Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெற்றி என்பது என்ன?
Page 1 of 1 • Share
வெற்றி என்பது என்ன?
வெற்றி என்பது என்ன?
தெரு ஒரத்தில் குச்சிநட்டு ஆடினான் அந்தச் சிறுவன். அதன் பின் டெண்டுல்கராக மாறினான்.
சன்னலே இல்லாத ஒரு குடிசை. அதில் வசித்தான் அந்த எழைச் சிறுவன். ஆரம்பத்தில் வெறும் 30 டாலர் சமபளம். நாளடைவில் 300 கோடிக்கும் அதிகமான சம்பாத்தியம். இவர்தான் உலக கால்பந்தாட்ட ‘நம்பர் ஒன் ரொனால்டோ’.
பசி பட்டினியோடு வாழ்ந்தான் அந்த இளைஞன். மின்விளக்கு வசதி இல்லை. மண்ணெண்ணெய் விளக்கேற்றிக் கூட படிக்க முடியாத வறுமை. தெருவிளக்கில் படித்தான். வழக்குரைஞராக, நீதிபதியாக வாழ்வில் உயர்ந்தான். தனது உயர்வுக்கு அடையாளமாக இன்றளவும் உயர்நீதிமன்ற வளாகத்தில் சிலை உருவில் நிற்பவர் முத்துசாமி.
இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அவற்றை அடைய முயல்வதே வெற்றி.
100 விழுக்காடு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு 150 விழுக்காடு முயற்சியை மேற்கொள்வது.
உள்ளுக்குள் உறங்கிக் கிடக்கும் ஆற்றலை... பேராற்றலைத் தட்டி எழுப்புவது.
சந்தர்ப்பங்களுக்காக காத்திராமல்... மாவீரன் நெப்போலியன் போல சந்தர்ப்பங்களைத் தாமாகவே உருவாக்கிக் கொள்வது.
உண்மையில், வெற்றி என்பது ஒரு இடைவிடாத இயக்கம் (Process). விதைகளை விதைக்கும் செயல். விதையிலிருந்து மரம். மரத்திலிருந்து மீண்டும் விதை என்று தொடரான இயக்கம்.
நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதும் தனது அறிவை வளர்த்துக் கொள்வதும் மாணவனின் வெற்றி.
நோயாளிகளின் உயிரைக் காத்து ‘ராசிக்காரர்’ என்று பெயரெடுப்பது மருத்துவரின் வெற்றி.
உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவது வழக்குரைஞரின் வெற்றி.
அதே போல, தன் உற்பத்திப் பொருளைச் சந்தையில் தரத்துடன் நிலை நிறுத்துவதும், தனது நிறுவனத்தை உலகச் சந்தையில் முன்னணியில் நிறுத்துவதும் ஊழியர்களின் வெற்றி.
“ எனக்கு அதிகமாகத் தேவைப்படுபவர் யார் என்றால்... என்னால் இயன்றைச் செய்யுமாறு தூண்டும் மனிதர்கள்!” என்றார் அமெரிக்க அறிஞர் எமர்ஸன்.
நம்மைச் சுற்றியும் எத்தனை மனிதர்கள்! சிறுவர்கள், இளைஞர்கள்,நடுத்தர வயதுடையவர்கள், முதியவர்கள் என்று எத்தனை மனிதர்கள்! இவர்களுக்கு தங்கள் லட்சியம் எது என்று தெரியவில்லை அதற்கான விழிப்புணர்வும் இல்லை. அதனால் தான், அவர்களின் அளவிட முடியாத ஆற்றல்கள் உறங்கிக் கிடக்கின்றன.
நடுவயதைக் கடந்த எத்தனையோ பேர் அதன் பிறகு பேரறிஞர்களாக... தொழில் வல்லுநர்களாக வளர்ந்ததை வரலாறுகள் கூறுகின்றன.
அதற்கு உந்துகோலாக இருந்தது எது?
அது ஒரு சொற்பொழிவாக இருக்கலாம். ஒரு புத்தகமாக இருக்கலாம் அல்லது ஒரு நண்பரின் தனிப்பட்ட அறிவுரையாகவும் இருக்கலாம்.
50.000 குழந்தைகளை 30 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த வல்லுநர்களின் முடிவு - “ பிறந்த குடும்பம் - கோத்திரத்தை விட சூழ்நிலைகளும், சுற்றுச் சார்புகளும் சக்திமிக்கவை; குழந்தைகளை அதிகமாக பாதிப்பவை.”
ரஸ்கினுடைய நூலைப் படித்ததும் பீச்சர் ஒரு மனிதாரய் ஆனார். தோல்வி அடைந்தவர்களை பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தால்... அவர்கள் பெரும்பாலோரின் தோல்விக்குக் காரணம் அவர்களை ஊக்குவிக்க யாரும் இல்லாததே காரணம் என்று அறிய முடியும்.
அதனால், உங்களை ஊக்குவிக்கும் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் சூழ்நிலைகளுக்கே எப்போதும் ஆயத்தமாக இருங்கள்.
உங்களை அறிந்து உங்களுக்கு உதவி செய்யும்... நீங்கள் முழு மனிதர்களாக மாற உற்சாகமூட்டும் மனிதர்களுடன் நெருங்கிய உறவை வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் பதிவுகளை உங்களுக்குப் பிறகும் இந்த மண்ணுலகில் விட்டுச் செல்ல உதவுபவர்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.
உண்மையில், ஆர்வமானது தொற்று நோயைப் போன்றது. நீங்களும் முன்னேறத் துடிப்போருடன் இருக்கும் காலம் வரை அந்த பண்புகளால் ஈர்க்கப்படுவீர்கள். உங்களுக்கு சோம்பல் ஏற்படும் போதேல்லாம் முன்னேறிச் செல்பவர்களின் சுறுசுறுப்பு உங்களையும் உசுப்பி விடும்.
வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கான உரைகல் இதுதான் : ‘ஒவ்வொருவரும் தத்தமது பணிகளின் மேல் கொள்ளும் கொழுந்து விட்டெரியும் ஆவல்தான்!’
வேண்டா வெறுப்பாக... முக்கி முணகிக் கொண்டு, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு பணிபுரியும் ஒருவர் இறைவன் அவனுக்களித்த வாய்ப்பை நிராகரிக்கிறார் என்றுதான் பொருள்
யாரொருவர் தனது வேலையை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பேணுதலுடன், ஆர்வத்துடன் மதித்து செய்கிறாரோ அவர் வாழ்வில் முன்னேறத் தொடங்கி விட்டார் என்றே பொருள்.
நம்முடைய துறைசார்ந்த அல்லது தொழில் எதுவானலும் அதில் நமக்கு போட்டியாளர்கள் இருப்பது மிகவும் நல்லது அப்படி இல்லையென்றால் உருவாக்கிக் கொள்ளுங்கள்.
இறுதியாக
உச்சியை அடைய நினைத்தால் ஏறித்தான் ஆகவேண்டும் கால்கள் வலிக்கும் களைப்பாகும் இதெல்லாம் உனக்கு சாத்தியமில்லை என்று மனம் அச்சுறுத்தி பார்க்கும் ஒய்வெடுத்துக் கொள் என்று சபலம் காட்டும் தளராதீர்கள் செய்வதை முழுமையாக விருப்பத்துடன் செய்தால் எந்த வலியும் வேதனை தராது. உச்சியை அடைந்ததும் அத்தனை களைப்பும் சுகமாகும்.
அய்யம்பேட்டை மணக்கால்
தெரு ஒரத்தில் குச்சிநட்டு ஆடினான் அந்தச் சிறுவன். அதன் பின் டெண்டுல்கராக மாறினான்.
சன்னலே இல்லாத ஒரு குடிசை. அதில் வசித்தான் அந்த எழைச் சிறுவன். ஆரம்பத்தில் வெறும் 30 டாலர் சமபளம். நாளடைவில் 300 கோடிக்கும் அதிகமான சம்பாத்தியம். இவர்தான் உலக கால்பந்தாட்ட ‘நம்பர் ஒன் ரொனால்டோ’.
பசி பட்டினியோடு வாழ்ந்தான் அந்த இளைஞன். மின்விளக்கு வசதி இல்லை. மண்ணெண்ணெய் விளக்கேற்றிக் கூட படிக்க முடியாத வறுமை. தெருவிளக்கில் படித்தான். வழக்குரைஞராக, நீதிபதியாக வாழ்வில் உயர்ந்தான். தனது உயர்வுக்கு அடையாளமாக இன்றளவும் உயர்நீதிமன்ற வளாகத்தில் சிலை உருவில் நிற்பவர் முத்துசாமி.
இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அவற்றை அடைய முயல்வதே வெற்றி.
100 விழுக்காடு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு 150 விழுக்காடு முயற்சியை மேற்கொள்வது.
உள்ளுக்குள் உறங்கிக் கிடக்கும் ஆற்றலை... பேராற்றலைத் தட்டி எழுப்புவது.
சந்தர்ப்பங்களுக்காக காத்திராமல்... மாவீரன் நெப்போலியன் போல சந்தர்ப்பங்களைத் தாமாகவே உருவாக்கிக் கொள்வது.
உண்மையில், வெற்றி என்பது ஒரு இடைவிடாத இயக்கம் (Process). விதைகளை விதைக்கும் செயல். விதையிலிருந்து மரம். மரத்திலிருந்து மீண்டும் விதை என்று தொடரான இயக்கம்.
நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதும் தனது அறிவை வளர்த்துக் கொள்வதும் மாணவனின் வெற்றி.
நோயாளிகளின் உயிரைக் காத்து ‘ராசிக்காரர்’ என்று பெயரெடுப்பது மருத்துவரின் வெற்றி.
உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவது வழக்குரைஞரின் வெற்றி.
அதே போல, தன் உற்பத்திப் பொருளைச் சந்தையில் தரத்துடன் நிலை நிறுத்துவதும், தனது நிறுவனத்தை உலகச் சந்தையில் முன்னணியில் நிறுத்துவதும் ஊழியர்களின் வெற்றி.
“ எனக்கு அதிகமாகத் தேவைப்படுபவர் யார் என்றால்... என்னால் இயன்றைச் செய்யுமாறு தூண்டும் மனிதர்கள்!” என்றார் அமெரிக்க அறிஞர் எமர்ஸன்.
நம்மைச் சுற்றியும் எத்தனை மனிதர்கள்! சிறுவர்கள், இளைஞர்கள்,நடுத்தர வயதுடையவர்கள், முதியவர்கள் என்று எத்தனை மனிதர்கள்! இவர்களுக்கு தங்கள் லட்சியம் எது என்று தெரியவில்லை அதற்கான விழிப்புணர்வும் இல்லை. அதனால் தான், அவர்களின் அளவிட முடியாத ஆற்றல்கள் உறங்கிக் கிடக்கின்றன.
நடுவயதைக் கடந்த எத்தனையோ பேர் அதன் பிறகு பேரறிஞர்களாக... தொழில் வல்லுநர்களாக வளர்ந்ததை வரலாறுகள் கூறுகின்றன.
அதற்கு உந்துகோலாக இருந்தது எது?
அது ஒரு சொற்பொழிவாக இருக்கலாம். ஒரு புத்தகமாக இருக்கலாம் அல்லது ஒரு நண்பரின் தனிப்பட்ட அறிவுரையாகவும் இருக்கலாம்.
50.000 குழந்தைகளை 30 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த வல்லுநர்களின் முடிவு - “ பிறந்த குடும்பம் - கோத்திரத்தை விட சூழ்நிலைகளும், சுற்றுச் சார்புகளும் சக்திமிக்கவை; குழந்தைகளை அதிகமாக பாதிப்பவை.”
ரஸ்கினுடைய நூலைப் படித்ததும் பீச்சர் ஒரு மனிதாரய் ஆனார். தோல்வி அடைந்தவர்களை பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தால்... அவர்கள் பெரும்பாலோரின் தோல்விக்குக் காரணம் அவர்களை ஊக்குவிக்க யாரும் இல்லாததே காரணம் என்று அறிய முடியும்.
அதனால், உங்களை ஊக்குவிக்கும் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் சூழ்நிலைகளுக்கே எப்போதும் ஆயத்தமாக இருங்கள்.
உங்களை அறிந்து உங்களுக்கு உதவி செய்யும்... நீங்கள் முழு மனிதர்களாக மாற உற்சாகமூட்டும் மனிதர்களுடன் நெருங்கிய உறவை வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் பதிவுகளை உங்களுக்குப் பிறகும் இந்த மண்ணுலகில் விட்டுச் செல்ல உதவுபவர்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.
உண்மையில், ஆர்வமானது தொற்று நோயைப் போன்றது. நீங்களும் முன்னேறத் துடிப்போருடன் இருக்கும் காலம் வரை அந்த பண்புகளால் ஈர்க்கப்படுவீர்கள். உங்களுக்கு சோம்பல் ஏற்படும் போதேல்லாம் முன்னேறிச் செல்பவர்களின் சுறுசுறுப்பு உங்களையும் உசுப்பி விடும்.
வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கான உரைகல் இதுதான் : ‘ஒவ்வொருவரும் தத்தமது பணிகளின் மேல் கொள்ளும் கொழுந்து விட்டெரியும் ஆவல்தான்!’
வேண்டா வெறுப்பாக... முக்கி முணகிக் கொண்டு, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு பணிபுரியும் ஒருவர் இறைவன் அவனுக்களித்த வாய்ப்பை நிராகரிக்கிறார் என்றுதான் பொருள்
யாரொருவர் தனது வேலையை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பேணுதலுடன், ஆர்வத்துடன் மதித்து செய்கிறாரோ அவர் வாழ்வில் முன்னேறத் தொடங்கி விட்டார் என்றே பொருள்.
நம்முடைய துறைசார்ந்த அல்லது தொழில் எதுவானலும் அதில் நமக்கு போட்டியாளர்கள் இருப்பது மிகவும் நல்லது அப்படி இல்லையென்றால் உருவாக்கிக் கொள்ளுங்கள்.
இறுதியாக
உச்சியை அடைய நினைத்தால் ஏறித்தான் ஆகவேண்டும் கால்கள் வலிக்கும் களைப்பாகும் இதெல்லாம் உனக்கு சாத்தியமில்லை என்று மனம் அச்சுறுத்தி பார்க்கும் ஒய்வெடுத்துக் கொள் என்று சபலம் காட்டும் தளராதீர்கள் செய்வதை முழுமையாக விருப்பத்துடன் செய்தால் எந்த வலியும் வேதனை தராது. உச்சியை அடைந்ததும் அத்தனை களைப்பும் சுகமாகும்.
அய்யம்பேட்டை மணக்கால்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வெற்றி என்பது என்ன?
» வெற்றி என்பது பெற்றுக்கொள்வதற்க்கு! தோல்வி என்பது கற்றுக்கொள்வதற்க்கு!!
» வெற்றி பெற்றீர்களா தோற்றீர்களா என்பது முக்கியமில்லை. எப்படி வாழ்ந்தீர்கள் என்பதே முக்கியம்.
» அன்பு என்பது என்ன ?
» நவ பாஷாணம் என்பது என்ன?
» வெற்றி என்பது பெற்றுக்கொள்வதற்க்கு! தோல்வி என்பது கற்றுக்கொள்வதற்க்கு!!
» வெற்றி பெற்றீர்களா தோற்றீர்களா என்பது முக்கியமில்லை. எப்படி வாழ்ந்தீர்கள் என்பதே முக்கியம்.
» அன்பு என்பது என்ன ?
» நவ பாஷாணம் என்பது என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|