தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:21 pm

சமையல் குறிப்புகள் ! பொடி வகைகள்!!



பருப்புப் பொடி

தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு – 1 கப்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 /2 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு

செய்முறை:
துவரம் பருப்பை எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். (பருப்பு எதுவும் கருகிவிடாமல் கைவிடாமல் வறுக்கவும்.)
காய்ந்த மிளகாய், மிளகு, சீரகத்தையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.
ஆறியதும் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, உப்பு, பெருங்காயம் சேர்த்து சற்றே கரகரப்பாக அரைத்து காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைக்கவும்.
கூட்டு, கறி செய்யும்போது வேகவைத்த பருப்பு இல்லையென்றால் மாற்றாக ஒன்றிரண்டு டீஸ்பூன் இந்தப் பருப்புப் பொடி சேர்த்து உபயோகிக்கலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். கூட்டு, அப்பள, வடாம் வகைகள் சேரும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:22 pm

ஆந்திர பருப்பு பொடி --

தேவையான பொருட்கள்:

பொறிகடலை – 1 கப்
வேர்க்கடலை - 1/4 கப்
வரமிளகாய் – 20-25 என்னம் (அல்லது உங்கள தேவைக்கேற்ப சேர்க்கவும்)
பூண்டு – 10 – 15 என்னம் (அல்லது உங்கள் தேவைக்கேற்ப சேர்க்கவும்)
கறுவேப்பிலை - சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி, எண்ணெய் ஊற்றாமல் பொறிகடலை, வேர்க்கடலை, வரமிளகாய் மற்றும் பூண்டு மற்றும் கறுவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
வறுத்த பொருட்கள் ஆற விடவும்.
பின்பு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பருப்பு பொடி சூடான சாதம், இட்லி, தோசையுடன் மிகவும சுவையாக இருக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:24 pm

கொள்ளுப் பொடி [கானாப் பொடி]

உடலில் இருக்கும் கொழுப்பு, ஊளைச் சதையைக் குறைக்க, மூட்டுவலி போன்ற பல பிரச்சினைகளுக்கு கொள்ளு மிகவும் நல்லது. அடிக்கடி உணவில் சேர்ப்பது, உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள். இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.
தேவையான பொருள்கள்:
கொள்ளு – 1/2 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 3
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 4 பல் (விரும்பினால்)
பெருங்காயம்
உப்பு

செய்முறை:
துவரம் பருப்பு, கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.
நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து, காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைக்கவும்.
பெருங்காயம் கட்டிக் காயமாக இருந்தால் (மணம் நன்றாக இருக்கும்) முதலிலேயே சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:25 pm

க‌றிவே‌ப்‌பிலை‌ப் பொடி

க‌றிவே‌ப்‌பிலையை ந‌ன்கு த‌ண்‌ணீ‌ரி‌ல் கழு‌வி, அதனை வெறு‌ம் கடா‌யி‌ல் போ‌ட்டு சூடே‌ற்‌றினா‌ல் த‌ண்‌ணீ‌ர் பத‌ம் போ‌ய்‌விடு‌ம். அதனுட‌ன் ‌சி‌றிது உளு‌ந்து‌ம் பரு‌ப்பு, கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய், பெரு‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை வை‌‌த்து ‌மி‌க்‌சி‌யி‌ல் போ‌ட்டு பொடி செ‌ய்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

இதனை சாத‌த்‌தி‌ல் ‌பிசை‌ந்து‌ம் சா‌ப்‌பிடலா‌ம், இ‌ட்‌லி‌க்கு‌ம் தொ‌ட்டு‌க் கொ‌ண்டு‌ம் சா‌ப்‌பிடலா‌ம். அவசர‌த்‌தி‌ற்கு‌ம் உத‌வு‌ம். ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌‌ற்கு‌ம் ‌சிற‌ந்தது.

கறிவேப்பிலையையும், பச்சைக் கொத்தமல்லியையும் சேர்த்தும் துவையல் அரைத்து சாப்பிடலாம். கறிவேப்பிலையைப் போலவே, மல்லி இலையும் ஜீரண சக்திக்கு முக்கியப் பங்காற்றக்கூடியது.

தவிர, கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.

உணவில் மட்டுமல்லாது, நமது புற ஆரோக்கியத்திற்கும் கறிவேப்பிலையின் பங்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:26 pm

கூட்டுப் பொடி

இந்த பொடியை தயாரித்து வைத்துக் கொண்டால் கூட்டு செய்யும் போது ஒவ்வொரு முறையும் தனியாக வறுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 100கிராம்(1/2 டம்ளர்),
மிளகு - 3 மேசைக்கரண்டி,
சீரகம் - 3 மேசைக்கரண்டி,
தனியா - 1கைப்பிடி,
காய்ந்த மிளகாய் - 15.

செய்முறை
எல்லாவற்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்.
வறுத்த பருப்பு, சீரகம், மிளகாய், மிளகு, தனியா எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.
கூட்டு கொதித்தபின் இறக்குமுன் 1 மேசைக்கரண்டி தூவி கலந்து இறக்கவும். ரசத்திற்கும் இறக்குமுன் 1 தேக்கரண்டி போட்டு இறக்கினால் ரசம் வாசனையாக இருக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:27 pm

ரச பொடி

தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் - -----------ஒரு கப்
தனியா - ----------- 3 கப்
துவரம் பருப்பு - --------- 1/2கப்
மிளகு --------- அரை கப்
சீரகம் - ------------ஒன்றறை கப்
கட்டிவிரளி மஞ்சள் - 4

செய்முறை

விரளி மஞ்சளை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் காயவைத்துக் கொள்ளவும்.
தனியா, துவரம் பருப்பு,மிளகு, சீரகம்,காய்ந்த மிளகாய் இவற்றை
வெயிலில் காயவைத்துக் கொள்ளவும்.
வறுக்க வேண்டாம்
வெயில் இல்லாத காலங்களில்/இடங்களில் லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளலாம். ஈரப்பதம் இருந்தால் மிக்ஸியில் அரைக்க வராது; பொடி சீக்கிரம் கெட்டுவிடும்.
எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்து, காற்றுப் புகாத பாட்டிலில்/டப்பாவில் எடுத்துவைக்கவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:29 pm

வேர்க்கடலை பொடி

தேவையான பொருட்கள்
வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 கப்
பொட்டுக்கடலை - 1 கப்
வறுத்த எள் (வெள்ளை அல்லது கறுப்பு) - 1/2 கப்
பெருங்காயம் - 1 துண்டு
வறுத்த கசகசா - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 6 அல்லது 8
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்

செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தைப் பொரித்து எடுக்கவும்.
மிளகாய் வற்றலை வறுத்துக் கொள்ளவும்.
வேர்க்கடலை, எள், கசகசா, உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், பொட்டுக்கடலை எல்லாவற்றையும் பொடிக்கவும்.
சூடான சாதத்தில் இந்தப்பொடியைப்போட்டு நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:30 pm

சீரகப் பொடி

தேவையான பொருட்கள்
சீரகம் -- 100 கிராம்
இஞ்சி -- 50 கிராம்
எலுமிச்சம் பழம் -- 15 (அ) 20
ஏலக்காய் -- 10 கிராம் (தோல் நீக்கியது)
சீனா கல்கண்டு -- 100 கிராம்

செய்முறை
இஞ்சியை நன்றாக அலசி தோலை நீக்கி 'ஜூஸ்' எடுக்கவேண்டும்.
ஒரு கிண்ணத்தில் சீரகத்தை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் இஞ்சி சாறை ஊற்ற வேண்டும்.
தொடர்ந்து எலுமிச்சை சாறை பிழிந்து விடவேண்டும்.
சீரகம் நன்றாக இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் மூழ்கி இருக்கும் அளவிற்கு பார்த்துக்கொள்ளவும்.இதனை 24 மணிநேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
பிறகு சீரகத்தை தனியே வடித்து எடுத்து வெயில் நேரடியாக படாத அளவில் உலர்த்த வேண்டும்(24 மணி நேரம்).
மீதமுள்ள அதே இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் உலர்த்திய அதே சீரகத்தை போட்டு ஊறவைக்கவேண்டும்.
இப்படி அந்த சாறு முழுமையாக வற்றும் வரை தொடர்ந்து 5 அல்லது 6 நாள் இப்படி செய்து கொள்ளவேண்டும்.
உலர்த்தப்பட்ட சீரகத்துடன் ஏலக்காய், சீனா கல்கண்டு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸி / உரலில் போட்டு அரைத்து எடுக்கவும்.
இதனை இரண்டு தடவை சலித்து எடுக்கவும்.
சீரகப்பொடி தயார்.

குறிப்பு:
வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து உபாதைகளுக்கும் நல்லது. மேலும் பித்தம், ஏப்பம், தலை சுற்றல் போன்றவைகளும் சரிப்படும். இதனை ஒரு டீஸ்பூன் அளவிற்கு தேவையான சமயத்தில் சாப்பிட வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:32 pm

சாம்பார் பொடி -- ( 10 பேருக்கு )

தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் -- 10 கிராம்
கொத்தமல்லி -- 20 கிராம்
வெந்தயம் -- 1 டீஸ்பூன்
கடலை பருப்பு -- 1 டீஸ்பூன்
பெருங்காயம் -- 1 துண்டு
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
தேங்காய் எண்ணைய் -- தே.அ

செய்முறை
எண்ணையை சூடாக்கி கடலைபருப்பு மற்றும் பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்த்து கிளறவும்.
கடலை பருப்பு சிவப்பு நிறமானதும் கொத்தமல்லி, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வெந்தயம் பொரியும் போது கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கிய பின் தூளாக்கவும்.
இது உடனடியாக செய்யக்கூடிய சாம்பார் பொடி.
நல்ல ருசியான காரமான சாம்பார் பொடி.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:33 pm

எள்ளு பொடி -

தேவையான பொருட்கள்
கருப்பு எள்ளு - 100g
காய்ந்த மிளகாய் (மிளகாய் வற்றல்) - 15
பூண்டு - 10
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை
முதலில் எள்ளை எண்ணெய் இல்லாமல் நன்கு வறுத்தெடுக்க வேண்டும். எள்ளு நன்கு பொரிய வேண்டும்.
மிளகாயை நன்கு வறுக்க வேண்டும்.
ஆரியபின்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும்.

குறிப்பு:
இந்த பொடியை எண்ணெய் சேர்க்காமலும் சாப்பிடலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:34 pm

இட்லி பொடி( குழந்தை களுக்கு)

தேவையான பொருட்கள்
உளுந்து பருப்பு - அரை கப்
கடலை பருப்பு - அரை கப்
மிளகு - ஒரு தேக்கரண்டி
வேர்கடலை - ஒரு மேசை கரண்டி (வருத்தது)
வெள்ளை எள் - ஒரு தேக்கரன்டி (வறுத்தது)
கருவேப்பிளை - கால் கப்
உப்பு - அரை தேக்காரண்டி (அ) தேவையான அளவு
பூண்டு - ஒன்று

செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொடுட்களியும் தனித்தனியாக வறுக்கவும்.
வறுத்து ஆறவைக்கவும்.
ஆறியது மிக்ஸியில் திரித்து ஒரு ஏர் டைட் கன்டைனரில் போட்டு வைக்கவும்.
இட்லிஅயி பொடியாக நருக்கி இந்த பொடியை தூவி நெயை சூடு பண்ணி ஊற்றி கிளறி கொடுக்கவும்.
உப்புயும் வருக்கனும்.இல்லை எலா பொருளையும் வருத்து விட்டு அந்த சூடு வானலியில் கடைசீயாக போட்டாலும் சரி.

குறிப்பு:
ஒரே ஒரு இட்லி சாப்பிட்டாலும் இதில் எல்லா சத்தும் அடங்கியுள்ளது. பருப்பு வகைகள், பூண்டு கேஸுக்கு, நெய் ஆகா கம கமக்கும், கருவேப்பிலை தலை முடி சொட்டையாகமல் இருக்கும் சிறுவயதிலிருந்தே சேர்த்து விடுங்கள்.கர கரப்பாக திரியுங்கள் அப்ப தான் சாப்பிடும் போது கடுக்கு மொடுக்கு என்று இருக்கும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:35 pm

கறிப் பொடி

தேவையான பொருட்கள்
தனியா - 1 கப்
உளுந்து - 2 கப்
கடலை பருப்பு - 2 கப்
மிளகாய் வற்றல் - 5
பெருங்காயம் - சிறிது

செய்முறை
வெறும் வாணலியில் மேற் சொன்ன எல்லாவற்றையும் போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும்.
அது நன்றாக ஆறின பிறகு மிக்ஸியில் பொடிக்கவும். இந்த பொடியை எல்லா காய்க்கும் பயன்படுத்தலாம்.
வாழைக்காய், கத்திரிக்காய் போன்றவற்றிற்கும் உபயோகப்படுத்தலாம்.
இதை அரைத்து வைக்கும் சாம்பாருக்கும் கொஞ்சம் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் சேர்க்கலாம்.
இதை 6 மாதம் வரை வைத்துக் கொள்ளலாம். கெடாது.

குறிப்பு:
எண்ணெய் விடாமல் வறுப்பதால் நிற்ய்ய மாதம் வரை கெடாமல் இருக்கும். கருகாமல் வறுக்க வேண்டும். ப்ரிட்ஜில் ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் வாசனையோட இருக்கும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:37 pm

கொள்ளு பொடி -

இந்த பொடியினை சாப்பிட உடல் எடை குறையும்.

தேவையான பொருட்கள்
கொள்ளு - 1 கப்
காய்ந்த மிளகாய் - 6
பூண்டு - 2 பல் தோலுடன்(விரும்பினால்)
பெருங்காயம் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - 1 தே.கரண்டி

செய்முறை
ஒரு கடாயில் காய்ந்த மிளகாயினை போட்டு வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
பின் கொள்ளினை போட்டு நன்றாக வறுக்கவும்.
சிறிது நேரம் ஆறவைத்த பிறகு கொள்ளு, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக அரைக்கவும்.
கடைசியில் பூண்டு , பெருங்காயம் தூள் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் அரைத்து கொள்ளவும்.
இப்பொழுது சுவையான கொள்ளு பொடி ரெடி.
இதனை இட்லி, தோசை, சாத்த்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:38 pm

பிஸி பேளா பாத் பொடி

தேவையான பொருட்கள் பொடி தயாரிக்க

கொப்பரை தேஙகாய் துருவல் - இரண்டு கப்
பொட்டு கடலை - முக்கால் கப்
கடலை பருப்பு - முக்கால் கப்
தனியா - முக்கால் கப்
பெருங்காயம் - இரண்டு துண்டு
காஞ்ச மிளகாய் - இருபது
கிராம்பு - பத்து
பட்டை - நான்கு இரன்டு அங்குல துண்டு
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
ஏலகாய் - பத்து

செய்முறை
அனைத்தையும் வருத்து பொடித்து பிரிட்ஜில் வைத்து கொண்டால் இரண்டு மாதத்திற்கு கெடாது.

குறிப்பு:
இதில் கச கசா, ஏலம் சில பேர் சேர்க்கமாட்டார்கள் தேவையில்லை என்றால் சேர்க்கவேண்டாம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:39 pm

ஜலீலா'ஸ் இட்லி பொடி

தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - ஒரு டம்ளர்
உளுத்தம் பருப்பு - ஒரு டம்ளர்
காஞ்ச மிளகாய் - கால் கப்
எள் - இரண்டு மேசை கரண்டி
வருத்த வேர்கடலை - கால் கப்
கருவேப்பிலை - கைக்கு ஒரு பிடி
உப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காய பொடி - கால் தேக்கரண்டி (அ) ஒரு சிறிய துண்டு

செய்முறை
முதலில் கடலை பருப்பு ,உலுத்தம் பருப்பு சிவற வருக்கனும்.
பிரகு காஞ்சமிளகாயை போட்டு வருக்கனும் இரு நிமிடம் வருத்தால் போதும்.
(இப்போது ஹச் ஹச் தும்மல வரும் தளிக்கா)
பிறகு வேர்கடலை,எள் உப்பு, கருவேப்பிலை ஆய்ந்து கழிவு தண்ணீர்வடித்து தனியாக வானலியில் வதக்கி தண்ணிர் முழுவதும் வற்றியதும் கடலை பருப்பு கலவையுடன் சேர்த்து ஒரு முறை வருக்கனும்.
காலையில் செய்தால் அப்ப்டியே ஆறவிடனும்.
ஆறியதும் மிக்சியில் முதலில் மேலோடு உள்ள காஞ்ச மிளகாய் போட்டு கொஞ்ச பருப்பு போட்டு நல்ல திரிக்கனும், கொஞ்ச விட்டு விட்டு திரிக்கனும்.
பாதியை மையாகவும். பாதி பருப்பை கொர கொரப்பாகவும் திரித்து இரன்டையும் ஒன்றாக கலக்கனும்.
பிறகு சூடாக இருக்கும் நல்ல ஆறவிடனும்.

குறிப்பு:
பிறகு நல்ல காய்ந்த டப்பாவில் போட்டு வைக்கவும். எத்தனை நாள் ஆனாலும் கொடாது எடுக்கும் போது ஈரக்கை போடக்கூடாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:40 pm

ரசப் பொடி

தேவையான பொருட்கள்
காய்ந்தமிளகாய் -- 5 கிராம்
கொத்தமல்லி -- 10 கிராம்
மிளகு -- 8 கிராம்
சீரகம் -- 1/4 டீஸ்பூன்
கடலை பருப்பு -- 5 கிராம்
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
எண்ணைய் -- தேவையான அளவு
பெருங்காயம் -- சிறிதளவு

செய்முறை
எண்ணையை சூடாக்கி பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும்.
கடலை பருப்பையும் சேர்த்து கிளறவும்.
பருப்பு சிவப்பு நிறமானதும் மிளகு, சீரகம் சேர்க்கவும்.
மிளகு பொரியும் போது மல்லி காய்ந்தமிளகாய் சேர்த்து கிளறவும்.
கொத்தமல்லி லேசாக சிவக்கும் போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
பின் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைக்கவும்.
ரசப்பொடி ரெடி.
-----------------------------
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:42 pm

கரம் மசாலா பொடி

தேவையான பொருட்கள்
பட்டை - ஐம்பது கிராம்
லவங்கம் - இருபத்தைந்து கிராம்
ஏலக்காய் - இருபத்தைந்து கிராமில் பாதி

செய்முறை
எல்லா வற்றையும் மிக்சியில் பொடித்து ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
மட்டன் பிரை,சிக்கன் பிரை மற்றும் பல அயிட்டங்களுக்கு இதை கால் தேக்கரண்டி சேர்த்து கொண்டால் நல்ல வாசமாக இருக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:43 pm

சத்துமாவு பொடி (குழந்தைகளுக்கு)

ஏர் உழும் விவசாயி வெரும் ஒரு கப் கேப்ப கஞ்சி குடித்துவிட்டு தான் நிலத்தை உழுகிறான். அவ்வளவு பெரிய நிலத்தை உழவே அது ஒரு சத்தான பாணமாக இருக்கு, ஆனால் நீங்கள் இதில் இத்தனை பொருள் சேர்ப்பதால் இன்னும் கூடுதல் தெம்பு. குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதை குடிக்கலாம்.வேலைக்கு போகிறவர்கள் இது நல்ல கட்டியா காய்ச்சி இரண்டு கப் குடித்து விட்டு போகலாம்.நல்ல பசி தாங்கும்.

தேவையான பொருட்கள்
கேழ்வரகு - அரை கிலோ
சம்பா கோதுமை - ஐம்பது கிராம்
புழுங்கல் அரிசி - ஐம்பது கிராம்
பாதம் - ஐம்பது கிராம்
ஜவ்வரிசி - இருபத்தைந்து கிராம்
உடைத்த கடலை - இருபத்தைந்து கிராம்

செய்முறை
கேழ்வரகு,கோதுமை,அரிசி,உடைத்த கடலை,ஜவ்வரிசி,எல்லாம் தனிதனியாக லேச கை பொருக்கும் அளவுக்கு வருத்து ஆறவைக்க வேண்டும்.
ஆறியதும் மிஷினில் கொடுத்து திரித்து மறுபடியும் ஆறவைத்து ஒரு நல்ல ஏர் டைட் கண்டைனரில் போட்டு வைக்கவேண்டும்.

குறிப்பு:
டெய்லி ஒரு ஒரு மேசைகரண்டி எடுத்து ஒன்னறை கப் பால் + தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சி சக்கரை ஒரு சொட்டு நெய் போட்டு குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும் நல்ல சத்தான பாணம். இத்துடன் நீங்கள் வேறு ஏதும் சத்தான அயிட்டம் சேர்ப்பதாக இருந்தால் கூட சேர்க்கலாம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:47 pm

புளியோதிரை கலவை

இந்த புளியோதரை கலவை ஆபிஸ் போகும் பெண்களுக்கு காலை நேர அவசரத்திற்கு மதியவேளை சாப்பாட்டுக்கு தயாரிக்க ஈஸி, வாரத்தில் ஒரு நாள் இந்த புளியோதரை ரைஸ் நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்
கல் நீக்கிய எள்(கருப்பு) - 50 கிராம்
உளுத்தம்பருப்பு - 50 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
வேர்கடலை - 50 கிராம்
மிளகாய்த்தூள் - 4 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
புளி - 3 எலுமிச்சைபழத்தின் அளவு[பழைய புளி உபயோகபடுத்தினால் நல்லது]
கடுகு - 1டீஸ் ஸ்பூன்
வெந்தயம் - 1டீஸ் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ் ஸ்பூன்
நல்லமிளகு - 1 டீஸ் ஸ்பூன் (முழு மிளகு)
பெருங்காய்த்தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்
கறிவேப்பிலை - 3 கீற்று
நல்லெண்ணெய் - 3/4 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
ஒரு வெறும் வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் எள், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு இவற்றை தனித்தனியாக வறுத்து பொடிசெய்து வைக்கவும்.
வேர்கடலையையும் லேசாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.புளியை ஒரு பாத்திரத்தில் இட்டு அதில் 1 கப் சுடுநீர் ஊற்றி ஊற வைக்கவும்
வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், சீரகம், நல்லமிளகு, இவற்றை போட்டு தாளிக்கவும்,பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு கிண்டி, எள், உ.பருப்பு, க.பருப்பு பொடியினை போட்டு கிண்டி விடவும்
அடுத்து வேர்கடலை, பெருங்காய்த்தூள் மற்றும் புளித்தண்ணீர் தேவையான அளவு உப்பு இட்டு, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும், பச்சை வாசம் போய் கலவை கெட்டியாக வரும் போது இறக்கி விடவும்.
கலவை ஆறிய பின் ஒரு பாட்டிலில் எடுத்து ஃபிரிஜ்ஜில் வைத்துக்கொள்ளவும் , தேவையான நேரம் சூடான சோற்றில் போட்டு கிளறி சாப்பிடவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:53 pm

இஞ்சி பூண்டு பேஸ்ட்

இது சமையல் காரர்கள் பிரியாணி மற்றும் பகாறா காணாவிற்கு மற்றும் பல இஸ்லாமிய அயிட்டங்களுக்கு செய்யும் போது அரைக்கும் இஞ்சி பூண்டின் அளவு

தேவையான பொருட்கள்
இஞ்சி - ஒரு கிலோ
பூண்டு - அரை கிலோ
எண்ணை (அ) வினிகர் (அ) உப்பு - ஒரு மேசை கரண்டி

செய்முறை
முதலில் பூண்டை ஒரு கவரில் போட்டு சுத்தி அல்லது சின குழவியால் இடித்து கொள்ளுங்கள்.பிறகு குப்பை கொட்டும் இடத்தில் வைத்து லேசா புடைத்தால் அவ்வளவு பூண்டு குப்பையும் அதில் போய் விடும் இல்லை என்றால் வீடு முழுவது பூண்டு குப்பைதான்..
இஞ்சி தோலை சீவி விட்டு பிறகு மண் போக கழுவி பிறகு பொடியாக வெட்டனும்.
பூண்டையும் அரிந்து கழுவி கொள்ளுங்கள்.
இப்போது இரண்டையும் கொஞ்ச கொஞ்சமா தண்ணீர் தெளித்து அரைத்தெடுத்து அதில் உப்பு அல்லது வினிகர் அல்லது எண்ணை கலந்து (நல்ல கலக்கி)பாதியை ஒரு கண்டெயினரில் போட்டு பீரீஜரில் வைத்து விடுங்கள். பீரிஜரில் வைக்கும் போது முழுவது அடைத்து வைக்காதீர்கள்.வெடித்து வெளியே வந்துவிடும்.
மீதியை கிழே பிரிட்ஜில் வைத்து தினமும் தேவைக்கு பயன் படுத்தலாம்.

குறிப்பு:
சில பேர் இஞ்சி பூண்டு உரிக்க சோம்பல் பட்டே நிறைய அயிட்டம் செய்யமட்டார்கள். இது டீவி பார்த்து கொண்டே செய்தால் சிரமம் இருக்காது உடனே கையை நல்ல சோப்பு போட்டு தேய்த்து கழுவி விடுங்கள் இல்லை என்றால் அவ்வளவு தான்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:54 pm

சாட் மாசாலா மிக்ஸ்

தேவையான பொருட்கள்
கொத்தமல்லி விதை - 4 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்
ஓமம் - 1 டீஸ் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கரம் மசாலா - 2 டீஸ் ஸ்பூன்
நல்லமிளகாய்த்தூள் - 1 டீஸ் ஸ்பூன்
ட்ரை மாங்காய் பவுடர் (ஆம்சூர்) - 1 டேபிள் ஸ்பூன்
கல்உப்பு - 1 - 2 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 1/2 டீஸ் ஸ்பூன்

செய்முறை
கொத்தமல்லி விதை, சோம்பு, ஓமம், காய்ந்தமிளகாய் இவற்றை தனித்தனியாக
வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும் அதில் கல் உப்பையும் சேர்த்து பொடிக்கவும்
கரம்மசாலாத்தூள், நல்லமிளகாய்த்தூள், ஆம்சூர் பொடி இவற்றையும் வெறும் வாணலியில் லேசாக வறுத்து வினிகரையும்
சேர்த்து அரைத்த பொடியுடன் சேர்க்கவும்.எல்லா பொடியினையும் கலந்து உப்புச் சரிப்பார்த்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடிவைக்கவும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:55 pm

மசாலா டீ பொடி

குளிர் காலத்துக்கு ஏற்ற டீ.

தேவையான பொருட்கள்
1. மிளகு - 16
2. பட்டை - 1 இன்ச்
3. லவங்கம் - 4
4. ஏலக்காய் - 4
5. சுக்கு பொடி - 1 தேக்கரண்டி

செய்முறை
இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பொடியாக அரைக்கவும்.
இதை காய்ந்த பாட்டில் ஒன்றில் போட்டு வைத்து கொண்டு, தேவையான போது வழக்கமாக டீ போடும்போது, டீ தூளோடு சேர்த்து இந்த தூள் 1/2 தேக்கரண்டி (அல்லது உங்கள் ருசிக்கு) சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:57 pm

திடீர் இட்லி மிளகாய் பொடி

இது அவசரத்துக்கு கை குடுக்கும், மிகவும் வாசமாக, சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்
1. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
2. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
3. பூண்டு - 3 பல்
4. உளுந்து பருப்பு - 1 தேக்கரண்டி
5. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
6. கறிவேப்பிலை - கொஞ்சம்
7. நல்லெண்ணெய் - 7 தேக்கரண்டி
8. உப்பு

செய்முறை
எண்ணெய் சிறிது விட்டு அதில் கறிவேப்பிலை, உளுந்து, கடலை பருப்பு போட்டு சிவக்க வறுத்து வைக்கவும்.
பூண்டை நசுக்கி வைக்கவும்.
பின் மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு கலந்து வைக்கவும்.
இதில் வறுத்த பருப்பு, பூண்டு, எண்ணெய் எல்லாம் கலந்தால் பொடி தயார்.

குறிப்பு:
இது இட்லி, தோசை'கு பொருத்தமாக இருக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:58 pm

குழம்புப் பொடி

மயிலாடுதுறை சிதம்பரம், கடலூர் பக்கங்களில் பொதுவாக இந்தப் பொடியை குழம்பில் உபயோகப்படுத்துவார்கள். சாம்பார், புளிக்குழம்பு என்று எல்லாவற்றுக்கும் இந்தப் பொடி தான். ஊருக்கு ஊர் பொருள்களின் விகிதங்கள் மாறுபட்டிருக்கும்.

தேவையான பொருட்கள்
தனியா- ஒன்றரை கிலோ
வற்றல் மிளகாய்- அரை கிலோ
துவரம்பருப்பு- கால் கிலோ
கடலைப் பருப்பு- 100 கிராம்
மிளகு-50 கிராம்
சீரகம்- 50 கிராம்
வெந்தயம்- 1 மேசைக்கரண்டி
அரிசி- 1 மேசைக்கரண்டி
சோம்பு- 1 மேசைக்கரண்டி

செய்முறை
அனைத்துப்பொருள்களையும் தனித்தனியே பொன்னிறமாக வெறும் வாணலியில் வறுத்து எல்லாவற்றையும் சேர்த்து பொடிக்கவும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by முழுமுதலோன் Fri Jun 07, 2013 7:59 pm

நோன்பு கஞ்சி பொடி


தேவையான பொருட்கள்
சீரகம் - 50 கிராம்
வெந்தயம் - 25 கிராம்
சோம்பு - 25 கிராம்
பட்டை -10 கிராம்
கிராம்பு - 10 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்

செய்முறை
மேற்கூறிய எல்லாப்பொருட்களையும் சுத்தம் செய்து காய வைத்து மிக்ஸியில் தூள் செய்து எடுக்கவும்.
ருசியையும் மணத்தையும் தரக்கூடிய நோன்பு கஞ்சிப்பொடி ரெடி.இப்படி திரித்து வைத்துக்கொண்டால் மாதம் முழுவதும் உபயோகிக்கலாம்.சீரகம் மற்றும் அனைத்து பொருட்களும் அரைப்பட்டு விடுவதால் கஞ்சி அருமையாக இருக்கும்.

குறிப்பு:
கஞ்சி போடும் போது இந்த பொடியை நூறு கிராம் அரிசிக்கு 1 டீஸ்பூன் குவியலாக போடவும்.ஊறவைத்த பச்சரிசியுடன்,நான்கு அல்லது ஐந்து மடங்கு தண்ணீர் வைத்து கஞ்சிப்பொடி,இஞ்சி பூண்டு பேஸ்ட் அல்லது பூண்டு,வெங்காயம்,தக்காளி ,மல்லி இலை,புதினா உப்பு போட்டு வேக வைக்கவும்.வெந்தபின்பு அரை தேங்காய் பால் எடுத்து அதனை சிறிது வெங்காயம் கருவேப்பிலை தாளித்து நுரை கூடி வரவும் சேர்த்தால் சிம்பிளான சுவையான கஞ்சி ரெடி.கொஞ்சம் ஸ்பெஷலாக கஞ்சி என்றால் சிறிது பாசிப்பருப்பு,கடலைபருப்பு,கொத்துக்கறி,கேரட் ,பச்சை பட்டாணி என்று விரும்பிய பொருட்க்களை சேர்த்தும் செய்யலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா? Empty Re: அடேங்கப்பா!! பொடிகளில் இத்தனை வகைகளா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum