Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நான்தான் பலசாலி!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
நான்தான் பலசாலி!
நான்தான் பலசாலி!
ஒரு காட்டில் சிங்கராஜா ஒன்று இருந்தது. அதற்கு தன்னுடைய பலத்தின் மீது மிகுந்த பெருமை. தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற நினைப்பில் அந்த காட்டில் வாழும் சிறிய மிருகங்களை எல்லாம் பாடாய்படுத்தியது. இதனால் சின்ன மிருகங்கள் எல்லாம் ஆண்டவரிடம் அழுது புலம்பின. உடனே ஆண்டவர் ஒரு சிறிய கொசுவை கொண்டு சிங்கத்திற்கு பாடம் புகட்ட விரும்பினார்.
ஒருநாள் சிங்கம் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பக்கமாக ஒரு கொசு வந்தது.
முதலில் தன் காதருகே வந்து ரீங்காரமிட்ட கொசுவைப் பற்றி சிங்கம் அலட்சியமாக நினைத்தது. திரும்பத் திரும்ப கொசு தொந்தரவு கொடுக்கவே சிங்கத்திற்குக் கோபம் வந்துவிட்டது.
""யாரவன் எனக்குத் தொந்தரவு கொடுப்பது?'' என்று உருமிக் கொண்டே கோபத்துடன் சிங்கம் எழுந்தது.
கொசு கலகலவென நகைத்து, ""சிங்க ராசாவே என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா? நான் தான் கொசு,'' என்றது.
""நீ யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போ. என்னிடம் வந்து ஏன் தொந்தரவு செய்கிறாய்?'' என்று சிங்கம் கேட்டது.
""நான் உங்களிடம் சண்டை போட வந்து இருக்கிறேன். முடியுமானால் என்னிடம் சண்டையிட்டு என்னைத் தோல்வியுறச் செய்யுங்கள் பார்க்கலாம்,'' என கொசு சவால் விட்டது.
""உனக்கு என்ன திமிர்? அற்ப ஜந்துவாகிய நீ என்னிடமா சண்டைக்கு வந்திருக்கிறாய்? நான் மூச்சு விட்டால் கூட நீ நிர்மூலமாகி விடுவாயே,'' என்று கூறியவாறே சிங்கம் தன் முன்னங்கால்களை அதனிடம் வீசியது.
கொசுவோ மிகவும் சுலபமாகத் தப்பித்து அப்பால் பறந்து சென்றது. கொசு தொலைந்தது என்று எண்ணிக் கொண்டு சிங்கம் நிம்மதியாகப் படுத்தது. ஆனால் கொசு மறுபடியும் வந்து சிங்கத்திற்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. சிங்கத்திற்குக் கோபம் தாள முடியவில்லை. ஆகவே மறுபடியும் கொசுவை விரட்டியது. கண் ணுக்குத் தெரியாத அளவுக்கு சிறிய உருவமாக இருந்த கொசு மிகவும் எளிதாக சிங்கத்தை ஏமாற்றி அதனிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடிந்தது.
நெடுநேரம் சிங்கமும், கொசுவும் போராடின. அற்பக் கொசுவை சிங்கத்தால் என்ன செய்ய முடியும்? அதை விரட்ட, விரட்ட திரும்பத் திரும்ப வந்து சிங்கத்திற்குத் தொல்லை கொடுத்துக் கொண்டு இருந்தது. கொசுவை ஒன்றும் செய்ய முடியாமல் சிங்கம் சோர்ந்துவிட்டது. ஓய்ந்து போய்க் கீழே படுத்துக் கொண்டது.
கொசு கைகொட்டி ஏளனச் சிரிப்புச் சிரித்தது. ""மிருகங்களுக்கே அரசன் என்று சொல்லிக் கொள்ளும் உம்முடைய பலம் என்னிடம் பலிக்கவில்லை பார்த்தீரா? உம்மைவிட நான் பலசாலி என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆகவே நான் தான் இந்தக் காட்டிற்கு அரசன்,'' என்று வெற்றி முழக்கம் இட்டது. சிங்கம் வெட்கி தலை குனிந்தது.
குட்டீஸ்... பெருமை என்பது இருக்கக் கூடாது. பெருமை உள்ளவர்களுக்கு உடனே அழிவு வரும். தாழ்மையுடன் நடந்துக் கொள்பவர்களை ஆண்டவன் உயர்த்துவார்.
***
சிறுவர் மலர்
ஒரு காட்டில் சிங்கராஜா ஒன்று இருந்தது. அதற்கு தன்னுடைய பலத்தின் மீது மிகுந்த பெருமை. தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற நினைப்பில் அந்த காட்டில் வாழும் சிறிய மிருகங்களை எல்லாம் பாடாய்படுத்தியது. இதனால் சின்ன மிருகங்கள் எல்லாம் ஆண்டவரிடம் அழுது புலம்பின. உடனே ஆண்டவர் ஒரு சிறிய கொசுவை கொண்டு சிங்கத்திற்கு பாடம் புகட்ட விரும்பினார்.
ஒருநாள் சிங்கம் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பக்கமாக ஒரு கொசு வந்தது.
முதலில் தன் காதருகே வந்து ரீங்காரமிட்ட கொசுவைப் பற்றி சிங்கம் அலட்சியமாக நினைத்தது. திரும்பத் திரும்ப கொசு தொந்தரவு கொடுக்கவே சிங்கத்திற்குக் கோபம் வந்துவிட்டது.
""யாரவன் எனக்குத் தொந்தரவு கொடுப்பது?'' என்று உருமிக் கொண்டே கோபத்துடன் சிங்கம் எழுந்தது.
கொசு கலகலவென நகைத்து, ""சிங்க ராசாவே என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா? நான் தான் கொசு,'' என்றது.
""நீ யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போ. என்னிடம் வந்து ஏன் தொந்தரவு செய்கிறாய்?'' என்று சிங்கம் கேட்டது.
""நான் உங்களிடம் சண்டை போட வந்து இருக்கிறேன். முடியுமானால் என்னிடம் சண்டையிட்டு என்னைத் தோல்வியுறச் செய்யுங்கள் பார்க்கலாம்,'' என கொசு சவால் விட்டது.
""உனக்கு என்ன திமிர்? அற்ப ஜந்துவாகிய நீ என்னிடமா சண்டைக்கு வந்திருக்கிறாய்? நான் மூச்சு விட்டால் கூட நீ நிர்மூலமாகி விடுவாயே,'' என்று கூறியவாறே சிங்கம் தன் முன்னங்கால்களை அதனிடம் வீசியது.
கொசுவோ மிகவும் சுலபமாகத் தப்பித்து அப்பால் பறந்து சென்றது. கொசு தொலைந்தது என்று எண்ணிக் கொண்டு சிங்கம் நிம்மதியாகப் படுத்தது. ஆனால் கொசு மறுபடியும் வந்து சிங்கத்திற்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. சிங்கத்திற்குக் கோபம் தாள முடியவில்லை. ஆகவே மறுபடியும் கொசுவை விரட்டியது. கண் ணுக்குத் தெரியாத அளவுக்கு சிறிய உருவமாக இருந்த கொசு மிகவும் எளிதாக சிங்கத்தை ஏமாற்றி அதனிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடிந்தது.
நெடுநேரம் சிங்கமும், கொசுவும் போராடின. அற்பக் கொசுவை சிங்கத்தால் என்ன செய்ய முடியும்? அதை விரட்ட, விரட்ட திரும்பத் திரும்ப வந்து சிங்கத்திற்குத் தொல்லை கொடுத்துக் கொண்டு இருந்தது. கொசுவை ஒன்றும் செய்ய முடியாமல் சிங்கம் சோர்ந்துவிட்டது. ஓய்ந்து போய்க் கீழே படுத்துக் கொண்டது.
கொசு கைகொட்டி ஏளனச் சிரிப்புச் சிரித்தது. ""மிருகங்களுக்கே அரசன் என்று சொல்லிக் கொள்ளும் உம்முடைய பலம் என்னிடம் பலிக்கவில்லை பார்த்தீரா? உம்மைவிட நான் பலசாலி என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆகவே நான் தான் இந்தக் காட்டிற்கு அரசன்,'' என்று வெற்றி முழக்கம் இட்டது. சிங்கம் வெட்கி தலை குனிந்தது.
குட்டீஸ்... பெருமை என்பது இருக்கக் கூடாது. பெருமை உள்ளவர்களுக்கு உடனே அழிவு வரும். தாழ்மையுடன் நடந்துக் கொள்பவர்களை ஆண்டவன் உயர்த்துவார்.
***
சிறுவர் மலர்
Guest- Guest
Similar topics
» காதலியின் உள்ளக் குமுறல் - நான்தான் அவள்
» நான்தான் மதன் மனைவி’: சொந்தம் கொண்டாடும் பல பெண்களால் குழப்பம்
» நான்தான் மதன் மனைவி’: சொந்தம் கொண்டாடும் பல பெண்களால் குழப்பம்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|