Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சினி மினி
Page 1 of 1 • Share
சினி மினி
பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் தனது புதிய படத்துக்கு ஜிகர்தண்டா என பெயர் வைத்திருக்கிறார். இந்தப் பெயரே படம் மதுரை பின்னணியை கொண்டது என்பதை தெரிவித்துவிடுகிறது.
ஜிகர்தண்டாவின் படப்பிடிப்பு நேற்று முறைப்படி தொடங்கியது. சித்தார்த் ஹீரோ, லட்சுமி மேனன் ஹீரோயின். சந்தோஷ் நாராயணன் இசை.
பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிம்கா, கருணா ஆகியோரும் நடிக்கிறார்கள். பீட்சா மாதிரி எதிர்பாராத களத்தில் ஜிகர்தண்டாவும் பயணிக்குமாம்.
ஜிகர்தண்டாவின் படப்பிடிப்பு நேற்று முறைப்படி தொடங்கியது. சித்தார்த் ஹீரோ, லட்சுமி மேனன் ஹீரோயின். சந்தோஷ் நாராயணன் இசை.
பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிம்கா, கருணா ஆகியோரும் நடிக்கிறார்கள். பீட்சா மாதிரி எதிர்பாராத களத்தில் ஜிகர்தண்டாவும் பயணிக்குமாம்.
Re: சினி மினி
""முன்னோர்களை மதிக்கும் பண்பு, அவர்களை நினைவு
கூறும் பண்பு தமிழ் சினிமாவில் குறைந்து விட்டது. இன்னும் நாம் மரத்தைச்சுற்றி டூயட் பாடிக் கொண்டிருக்கும்போது, மலையாள சினிமாவில் புது முயற்சிகள் செய்கிறார்கள். அதில் ஒன்று மலையாள சினிமாவின் தந்தை ஜே.சி.டேனியலின் வாழ்க்கையைப் படமாக எடுத்தது. இப்போது செல்லுலாய்ட் சினிமா அழிந்துவிட்டது. டிஜிட்டல் சினிமா வந்துள்ளது. முக்கிய பல படங்களின் நெகட்டிவ் அழிந்து விட்டன. கருப்பு, வெள்ளை படங்கள் கூட தப்பித்து விட்டன. ஆனால் எனது காலத்து படங்கள் அழிந்து விட்டன. தமிழ்நாட்டில் திரைப்பட ஆவணக் காப்பகம் ஒன்று வேண்டும் என்று பல வருடங்களாக நான் வலியுறுத்தி வருகிறேன். அது யார் காதிலும் விழவில்லை. சுரணை அற்றவர்களாக இருக்கிறோம். இந்த அளவுக்குக் கோபப்பட காரணம், நான் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். "மூன்றாம் பிறை', "சந்தியா ராகம்', "வீடு', "மறுபடியும்' ஆகிய எனது படங்களின் நெகட்டிவ் இன்று இல்லை.
ஒரு படைப்பாளிக்கு இதை விட என்ன மன வேதனை தரக் கூடிய விஷயம் இருக்க முடியும்?''
-பாலுமகேந்திரா
கூறும் பண்பு தமிழ் சினிமாவில் குறைந்து விட்டது. இன்னும் நாம் மரத்தைச்சுற்றி டூயட் பாடிக் கொண்டிருக்கும்போது, மலையாள சினிமாவில் புது முயற்சிகள் செய்கிறார்கள். அதில் ஒன்று மலையாள சினிமாவின் தந்தை ஜே.சி.டேனியலின் வாழ்க்கையைப் படமாக எடுத்தது. இப்போது செல்லுலாய்ட் சினிமா அழிந்துவிட்டது. டிஜிட்டல் சினிமா வந்துள்ளது. முக்கிய பல படங்களின் நெகட்டிவ் அழிந்து விட்டன. கருப்பு, வெள்ளை படங்கள் கூட தப்பித்து விட்டன. ஆனால் எனது காலத்து படங்கள் அழிந்து விட்டன. தமிழ்நாட்டில் திரைப்பட ஆவணக் காப்பகம் ஒன்று வேண்டும் என்று பல வருடங்களாக நான் வலியுறுத்தி வருகிறேன். அது யார் காதிலும் விழவில்லை. சுரணை அற்றவர்களாக இருக்கிறோம். இந்த அளவுக்குக் கோபப்பட காரணம், நான் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். "மூன்றாம் பிறை', "சந்தியா ராகம்', "வீடு', "மறுபடியும்' ஆகிய எனது படங்களின் நெகட்டிவ் இன்று இல்லை.
ஒரு படைப்பாளிக்கு இதை விட என்ன மன வேதனை தரக் கூடிய விஷயம் இருக்க முடியும்?''
-பாலுமகேந்திரா
Re: சினி மினி
ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜெனிலியா, முழு நேர குடும்பத் தலைவியாகி விட்டார். ரிதேஷ் தேஷ்முக் எங்கு ஷூட்டிங் சென்றாலும் கேரியரில் சாப்பாட்டு கட்டி கொண்டு அந்த இடத்துக்கே நேரில் சென்று விடுகிறார். தற்போது "கிராண்ட் மஸ்தி' என்ற படத்தில் நடிக்கிறார் ரிதேஷ். இதன் ஷூட்டிங் மும்பையில் நடக்கிறது. தினமும் இங்கு ஆஜராகி விடும் ஜெனிலியா வகை வகையான உணவுகளைத் தயார் செய்து கொண்டு வருகிறார். கணவருக்கு மட்டுமில்லாமல், பட யூனிட்டில் பணியாற்றும் இயக்குநர், சக நடிகர்கள் என எல்லோருக்கும் ஜெனிலியா விருந்து பரிமாறுகிறார். மராட்டிய உணவு வகைகள்தான் அதிகம் இடம் பிடித்
திருக்கிறதாம்.
திருக்கிறதாம்.
Re: சினி மினி
ஒரு வானவில் போலே'. பியோனோ பிலிம்ஸ் சார்பில் சீனிவாசன் தயாரிக்கும் படம். மலையாளத்தில் இப்படம் "பியானிஸ்ட்' என்ற பெயரில் உருவாகிறது. படத்தை எழுதி இயக்குகிறார் ஹைதர் அலி. வானவில்லை போலவே மனித மனங்களில் கலர் கலரான கனவுகளும், வித விதமான ஆசைகளும் இருக்கின்றன. மிகப் பெரிய சிம்பொனி இசைக்கலைஞராக விரும்பும் தாத்தாவின் ஆசை நிறைவேறாத நிலையில், அவரது பேத்தி அந்த லட்சியத்தை அடைந்தாரா என்பது கதை. பாசம், இசை, காதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாகிறது.
Re: சினி மினி
"தலைவா' படத்தை முடித்திருக்கும் விஜய், உடனடியாக "ஜில்லா' பட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் - விஜய் இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பின் இணையும் இப்படத்தை நேசன் இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். விஜய்க்கு அப்பாவாக மோகன்லால் நடிக்கிறார். மதுரை வட்டார பின்னணியில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் காரைக்குடி, மதுரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நடந்தது. இதில் முதற்கட்டமாக மோகன்லால் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து இரண்டாம் கட்ட ஷூட்டிங் தொடங்கியது. இதில் விஜய் பங்கேற்று வருகிறார்.
Re: சினி மினி
மது ஒழிப்புக்கு ஆதரவான படமாக உருவாகிறது "திறப்பு விழா'. இயக்குநர் ஹரியின் உதவியாளர் கே.ஜி.வீரமணி இப்படத்தை எழுதி இயக்கி அறிமுகமாகிறார். மதுவினால் தன் குடும்பத்தை இழந்த ஒருவன், ஒரு மதுபானக் கடையில் வேலை பார்த்துக் கொண்டே, அந்த கடையை எப்படி இழுத்து முடுகிறான் என்பதுதான் கதை. ""கமர்ஷியல் என்பதை மீறி சமூக நோக்கமே பிரதானமாக இருக்கும்'' என்கிறார் இயக்குநர்.
Re: சினி மினி
கே.ஏ.தங்கவேலு, காகா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பேரன் அஸ்வின்குமார் அறிமுகமாகும் படம் சரணாலயம். ஸ்ரீபிரியங்கா ஹீரோயினாக நடிக்கிறார். சிங்கம்புலி, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்கள் ஏற்கிறார்கள். புதுமுக இயக்குநர் ராசு.ஜெகநாதன் இப்படத்தை எழுதி, இயக்குகிறார். மற்றவர்கள் மீது நாம் வைக்கும் நம்பிக்கைக்கு ஏற்ப, அவர்கள் நம்பிக்கையாக நடந்து கொள்கிறார்கள் என்பதுதான் கதை. திருப்பூர், தென்னம்பாளையம், கோபிசெட்டிபாளையம், வைதேகி அருவிகள் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
Re: சினி மினி
வாரிசுகளின் வரிசையில் சேருகிறார் ஜெமினி கணேசன் - சாவித்ரி தம்பதியரின் பேரன் அபிநய். "விளம்பரம்' என பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தில், புதுமுகம் ஐரா, "அட்டக்கத்தி' ஐஸ்வர்யா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இதன் ஷூட்டிங் மலேசியா, கோலாலம்பூர், புத்ரஜெயா ஆகிய பகுதிகளில் நடந்துள்ளது.
Re: சினி மினி
"சிங்கம் -2' படத்தின் சிறப்பு குறித்து சூர்யாவிடம் பேசுகையில், ""சிங்கம்' படத்தின் வெற்றி காலம் கடந்தும் பேசப்படுகிறது. சில படங்களுக்கு மட்டும்தான் இது மாதிரியான அங்கீகாரம் கிடைக்கும். சினிமா பயணத்தில் எனக்கான நிரந்தரமான இடத்தை பிடித்ததில் "சிங்கம்' படத்துக்கு மகத்தான இடம் உண்டு. அதைத் தொடர்ந்து "சிங்கம் -2' படத்தில் அதீத ஆர்வம் காட்டியிருக்கிறேன். "சிங்கம்' உள்ளூர் போலீஸ், ரௌடியிசம் எனப் பேசியிருக்கும். இது சில எல்லைகளை கடந்து சர்வதேச பிரச்னைகளை கொண்டு வந்துள்ளது. துரைசிங்கம் என்ற கேரக்டர் சந்திக்கும் பிரச்னைகளும், அதை அணுகும் விதமும் திரைக்கதையில் புதுமையாக இருக்கும். தமிழ்நாடு போலீஸ் என்ற நிலையை கடந்து, இந்திய போலீஸ் என்ற நிலையில் இந்தப் படம் இருக்கும்'' என்றார் சூர்யா.
Re: சினி மினி
வித்தியாசமான தலைப்புகளின் வரிசையில் கவனம் ஈர்க்கிறது "3டி தேடி பிடி அடி'. புதுமுகம் ஏகன் கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார். படம் குறித்து இயக்குநரிடம் பேசுகையில், ""சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டுமல்லாமல் காதல் ஜோடிகளுக்கு இடையேயும் இப்போது டேட்டிங் என்ற பழக்கம் பெருகி வருகிறது. முன்பெல்லாம் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் பேசிக் கொள்வதே தவறு என கூறப்பட்டது. பின்னர் காதல் வரை சென்று இப்போது டேட்டிங் வரை வந்து விட்டது. இந்த கால வித்தியாசத்தில் உண்மையான காதல், அன்பு இதற்கெல்லாம் இடம் இல்லாமல் போய் விட்டது. இந்த முரண்தான் படம். அடர்ந்த வனப்பகுதிக்குள் டேட்டிங் செல்லும் காதல் ஜோடிகளுக்கு நடக்கும் திகில் சம்பவங்களுக்கு பின்னணியில் இந்த பிரச்னையைச் சொல்ல வருகிறேன். இது 3 டி படமல்ல. வித்தியாசமான தலைப்புக்காகவே இந்த தலைப்பு'' என்றார் இயக்குநர் ஏகன்.
Re: சினி மினி
முன்னணி நடிகைகளின் பாணியில் சமீபத்தில் ஹிட் படங்களில் இடம் பிடித்த நடிகைகளும் சம்பளத்தை உயர்த்தியுள்ளனர். இரு மொழிகளில் நடிக்கும் த்ரிஷா, நயன்தாரா, இலியானா, அனுஷ்கா, காஜல்அகர்வால் போன்றவர்கள் தங்கள் சம்பளத்தை கோடிகளில் கேட்கத் தொடங்கியுள்ளது போன்று, ஹன்சிகா, அமலாபால், அஞ்சலி போன்றவர்களும் சம்பளத்தை உயர்த்தி உள்ளனர். பட்டியலில் புதிதாக இடம் பிடித்திருப்பவர் ப்ரியா ஆனந்த். தமிழில் "வாமனன்', "180', "இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் நடித்த ப்ரியா ஆனந்த் சமீபத்தில் நடித்த "எதிர்நீச்சல்' பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இதனால் தன் சம்பளத்தை அடுத்தடுத்த படங்களுக்கு உயர்த்தியதுடன், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாங்கும் கட்டணத்தையும் உயர்த்தி விட்டாராம்.
Re: சினி மினி
அஜித், நயன்தாரா நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் நடந்தது. இதையடுத்து ஜீவா, ஆண்ட்ரியா, த்ரிஷா நடிக்கும் "என்றென்றும் புன்னகை' படத்தின் படப்பிடிப்பு அங்கு நடந்தது. இந்த படங்களின் படப்பிடிப்புக்கு முன்பாகவே அமீரின் "ஆதிபகவன்' படப்பிடிப்பு அங்கு நடத்தப்பட்டது. தமிழ் பட படப்பிடிப்புகளுக்காக பாங்காக்கில் பல்வேறு சலுகைகள் தரப்படுவதால், அங்கு ஷூட்டிங் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து பல தயாரிப்பாளர்கள் பாங்காக்கை தேர்வு செய்கின்றனர். இந்த வரிசையில் இடம் பிடித்திருக்கிறது "விஸ்வரூபம் 2'. பாடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை அங்கு படமாக்கிய கமல், சமீபத்தில் தாய்லாந்து சென்று சில காட்சிகளைப் படமாக்கினார். இதில் முழுக்க முழுக்க வெளிநாட்டு தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றினார்கள். இதையடுத்து மீண்டும் பாங்காக்கில் ஷூட்டிங் நடத்த கமல் திட்டமிட்டுள்ளார். அங்கு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|