Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஞாபகம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!
Page 1 of 1 • Share
ஞாபகம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!
"வீட்டுக்கு வரும்போது தேங்காய் எண்ணை வாங்கிக் கொண்டு வரச் சொல்லி எத்தனை தடவை சொன்னாலும் இந்த மனிசன் மறந்து போட்டு வந்து நிற்கிறார்" என அம்மாவிடம் பேச்சு வாங்கும் அப்பாவைப் பார்க்க பாவமாக இருக்கும். ஞாபகம் என்பது எவ்வளவு அவசியம் என்பதை பரீட்சை எழுதும் மாணவர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள். வினாத்தாள் கையிலிருக்கும் போது நினைவுக்கு வராத விடைகள் பரீட்சை மண்டபத்திற்கு வெளியே வந்ததும் ஞாபகத்திற்கு வரும்போது "அடடே" என்று சொல்வதைத் தவிர என்ன செய்ய முடியும். இப்படியான நினைவுகள் என்பன நீண்ட காலத்திற்கு சேமிக்கப்பட்ட தகவல்கள் என விஞ்ஞானிகள் வரையறை செய்வார்கள். கண், காது, மூக்கு, நாக்கு, உடல் தொடுகை போன்ற பல்வேறு புலன்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் மூளைகள் மூலம் கிடைக்கும் தகவல்கள் மூளையில் சேமிக்கப்படும் போது அது ஞாபகத்திற்கு அடித்தளமாகிறது.
சாதாரணமாக விஞ்ஞானிகள் நினைவுகள் ஒரு சில கணங்களுக்கு நிற்கும். புலன் ஞாபகம் (Sensory Memory) ஏறத்தாள அரை மணி நேரம் மட்டுமே நிற்கும் குறுகிய கால ஞாபகம் (Short Term Memory) நீண்ட காலமாக நிற்கும் நீண்ட கால ஞாபகம் (Long Term Memory) என மூன்றாகப் பிரிக்கிறார்கள். உண்மையில் இந்த மூன்று ஞாபகங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.
நம் மனித உடலில் சகல புலன்களில் இருந்தும் வருகின்ற நரம்பு கணத்தாக்கங்கள் மில்லி செகட்டில் நினைவில் நிற்கும். அந்த நினைவில் சிறிது ஊன்றிக் கவனம் செலுத்தும் போது அவை ஏறத்தாள 30 செகன்ட் வரை நிலைத்து நிற்கும். இந்த நேரத்திற்குள் மீண்டும் ஒருமுறை அது பற்றி நினைத்தால் அது நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் ஞாபகத்திற்குள் சென்று பதியும்.
உதாரணமாக தெருவில் நடந்து செல்லும் போது நிறைய ஒலிகளை உங்கள் காதும், நிறையக் காட்சிகளை உங்கள் கண்ணும் மூளைக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இவை சாதாரணமாக புலன் ஞாபகமாக இருந்து ஒரு நொடிப் பொழுதிலே அழிந்து விடும். அதே நேரம் பாதை ஓரக்கடையில் அழகிய மாம்பழங்கள் அடுக்கப்பட்டு அதன் மேல் மாம்பழம் ஒன்று பத்து ரூபாய் (அட இவ்வளவு சீப்பா?) எனும் விலைப் பட்டியலும் இருக்கும்போது அது பற்றி நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள் அட நல்ல மாம்பழம் பத்து ரூபாய்க்கா? என வியந்து கொண்டு இருக்கும் போது அது குறுகிய கால நினைவினுள் பதிந்து விடும். இந்தக் காட்சி மீண்டும் மீண்டும் நினைக்கப்பட அது நீண்டகால ஞாபத்தினுள் சென்று விடும். ஓரிரு வாரங்கள் கழிந்த பின்னர் உங்கள் நண்பரிடம் "நல்ல மாம்பழம் போன வாரம் பத்து ரூபாய் விற்றது." என சொல்லக் கூடிய இந்த நீண்ட கால ஞாபகம் உதவுகிறது.
இதைத் தவிர ஞாபகம் என்பது உங்களை அறியாமலேயே உங்களுக்கு உதவுகிறது. அதனால் தான் யாரும் சொல்லாமலே, அல்லது நாமாக நினைக்காமலே கால்சட்டை போட்ட பின் தான் காலணி (Shoes) போட வேண்டும் என்ற ஒழுங்கு அங்கே நடைபெறுகிறது. ஞாபக மறதியாகக் காலணியை மாட்டிவிட்டு பின்னர் கால்சட்டை போட முயன்றால் அது எப்படி இருக்கும்? என்று கற்பனை பண்ணிப் பாருங்கள்.
இந்த ஞாபகம் என்பது மூளையில் இரசாயனங்களாகவும் நரம்பு இணைப்புக்களாகவும் சேமிக்கப்பட்டிருக்கின்றது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள் நினைவுச் சேமிப்பு மூளையின் முற்பாகத்தில் (நெற்றிப் பகுதியில்) இருக்கிறது ஆயினும் நினைவு மீட்கும் போது முளையின் பல்வேறுபட்ட பகுதிகளுக்கும் அதற்கு உதவியாகச் செயற்படுகிறது. சேமிக்கப்பட்ட தகவல் தொலைந்து போகாமல் இருக்க அத்தகவல்களை பல்வேறு வகைகளில் தொடர்புபடுத்தி மூளை சிக்கல் வலையமைப்பாக வைத்திருக்கும்.
உதாரணமாக் "கன்றுக் குட்டி" என்பது எங்கள் மாடு ஈன்றது எங்கள் வீட்டுக் கன்றுக் குட்டி வெள்ளை. "கன்று பால் குடிக்கும்" "பால் வெள்ளை நிறம்." என்ற இலட்சக்கணக்கான தகவல்களுடன் திரண்டு காணப்படும். எனவே மூளை தகவல்களை மீண்டும் தேடும் போது இவற்றில் ஏதாவது ஒரு வழியைப் பிடித்து கன்றுக் குட்டியைப் பற்றிய தகவல்களைப் பெற்றுவிடும்.அட.. கூகுள் சர்ச் இப்படிதானே தேடல் வேலை பார்க்கிறது!
பொதுவாக நாம் நினைவு வைத்திருக்கும் ஆற்றலைப் பல்வேறு முறைகளில் அதிகரித்துக் கொள்ள முடியும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளார்கள். ஒரு பொருளை இன்னொன்றுடன் தொடர்பு படுத்தி வைத்திருப்பது திரும்ப திரும்ப நினைப்பது அல்லது மனத்தினுள் ஒத்திகை பார்ப்பது. இலகுவான குறியீடுகளை பாவித்தல் (ஆவர்த்தன அட்டவணையில் உள்ள மூலகங்களை நினைவு வைக்க நீங்கள் படித்த பாடல் நினைவிருக்கலாம்.) போன்ற பல்வேறு முறைகள் ஞாபகத்தை அதிகரிக்க உதவும்.
உபயோகிகப்படாமல் மீண்டும் நினைக்கப்படாமல் இருக்கும் போது ஞாபகங்கள் தொலைந்து போகின்றன. இது இயற்கையானது இப்படி மனிதனுக்கு உள்ள சிறப்பம்சங்களில் ஒன்றான அவனது நீளமான, ஆழமான ஞாபகத் திறன். மனித மூளையின் செல்களில் 96 சதவிகிதம், ஞாபக சக்தி தொடர்பான பணிகளில் ஈடுபடுவதில்லை என்று சொன்னால் நம்பிதான் ஆக வேண்டும்.
இப்போதும் மனிதன் தனக்குள்ள மொத்த நினைவாற்றல் திறனில் 4 சதவிகிதத்தைத்தான் பயன்படுத்துகிறான்.மேலும் உலக மக்களில் ஒரு சதவிகிதத்தினரே தங்களின் ஞாபகசக்தியைத் திறமையுடன் பயன்படுத்துகின்றனர் என்று தெரிய வந்திருக்கிறது. இதற்கிடையில் அபார ஞாபகத்திறன் கொண்டவர்களும் உள்ளனர். அளப்பரிய உண்மைகளையும், எண்ணிக்கைகளையும் அவர்களால் நினைவில் வைத்திருக்க முடிகிறது.
அதேபோல, கால்குலேட்டர் போல விரைவாகக் கணக்குகளைச் செய்து முடிக்கும் நபர்களும் உள்ளனர். அத்தகையவர்கள் தங்களின் நினைவாற்றல் திறனில் ஏறக்குறைய 50& 60 சதவிகிதத்தையே பயன்படுத்துகின்றனர். பல்வேறு வழிகளில், பல்வேறு புலன்களின் மூலம் நாம் பலவற்றை அறிகிறோம்.
முன்னரே குறிப்பிட்டது மாதிரி பார்வை, கேள்வி, சுவை, தொடுபுலன், செயல் ஆகிய பல உணர்வுகளின் மூலம் நமக்கு நினைவு பெறப்படுகிறது. பல்வேறு புலன்களின் மூலம் நமது நினைவுக்குப் பல்வேறு விஷயங்கள் கொண்டு வரப்படுகின்றன. சாதாரணமாக, ஒன்றுக்கு மேற்பட்ட புலன்களின் மூலமாகவே நினைவு ஏற்படுகிறது.
பெருமளவுச் செய்திகள் பார்வையின் மூலமாகவே பெறப்படுகின்றன. இதைச் சரிவரப் பயன்படுத்த வேண்டும். எனினும், பிறபுலன்களை நன்கு தூண்டிவிடுவதும் அவசியமாகும். பல் வேறு புலன்களின் மூலம் பெறப்படும் விவரங்களைத்தான் மனிதனால் நன்கு நினைவு வைத்துக்கொள்ள முடிகிறது.
ஒரு முக்கியமான வாசகத்தைப் படித்துப் புரிந்து கொண்டபின், அதை உரக்க மீண்டும் சொல்வது பயனளிக்கும். அதன் மூலம் கேள்விப் புலனும், செயல் பதிவும் நன்கு வலுப்பெறும்.கிடைத்த விவரங்களை நினைவில் கொண்டிருப்பதை பிம்ப நினைவு என்று கூறலாம். அந்த விவரங்கள் அனைத்தையும் பகுத்து ஆராய்ந்து, பழையவற்றுக்கும், புதியவற்றுக்கும் தொடர்புகளை நிறுவுவது தர்க்க நினைவு ஆகும்.
நன்றி செய்தி.காம்
சாதாரணமாக விஞ்ஞானிகள் நினைவுகள் ஒரு சில கணங்களுக்கு நிற்கும். புலன் ஞாபகம் (Sensory Memory) ஏறத்தாள அரை மணி நேரம் மட்டுமே நிற்கும் குறுகிய கால ஞாபகம் (Short Term Memory) நீண்ட காலமாக நிற்கும் நீண்ட கால ஞாபகம் (Long Term Memory) என மூன்றாகப் பிரிக்கிறார்கள். உண்மையில் இந்த மூன்று ஞாபகங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.
நம் மனித உடலில் சகல புலன்களில் இருந்தும் வருகின்ற நரம்பு கணத்தாக்கங்கள் மில்லி செகட்டில் நினைவில் நிற்கும். அந்த நினைவில் சிறிது ஊன்றிக் கவனம் செலுத்தும் போது அவை ஏறத்தாள 30 செகன்ட் வரை நிலைத்து நிற்கும். இந்த நேரத்திற்குள் மீண்டும் ஒருமுறை அது பற்றி நினைத்தால் அது நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் ஞாபகத்திற்குள் சென்று பதியும்.
உதாரணமாக தெருவில் நடந்து செல்லும் போது நிறைய ஒலிகளை உங்கள் காதும், நிறையக் காட்சிகளை உங்கள் கண்ணும் மூளைக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இவை சாதாரணமாக புலன் ஞாபகமாக இருந்து ஒரு நொடிப் பொழுதிலே அழிந்து விடும். அதே நேரம் பாதை ஓரக்கடையில் அழகிய மாம்பழங்கள் அடுக்கப்பட்டு அதன் மேல் மாம்பழம் ஒன்று பத்து ரூபாய் (அட இவ்வளவு சீப்பா?) எனும் விலைப் பட்டியலும் இருக்கும்போது அது பற்றி நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள் அட நல்ல மாம்பழம் பத்து ரூபாய்க்கா? என வியந்து கொண்டு இருக்கும் போது அது குறுகிய கால நினைவினுள் பதிந்து விடும். இந்தக் காட்சி மீண்டும் மீண்டும் நினைக்கப்பட அது நீண்டகால ஞாபத்தினுள் சென்று விடும். ஓரிரு வாரங்கள் கழிந்த பின்னர் உங்கள் நண்பரிடம் "நல்ல மாம்பழம் போன வாரம் பத்து ரூபாய் விற்றது." என சொல்லக் கூடிய இந்த நீண்ட கால ஞாபகம் உதவுகிறது.
இதைத் தவிர ஞாபகம் என்பது உங்களை அறியாமலேயே உங்களுக்கு உதவுகிறது. அதனால் தான் யாரும் சொல்லாமலே, அல்லது நாமாக நினைக்காமலே கால்சட்டை போட்ட பின் தான் காலணி (Shoes) போட வேண்டும் என்ற ஒழுங்கு அங்கே நடைபெறுகிறது. ஞாபக மறதியாகக் காலணியை மாட்டிவிட்டு பின்னர் கால்சட்டை போட முயன்றால் அது எப்படி இருக்கும்? என்று கற்பனை பண்ணிப் பாருங்கள்.
இந்த ஞாபகம் என்பது மூளையில் இரசாயனங்களாகவும் நரம்பு இணைப்புக்களாகவும் சேமிக்கப்பட்டிருக்கின்றது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள் நினைவுச் சேமிப்பு மூளையின் முற்பாகத்தில் (நெற்றிப் பகுதியில்) இருக்கிறது ஆயினும் நினைவு மீட்கும் போது முளையின் பல்வேறுபட்ட பகுதிகளுக்கும் அதற்கு உதவியாகச் செயற்படுகிறது. சேமிக்கப்பட்ட தகவல் தொலைந்து போகாமல் இருக்க அத்தகவல்களை பல்வேறு வகைகளில் தொடர்புபடுத்தி மூளை சிக்கல் வலையமைப்பாக வைத்திருக்கும்.
உதாரணமாக் "கன்றுக் குட்டி" என்பது எங்கள் மாடு ஈன்றது எங்கள் வீட்டுக் கன்றுக் குட்டி வெள்ளை. "கன்று பால் குடிக்கும்" "பால் வெள்ளை நிறம்." என்ற இலட்சக்கணக்கான தகவல்களுடன் திரண்டு காணப்படும். எனவே மூளை தகவல்களை மீண்டும் தேடும் போது இவற்றில் ஏதாவது ஒரு வழியைப் பிடித்து கன்றுக் குட்டியைப் பற்றிய தகவல்களைப் பெற்றுவிடும்.அட.. கூகுள் சர்ச் இப்படிதானே தேடல் வேலை பார்க்கிறது!
பொதுவாக நாம் நினைவு வைத்திருக்கும் ஆற்றலைப் பல்வேறு முறைகளில் அதிகரித்துக் கொள்ள முடியும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளார்கள். ஒரு பொருளை இன்னொன்றுடன் தொடர்பு படுத்தி வைத்திருப்பது திரும்ப திரும்ப நினைப்பது அல்லது மனத்தினுள் ஒத்திகை பார்ப்பது. இலகுவான குறியீடுகளை பாவித்தல் (ஆவர்த்தன அட்டவணையில் உள்ள மூலகங்களை நினைவு வைக்க நீங்கள் படித்த பாடல் நினைவிருக்கலாம்.) போன்ற பல்வேறு முறைகள் ஞாபகத்தை அதிகரிக்க உதவும்.
உபயோகிகப்படாமல் மீண்டும் நினைக்கப்படாமல் இருக்கும் போது ஞாபகங்கள் தொலைந்து போகின்றன. இது இயற்கையானது இப்படி மனிதனுக்கு உள்ள சிறப்பம்சங்களில் ஒன்றான அவனது நீளமான, ஆழமான ஞாபகத் திறன். மனித மூளையின் செல்களில் 96 சதவிகிதம், ஞாபக சக்தி தொடர்பான பணிகளில் ஈடுபடுவதில்லை என்று சொன்னால் நம்பிதான் ஆக வேண்டும்.
இப்போதும் மனிதன் தனக்குள்ள மொத்த நினைவாற்றல் திறனில் 4 சதவிகிதத்தைத்தான் பயன்படுத்துகிறான்.மேலும் உலக மக்களில் ஒரு சதவிகிதத்தினரே தங்களின் ஞாபகசக்தியைத் திறமையுடன் பயன்படுத்துகின்றனர் என்று தெரிய வந்திருக்கிறது. இதற்கிடையில் அபார ஞாபகத்திறன் கொண்டவர்களும் உள்ளனர். அளப்பரிய உண்மைகளையும், எண்ணிக்கைகளையும் அவர்களால் நினைவில் வைத்திருக்க முடிகிறது.
அதேபோல, கால்குலேட்டர் போல விரைவாகக் கணக்குகளைச் செய்து முடிக்கும் நபர்களும் உள்ளனர். அத்தகையவர்கள் தங்களின் நினைவாற்றல் திறனில் ஏறக்குறைய 50& 60 சதவிகிதத்தையே பயன்படுத்துகின்றனர். பல்வேறு வழிகளில், பல்வேறு புலன்களின் மூலம் நாம் பலவற்றை அறிகிறோம்.
முன்னரே குறிப்பிட்டது மாதிரி பார்வை, கேள்வி, சுவை, தொடுபுலன், செயல் ஆகிய பல உணர்வுகளின் மூலம் நமக்கு நினைவு பெறப்படுகிறது. பல்வேறு புலன்களின் மூலம் நமது நினைவுக்குப் பல்வேறு விஷயங்கள் கொண்டு வரப்படுகின்றன. சாதாரணமாக, ஒன்றுக்கு மேற்பட்ட புலன்களின் மூலமாகவே நினைவு ஏற்படுகிறது.
பெருமளவுச் செய்திகள் பார்வையின் மூலமாகவே பெறப்படுகின்றன. இதைச் சரிவரப் பயன்படுத்த வேண்டும். எனினும், பிறபுலன்களை நன்கு தூண்டிவிடுவதும் அவசியமாகும். பல் வேறு புலன்களின் மூலம் பெறப்படும் விவரங்களைத்தான் மனிதனால் நன்கு நினைவு வைத்துக்கொள்ள முடிகிறது.
ஒரு முக்கியமான வாசகத்தைப் படித்துப் புரிந்து கொண்டபின், அதை உரக்க மீண்டும் சொல்வது பயனளிக்கும். அதன் மூலம் கேள்விப் புலனும், செயல் பதிவும் நன்கு வலுப்பெறும்.கிடைத்த விவரங்களை நினைவில் கொண்டிருப்பதை பிம்ப நினைவு என்று கூறலாம். அந்த விவரங்கள் அனைத்தையும் பகுத்து ஆராய்ந்து, பழையவற்றுக்கும், புதியவற்றுக்கும் தொடர்புகளை நிறுவுவது தர்க்க நினைவு ஆகும்.
நன்றி செய்தி.காம்
Re: ஞாபகம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!
பயனுள்ள பகிர்வு நன்றீ
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» இரட்டை குழந்தைகளை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
» சுவாரஸ்யமான தகவல்கள்...
» வானவில்லை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கல் கள்
» பசு – சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்
» வியர்க்குரு பற்றிய தகவல்கள்
» சுவாரஸ்யமான தகவல்கள்...
» வானவில்லை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கல் கள்
» பசு – சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்
» வியர்க்குரு பற்றிய தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|