Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கிடைப்பதில் சம பங்கு தருவேன்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
கிடைப்பதில் சம பங்கு தருவேன்
நமது தெனாலிராமனைப் பற்றி எல்லோரும் நன்கு அறிவர். அவரது சமயோஜித புத்தியால் பல இன்னல்களில் மாட்டிக் கொண்டாலும் மற்றவர்களை மாட்டிவிட்டுவிட்டு தான் தப்பித்துக் கொள்வது இவரது வழக்கம்.
இதற்கு ஒரு சான்றாக கதை ஒன்றை உங்களுக்குக் கூறுகிறோம்.
கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நாட்டிய நாடகத்தைக் காண அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
நாடக நிகழ்ச்சியில் அரசி உள்ளிட்ட மாதரும், முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்து கொள்வதால், இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் வந்து ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை கெடுத்துவிடுவான் என்று எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர்.
நாடகம் நடைபெறுவதை அறிந்ததும் தெனாலிராமனால் உள்ளே செல்லாமல் இருக்க முடியுமா? ஏதாவது தந்திரம் செய்து போய் விடுவது என்று எண்ணிக் கொண்டே நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான், வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன் மசியவில்லை.
இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். "ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்" என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் பாதி பரிசு கிடைக்கும் என்ற பேராசையால் தெனாலிராமனை உள்ளே விட்டான்.
அரங்கத்திற்குள் செல்ல வேண்டிய மற்றொரு வாயிலில் மீண்டும் இன்னொரு வாயிற் காப்போன் நின்றிருந்தான். அவனிடமும், பாதிப் பரிசு தருவதாக உறுதி கூறினான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து தெனாலிராமனை உள்ளே விட்டுவிட்டான்.
அரங்கத்தினுள் நுழைந்த தெனாலிராமன் ஓரமாக போய் உட்கார்ந்து கொண்டான். அப்போது கிருஷ்ணனாக நடித்தவன் வெண்ணை திருடி கோபிதைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம் போட்டு நடித்தவனை கொம்பால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறித் துடித்தான்.
இதைப்பார்த்த மன்னருக்கு கடும் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனை அழைத்து வரச்செய்து, ஏன் இவ்வாறு செய்தாய் என வினவினார். அதற்குத் தெனாலிராமன் கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான் என்று பதிலுரைத்தான். இந்த பதிலைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைக் கேட்ட தெனாலிராமன் அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு வாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன். ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள் என்று கூறினான்.
உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்து வரச்செய்தார். வாயிற்காப்போன்களும் பரிசு கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் மன்னரை நோக்கி வந்தனர். தெனாலிராமன் கூறியது பற்றி வாயிற்காப்போன்களிடம் விசாரித்தார். அவ்விருவரும் ஒத்துக் கொண்டதை அடுத்து, இருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் ஆணையிட்டார்.
பரிசு பெற வந்த இடத்தில் கசையடிப் பெறுவதை எண்ணி வேதனைப் பட்டனர் வாயிற்காப்போன்கள்.தெனாலி ராமன் சமயோஜித புத்தியால் தப்பிச் சென்றுவிட்டார்.
இதற்கு ஒரு சான்றாக கதை ஒன்றை உங்களுக்குக் கூறுகிறோம்.
கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நாட்டிய நாடகத்தைக் காண அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
நாடக நிகழ்ச்சியில் அரசி உள்ளிட்ட மாதரும், முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்து கொள்வதால், இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் வந்து ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை கெடுத்துவிடுவான் என்று எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர்.
நாடகம் நடைபெறுவதை அறிந்ததும் தெனாலிராமனால் உள்ளே செல்லாமல் இருக்க முடியுமா? ஏதாவது தந்திரம் செய்து போய் விடுவது என்று எண்ணிக் கொண்டே நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான், வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன் மசியவில்லை.
இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். "ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்" என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் பாதி பரிசு கிடைக்கும் என்ற பேராசையால் தெனாலிராமனை உள்ளே விட்டான்.
அரங்கத்திற்குள் செல்ல வேண்டிய மற்றொரு வாயிலில் மீண்டும் இன்னொரு வாயிற் காப்போன் நின்றிருந்தான். அவனிடமும், பாதிப் பரிசு தருவதாக உறுதி கூறினான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து தெனாலிராமனை உள்ளே விட்டுவிட்டான்.
அரங்கத்தினுள் நுழைந்த தெனாலிராமன் ஓரமாக போய் உட்கார்ந்து கொண்டான். அப்போது கிருஷ்ணனாக நடித்தவன் வெண்ணை திருடி கோபிதைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம் போட்டு நடித்தவனை கொம்பால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறித் துடித்தான்.
இதைப்பார்த்த மன்னருக்கு கடும் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனை அழைத்து வரச்செய்து, ஏன் இவ்வாறு செய்தாய் என வினவினார். அதற்குத் தெனாலிராமன் கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான் என்று பதிலுரைத்தான். இந்த பதிலைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைக் கேட்ட தெனாலிராமன் அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு வாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன். ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள் என்று கூறினான்.
உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்து வரச்செய்தார். வாயிற்காப்போன்களும் பரிசு கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் மன்னரை நோக்கி வந்தனர். தெனாலிராமன் கூறியது பற்றி வாயிற்காப்போன்களிடம் விசாரித்தார். அவ்விருவரும் ஒத்துக் கொண்டதை அடுத்து, இருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் ஆணையிட்டார்.
பரிசு பெற வந்த இடத்தில் கசையடிப் பெறுவதை எண்ணி வேதனைப் பட்டனர் வாயிற்காப்போன்கள்.தெனாலி ராமன் சமயோஜித புத்தியால் தப்பிச் சென்றுவிட்டார்.
Guest- Guest
Re: கிடைப்பதில் சம பங்கு தருவேன்
தெனாலி ராமன் சமயோஜித புத்தி
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|