Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
விறகு வெட்டி ஒருவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. தன்னுடைய தேசத்து ராஜாவிடம், ""மகாராஜா, தங்களுடைய ராஜ்யத்தில் எல்லாம் சரிதான். ஆனால் எனக்கு மாத்திரம் தினம் ரெண்டு ரூபாய் சம்பளம் கொடுக்கிறீர்கள். மந்திரிக்கோ மாசம் ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறீர்கள். எல்லா மக்களையும் சமமாக நடத்தும் நீங்கள் சம்பள விஷயத்தில் மாத்திரம் ஏன் வித்தியாசம் காட்டுகிறீர்கள்?'' என்று கேட்டான்.
மகாராஜாவுக்கு சந்தோஷம் வந்துவிட்டது.
""அப்படியா, பேஷ்... சரியான கேள்வி. உனக்கு இதைப்பற்றி சரியான பதில் சொல்கிறேன். முதலில் நீ ஒரு காரியம் செய்யவேண்டும். அதோ பார்! அங்கே ஒரு பாரவண்டி போகிறது. அதில் என்ன போகிறது என்று விசாரித்துவிட்டுவா...'' என்றார்.
விறகு வெட்டி ஓடினான். கொஞ்சநேரத்தில் திரும்பிவந்து, ""மகாராஜா நெல் பாரம் வைத்துப் போகிறது...'' என்று சொன்னான்.
""அப்படியா எங்கே போகிறது..?'' என்று கேட்டார் ராஜா.
""அய்யோ.. அதைக் கேட்க மறந்துட்டேனே...'' என்று ஓடினான்.
விறகு வெட்டி திரும்பிவந்து, ""அது பிரம்ம தேசம் போகிறதாம்!'' என்றான்.
""அப்படியா? எங்கிருந்து போகிறதாம்?'' என்று கேட்டார் மகாராஜா.
""அடடா அதைக்கேட்க மறந்துவிட்டேனே...'' என்று விறகுவெட்டி மறுபடியும் ஓடினான்.
கேட்டுவிட்டு திரும்பிவந்த விறகுவெட்டி, ""மகாராஜா... அது, ரங்கசமுத்திரத்திலிருந்து பிரம்ம தேசம் போகிறதாம்...'' என்று சொன்னான்.
""அப்படியா அது என்ன நெல்?'' என்றார் மகாராஜா.
மறுபடியும் விறகுவெட்டி ஓட ஆரம்பிக்கும்போது, அங்கே தற்செயலாய் மந்திரி வந்து சேர்ந்தார்.
மகாராஜா, விறகு வெட்டியை உட்காரச்சொல்லிவிட்டு மந்திரியிடம், ""இந்தப் பக்கமாக ஒரு பாரவண்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னால் போனது. அது எங்கே போகிறது என்று பார்த்துவிட்டு வாரும்...'' என்று சொன்னார்.
மந்திரி நிதானமாகப் புறப்பட்டுப் போய் சிறிது நேரம் கழித்து வந்து, ""மகாராஜா, அந்த வண்டி ரங்கசமுத்திரத்திலிருந்து பிரம்மதேசம் போகிறது. நெல்பாரம். யானைக்கொம்பன் நெல் கோட்டை விலை ஏழரை ரூபாய். மழை காரணமாக பாதைகள் சரியில்லாததால், வண்டி இந்த வழியாகப் போகிறது. வண்டி ஓட்டிக்கொண்டு போகிறவனின் பெயர் வெள்ளையதேவன். தளவாய்த் தேவனின் மகன். சொந்த ஊரே ரங்கசமுத்திரம்தானாம். வயது இருபத்தைந்து இருக்கும்...''
- இப்படிப் பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போய், ""கடைசியாய் கவனித்ததில் அவனிடத்தில் வித்தியாசமாக ஒன்றும் தோன்றவில்லை எனக்கு. மேற்கொண்டு தங்கள் உத்தரவுக்குக் காத்திருக்கிறேன்...'' என்றார் மந்திரி.
விறகு வெட்டிக்கு ஒரே ஆச்சர்யமாகப் போய்விட்டது. மந்திரி போனபின் மகாராஜாவிடம் அவன் சொன்னான், ""நம்முடைய மந்திரி எவ்வளவு கெட்டிக்காரராக இருக்கிறார்...'' என்று தன்னுடைய ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் வெளியிட்டான்.
""இப்போது புரிகிறதா? உனக்கும் மந்திரிக்கும் உள்ள சம்பள வித்தியாசம்...'' என்றார் ராஜா.
"'ஹி..ஹி..'' என்று சிரித்து, "சரிதான்' என்ற பாவனையில் தலையை ஆட்டினான் விறகுவெட்டி.
மூளை உழைப்பின் நுண்மையை உடல் உழைப்பாளிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். உடல் உழைப்பின் அருமையை மூளை உழைப்பாளிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
(நன்றி சிறுவர்மணி - தேனி முருகேசன்)
மகாராஜாவுக்கு சந்தோஷம் வந்துவிட்டது.
""அப்படியா, பேஷ்... சரியான கேள்வி. உனக்கு இதைப்பற்றி சரியான பதில் சொல்கிறேன். முதலில் நீ ஒரு காரியம் செய்யவேண்டும். அதோ பார்! அங்கே ஒரு பாரவண்டி போகிறது. அதில் என்ன போகிறது என்று விசாரித்துவிட்டுவா...'' என்றார்.
விறகு வெட்டி ஓடினான். கொஞ்சநேரத்தில் திரும்பிவந்து, ""மகாராஜா நெல் பாரம் வைத்துப் போகிறது...'' என்று சொன்னான்.
""அப்படியா எங்கே போகிறது..?'' என்று கேட்டார் ராஜா.
""அய்யோ.. அதைக் கேட்க மறந்துட்டேனே...'' என்று ஓடினான்.
விறகு வெட்டி திரும்பிவந்து, ""அது பிரம்ம தேசம் போகிறதாம்!'' என்றான்.
""அப்படியா? எங்கிருந்து போகிறதாம்?'' என்று கேட்டார் மகாராஜா.
""அடடா அதைக்கேட்க மறந்துவிட்டேனே...'' என்று விறகுவெட்டி மறுபடியும் ஓடினான்.
கேட்டுவிட்டு திரும்பிவந்த விறகுவெட்டி, ""மகாராஜா... அது, ரங்கசமுத்திரத்திலிருந்து பிரம்ம தேசம் போகிறதாம்...'' என்று சொன்னான்.
""அப்படியா அது என்ன நெல்?'' என்றார் மகாராஜா.
மறுபடியும் விறகுவெட்டி ஓட ஆரம்பிக்கும்போது, அங்கே தற்செயலாய் மந்திரி வந்து சேர்ந்தார்.
மகாராஜா, விறகு வெட்டியை உட்காரச்சொல்லிவிட்டு மந்திரியிடம், ""இந்தப் பக்கமாக ஒரு பாரவண்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னால் போனது. அது எங்கே போகிறது என்று பார்த்துவிட்டு வாரும்...'' என்று சொன்னார்.
மந்திரி நிதானமாகப் புறப்பட்டுப் போய் சிறிது நேரம் கழித்து வந்து, ""மகாராஜா, அந்த வண்டி ரங்கசமுத்திரத்திலிருந்து பிரம்மதேசம் போகிறது. நெல்பாரம். யானைக்கொம்பன் நெல் கோட்டை விலை ஏழரை ரூபாய். மழை காரணமாக பாதைகள் சரியில்லாததால், வண்டி இந்த வழியாகப் போகிறது. வண்டி ஓட்டிக்கொண்டு போகிறவனின் பெயர் வெள்ளையதேவன். தளவாய்த் தேவனின் மகன். சொந்த ஊரே ரங்கசமுத்திரம்தானாம். வயது இருபத்தைந்து இருக்கும்...''
- இப்படிப் பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போய், ""கடைசியாய் கவனித்ததில் அவனிடத்தில் வித்தியாசமாக ஒன்றும் தோன்றவில்லை எனக்கு. மேற்கொண்டு தங்கள் உத்தரவுக்குக் காத்திருக்கிறேன்...'' என்றார் மந்திரி.
விறகு வெட்டிக்கு ஒரே ஆச்சர்யமாகப் போய்விட்டது. மந்திரி போனபின் மகாராஜாவிடம் அவன் சொன்னான், ""நம்முடைய மந்திரி எவ்வளவு கெட்டிக்காரராக இருக்கிறார்...'' என்று தன்னுடைய ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் வெளியிட்டான்.
""இப்போது புரிகிறதா? உனக்கும் மந்திரிக்கும் உள்ள சம்பள வித்தியாசம்...'' என்றார் ராஜா.
"'ஹி..ஹி..'' என்று சிரித்து, "சரிதான்' என்ற பாவனையில் தலையை ஆட்டினான் விறகுவெட்டி.
மூளை உழைப்பின் நுண்மையை உடல் உழைப்பாளிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். உடல் உழைப்பின் அருமையை மூளை உழைப்பாளிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
(நன்றி சிறுவர்மணி - தேனி முருகேசன்)
Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
மிக அருமையான கதை சிங்கம் 1இல் எம்.ஆர்.ராதா மற்றும் விவேக்கும் இப்படி காட்சி வரும்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» இப்போது புரிகிறதா? எப்படி உங்கள் குழந்தைகளிடம் நண்பனாக இருப்பது என்று?
» "நீதிக்கதை"
» ஏமாறாதே= "நீதிக்கதை"
» அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை
» நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை
» "நீதிக்கதை"
» ஏமாறாதே= "நீதிக்கதை"
» அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை
» நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|