தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் !

View previous topic View next topic Go down

இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Empty இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் !

Post by Muthumohamed Tue Jun 11, 2013 10:37 am

இந்துமதம் ஆறுபிரிவுகளாக இருந்த காலம் ஒன்று உண்டு. கணபதியை வழிபடுவோர் காணாபத்யம், சிவனை வழிபடுவோர் சைவம், விஷ்ணுவை வழிபடுவோர் வைணவம், சக்தியை வழிபடுவோர் சாக்தம், குமரனை வழிபடுவோர் கவுமாரம் எனப்பட்டனர். இந்தக் கடவுள்களின் வழிபாடு இன்று வரை நிலைத்து நிற்கிறது. ஆனால், சூரியனை வழிபடும் சவுமாரம் என்ற மதம் மட்டும் காலப்போக்கில் மறைந்து விட்டது. அதுவும் வடமாநிலங்களில் தான். தற்போது, பெயரளவுக்கு சூரிய நமஸ்காரம், ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்லுதல் ஆகிய அளவோடு சூரிய வழிபாடு நிற்கிறது.
ஆனால், தமிழகத்திலும் கேரளாவிலும் மட்டும், சூரிய வழிபாட்டுக்கென தனிநாள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சூரியனின் வடதிசைப் பயணம் ஆரம்பமாகும் உத்தராயண காலத்தின் முதல்நாள் பொங்கல் பண்டிகையாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கேரளாவில், இந்நாள் "மகர சங்கராந்தி'. அன்று ஒளி வடிவமாக சாஸ்தாவை மக்கள் வணங்குகின்றனர். சபரிமலையில் விசேஷ பூஜை நடக்கிறது.

மற்ற தெய்வங்களை நாம் சிலை வடிவிலேயே பார்க்கிறோம். ஆனால், சூரியன் கண்கண்ட தெய்வமாக தினமும் நம் கண்முன் தெரிகிறார். புராணங்களின்படி அவர் பெரிய பணக்காரர். ஆனால், இரக்க குணமுள்ளவர். யார் என்ன கேட்டாலும் கொடுக்கக்கூடியவர். "ஸ்யமந்தகம்' என்னும் மணியை அவர் மாலையாக அணிந்து இருந்தார். அந்த மணிமாலை இன்னொரு
சூரியனுக்கு ஒப்பானது. சூரியனின் அளவுக்கு ஒளி வீசக்கூடியது. அந்த மாலை யாரிடம் இருக்கிறதோ, அவருக்கு எட்டுப் பாரம் அளவுக்கு தங்கம் கிடைக்கும். அது மட்டுமல்ல! அதை அணிந்திருப்பவர் என்ன நினைக்கிறாரோ, அந்தப் பொருள் உடனடியாக கையில் கிடைத்து விடும். இப்படிப்பட்ட மாலையை இழக்க யாருக்காவது மனது கேட்குமா!

ஆனால், இதை துவாரகையில் வசித்த தனது பக்தரான சத்ராஜித்துக்கு அன்பளிப்பாக கொடுத்து விட்டார். அந்தளவுக்கு இரக்க மனமுள்ளவர்.' சூரியஒளியே உலகில் பயிர்பச்சை விளையக் காரணமாக இருக்கிறது. சூரியன் இல்லாவிட்டால் உலகம் இல்லை. ஒரு காலத்தில் மகான்கள், சூரிய ஒளியைப் பார்க்காவிட்டால், அன்றைய தினம் சாப்பிடவே மாட்டார்கள். தொடர்ந்து அடைமழை பெய்யும் காலங்களில் சூரிய உதயம் இருக்காது. அதுபோன்று இரண்டு, மூன்று மாதங்கள் வரை கூட அவர்கள் சாப்பிடாமல் இருந்து விடுவர்.
காந்திஜியின் தாயார் புத்லிபாயிடம் இந்தப் பழக்கம் உண்டு. அவர், சூரியன் உதயமாகாத நாட்களில் சாப்பிடமாட்டார். சிறுவனான
காந்திஜிக்கு அதைக்கண்டு வருத்தமாக இருக்கும். வாசலில் வந்து நின்றபடி, சூரிய வெளிச்சம் வெளியே தெரிகிறதா என்று
கவனித்துக் கொண்டே இருப்பார். திடீரென மேகங்கள் விலகி, லேசாக சூரிய கிரணங்கள் வெளியே தெரிந்ததும், வீட்டுக்குள் ஓடிப்போய் அம்மாவிடம் சொல்வார். அம்மாவும் வெளியே வந்து எட்டிப் பார்ப்பதற்குள், சூரியனை மீண்டும் மேகம் மறைத்து விடும். அந்த அம்மையார் சாப்பிடமாட்டார். இப்படி, இரண்டு மூன்று நாட்கள் வரை அவர் சாப்பிடாமல் இருந்துள்ளார்.
சூரியன் எளிமையானவர். அவருக்கு பிடித்த பூ "எருக்கு'. விநாயகருக்கும் இதே மலர் பிடிக்கும். உலக மக்களுக்கு தன்னாலான எல்லா பொருட்களையும் வழங்கிவிட்டு, தனக்கென யாரும் பயன்படுத்தாத எருக்கம்பூவை மாலையாக அணிந்து கொண்டவர்.
இதனால் அவரை "அர்க்கன்' என்று சொல்வர். "அர்க்கம்' என்றால் "எருக்கு'. அர்க்கன் என்றால், 'எருக்கு மாலை அணிந்தவர்' என்று பொருள்.

இதனால், தமிழகத்தின் ஒரே சூரியக்கோயிலான சூரியனார்கோயிலில் எருக்கஞ்செடி தல விருட்சமாக உள்ளது. சிவனும், அம்பாளும் சூரியனைத் தங்கள் கண்களாகக் கொண்டுள்ளனர் என்பர். ஒரு கண் சூரியன் மற்றொரு கண் சந்திரன். நெற்றிக்கண் அக்னி என்று வர்ணிக்கின்றனர். விஷ்ணுவையும் "சூரிய நாராயணர்' என்று சொல்வதுண்டு. அதிகாலையில் சூரியனைப் பார்க்காத
கண்கள் வீணே என்கின்றனர் மகான்கள். எனவே, தினமும் அதிகாலையில் எழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்த பிறகு, நம் அன்றாடப்பணிகளைத் துவங்க வேண்டும்.

இது போலவே ஒவ்வொரு உட்பிரிவும் தன் தெய்வமே பெரிது என்று சொல்கிறது; என்றாலும் "பிரத்யக்ஷ தெய்வம் " என்று சொலல்ப்படுவது சூரியனே !

நன்றி : தினமலர்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Empty Re: இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் !

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jun 11, 2013 4:49 pm

பகிர்வுக்கு நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum