Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மாசானி-திரைவிமர்சனம்
Page 1 of 1 • Share
மாசானி-திரைவிமர்சனம்
ராம்கி நடித்த செந்தூரபூவே, சின்ன
பூவே மெல்ல பேசு என ராம்கி நடித்த
பல படங்களை திரும்பத் திரும்பப்
பார்த்திருப்போம். அதன்
பிறகு இடைவெளி விட்டு நடிக்க
ஆரம்பித்த ராம்கியின் படங்கள்
பெரிதாக போகவும் இல்லை. அதைத்
தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர்
ராம்கி ரீ என்ட்ரி கொடுத்திருக்கும்
படம் மாசாணி. ரோஜா, இனியா, அகில்,
சீஜா ரோஸ் என ஒரு நட்சத்திரப்
பட்டாளங்கள் இந்தப் படத்தில்
இருப்பதாலும் சமீபகாலமாக வெளிவந்த
இந்தப் படத்தின்
பத்திரிகை விளம்பரங்களும்
ரசிகர்களைக் கொஞ்சம்
கவர்ந்திழுத்திருந்தன.
இனி படத்தின் கதைக்குப் போவாம்.
ஒரு கிராமம், அங்க இருக்கும்
கோவிலில் பத்துப்
பதினைந்து வருடமாக
ஒரே ஒரு சிலையை செய்ய
முயற்சித்து முடியாமல் போகிறது.
சிலை செய்ய வருகிறவர்கள் எல்லாம்,
வந்த வேலையைப் பாதியில்
போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிறார்கள்.
இதற்கு சரியான காரணத்தைக்
கண்டு பிடிக்க முடியாமல்
திணறுகிறார்கள் ஊர் மக்கள். அந்த
சிலையை செய்ய தாமதமாகும்
ஒவ்வொரு நாளும் ஊரில் அசம்பாவிதங்கள்
நடந்து கொண்டே இருக்கின்றன. ஏன்
ஒரு சிலை செய்வதில் இவ்வளவு தாமதம்?
சிலை செய்ய வரும் ஸ்தபதிகள் வந்த
மறுநாளே ஓடிவிடுவதன் காரணம் என்ன
என்பதை கொஞ்சம்
திகிலுடனே சொல்கிறது மாசாணி.
படத்தின் முதல் பாதி முழுவதும்
கோவிலுக்கு சிலை செய்ய ஸ்தபதிகள்
வருவதும் அவர்கள்
பயந்து மறு நாளே ஊரை விட்டு
ஓடிவிடுவதுமான காட்சிகளே முழுக்க
வருகின்றன. இவற்றில் கிராபிக்ஸ்
உதவியுடன் படம் பார்க்க
வருகிறவர்களை பயமுறுத்த
முயற்சித்திருக்கிறார்கள்.
இரண்டாவது பாதியில்தான் படம்
கதையினுள் என்ட்ரி ஆகிறது.
ராம்கியும் இனியாவும் வருகிற
காட்சிகள் செம இன்ட்ரஸ்டிங்காக
நகருகின்றன. படத்தில்
ரொம்பவே அனைவருக்கும் பிடித்த
காட்சிகளும் அதுவாகத்தான் இருக்கும்.
ராம்கியின் மோதிரம் நெல் அளக்கும்
போது கழன்று விடுவதும்,
அதை இனியா சமார்த்தியமாக
ஒப்படைப்பதும்
ரொம்பவே ரொம்பவே நல்லாயிருக்கிற
காட்சிகள். இனியா படம் முழுக்க
ஜாக்கெட் போடாமலேயே வலம் வருகிறார்.
இடைவேளைக்கு முன்பு ஒரு மந்திரவாதி
வருகிற காட்சியில்
இனியா ஒரு சிரிப்பு சிரிப்பார்…
அடேங்கப்பா… அந்த சிரிப்பே பல
விஷயங்களை சொல்லிவிடுகிறது. காதல்
கந்தாஸ் ஆடும் அந்த பாடல் எல்லாம்
படத்துக்கு அவசியமே இல்லை… ஆனாலும்
ஒரு குத்துப்பாட்டு வேண்டும்
என்று நினைத்து வைத்திருப்பார்கள்
போலும்.
அன்பான அண்ணியாகவும், அதே நேரத்தில்
தனது குடும்ப மானம் போய்விடும்
என்று வருகிற நேரத்தில்
கொலை செய்யவும் தயங்காத
ஒரு ராட்சஷியாகவும் வருகிறார்
ரோஜா. இவர் வரும் காட்சிகள்
அனைத்துமே களேபரமாக இருக்கின்றன.
படத்தின் முக்கியமான கேரக்டரில்
வருகிறார் அகில். கோவில்
சிலையை செய்து முடிக்க யார்
யாரோ முயற்சித்து கடைசியில் அந்த
வேலை அகில் முன்னால்
வந்து நிற்கிறது. இவருக்கு ஜோடியாக
நடித்திருக்கிறார் சீஜா ரோஸ்.
அகிலுக்கு நண்பனாக வரும் ப்ளாக்
பாண்டியை வைத்து காமெடி பண்ண
முயற்சித்திருக்கிறார்கள். சில
இடங்களில் சிரித்து வைக்க
முடிகிறது. சுடுகாட்டில்
ஒரு கிளவியிடம் போய் இவர் டீ
குடீக்கும் காட்சி செம கலகலப்பு.
சிலை செய்யும் ஸ்தபதி கேரக்டரில்
ஒய்.ஜி. மகேந்திரன், சீஜா ரோஸின்
அப்பாவாக நரேன் மற்றும்
ராம்கிக்கு அண்ணனாக
நடித்திருக்கிறார் சரத்பாபு. கோவில்
பூசாரியாக வரும் மனோபாலா,
போண்டா மணி, அல்வா வாசு,
உமா பத்மநாபன், வாசு விக்ரம்,
சிட்டிபாபு ஆகியோரும் சில
காட்சிகள் கதையோடு, படத்தில்
வந்து போகிறார்கள்.
எடிட்டிங் விடி விஜயன், முதல்
பாதியை அவரது உதவியாளர்கள் எடிட்
பண்ணியிருப்பார்களோ என்னவோ.
இரண்டாவது பாதிதான் கொஞ்சம்
விறுவிறுப்பாக நகர்கிறது.
இசை ஃபாஸில். இரண்டு பாடல்கள்
கேட்பதற்கு நன்றாக இருக்கின்றன.
பின்னணி இசையில்
ரொம்பவே மெனெக்கெட்டிருப்பது
தெரிகிறது. அதுவும் சில இடங்களில்
பாடலின் இசையை பின்னணி இசையாக
ஒலிக்க வைத்திருப்பது இன்னும் அழகு.
கிராமத்து காட்சிகளுக்கு ஃபாசிலின்
இசை நன்றாகவே உதவியிருக்கிறது.
கதை பத்மராஜா எழுதியிருக்கிறார்.
கே.பத்மராஜா, எல்.ஜி.ஆர். இருவரும்
சேர்ந்து மாசாணி படத்தை
இயக்கியிருக்கிறார்கள். முதல்
பாதியில்
பயமுறுத்திவிட்டு இரண்டாவது
பாதியில்
கதை சொல்லியிருக்கிறார்கள். “மனுஷன்ல
தாழ்ந்தவன் உயர்ந்தவன்னு யாரும்
கிடையாது…” என்னும்
மெசேஜை ஸ்ட்ராங்காக மாசாணி படத்தின்
மூலம் சொல்லியதற்காகவே இயக்குநர்களை
கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும
பூவே மெல்ல பேசு என ராம்கி நடித்த
பல படங்களை திரும்பத் திரும்பப்
பார்த்திருப்போம். அதன்
பிறகு இடைவெளி விட்டு நடிக்க
ஆரம்பித்த ராம்கியின் படங்கள்
பெரிதாக போகவும் இல்லை. அதைத்
தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர்
ராம்கி ரீ என்ட்ரி கொடுத்திருக்கும்
படம் மாசாணி. ரோஜா, இனியா, அகில்,
சீஜா ரோஸ் என ஒரு நட்சத்திரப்
பட்டாளங்கள் இந்தப் படத்தில்
இருப்பதாலும் சமீபகாலமாக வெளிவந்த
இந்தப் படத்தின்
பத்திரிகை விளம்பரங்களும்
ரசிகர்களைக் கொஞ்சம்
கவர்ந்திழுத்திருந்தன.
இனி படத்தின் கதைக்குப் போவாம்.
ஒரு கிராமம், அங்க இருக்கும்
கோவிலில் பத்துப்
பதினைந்து வருடமாக
ஒரே ஒரு சிலையை செய்ய
முயற்சித்து முடியாமல் போகிறது.
சிலை செய்ய வருகிறவர்கள் எல்லாம்,
வந்த வேலையைப் பாதியில்
போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிறார்கள்.
இதற்கு சரியான காரணத்தைக்
கண்டு பிடிக்க முடியாமல்
திணறுகிறார்கள் ஊர் மக்கள். அந்த
சிலையை செய்ய தாமதமாகும்
ஒவ்வொரு நாளும் ஊரில் அசம்பாவிதங்கள்
நடந்து கொண்டே இருக்கின்றன. ஏன்
ஒரு சிலை செய்வதில் இவ்வளவு தாமதம்?
சிலை செய்ய வரும் ஸ்தபதிகள் வந்த
மறுநாளே ஓடிவிடுவதன் காரணம் என்ன
என்பதை கொஞ்சம்
திகிலுடனே சொல்கிறது மாசாணி.
படத்தின் முதல் பாதி முழுவதும்
கோவிலுக்கு சிலை செய்ய ஸ்தபதிகள்
வருவதும் அவர்கள்
பயந்து மறு நாளே ஊரை விட்டு
ஓடிவிடுவதுமான காட்சிகளே முழுக்க
வருகின்றன. இவற்றில் கிராபிக்ஸ்
உதவியுடன் படம் பார்க்க
வருகிறவர்களை பயமுறுத்த
முயற்சித்திருக்கிறார்கள்.
இரண்டாவது பாதியில்தான் படம்
கதையினுள் என்ட்ரி ஆகிறது.
ராம்கியும் இனியாவும் வருகிற
காட்சிகள் செம இன்ட்ரஸ்டிங்காக
நகருகின்றன. படத்தில்
ரொம்பவே அனைவருக்கும் பிடித்த
காட்சிகளும் அதுவாகத்தான் இருக்கும்.
ராம்கியின் மோதிரம் நெல் அளக்கும்
போது கழன்று விடுவதும்,
அதை இனியா சமார்த்தியமாக
ஒப்படைப்பதும்
ரொம்பவே ரொம்பவே நல்லாயிருக்கிற
காட்சிகள். இனியா படம் முழுக்க
ஜாக்கெட் போடாமலேயே வலம் வருகிறார்.
இடைவேளைக்கு முன்பு ஒரு மந்திரவாதி
வருகிற காட்சியில்
இனியா ஒரு சிரிப்பு சிரிப்பார்…
அடேங்கப்பா… அந்த சிரிப்பே பல
விஷயங்களை சொல்லிவிடுகிறது. காதல்
கந்தாஸ் ஆடும் அந்த பாடல் எல்லாம்
படத்துக்கு அவசியமே இல்லை… ஆனாலும்
ஒரு குத்துப்பாட்டு வேண்டும்
என்று நினைத்து வைத்திருப்பார்கள்
போலும்.
அன்பான அண்ணியாகவும், அதே நேரத்தில்
தனது குடும்ப மானம் போய்விடும்
என்று வருகிற நேரத்தில்
கொலை செய்யவும் தயங்காத
ஒரு ராட்சஷியாகவும் வருகிறார்
ரோஜா. இவர் வரும் காட்சிகள்
அனைத்துமே களேபரமாக இருக்கின்றன.
படத்தின் முக்கியமான கேரக்டரில்
வருகிறார் அகில். கோவில்
சிலையை செய்து முடிக்க யார்
யாரோ முயற்சித்து கடைசியில் அந்த
வேலை அகில் முன்னால்
வந்து நிற்கிறது. இவருக்கு ஜோடியாக
நடித்திருக்கிறார் சீஜா ரோஸ்.
அகிலுக்கு நண்பனாக வரும் ப்ளாக்
பாண்டியை வைத்து காமெடி பண்ண
முயற்சித்திருக்கிறார்கள். சில
இடங்களில் சிரித்து வைக்க
முடிகிறது. சுடுகாட்டில்
ஒரு கிளவியிடம் போய் இவர் டீ
குடீக்கும் காட்சி செம கலகலப்பு.
சிலை செய்யும் ஸ்தபதி கேரக்டரில்
ஒய்.ஜி. மகேந்திரன், சீஜா ரோஸின்
அப்பாவாக நரேன் மற்றும்
ராம்கிக்கு அண்ணனாக
நடித்திருக்கிறார் சரத்பாபு. கோவில்
பூசாரியாக வரும் மனோபாலா,
போண்டா மணி, அல்வா வாசு,
உமா பத்மநாபன், வாசு விக்ரம்,
சிட்டிபாபு ஆகியோரும் சில
காட்சிகள் கதையோடு, படத்தில்
வந்து போகிறார்கள்.
எடிட்டிங் விடி விஜயன், முதல்
பாதியை அவரது உதவியாளர்கள் எடிட்
பண்ணியிருப்பார்களோ என்னவோ.
இரண்டாவது பாதிதான் கொஞ்சம்
விறுவிறுப்பாக நகர்கிறது.
இசை ஃபாஸில். இரண்டு பாடல்கள்
கேட்பதற்கு நன்றாக இருக்கின்றன.
பின்னணி இசையில்
ரொம்பவே மெனெக்கெட்டிருப்பது
தெரிகிறது. அதுவும் சில இடங்களில்
பாடலின் இசையை பின்னணி இசையாக
ஒலிக்க வைத்திருப்பது இன்னும் அழகு.
கிராமத்து காட்சிகளுக்கு ஃபாசிலின்
இசை நன்றாகவே உதவியிருக்கிறது.
கதை பத்மராஜா எழுதியிருக்கிறார்.
கே.பத்மராஜா, எல்.ஜி.ஆர். இருவரும்
சேர்ந்து மாசாணி படத்தை
இயக்கியிருக்கிறார்கள். முதல்
பாதியில்
பயமுறுத்திவிட்டு இரண்டாவது
பாதியில்
கதை சொல்லியிருக்கிறார்கள். “மனுஷன்ல
தாழ்ந்தவன் உயர்ந்தவன்னு யாரும்
கிடையாது…” என்னும்
மெசேஜை ஸ்ட்ராங்காக மாசாணி படத்தின்
மூலம் சொல்லியதற்காகவே இயக்குநர்களை
கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|