் லாபம் கூடும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்பட்டீர்களே, பழிவாங்கப்பட்டீர்களே! இனி இதுவரை இருந்து வந்த அவமானங்கள், ஏமாற்றங்கள் நீங்கும். உங்களின் கடின உழைப்பை அதிகாரிகள் புரிந்து கொள்வார்கள்.

வேலையில் ஆர்வம் பிறக்கும். சக ஊழியர்கள் மத்தியில் இருந்த அதிருப்தி விலகும். பதவி உயர்வுக்காக உங்களது பெயர் பரிசீலிக்கப்படும். சம்பளம் உயரும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும். வருமானம் பெருகும்.

கன்னிப் பெண்களே! நல்லவர்களின் நட்பு கிட்டும். திருமணம் கூடிவரும். உங்களின் எதிர்பார்ப்பிற்கு தகுந்தாற்போல் கணவர் அமைவார். சிலருக்கு வேற்று மாநிலத்தில் வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். மாணவ-மாணவிகளே! கணக்கு பாடத்துடன் இருந்த பிணக்கு நீங்கும். படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும்.

வகுப்பறையில் சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். உயர்கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்று எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீர்கள். கலைத்துறையினரே! மாறுபட்ட சிந்தனை பிறக்கும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். மூத்த கலைஞர்களின் ஆதரவால் உங்களின் புது முயற்சிகள் வெற்றியடையும். வசதி, வாய்ப்புகள் பெருகும். கிசுகிசுத் தொல்லை நீங்கும்.

அரசியல்வாதிகளே! தலைமைக்கு நீங்கள் நெருக்கமாக இருந்தாலும் மாவட்டமும் வட்டமும் விரித்த வலையில் சிக்கினீர்களே! இனி பெரிய பொறுப்புகள் தேடி வரும். தேர்தலில் வெற்றி கிட்டும். விவசாயிகளே! மாற்றுப்பயிர் செய்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். வாய்க்கால், வரப்புச் சண்டை தீரும். மகளின் திருமணத்தை விமரிசையாக முடிப்பீர்கள்.

இந்த குரு மாற்றம் சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும் வீடு, மனை, வாகன யோகத்தையும் அள்ளித் தரும்.

பரிகாரம்

சென்னை-பாரிமுனையில் உள்ள கந்தசாமி கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். அன்னதானம் செய்யுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குரு பெயர்ச்சி Empty Re: குரு பெயர்ச்சி

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 4:55 pm

மிதுனம்: மிருக சீர்ஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

பணப்புழக்கம் அதிகரிக்கும்

ஆயிரம் காசு உள்ளவன் அமைதியாய் இருப்பான், அரைக்காசு உள்ளவன் ஆடித் துள்ளுவான் என்பதை அறிந்த நீங்கள், பணம் வந்த பின்பும் பகட்டாக வாழத் தெரியாதவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்து வீண்பழி, அலைச்சல், திடீர் பயணங்கள், செலவினங்கள், தூக்கமின்மையை தந்த குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்ம குருவாக தொடர இருப்பதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். தலைச்சுற்றல், காய்ச்சல், மஞ்சள் காமாலை, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல் வரக்கூடும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. காய், கனி, கீரை வகைகளை ஒதுக்காதீர்கள்.

‘ஜென்மத்தில் சீதையை ராமர் சிறை வைத்தது போல்’ என்ற பாடல்படி கணவன்-மனைவிக்குள் பிரச்னைகள் அதிகரிக்கும்.

ஒரே வீட்டில் இருந்துகொண்டே ஒருவருக்கொருவர் சில நாட்களில், சில நேரங்களில் மௌனமாக இருக்க வேண்டியது வரும். பெரிய நோய் இருப்பதைப்போல் பயம் வந்துபோகும். மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரேநாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டியது வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற டென்ஷன் இருக்கும். உங்களின் திறமை மீது அவ்வப்போது சந்தேகம் வரும். ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அடிக்கடி மனஅழுத்தங்களும் வரக்கூடும். குருபகவான் 7ம் வீட்டை பார்ப்பதால் கணவன்-மனைவிக்குள் அன்பு குறையாது. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் அதிகரிக்கும்.

அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். குருபகவான் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் புத்திர பாக்யம் உண்டு. பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக அமையும். மகள் உங்களை புரிந்து கொள்வாள். மகனின் அலட்சியப்போக்கு மாறும். பூர்வீகச் சொத்துப் பங்கு கைக்கு வரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சகோதர, சகோதரிகளால் ஆதாயமும் உண்டாகும். குரு உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை நல்ல விதத்தில் முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உயர்ரக ஆபரணம் வாங்குவீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை இக்காலகட்டங்களில் உங்கள் சஷ்டம லாபாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் செலவு கூடும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். மறைமுக எதிர்ப்பு, சிறுசிறு அவமானம் வந்துசெல்லும். கை, காலில் அடிபடக் கூடும். சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். சகோதர, சகோதரிகளால் சங்கடங்கள் வரும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் தரக் குறைவாக பேச வேண்டாம். பழைய கடனை நினைத்து கலங்குவீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகுபகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் சின்னச் சின்ன மன சஞ்சலங்கள், வீண் டென்ஷன், பிறர் மீது நம்பிக்கையின்மை வந்து செல்லும். பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நல்லது என்று நினைப்பீர்கள்.

உங்கள் இளமை காலத்துடன் அவர்களை ஒப்பிட்டுப் பார்த்து கொஞ்சம் பெருமூச்சு விடுவீர்கள். உறவினர்களுடன் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. இக்காலக்கட்டத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு யூரினரி இன்பெக்ஷன், செரிமானக் கோளாறு, தோல் நோய் வந்து நீங்கும்.

29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்களின் சப்தம, ஜீவனாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மனைவியுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள்.

உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விரும்பத்தகாத இடமாற்றம் வரும். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். இக்காலகட்டத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் வீண் பழி, ஏமாற்றம், பணப்பற்றாக்குறை வந்துபோகும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். கடையை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். போட்டிகளை சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டி வரும். வேலையாட்களால் விரயம் ஏற்படும். புதிதாக வரும் விளம்பரங்களைப் பார்த்து அறிமுகமில்லா தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

பங்குதாரர்களுடன் சச்சரவுகள் வரும். கமிஷன், புரோக்கரேஜ், ஸ்டேஷனரி, எரிபொருள் வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களின் திறமையை சோதிப்பார்கள். வளைந்து கொடுத்துப் போவது நல்லது. கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உயரதிகாரிகளால் அவ்வப்போது அலைக்கழிக்கப்பட்ட பின்னர் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பதவி உயர்வுக்கான தேர்வில் வெற்றி பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! மாதவிடாய்க் கோளாறு, மூச்சுத் திணறல் வந்து நீங்கும். காதல் விவகாரங்களில் சிக்காதீர்கள். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். பெற்றோரை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.

வேலை தாமதமாக கிடைக்கும். மாணவ-மாணவிகளே! விடைகளை எழுதிப் பாருங்கள். சிலர் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டி வரும். வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள். தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு தகவல் தருவது நல்லது. உட்கட்சி பூசலில் ஆர்வம் காட்டாதீர்கள். தலைமையை பகைத்துக் கொள்ள வேண்டாம். சகாக்கள் சிலர் உங்கள் மீது அதிருப்தியடைவார்கள். கலைத்துறையினரே! புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஏமாற வேண்டாம். உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். விவசாயிகளே! எலித் தொல்லை அதிகமாகும். கரும்பு, தேக்கு லாபம் தரும். குறுகிய காலப் பயிர்களால் நஷ்டம் வரும்.

இந்த குரு பெயர்ச்சி எதிர்காலம் பற்றிய ஒரு பயத்தையும் கேள்விக்குறியையும் தந்தாலும் அவ்வப்போது அனுசரித்துப் போவதன் மூலமாக ஓரளவு சாதிக்க வைக்கும்.

பரிகாரம்

மயிலாடுதுறையில் மேதா தட்சிணாமூர்த்தி என்றழைக்கப்படும் வள்ளலார் கோயிலுக்குச் சென்று வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குரு பெயர்ச்சி Empty Re: குரு பெயர்ச்சி

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 4:58 pm

கடகம்: புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

குழந்தை பாக்யம் கிடைக்கும்

இழுத்துக் கொண்டே போனால் அது இழுக்காகத்தான் போய் முடியும் என்ற பழமொழியை உணர்ந்த நீங்கள், காலம் கடத்தாமல் காரியத்தை முடிப்பதில் வல்லவர்கள். கலா ரசனை அதிகமுள்ள நீங்கள், தூய்மைக்கும் நேர்மைக்கும் பெயர் போனவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு பணவரவை தந்த குருபகவான் இப்போது 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்களின் விரய ஸ்தானமான 12ம் வீட்டில் நுழைவது ஒரு வகையில் நல்லதுதான்.

உங்களின் பாதக ஸ்தானமான 11ம் வீட்டை விட்டு குரு விலகுவதால் உங்களுக்கு பணவரவு குறையாது. ஷேர் மூலமும் பணம் வரும். ஆனால், சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். இரவு நேரத்தில் சொந்த வாகனத்தில் நெடுந்தூரம் பயணிப்பதை தவிர்க்கப் பாருங்கள்.

பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த புகழ் பெற்ற அண்டை மாநில புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்குவீர்கள். ஆன்மிகப் பெரியோரை சந்தித்து ஆசி பெறுவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சில நாட்களில் தூக்கம் குறையும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்களைக் கூட போராடி முடிக்க வேண்டி வரும். முன்பின் அறியாதவர்கள் நயமாகப் பேசுகிறார்கள் என்று நம்பி குடும்ப அந்தரங்க விஷயங்களையோ, தன் சொந்த விஷயங்களையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். பழைய நூல்கள் படிப்பதில் ஆர்வம் பிறக்கும்.

பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பீர்கள். தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கனவுத் தொல்லை அதிகரிக்கும். குருபகவான் உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல்நிலை சீராகும். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள். சிலர் புதியது வாங்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குரு 6ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். விஐபிகளின் நட்பு கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குரு 8ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்று மதத்தவர், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சிலருக்கு வெளிமாநிலத்தில், அயல்நாட்டில் வேலை கிடைக்கும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் செல்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். திடீர் யோகம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். புது பொறுப்புகள், பதவிகள் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, வேலை கிடைக்கும். அங்கு, இங்கு புரட்டி ஏதாவது ஒரு வீடோ, மனையோ வாங்கிவிட வேண்டுமென்று முயற்சிப்பீர்கள்.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வீடு கட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். என்றாலும் தாயாருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துபோகும். வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறாதீர்கள். போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம்.

சின்னச் சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். 29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்களின் சஷ்டம, பாக்யாதிபதியான குருபகவான் தன் சுய நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் விஐபிகள் அறிமுகமாவார்கள். புகழ், கௌரவம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும்.

அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை தீர்க்க வழி கிடைக்கும். 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். ஆனால், செலவுகளும் காத்துக் கொண்டிருக்கும். சொத்து வாங்குவீர்கள்.

உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை தெரிந்து கொள்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். கடையை விரிவுபடுத்தி நவீன மயமாக்குவீர்கள். தொழில் ரகசியங்களை கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். துணி, மின்னணு, மின்சார சாதனங்கள், புரோக்கரேஜ், துரித உணவு வகைகளால் லாபமடைவீர்கள்.

கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள். வேற்று மாநிலம், வெளிநாட்டிலிருப்பவர்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தந்தாலும் இரண்டாம் கட்ட அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். சக ஊழியர்களின் விடுப்பால் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். உங்களை சிலர் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம். நீங்கள் விருப்பப்பட்ட இடத்திற்கே இடமாற்றம் உண்டு.

சில சலுகைகள் கிடைக்கும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்டநாள் கனவுகள் நனவாகும். காதல் கைகூடும். சிலர் தடைபட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு வரும். வேலை நிமித்தம் காரணமாக பெற்றோரை விட்டு பிரிந்து வெளிநாடு செல்வீர்கள். கூடுதல் மொழி கற்பீர்கள். திருமணம் தடைபட்டு முடியும். மாணவமாணவிகளே! கெட்ட நண்பர்களை தவிர்க்கப் பாருங்கள். எல்லாம் தெரிந்ததுபோல் இருக்காதீர்கள். விடைகளை எழுதிப் பாருங்கள். உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டு பெறுவீர்கள்.

எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்வீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் தொழில் நுணுக்கங்களை கேட்டறிவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். சின்னச் சின்ன வாய்ப்புகள் வந்தாலும் தவற விடாதீர்கள். வேற்று மொழிக்காரர்கள் உதவுவார்கள். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டிப் பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். தலைமையை பகைத்துக் கொள்ள வேண்டாம். தொகுதி மக்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு நெருக்கமாவீர்கள். விவசாயிகளே! மகசூல் பெருகும். பக்கத்து நிலத்தை வாங்குவீர்கள்.

இந்த குரு மாற்றம் புதிய திட்டங்களை நிறைவேற்ற உதவுவதுடன் ஓரளவு வசதி, வாய்ப்புகளையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

தஞ்சை திருவையாறுக்கு அருகேயுள்ள திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதரையும் வீணா தட்சிணாமூர்த்தியையும் வணங்கி வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு உதவுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குரு பெயர்ச்சி Empty Re: குரு பெயர்ச்சி

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 5:01 pm

சிம்மம்: மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

தொட்டதெல்லாம் துலங்கும்

கிழக்கும் மேற்கும் அலைந்தாலும் கிடைப்பது தான் கிடைக்கும் என்பதை அறிந்த நீங்கள், அளவுக்கு அதிகமாக ஆசைப்பட மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 10ல் அமர்ந்திருந்த குருபகவான் உங்களை பல வகையிலும் பாடாய்ப் படுத்தினார். சொந்த பந்தங்களெல்லாம் பார்த்தும் பார்க்காமலும் சென்றார்களே! உங்களுக்கு வரவேண்டிய பணம் வராமல் போனதால் நீங்கள் வாங்கியிருந்த இடத்தில் திருப்பித் தர முடியாமல் திண்டாடினீர்களே! இதுநாள் வரை காப்பாற்றி வைத்திருந்த கௌரவத்தை இழக்க வேண்டி வந்ததே! குடும்பத்தில் உள்ளவர்களும் உங்களை புரிந்து கொள்ளாமல் போனார்களே! தலைக்குனிவையும், வீண் பழியையும் ஏற்படுத்திய குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்கள் ராசிக்கு லாப வீடான 11ம் வீட்டில் அமர்வதால் பட்டுப்போன மரம் மீண்டும் துளிர்ப்பதுபோல இனி எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும்.

திக்கு திசையறிந்து இருட்டிலிருந்து வெளியுலகத்திற்கு வருவீர்கள். இனி தொட்ட தெல்லாம் துலங்கும். சின்ன வேலையைக் கூட முடிக்க முடியாமல் தடுமாறினீர்களே! உங்கள் ராசிக்கு 7ம் வீட்டை குரு பார்ப்பதால் அழகு, இளமை கூடும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். சோர்வு, களைப்பு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். கனிவான பேச்சால் விஐபிகள் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். உங்களின் 3ம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வழக்கில் வெற்றி உண்டு. உங்களின் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். குரு ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் புதிய சிந்தனைகள் தோன்றும். குழந்தை பாக்யம் கிடைக்கும். சொந்த பந்தங்கள் மெச்சும்படி மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் சுக, பாக்யாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தாயாருக்கு இருந்த மூட்டு வலி, முதுகு வலி நீங்கும். அவருடன் இருந்த மனஸ்தாபம் விலகும். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் கட்டுவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். கடன் பிரச்னையை தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர் ஆதரவாக இருப்பார்.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் பெரிய திட்டங்கள் நிறைவேறும். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.

29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்கள் பூர்வ புண்ய, அஷ்டமாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உணவு விஷயத்தில் மருத்துவரின் ஆலோசனையை ஏற்பது நல்லது.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலகட்டத்தில் ஓய்வெடுக்க முடியாதபடி உழைக்க வேண்டி வரும். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். காய்ச்சல், யூரினரி இன்பெக்ஷன் வந்து செல்லும். ஆனால், பணப்புழக்கம் அதிகரிக்கும்.

செல்வாக்கு கூடும். யாருக்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் இதுவரை முடங்கிக் கிடந்தீர்களே! பாக்கிகள் வசூலாகாமல் தவித்தீர்களே! வேலையாட்களாலும், பங்குதாரர்களாலும் பிரச்னைகள் இருந்ததே! இனி எல்லாம் மாறும். வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். லாபம் இரட்டிப்பாகும். புதிதாக முதலீடு செய்து போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள்.

வேலையாட்கள் உங்கள் மனநிலையை புரிந்துகொண்டு உங்கள் வேலைச்சுமையை குறைப்பார்கள். வியாபார சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் அமர்வீர்கள். கடையை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றுவீர்கள். பழைய பாக்கிகள் வேகமாக வசூலாகும். பங்குதாரர்களால் இருந்த பிரச்னைகள் ஓயும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். கம்யூனிகேஷன், புத்தகம், ஷேர், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் லாபம் பெருகும்.

உத்யோகத்தில் பலவிதங்களிலும் அசிங்கப்பட்டீர்களே! தகுதியற்றவர்களிடமெல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருந்ததே! அலுவலகத்தில் இனி மதிக்கப்படுவீர்கள். மூத்த அதிகாரிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களின் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். உங்களை புரிந்து கொள்ளும் புது அதிகாரி வந்து சேருவார்.

உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும், சலுகைகளும் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கன்னிப் பெண்களே! காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். அழகு, ஆரோக்யம் கூடும். தோழிகளுக்கெல்லாம் திருமணம் முடிந்து விட்டதே நமக்கில்லையே என்று கலங்காதீர்கள். தள்ளிப்போய்க் கொண்டிருந்த கல்யாணம் சிறப்பாக முடியும்.

வேலை கிடைக்கும். மாணவ மாணவிகளே! இனி நினைவாற்றல் கூடும். வகுப்பறையில் ஆசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். ஸ்பெஷல் கோச்சிங் கிளாஸ் சென்று வருவீர்கள். நுழைவுத் தேர்விலும் வெற்றி கிடைக்கும். கலைத்துறையினரே! புதிதாக யோசிப்பீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். கிசுகிசுத் தொல்லைகள் நீங்கும். சம்பளபாக்கி கைக்கு வரும். அரசு கௌரவிக்கும். மூத்த கலைஞர்கள் உங்களுக்காக பரிந்து பேசுவார்கள்.

வசதி, வாய்ப்புகள் பெருகும். அரசியல்வாதிகளே! செல்வாக்குக் கூடும். புதுப் பொறுப்புகளை ஏற்பீர்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். உங்களின் பொறுப்புணர்வை மேலிடம் பாராட்டும். சகாக்கள் மத்தியில் ஆதரவு கூடும். தேர்தலில் வெற்றி உண்டு. விவசாயிகளே! அடகிலிருந்த பத்திரத்தை மீட்பீர்கள். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். விளைச்சல் அதிகரிப்பதால் சந்தோஷமடைவீர்கள். அரசாங்கச் சலுகைகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள்.

இந்த குரு மாற்றம் தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன் அடுத்தடுத்து வெற்றிகளையும் பணப்புழக்கத்தையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்

திருவள்ளூர், அரக்கோணத்திற்கு அருகேயுள்ள தக்கோலம் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குரு பெயர்ச்சி Empty Re: குரு பெயர்ச்சி

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 5:03 pm

கன்னி: உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

ஆன்மிகத்தில் ஆர்வம் பிறக்கும்

நாம் விரும்பியது கிடைக்காதபோது எது கிடைத்ததோ அதை விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அனுபவ மொழியை அறிந்த நீங்கள், கிடைப்பதை வைத்து வாழக் கற்றவர்கள். அவ்வப்போது ஆழ்ந்த யோசனையில் மூழ்கும் நீங்கள், நான்கும் அறிந்தவர்கள். கடந்த ஓராண்டு காலமாக 9ம் வீட்டில் அமர்ந்திருந்த குரு ஏழரைச் சனியால் ஏற்பட்ட பாதிப்புகளை ஓரளவு குறைத்ததுடன் சின்னச் சின்ன ஆசைகளையும் நிறைவேற்றி வைத்தார்.

ஓரளவு கௌரவத்தை தந்த குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்களின் 10ம் வீட்டில் அமர்வதால் எதிலும் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். சிலர் உங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. உத்தியோகம், பதவி, கௌரவத்திற்கு பங்கம் வருமோ என்றெல்லாம் கலங்க வேண்டாம்.

உங்கள் ராசிநாதனான புதனின் மற்றொரு வீடான மிதுனத்தில் குரு அமர்வதால் பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். விஐபிகளின் ஆதரவு கிட்டும். வெளிநாட்டில் சிலருக்கு வேலை அமையும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை பார்க்க வேண்டி வரும். சில சமயங்களில் எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் மன இறுக்கத்திற்கு ஆளாவீர்கள்.

தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக சில நேரங்களில் நினைத்துக் கொள்வீர்கள். அவ்வப்போது ஆழ்மனதில் ஒருவித பயம் வந்து நீங்கும். குரு உங்கள் ராசிக்கு 2ம் வீட்டை பார்ப்பதால் சமயோஜித புத்தி வெளிப்படும். சாதுர்யமாகவும் இதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். மழலை பாக்யம் கிடைக்கும்.

உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். குரு ஏழாம் பார்வையால் சுக வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மோதல்கள் விலகும். அவருக்கு இருந்த நோய் குணமாகும். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடனின் உதவியும் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். குரு 9ம் பார்வையால் 6ம் வீட்டை பார்ப்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசால் ஆதாயமடைவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மகள் உங்களை புரிந்து கொள்வாள். மகனுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமையும். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். ஆன்மிகப் பணிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் திருதியாதிபதியும் அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரீஷம் நட்சத்திரத்தில் செல்வதால் பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகள், முன்கோபம், திடீர் பயணங்களால் செலவுகள், பாகப்பிரிவினை, சொத்துப் பிரச்னைகள் வந்து செல்லும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். யாருக்காகவும் சாட்சி, கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். அலைபேசியில் பேசிக் கொண்டே சாலைகளை கடக்க வேண்டாம்.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பூர்வீகச் சொத்தை விற்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் சுக சப்தமாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால் உத்யோகத்தில் வீண்பழி, அடிக்கடி இடமாற்றம் வந்து நீங்கும். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் வந்துபோகும். எந்தச் சூழ்நிலையிலும் மனைவியை மரியாதை குறைவாக பேச வேண்டாம். மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, பைப்ராய்டு பிரச்னைகள் வந்து செல்லும். சிலர் உங்களைப்பற்றி அவதூறு பேசுவார்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். தாயாருடன் மனத்தாங்கல் வரும்.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் பணவரவு, சொத்து சேர்க்கை உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

வேற்றுமதத்தவர் வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. ஷேர் மூலமும் பணம் வரும். புதுவேலை கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். வியாபாரத்தில் பெரியளவில் யாருக்கும் கடன் தர வேண்டாம். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள்.

அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகும் நபர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். புது முதலீடுகள் வேண்டாம். பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகூடமாக பேசுவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி, பெட்ரோ கெமிக்கல், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் சம்பாதிப்பீர்கள். 10ம் வீட்டில் குரு அமர்வதால் உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். விரும்பத்தக்க இடமாற்றமும் இருக்கும். பாராட்டுகள் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.

உங்களுடைய உழைப்பைப் பயன்படுத்தி வேறு சிலர் நல்ல பெயரெடுத்து முன்னேறுவார்கள். சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். மேலதிகாரிகளிடம் பணிந்து போங்கள். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பளமும் சற்று தாமதமாகி கிடைக்கும். கன்னிப் பெண்களே! உயர்கல்வியை போராடி முடிக்க வேண்டி வரும். கல்யாணம் சிறப்பாக முடியும். காதல் விவகாரங்கள் வேண்டாமே! வெளி நாட்டில் வேலை, மேற்கல்வி அமையும். மாணவ மாணவிகளே! கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது.

அதற்கான உழைப்பு வேண்டும். தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசலால் பதவியை இழக்க வேண்டி வரும். தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்களின் அனுதாபத்தைப் பெறுவீர்கள். உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். கலைத்துறையினரே! சம்பளபாக்கி கைக்கு வரும். யதார்த்தமான படைப்புகளை கொடுங்கள். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். குறைந்த பட்ஜெட் படைப்புகள் வெற்றி பெறும். விவசாயிகளே! தோட்டப் பயிர்களால் லாபமடைவீர்கள். பக்கத்து நிலத்துக்காரரை அனுசரித்துப் போவது நல்லது.

இந்த குருமாற்றம் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிய வைப்பதாகவும் சாதிக்க வேண்டுமெனில் சகிப்புத் தன்மையும் விடா முயற்சியும் அவசியம் என்பதை அறிய வைக்கும்.

பரிகாரம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலுள்ள தட்சிணாமூர்த்தியை தரிசித்து வணங்குங்கள். முதியோர் இல்லத்திற்கு சென்று உதவுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குரு பெயர்ச்சி Empty Re: குரு பெயர்ச்சி

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 5:06 pm

துலாம்: சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

வீடு வாங்குவீர்கள்

ஆற்றைக் கடக்கிற வரையில்தான் அண்ணன், தம்பி முறை அதை கடந்தப் பின் நீ யாரோ, நான் யாரோ என்றில்லாமல் பிறர் செய்த சிறு உதவியையும் மறவாதவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 8ல் மறைந்து வரவு எட்டணா, செலவு பத்தணாவாக்கினாரே! ஏகப்பட்ட அலைச்சலையும், மன உளைச்சலையும் குருபகவான் கொடுத்தாரே! சேமிப்புகளை எல்லாம் கரைத்தாரே! மற்றவர்களுக்கு ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட்டு சிக்கினீர்களே! நமக்கேன் வம்பு என்று சில இடங்களில் மௌனமாக இருந்த போதெல்லாம் தலைக்கனம் பிடித்தவன் என்று பட்டம் சூட்டப்பட்டீர்களே!

28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்களின் பாக்ய ஸ்தானமான 9ம் வீட்டில் அமர்வதால் இனி தொலைநோக்குச் சிந்தனையால் எதையும் சாதிப்பீர்கள். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பிரச்னைகளை நேருக்குநேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். தீர்வுதேடி வெளியில் அலையாமல் உங்களுக்குள்ளேயே உங்கள் உள்மனசுக்குள்ளேயே விடையிருப்பதை இனி உணருவீர்கள்.

‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு’ என்ற பழமொழிக்கேற்ப திடீர் செல்வாக்கையும் வசதி, வாய்ப்புகளையும் தருவார். பணப்புழக்கம் அதிகரிக்கும். குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால் புதிய சிந்தனைகள் உதயமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் கூடா நட்பு விலகும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் நீண்டநாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள்.

குழந்தை பாக்யம் கிடைக்கும். குருபகவான் உங்களின் 3ம் வீட்டைப் பார்ப்பதால் கௌரவப் பதவிகள் வரும். நவீனரக வாகனம் வாங்குவீர்கள். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக் கடன் பெற்று பைசல் செய்வீர்கள். வீட்டில் தள்ளிப்போய் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும். ஊர் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு அவற்றை வெற்றிகரமாக முடிப்பீர்கள். நெடுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். இளைய சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்களின் தன, சப்தமாதிபதியுமான செவ்வாயின் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் செல்வதால் அறிவுப் பூர்வமாகவும் அனுபவப் பூர்வமாகவும் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு சாதகமாகும். பதவிகள் தேடி வரும். அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். என்றாலும் மனைவியுடன் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. வீண் சந்தேகத்தை விலக்கிக் கொள்ளுங்கள்.

பெண்களுக்கு கருப்பை கட்டி, மாதவிடாய்க் கோளாறு வந்து செல்லும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். வாயுக் கோளாறு, தலைச் சுற்றல், யூரினரி இன்பெக்ஷன் வந்து செல்லும்.

கணவன்மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். முன்னேற்றம் தடைபடாது. எதிர்பார்த்த பணம் வரும். 29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் திருதியாதிபதியும் சஷ்டமாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் மறைமுக விமர்சனங்களும் தாழ்வு மனப்பான்மையும் வந்து செல்லும். சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். என்றாலும் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.

வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அடுத்தடுத்து வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். குடும்பத்தில் அமைதி குறையும்.

யாரும் தன்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே, தன்னை யாரும் மதிக்கவில்லையே என்றெல்லாம் சில நேரங்களில் நினைப்பீர்கள். ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சிறு விபத்துகள் ஏற்படக்கூடும். உறவினர்களில் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களிலிருந்து மீள்வீர்கள். தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள்.

வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். கடையை நவீனமாக்குவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஆர்டர்கள் வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர் பணிந்து வருவார். இரும்பு, ரியல் எஸ்டேட், சிமென்ட், அழகு சாதனப் பொருட்களால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இழந்த பொறுப்புகளை மீண்டும் பெறுவீர்கள்.

வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். பழைய சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள். உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும், சலுகைகளும் கிடைக்கும். வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

இடமாற்றம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக்கேற்ற நல்ல மணமகன் அமைவார். ஆரோக்யம் கூடும். புது வேலை கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மாணவமாணவிகளே! உயர்கல்வியில் வெற்றியுண்டு. விரும்பிய பாடப்பிரிவில் சேர்வீர்கள். ஆசிரியர்களின் அன்பை பெறுவீர்கள்.

நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். உங்களுடன் போட்டி, பொறாமையுடன் பழகிய சில மாணவர்கள் வலிய வந்து பேசுவார்கள். அரசியல்வாதிகளே! கட்சித் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சகாக்களின் ஆதரவு கிட்டும். தொகுதி மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கலைத்துறையினரே! பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்களின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். கற்பனைத் திறன் வளரும். விவசாயிகளே! மகசூல் பெருகும். பழுதாகிக் கிடந்த பம்பு செட்டை மாற்றுவீர்கள். அரசாங்க சலுகைகள் கிடைக்கும். நெல், வாழை, காய்கறி வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

இந்த குரு மாற்றம் சிதறிக் கிடந்த உங்களை சீராக்குவதுடன் சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அந்தஸ்தையும், பணம், பதவியையும் தரும்.

பரிகாரம்

கும்பகோணம் மயிலாடுதுறை பாதையிலுள்ள திருவாடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள். சுமைதூக்கும் தொழிலாளிகளுக்கு உதவுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குரு பெயர்ச்சி Empty Re: குரு பெயர்ச்சி

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 5:09 pm

விருச்சிகம்: விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

புதிய பதவி வரும்

அநீதியான சமாதானத்தை விட நீதியான யுத்தமே மேல் என
நினைக்கும் நீங்கள், ஒருபோதும் அதர்மத்திற்கு துணை போக மாட்டீர்கள். தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பதே உண்மையான பிரார்த்தனை என்று நினைப்பீர்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து கௌரவத்தையும் செல்வாக்கையும் ஓரளவு பணவரவையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரை 8ம் வீட்டில் மறைவதால் எதையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். திடீரென்று அறிமுகமாகும் நபர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திடாதீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்களுடன் சின்னச் சின்ன மோதல்கள் வந்து நீங்கும். ஸ்திர ராசியில் பிறந்த உங்களுக்கு குருபகவான் உபய வீட்டில் மறைவதால் அவ்வப்போது நல்லது நடக்கும்.

குருபகவான் 2ம் வீட்டை பார்ப்பதால் சாணக்கியத் தனமாகப் பேசி பல நெருக்கடிகளையும் சமாளிப்பீர்கள்.

வரவேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். இழுபறியாக இருந்த அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். தங்க ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குரு உங்கள் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் அசதி, சோர்வு, டென்ஷன் விலகும். தாயாரின் உடல் நிலை சீராகும். அவருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். தாய்வழி சொத்துப் பிரச்னை தீரும். பழைய வாகனத்தை விற்று புதிதாக வாங்குவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். குரு உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு கட்ட சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவலாகி வரும். பூர்வீகச் சொத்தை மாற்றி உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் செல்வதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகு, இளமை கூடும். பேச்சில் கம்பீரம் தெரியும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். சகோதர, சகோதரிகள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வேற்று மதத்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் திருப்பம் உண்டாகும். மனோபலம் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள்.

தூக்கம் குறையும். காலில் அடிபடும். புதுவேலை கிடைக்கும். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் தன, பூர்வ புண்ணியாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். எதிலும் வெற்றி கிட்டும்.

விஐபிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும். மகனுக்கு வெளிநாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு வரும். கூடாப்பழக்க வழக்கங்கள் நீங்கும்.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். கொடுத்த வாக்குறுதியை கடைசி நேரத்தில் நிறைவேற்றிவிடுவீர்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெரிய பதவி, பொறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். இளைய சகோதரியின் திருமணத்தை நடத்துவீர்கள்.

குரு 8ல் மறைவதால் வியாபாரத்தில் அவசர முதலீடுகள் வேண்டாம். சில சூட்சுமங்களை தெரிந்து கொள்வீர்கள். மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். வேலையாட்களுக்கு அதிக முன் பணம் தர வேண்டாம். அவர்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி அன்பாக நடத்துங்கள். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள்.

சந்தை நிலவரத்தை உன்னிப்பாக கவனியுங்கள். சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வங்கிக் கடன் தவணையை தாமதித்து செலுத்த வேண்டி வரும். பங்குதாரர்களால் இருந்த கெடுபிடிகள் விலகும். மூலிகை, தேங்காய் மண்டி, எலக்ட்ரிக்கல், துரித உணவகங்கள், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலதிகாரியிடம் கொண்டு செல்ல வேண்டாம்.

முன்பு உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி இப்போது உங்களை ஆதரிப்பார். உங்களுடைய தொலை நோக்குச் சிந்தனைக்கு பாராட்டுகள் கிடைக்கும். புதிதாக அறிமுகமாகும் ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். புது சலுகைகளும் பதவிகளும் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். கன்னிப் பெண்களே! யதார்த்தமாகப் பேசி எதிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். திருமணம் தாமதமாகி முடியும். வேலை கிடைக்கும். மாணவமாணவிகளே! அறிவியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். கணக்கும் கொஞ்சம் கசக்கும். அரட்டைப் பேச்சை தவிருங்கள். சந்தேகங்களை கேட்பதில் தயக்கம் வேண்டாம். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசு, பாராட்டு பெறுவீர்கள். ஆசிரியரின் ஆதரவு உண்டு. கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு வேறுசிலர் உரிமைக் கொண்டாடுவார்கள்.

பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டு. அரசியல்வாதிகளே! மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி சாதிப்பீர்கள். சகாக்களுடன் உரிமையாகப் பேசி கோஷ்டிப் பூசலை சரி செய்வீர்கள். கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். விவசாயிகளே! தக்காளி, வெண்டை, பீன்ஸ், எள் வகைகளால் லாபம் உண்டு.

இந்த குரு மாற்றம் கூடுதல் உழைப்பு, குறைந்த வருமானம் என ஒரு பக்கம் அலைக்கழித்தாலும் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய பாதையில் சென்று முன்னேற வைக்கும்.

பரிகாரம்

கடலூர் திருவந்திபுரத்தில் அருள்பாலிக்கும் ஹயக்ரீவரை தரிசித்து வணங்கி வாருங்கள். சாலைப் பணியாளர்களுக்கு உதவுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குரு பெயர்ச்சி Empty Re: குரு பெயர்ச்சி

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 5:11 pm

தனுசு: மூலம், பூராடம், உத்ராடம், 1-ம் பாதம் நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

தாம்பத்யம் இனிக்கும்

நாலுந்தெரிந்த நீங்கள், அரத்தை அரங்கொண்டும் வைரத்தை வைரங்கொண்டும் அறுக்க வேண்டும் என்பதையும் அறிந்தவர்கள். ஏறக்குறைய கடந்த ஓராண்டு காலமாக சகடை வீட்டில் அமர்ந்து ஆறாக்கி, வேறாக்கி உங்களை கூறு போட்டு பார்த்த குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து உங்களை ஆள இருக்கிறார். எதிலும் ஆர்வமில்லாமல் எதையோ இழந்ததைப் போல் சோர்ந்து, வதங்கியிருந்தீர்களே! இனி உற்சாகம் பிறக்கும். முதலில் உங்கள் செல்போனின் ரிங்க் டோனை மாற்றுங்கள். குளியலறைப் பாடகராக இருந்த நீங்கள், கடந்த ஓராண்டு காலமாக முனகிக் கொண்டும் முகம் வாடியும் இருந்தீர்களே! இனி பாட ஆரம்பிப்பீர்கள்.

பெற்ற பிள்ளையிடம் கூட பேசுவதற்குக் கூட பயந்து நடுங்கினீர்களே! உறவினர், நண்பர்களெல்லாம் வெற்றிலை, பாக்கிற்கு பதிலாக உங்கள் வீட்டு விஷயங்களைதானே மென்றார்கள். பலரால் பகடைக்காயாக உருட்டப்பட்டீர்களே! எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததைப்போல ஒரு வெறுமையை உணர்ந்தீர்களே! கொடுத்த பணத்தை கேட்கப்போய் பொல்லாப்பானதே! இனி இந்த அவல நிலையெல்லாம் மாறும்.

வீட்டிற்கு ஏன் வருகிறோம் என்றநிலை மாறி வீட்டிற்கு சீக்கிரம் செல்லலாம் என்ற நிலை இனி வரும். ஈகோவாலும், உப்புக்கு பிரயோஜனம் இல்லாத பிரச்னையாலும் கணவன் மனைவி பிரிந்து இருந்தீர்களே! இனி சச்சரவு முடிந்து ஒன்று சேருவீர்கள். மனம் விட்டுப் பேசுவீர்கள். தாம்பத்யம் இனிக்கும். முடங்கிக் கிடந்த வாகனம் ஓடும். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் மருந்து, மாத்திரை இனி குறையும். எளிய உடற்பயிற்சி, இயற்கை உணவு மூலமாகவே ஆரோக்யம் கூடும். மற்றவர்களை குறை கூறும் போக்கை மாற்றிக் கொள்வீர்கள். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். குருபகவான் லாப வீட்டை பார்ப்பதால் உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும்.

விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர்களால் நன்மை உண்டு. உங்கள் ராசிக்கு 3ம் வீட்டை குரு பார்ப்பதால் எங்கு சென்றாலும் மதிக்கப்படுவீர்கள். தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும் விரயாதிபதியுமான செவ்வாயின் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் செல்வதால் குழந்தை பாக்யம் உண்டாகும். தூரத்து சொந்தங்கள் தேடி வரும். பழைய கடன் பிரச்னை தீரும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் அரவணைப்பு அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சொத்துப் பிரச்னை சுமுகமாகும்.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வேற்று மதத்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். நவீனரக கேமரா, செல்போன் வாங்குவீர்கள். புதிய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.

29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் வீடு கட்ட அப்ரூவல் கிடைக்கும். தினந்தோறும் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். தள்ளிப்போன காரியங்கள் உடனே முடியும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தாயாருக்கு இருந்த முதுகு வலி, மூட்டு வலி நீங்கும். புதுவேலை கிடைக்கும்.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலகட்டத்தில் நினைத்தது நிறைவேறும். கணவன்மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். சிலர் நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.

வியாபாரத்தில் கடன் பிரச்னையாலும் பணப்பற்றாக்குறையாலும் புது முதலீடுகள் செய்ய முடியாமல் தவித்தீர்களே! இனி பண உதவி கிடைத்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். ஆர்வம் பிறக்கும். அதிரடி லாபம் உண்டு. பெரிய வாய்ப்புகளும் வரும். பாக்கிகளும் வசூலாகும். கடையை விரிவுபடுத்தி நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பணியாட்களிடம் கறாராக இருங்கள். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்பு கூடும். வர்த்தக சங்கத்தில் பதவி கிடைக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்த பிரச்னைகள் ஓயும். விலகிச்சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். பெட்ரோல், மருந்து, ஷேர், ஸ்பெகுலேஷன், கல்வி, பண்ணை வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகளாலும் சக ஊழியர்களாலும் ஓரங்கட்டப்பட்டீர்களே! இனி மரியாதை கிடைக்கும்.

வேலைச்சுமை குறையும். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் மேலதிகாரியை வியக்க வைப்பீர்கள். உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரமும் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். கேட்ட இடத்திற்கே இடமாற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி வரும்.

கன்னிப் பெண்களே! உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து மோதல் நீங்கும். விரக்தி, சோம்பலிலிருந்து மீளுவீர்கள். காதல் கனியும். திருமணமும் வெகு விமரிசையாக முடியும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்வீர்கள். மாணவமாணவிகளே! வகுப்பறையில் முதல் வரிசையில் அமருங்கள். நினைவாற்றல் கூடும். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். இசை, இலக்கியம், ஓவியப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். கலைத்துறையினரே! இழந்த வாய்ப்பை மீண்டும் பெறுவீர்கள். வேற்றுமொழிகளில் பிரபலமாவீர்கள். உங்களின் கலை மற்றும் படைப்புத் திறன் வளரும். மூத்த கலைஞர்களை மதிப்பீர்கள். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். அரசியல்வாதிகளே! வேறு அணிக்கு மாற வேண்டி வரும். தொகுதி மக்கள் மத்தியில் புகழடைவீர்கள். கட்சித் தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைக்கும். சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். விவசாயிகளே! சூரிய காந்தி, எள், ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்களால் ஆதாயம் உண்டு. பழைய கடன் தீரும்.

இந்த குரு பெயர்ச்சி பதுங்கியிருந்த உங்களை பளிச்சென முன்னேற வைப்பதுடன் காசு, பணம் சொத்து சுகத்தையும் தரும்.

பரிகாரம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளை தரிசித்து வணங்கி வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குரு பெயர்ச்சி Empty Re: குரு பெயர்ச்சி

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 5:14 pm

மகரம்: உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

திருமணம் சிறப்பாக முடியும்

உழைப்பே ஓய்வுக்கு திறவுகோல், சுறுசுறுப்பே செல்வத்துக்கு திறவுகோல் என்பதை அறிந்த நீங்கள், எப்போதும் பரபரப்பாக இருந்து சாதிப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பணப் புழக்கத்தையும் கௌரவத்தையும் குழந்தை பாக்யத்தையும் வீடு, மனை சேர்க்கையையும் தந்த குருபகவான் இப்போது 28.5.2013 முதல் 12.6.2014 வரை 6ம் வீட்டில் மறைவதால் முன்கோபம் அதிகமாகும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு கடுமையாகப் பேச வேண்டி வரும்.

நீங்கள் மாறிவிட்டதாக சிலர் சொல்லிக் கொள்வார்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் அவ்வப்போது பழுதாகும். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். மகனுக்கு, மகளுக்கு வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் அவசரம் காட்டாதீர்கள். பிள்ளைகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். எதிர்காலம் குறித்த முக்கிய விஷயங்களில் பிள்ளைகள் உங்களுக்கு எதிரான முடிவுகள் எடுக்கக்கூடும்.

பணம் எவ்வளவு வந்தாலும் பற்றாக்குறையாகி வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். சகட குருவாக இருப்பதால் குடும்பத்தில் அவ்வப்போது சண்டை வரும். கணவன்மனைவிக்குள் ஒளிவு, மறைவில்லாமல் பழகுவது நல்லது. வீண் சந்தேகமும், ஈகோ பிரச்னையாலும் பிரிவு வரக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. மனைவி உணர்ச்சிவசப்பட்டு பேசினால் அதைப் பெரிதுபடுத்திக் கொண்டு பதிலுக்கு பதில், ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

குருபகவான் உங்களின் தன ஸ்தானத்தை பார்ப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. சில இடங்களில் வளைந்து பேசி காரியத்தை முடிப்பீர்கள். 10ம் வீட்டை குரு பார்ப்பதால் புது வேலை அமையும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். வேலைச்சுமையை எளிதாக சமாளிப்பீர்கள். 12ம் வீட்டையும் குரு பார்ப்பதால் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சாதுக்கள், சந்நியாசிகளின் ஆசி கிட்டும். புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீடு மாறுவீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் சுக, லாபாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் செல்வதால் பழைய பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். முக்கியப் பதவி, பொறுப்பில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். வழக்கில் வெற்றி உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும். வீடு, வாகன வசதி பெருகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். எப்போதும் மருந்தும் மாத்திரையுமாக இருந்த தாயார் சற்றே குணமடைவார். அவருடன் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும்.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் நட்பு வட்டம் விரியும். கடனாக கேட்ட இடத்தில் பணம் வரும். கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். திருமணம் கூடி வரும்.

சிறுகச் சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை, விரும்பத்தகாத இடமாற்றம் வந்து செல்லும். 29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் திருதியாதிபதியும் விரையாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும்.

பிள்ளைகளால் அலைச்சலும், செலவினங்களும் அதிகரிக்கும். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் தாமதமாக கிடைக்கும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். பணம், விலை உயர்ந்த நகையை கவனமாகக் கையாளுங்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சொத்து வகையில் வழக்கு வந்து நீங்கும்.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயமடைவீர்கள். இழுபறியாக இருந்த அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும்.

வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வியாபாரத்தில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் செல்ல வேண்டாம். அப்படிப்பட்டவர்களின் நட்பையும் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்யாதீர்கள். வேலையாட்களை விரட்டாதீர்கள். தொழில் ரகசியங்களை சொல்ல வேண்டாம். அரசாங்கத்தை எதிர்த்துக் கொள்ளாதீர்கள். பங்குதாரர்களை மாற்ற வேண்டி வரும். மர வகைகள், ஸ்டேஷனரி, பதிப்பகங்கள், கமிஷன் மூலம் லாபம் பெறுவீர்கள்.

வியாபார விஷயமாக வழக்கு, நீதிமன்றம் என்று செல்லாமல் முடிந்தவரை பேசித் தீர்ப்பது நல்லது. உத்யோகத்தில் வீண் பழிகளை சுமக்க வேண்டியது வரும். பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் விடுப்பால் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். ஆனால், மூத்த அதிகாரிகளின் பாராட்டுதலால் ஆறுதலடைவீர்கள். எல்லா நேரமும் கறாராகப் பேசாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்.

அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டியது வரும். எதிர்பார்த்த சலுகைகளையும், சம்பள பாக்கியையும் போராடிப் பெறுவீர்கள். பதவி உயர்வு தாமதமாக வரும். கன்னிப் பெண்களே! பெற்றோரை பகைத்துக் கொள்ளாதீர்கள். காதல் கசந்து இனிக்கும்.

நல்லவர்களின் நட்பு கிடைக்கும். நேர்முகத் தேர்வில் போராடி வெற்றி பெற்று புது வேலையில் அமர்வீர்கள். திருமணம் சிறப்பாக முடியும். மாணவ மாணவிகளே! விளையாடும் போது காயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்திப் படியுங்கள். விடைகளையும் எழுதிப் பாருங்கள். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். கலைத்துறையினரே! உங்கள் படைப்பிற்கு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். உங்களின் புது முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும்.

கிசுகிசுத் தொல்லைகளால் டென்ஷனாவீர்கள். அரசியல்வாதிகளே! உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். கோஷ்டிப் பூசலாலும் எதிர்க்கட்சியினராலும் அலைகழிக்கப்படுவீர்கள். விவசாயிகளே! அகலக்கால் வைத்து கடன் பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். காட்டு வெள்ளாமை வீட்டிற்கு வரும் வரை எதுவும் நிலையில்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.

இந்த குரு மாற்றம் நெருக்கமானவர்களின் மற்றொரு முகத்தை காட்டிக் கொடுப்பதுடன், பணத்தின் அருமையை புரிய வைப்பதாகவும் சகிப்புத் தன்மையால் கொஞ்சம் வளர்ச்சியையும் தரும்.

பரிகாரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரரையும் காமாட்சி அம்மனையும் தரிசித்து வாருங்கள். உழவாரப் பணியை மேற்கொள்ளுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குரு பெயர்ச்சி Empty Re: குரு பெயர்ச்சி

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 5:17 pm

கும்பம்: அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

புதிய முயற்சிகளில் வெற்றி

எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும் என்பதை அறிந்த நீங்கள், பதவியும் பணமும் வந்தாலும் யாரையும் பகைத்துக் கொள்ள மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலா விதத்திலும் சின்னாபின்னமாக்கிய குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்களின் பூர்வ புண்ய ஸ்தானமான 5ம் வீட்டில் அமர்வதால் இனி நல்லதே நடக்கும். கடந்த ஓராண்டு காலமாக மருத்துவர்களே உங்கள் விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் மயங்கினார்களே! மருந்து, மாத்திரையால் வயிறும் புண்ணானதே! உருகுலைந்து போயிருக்கும் நீங்கள், இனி அழகும் ஆரோக்யமும் பெறுவீர்கள். அடிக்கடி தொல்லை தரும் வாகனத்தையும் மாற்றுவீர்கள். காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள்.

குடும்பத்தில் எப்போதும் சண்டையும் சச்சரவுமாக இருந்ததே இனி அமைதி திரும்பும். சிலர் பணம் கொடுத்து உதவுவார்கள் என்று நம்பி வீடு கட்டத் தொடங்கி முடிக்க முடியாமல் தவித்தீர்களே! இனி வீடு கட்டி முடித்து கோலாகலமாக கிரகப்பிரவேசம் செய்து முடிப்பீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாகும்.

எலியும் பூனையுமாக இருந்த கணவன்மனைவி இனி நகமும் சதையுமாக மாறுவீர்கள். குழந்தை இல்லாமல் கோயில் குளமென்றும் என்று சுற்றிக் கொண்டிருந்த தம்பதியருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். வீட்டில் தள்ளிப்போன சுபகாரியங்கள் கூடிவரும். தாயாருக்கு இருந்த நோய் குணமடையும். குருபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் உங்கள் ரசனை மாறும். சுருங்கியிருந்த உங்கள் முகம் மலரும். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

புது வீட்டில் குடிபுகுவீர்கள். குரு ஐந்தாம் பார்வையால் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் தந்தையுடனான மனத்தாங்கல் நீங்கும். இருவரும் மனம் விட்டுப் பேசுவீர்கள். தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வெளிநாடு சென்று வருவீர்கள். பதினோராவது வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேலைக்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சங்கம், டிரஸ்ட் தொடங்குவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் திருதியாதிபதியும் ஜீவனாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் செல்வதால் உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். வாகனம் வாங்குவீர்கள். சின்ன இடமாவது வாங்க வேண்டுமென்று நினைப்பீர்கள். சட்டத்திற்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம்.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பழைய கடனை நினைத்து சில நேரங்களில் அஞ்சுவீர்கள். வேற்றுமொழியினர் உதவிகரமாக இருப்பார்கள். காய்ச்சல், சளித் தொந்தரவு, நெஞ்சு எரிச்சல் வந்துபோகும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் கட்டும் முயற்சிகள் பலிதமாகும். அவசரத்திற்கு கைமாற்றாகவும் கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.

29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்களின் தன லாபாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். நவீன ரக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதுப் பொறுப்புகளும் வாய்ப்புகளும் தேடி வரும். மகளுக்கு வேலை கிடைக்கும். திருமணமும் கூடி வரும்.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வந்து செல்லும். உங்களைப் பற்றிய விமர்சனங்களும் வதந்திகளும் வரக்கூடும். முக்கிய சொத்துப் பத்திரங்களை பாதுகாப்பான இடத்தில் வையுங்கள். சில சமயங்களில் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டியது வரும்.

ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். வருமான வரி செலுத்துவதில் தாமதம் வேண்டாம். வியாபாரத்தில் களையிழந்து போயிருந்த கடை இனி அதிக வாடிக்கையாளர்களின் வருகையால் களைகட்டும். பழைய பாக்கிகளை இங்கிதமாகப் பேசி வசூலிப்பீர்கள்.

புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். சொந்த இடத்திற்கே கடையை மாற்றுவீர்கள். கெமிக்கல், ஏற்றுமதி இறக்குமதி, புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் நிலைப்போமா, நிலைக்க மாட்டோமா என்ற பயம் இனி நீங்கும்.

உங்களை அலைகழித்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் இனி உண்டு. புதிய வாய்ப்புகளும் தேடிவரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் கனவு நனவாகும். அடி வயிற்றிலிருந்த வலி, தூக்கமின்மை விலகும். காதல் கனியும். திருமணம் தள்ளிக் கொண்டே போனதே! உங்கள் ஆசைப்படி கல்யாணம் முடியும். மாணவ மாணவிகளே! நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடரும் வாய்ப்பு கிட்டும். ஆசிரியரின் அன்பைப் பெறுவீர்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிட்டும்.

கலைத்துறையினரே! உங்களின் படைப்பிற்கு பரிசும் பாராட்டும் கிட்டும். வெகுநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்திலிருந்து புது வாய்ப்பு கதவை தட்டும். வீடு வாங்குவீர்கள். அரசியல்வாதிகளே! எதிலும் வெற்றி பெறுவீர்கள். பதவிகள் தேடி வரும். கட்சியில் பெரிய பதவியில் இருப்பவர்கள் உங்களை மதித்து பேசுவார்கள். முக்கிய விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள். விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை இனி குறையும். பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்கும். மகசூல் பெருகும். கடன் தீரும்.

இந்த குரு மாற்றம் வாடிப் போயிருந்த உங்களை வளம் பெற வைப்பதுடன், மதிப்பு, மரியாதையையும் வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரரையும் கற்பகாம்பாளையும் தரிசித்து வாருங்கள். சாலையோரம் வாழும் சிறார்களுக்கு உதவுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குரு பெயர்ச்சி Empty Re: குரு பெயர்ச்சி

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 5:21 pm

மீனம்: பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

சம்பளம் உயரும்

செடியாக இருந்தபோது வளையாதது மரமான பிறகு வளையாது என்பதை அறிந்த நீங்கள், குழந்தைகளை கட்டுப்பாடுடன் வளர்ப்பதில் வல்லவர்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிநாதனான குருபகவான் எந்த ஒரு வேலையையும் முழுமையாக முடிக்க விடாமல் தடுத்தார். சின்னச் சின்ன வேலைகளைகூட போராடி முடித்தீர்கள். சொந்த பந்தங்களுக்காக செலவு செய்தும் நன்றியில்லாமல் போனதே! இப்போது குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரை உள்ள காலகட்டம் வரை 4ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப் போகிறார்.

இதுவரை இருந்து வந்த காரியத் தடைகள் ஓரளவு நீங்கும். இதுவரை தோல்வி என்றால் துவண்டீர்களே! இனி மாற்று வழி யோசிப்பீர்கள். நட்பு வட்டம் மாறும். விஐபிகள் அறிமுகமாவார்கள். நீங்கள் கொஞ்சம் முன்னெச்சரிக்கை உணர்வோடு செயல்படுவது நல்லது. உங்கள் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான குருபகவான் 4ல் கேந்திர தோஷம் பெற்று அமர்வதால் உங்களின் அடிப்படை நற்குணங்களும் நடத்தைக் கோலங்களும் மாறாமல் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். திருமணம், கிரகப் பிரவேசத்தை போராடி முடிக்க வேண்டி வரும்.

மற்றவர்களை நம்பி வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். அரசாங்கத்தின் முறையான அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். குடிநீர்க் குழாய், கழிவு நீர்க் குழாய் அடைப்பு வந்து நீங்கும். குடும்பத்தில் ஈகோ பிரச்னையால் போட்டிகள் அதிகரிக்கும். உத்யோகத்தின் பொருட்டு அல்லது மனத்தாங்கலின் பொருட்டு கணவன் மனைவி பிரிய வேண்டி வரும். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி தாமதமாக கிடைக்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் அல்லாதவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.

தாயாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உங்களுக்கும் அவ்வப்போது நெஞ்சுவலி, கைகால் வலி, அசதி வந்து போகும். தாயாருடன், தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். ஒரு பக்கம் பணவரவு இருந்தாலும் மறுபுறம் செலவினங்களும் இருந்து கொண்டேயிருக்கும். வாகனத்தின் இன்சூரன்ஸ் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறாதீர்கள். போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம்.

குருபகவானின் சஞ்சாரம்:

28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் தன, பாக்யாதிபதியான செவ்வாயின் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் செல்வதால் வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசாங்க அதிகாரிகள், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் உதவியால் தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயமடைவீர்கள். தந்தையாரின் உடல்நிலை சீராகும். அவருடன் இருந்த மோதல்கள் விலகும். தந்தைவழிச் சொத்தை பெறுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். சிறுகச் சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சச்சரவு வரும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

தவிர்க்க முடியாத செலவுகளால் திணறுவீர்கள். வேற்றுமதத்தவர்கள், மொழியினர்களால் ஆதாயமடைவீர்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாரையும் யாருக்கும் சிபாரி செய்யாதீர்கள். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். நியாயம் பேசப்போய் பெயர் கெடும். கூடாப்பழக்கமுள்ளவர்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம்.

29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் சிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். வங்கிக் கடன் கிடைக்கும். பேச்சில் ஒரு முதிர்ச்சி வெளிப்படும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த தொகை கைக்கு வரும். வீட்டில் தள்ளிப்போன சுப காரியங்கள் ஏற்பாடாகும். தைரியமாக சில பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.

அரைகுறையாக நின்ற கட்டிடப் பணியை தொடங்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பண விஷயத்தில் ஏமாந்துவிட வேண்டாம். ஷேர் மூலமாகவும் பணம் வரும். 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும்.

உங்களின் வசதி, வாய்ப்புகள் ஓரளவு பெருகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். மனைவிவழி உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சில நேரங்களில் எதையோ இழந்ததைப்போல் இருப்பீர்கள். வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசிக்கத் தவறாதீர்கள்.

அவசர முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். சந்தை நிலவரத்தை அறிந்து கொள்ளும் அறிவாற்றலை பெறுவீர்கள். புது ஏஜென்சி யோசித்து எடுங்கள். வங்கிக் கடன் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் சந்தர்ப்ப, சூழ்நிலை தெரியாமல் பேசுவார்கள். உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக், ஆட்டோ மொபைல் வகைகளால் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள்மீது தொடரப்பட்ட பொய் வழக்கு தள்ளுபடியாகும். சம்பளம் உயரும். விரும்பத்தகாத இடமாற்றம் உண்டு. உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். ஆனால், சக ஊழியர்களுடன் பிரச்னைகள் வரும். சிறு அவமானங்கள் வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! தாயாருடன் மோதல் வரும். உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது.

காதல் விவகாரத்தை தள்ளி வைத்து உயர் கல்வியில் கவனம் செலுத்துங்கள். மாணவ மாணவிகளே! லட்சியப்போக்குடன் கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கம் இனி வேண்டாம். விளையாட்டில் பதக்கம் பெறுவீர்கள். போலியான நண்பர்களிடமிருந்து விடுபடுங்கள். உண்மையான நண்பர்களை உணர்ந்து கொள்ளுங்கள். சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். கலைத்துறையினரே! கிசுகிசுத் தொந்தரவுகள் வரக்கூடும். பரபரப்பாக இருப்பீர்கள்.

ஆனால் பணவரவு சுமார்தான். உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலாலும் எதிர்க் கட்சியினரால் அமுக்கப்பட்டாலும் அனைத்தையும் முறியடித்து முன்னேறுவீர்கள். உண்ணா விரதம், ஊர்வலங்களை முன்னின்று நடத்தி புகழடைவீர்கள். விவசாயிகளே! மரப்பயிர் லாபம் தரும். பம்பு செட் அவ்வப்போது பழுதாகும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

இந்த குரு மாற்றம் உங்களை நாலாவிதத்திலும் சிரமப்பட வைத்தாலும் புதிய பாதையில் பயணித்து எதிர்நீச்சலில் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள அய்யாவாடியில் அருளும் பிரத்யங்கரா தேவியை தரிசித்து வாருங்கள். சுமைதூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.

”எல்லோரும் குருவருள் பெற்று சிறப்போடு வாழ்க”


http://panippulam.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குரு பெயர்ச்சி Empty Re: குரு பெயர்ச்சி

Post by கவியருவி ம. ரமேஷ் Fri May 17, 2013 5:24 pm

தெரியாமல்தான் கேட்கிறேன்...

குரு பெயர்ச்சி
சனி பெயர்ச்சி என்றுதான் இதுவரை கேள்விபட்டிருக்கிறேன்...

1.மற்றவை பெயர்ச்சி அடையாதா?
2.பெயர்ச்சி அடையதால் பெரிய பலன் இல்லையா?
3.இவை மட்டும் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

குரு பெயர்ச்சி Empty Re: குரு பெயர்ச்சி

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 5:36 pm

நண்பரே எல்லா கிரகங்களும் பெயர்ச்சி அடையும் .ஆனால் அவைகள் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல .நம் வாழ்கையின் எல்லா விதமான செயல்களுக்கும் விளைவுகளுக்கும் இந்த இரண்டு கிரகங்கள் தான் முக்கியமானவை .நம்புகிறவர்களுக்கு இந்த இரண்டு பெயர்சிதான் முக்கியமானது .மற்ற கிரகங்களை விட வலிமையானது முதன்மையானது .இந்த இரண்டும் நமக்கு நன்றாக இருந்தால் முயற்சியோடு வாழ்கையில் வெற்றி பெறுவதும் எல்லை இல்லா இன்பங்களை அடைவதும் இந்த கிரகங்களினால் மட்டுமே .உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி உள்ளது ? எனக்கு மிகவும் அருமையாக உள்ளது . இந்த பதில் உங்களுக்கு ஓரளவு திருப்தி தரும் என்று எண்ணுகிறேன் .குருவருள் உமக்கு கிடைக்கட்டும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குரு பெயர்ச்சி Empty Re: குரு பெயர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum