Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அனக்கொண்டா - ருத்ரா
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
அனக்கொண்டா - ருத்ரா
அனக்கொண்டா.
==================================================ருத்ரா
அந்த ஆறு எப்போதும்
ஓடிக்கொண்டே இருக்கிறது.
இதன் கங்கோத்ரி எங்கிருக்கிறது.
இரவு கதவுகளை அடைக்க வந்தபோது
இந்த ஆறு தலையை சிலுப்பிக்கொண்டு
வந்து கட்டிப்பிடிக்கிறது.
நீருக்குள் நீரே முட்டையிடும்
அதிசயமாய்
வாழ்க்கையின் அந்துப்பூச்சிகளும்
வர்க்கம் பெருக்கிக்கொள்கின்றன.
பகலில் நீண்டு நெளிந்து
அனகொண்டாவைப்போல்
முறுக்கிப்பிழிந்து விழுங்குகிறது.
இதன் முதுகு கருப்பு இளகும்
தார் பளிங்கில் செதுக்கியிருந்தாலும்
அது சூரிய மழையில்
மின்னுகிறது.
தலைகளின் அலைகள்..
டப்பா டப்பாக்களாய்
மிதந்து ஓடுகின்றன.
டயர்களின் வயிறுகளில் வழுக்கி ஓடுகிறது.
பாறை எண்ணெய் குடித்து
பறக்கும் குதிரைகளின் ஆறுகள்.
வயிற்றுக்குள் தீ யெரிந்து
அதன் வெப்பக்குழம்பு
பிசைந்து பிதுக்கும் பிஸ்டன்களில்
மைல்கள் நசுக்கப்படுகின்றன.
வேகம் எனும் அசுரக்குழந்தை
ஆற்றின் கர்ப்பப்பைக்குள்
நீளமாய் சுரங்கம் வெட்டுகிறது.
இந்த தண்ணீர்ப்பிழம்பின்
நீள வழிக்குள் நீளக்கனவுகள்.
இரைச்சல்களின் வெள்ளம்.
உடல்தாங்கிய உருவங்களில்
கடல் தங்கி கலக்கினாற்போல்
கொந்தளிக்கும் ஆசைகளை
பஃறுளி ஆறுபோல்
பாய்ந்தோடுகின்றன.
இந்த ஆறுகள் கடலில் கலப்பதில்லை.
அங்கங்கே ஒரு கொட்டங்கச்சிக்குள்
அடங்குகுன்றன.
அவை வில்லாக்கள்
அவை பங்களாக்கள்
கட்டைகுத்திய மெட்ராஸ் சீலிங்க் வீடுகள்.
பிய்ந்த கோழிச்சிறகுகளைப்போல்
கூரைக்கட்டிக்கொணட ரோட்டோரத்து
குடிருப்புகளாகவும் இருக்கலாம்
இங்கே ஆறு பிரிந்து
வாழ்க்கையின் அழுத்தத்தில்
கூன்முதுகு "போன்ஸாய்"களின்
கிளைக்குச்சிகளாய்
நடுங்கும் இலைகளாய்
கசக்கப்படும் உயிரும் ஆன்மாவும்
சுருட்டி எறியப்படுவனவாய்
இற்று விழுன் படுக்கைகளுக்குள் சங்கம்.
மீண்டும் காலைநேரம் கழுத்தைப்பிடிக்கும்
வெறியுடன்
போட்டா போட்டியைத்தொடங்குகிறது.
அண்ணா சாலையானால் என்ன
அமிஞ்சிக்கரை ரோடானல் என்ன
அதோ ஆறு ஓடத்தொடங்குமிறது.
மனித ஈசல்கள்
டீசல் பூச்சிகளாய்
வழியை நிரப்பி மூச்சு முட்ட ஓடுகிறது.
பச்சையும் சிவப்புமாய்
சிக்னல் காட்டும்
ஒளி முறைப்புகளில்
இந்த ஆறு
தன் வாலையே கவ்விக்கொள்ளும்
நாயைப்போல் உட்கார்ந்து உட்கார்ந்து ஓடுகிறது.
அந்தி கவிந்த வேளையில்
இந்த ஆறு
டிராகன் பூதம் போல்
முன்னே மஞ்சள் கண்ணிலும்
பின்னே சிவப்புக்கண்ணிலும்
எரியவிட்டுக்கொண்டு
ஓடுகின்றன.
"அடே அப்பா
இந்த கம்பி கிராதியையே புடிச்சுகிட்டு
எவ்வளவு நேரம் தான் நிப்பே.
"ரோடு ஓடுகிறதா
கார் ஓடுகிறா"
உன் பின் நவீனத்துவ
பிழிசல்களை
பேப்பரில் பொட்டலம் போட்டுக்கோ.
இப்ப வா.
சாப்ட போலாம்."
==================================================ருத்ரா
அந்த ஆறு எப்போதும்
ஓடிக்கொண்டே இருக்கிறது.
இதன் கங்கோத்ரி எங்கிருக்கிறது.
இரவு கதவுகளை அடைக்க வந்தபோது
இந்த ஆறு தலையை சிலுப்பிக்கொண்டு
வந்து கட்டிப்பிடிக்கிறது.
நீருக்குள் நீரே முட்டையிடும்
அதிசயமாய்
வாழ்க்கையின் அந்துப்பூச்சிகளும்
வர்க்கம் பெருக்கிக்கொள்கின்றன.
பகலில் நீண்டு நெளிந்து
அனகொண்டாவைப்போல்
முறுக்கிப்பிழிந்து விழுங்குகிறது.
இதன் முதுகு கருப்பு இளகும்
தார் பளிங்கில் செதுக்கியிருந்தாலும்
அது சூரிய மழையில்
மின்னுகிறது.
தலைகளின் அலைகள்..
டப்பா டப்பாக்களாய்
மிதந்து ஓடுகின்றன.
டயர்களின் வயிறுகளில் வழுக்கி ஓடுகிறது.
பாறை எண்ணெய் குடித்து
பறக்கும் குதிரைகளின் ஆறுகள்.
வயிற்றுக்குள் தீ யெரிந்து
அதன் வெப்பக்குழம்பு
பிசைந்து பிதுக்கும் பிஸ்டன்களில்
மைல்கள் நசுக்கப்படுகின்றன.
வேகம் எனும் அசுரக்குழந்தை
ஆற்றின் கர்ப்பப்பைக்குள்
நீளமாய் சுரங்கம் வெட்டுகிறது.
இந்த தண்ணீர்ப்பிழம்பின்
நீள வழிக்குள் நீளக்கனவுகள்.
இரைச்சல்களின் வெள்ளம்.
உடல்தாங்கிய உருவங்களில்
கடல் தங்கி கலக்கினாற்போல்
கொந்தளிக்கும் ஆசைகளை
பஃறுளி ஆறுபோல்
பாய்ந்தோடுகின்றன.
இந்த ஆறுகள் கடலில் கலப்பதில்லை.
அங்கங்கே ஒரு கொட்டங்கச்சிக்குள்
அடங்குகுன்றன.
அவை வில்லாக்கள்
அவை பங்களாக்கள்
கட்டைகுத்திய மெட்ராஸ் சீலிங்க் வீடுகள்.
பிய்ந்த கோழிச்சிறகுகளைப்போல்
கூரைக்கட்டிக்கொணட ரோட்டோரத்து
குடிருப்புகளாகவும் இருக்கலாம்
இங்கே ஆறு பிரிந்து
வாழ்க்கையின் அழுத்தத்தில்
கூன்முதுகு "போன்ஸாய்"களின்
கிளைக்குச்சிகளாய்
நடுங்கும் இலைகளாய்
கசக்கப்படும் உயிரும் ஆன்மாவும்
சுருட்டி எறியப்படுவனவாய்
இற்று விழுன் படுக்கைகளுக்குள் சங்கம்.
மீண்டும் காலைநேரம் கழுத்தைப்பிடிக்கும்
வெறியுடன்
போட்டா போட்டியைத்தொடங்குகிறது.
அண்ணா சாலையானால் என்ன
அமிஞ்சிக்கரை ரோடானல் என்ன
அதோ ஆறு ஓடத்தொடங்குமிறது.
மனித ஈசல்கள்
டீசல் பூச்சிகளாய்
வழியை நிரப்பி மூச்சு முட்ட ஓடுகிறது.
பச்சையும் சிவப்புமாய்
சிக்னல் காட்டும்
ஒளி முறைப்புகளில்
இந்த ஆறு
தன் வாலையே கவ்விக்கொள்ளும்
நாயைப்போல் உட்கார்ந்து உட்கார்ந்து ஓடுகிறது.
அந்தி கவிந்த வேளையில்
இந்த ஆறு
டிராகன் பூதம் போல்
முன்னே மஞ்சள் கண்ணிலும்
பின்னே சிவப்புக்கண்ணிலும்
எரியவிட்டுக்கொண்டு
ஓடுகின்றன.
"அடே அப்பா
இந்த கம்பி கிராதியையே புடிச்சுகிட்டு
எவ்வளவு நேரம் தான் நிப்பே.
"ரோடு ஓடுகிறதா
கார் ஓடுகிறா"
உன் பின் நவீனத்துவ
பிழிசல்களை
பேப்பரில் பொட்டலம் போட்டுக்கோ.
இப்ப வா.
சாப்ட போலாம்."
Similar topics
» இது நம் நாடு - ருத்ரா
» அது வரை காத்திரு - ருத்ரா
» பெண்ணே ! - ருத்ரா
» "ஊமைப்படம்" - ருத்ரா
» ருத்ரா - சென்ரியூக்கள்
» அது வரை காத்திரு - ருத்ரா
» பெண்ணே ! - ருத்ரா
» "ஊமைப்படம்" - ருத்ரா
» ருத்ரா - சென்ரியூக்கள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|