Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
திசைமாற்றிய திருப்பங்கள்.. (இணைய கவியரங்கக் கவிதை) வித்யாசாகர்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
திசைமாற்றிய திருப்பங்கள்.. (இணைய கவியரங்கக் கவிதை) வித்யாசாகர்
எனையாளும் ஐயனுக்கு
மடிதாங்கும் அன்னைக்கு
ஒளியாகி வளியாகி உயிராகி
உலகின் காட்சிகளாய் விரியும் பரமனுக்கே முதல்வணக்கம்!
மொழியாகி பேச்சின் அழகாகி
முதலாகி எழுத்தின் மூலமாகி
விழுதாகி எங்கும் செறிவாகி
தெளிவான எந்தன் அறிவே; தமிழே வணக்கம்!
நெருப்பின்றி நீளும் ஒளியாகி
மின்தெருவெங்கும் தமிழின் சுவையாகி
இலக்கிய வணப்பிற்கு பலம்சேர்க்கும் இடமாகி
எம் கருத்துக்கும் செவிசாய்க்கும் அவையே; சந்தவசந்தமே வணக்கம்!
கவியாலும் கற்றக் கல்வியாலும்
உழைப்பாலும் கலைத் திறனாலும்
திகட்டாத எம் தமிழுக்கு; சளைக்காது வார்த்தைச் சரம்கோர்த்து
மொழியாளுமெங்கள் தலைமைக்கு
இச் சிறியோனின் சிரந்தாழ்ந்திட்ட மரியாதை மிக்கதொரு வணக்கம்!!
கவியரங்கம் : 37
தலைமை : ஐயா தமிழ்த் திரு. வா.வே.சு.
தலைப்பு: “திசைமாற்றிய திருப்பங்கள்”
இடம் : சந்தவசந்தம் இணைய குழுமம்
மேலெறியப்பட்ட பந்தொன்று
கீழ்விழும்போன்ற சமையமது..
வாழ்வின் சறுக்கலில் சாய்ந்த குடும்பமொன்று
பசிப் பள்ளத்தில் விழுந்து
எழுந்திருக்கமுடியாமல்
குஞ்சுப் பறவைகளெல்லாம் தாயினலகைக் கொத்திய நாட்களது..
பழையச் சாதத்தில் தண்ணீர் ஊற்றி ஊற்றி
வயிறுகளை நிரப்புவோம்;
அம்மா
கண்ணீரைச் சிந்திச்சிந்தி வீடெங்கும் நனைப்பாள்;
வீடு
அப்பாயிருந்த நினைவுகளைச் சுமந்துக்கொண்டே
வறுமையில் மூழ்கும்..
வறுமை தனது வலிய கால்கொண்டு
மிதிக்கும்;
வாழ்க்கைச் சிறகுகளைப் பொருளாதாரம் உடைக்கும்
வீட்டாரின் சோற்றிற்கு வழி தேடியலைந்த நாட்களை
சித்திரம் வரைந்து வரைந்துப் புதைப்பேன்;
சில மீதநாட்களை
கராத்தே என்று தொலைப்பேன்..
கடைசியில் ஓவியம் ஒரு கையாகி
நம்பிக்கை மறு கையாகி
செல்வாக்கென்னும் துடுப்பின்றி
வெற்றியின் இலக்குநோக்கி
வறுமைக் கடலில் நீந்தியப் பயணமது..
வாழ்க்கையை
அன்னாந்து வாஞ்சையோடுப் பார்க்க
அதற்குமுன் வலித்த வலிகளெல்லாம்
வாசல்களாய் மெல்ல மெல்ல
திறந்துவந்த தருணமது..
தலைகொத்திய மீன்கள் பின் வருந்தி
திசைக்காட்டியதைப் போல;
உடல்சுட்ட வெல்டிங் வேலை
எழுத ஏடெடுத்தும் தந்ததெனக்கு,
மனஞ் சுடும் மிருகங்களுக்கிடையே
மனிதரை மதிக்கும் மேலுணர்வும்
கீறப்பட்ட இடமெங்கும் தழும்புகளாய்ப் பூத்தது..
சிறகுகளுக்குப் பறக்க கனவுகள்
கற்றுத் தருவதும்,
கனவில் விரிந்த வானம்
வாழ்க்கையை வெளுப்பதும் கவிதைகளாயின;
கதறிக் கதறியழுத அழைகளும்,
கல்லில் அடித்த
ஆணிபோன்ற பிடுங்கமுடியா வலிகளும்
கதைகளாயின..
இரவில் எழுத்தென்றும் பகலில்
பற்றவைப்பென்றும்,
பகலில் மேல்படிப்பென்றும் இரவில்
படைப்பென்றும்
உடம்பின் வலிகளை
வெற்றியின் நிலத்தில் புதைத்தேன்;
சிந்தும் வியர்வையையும்
சோர்ந்த சமையங்களையும் வாழ்வின் பாடத்தில் நிறைத்தேன் ..
வருடம் மாற மாற வாழ்க்கையும் இடம் மாறி
பசி தேடியலைந்த பாதை
பணம் தேடியலைய,
உழைப்பின் வலிமையில் நின்ற இடம் நகர்ந்து நகர்ந்து
உயர்ந்து உயர்ந்து
சற்றுத் திரும்பிப் பார்க்கையில் -
கண்ணீரின் தடம்..
காயங்கள் ஆறாத ஏமாற்றத்தின் வடு..
ம்ம் பார்க்காதே போ.. ஒடு.. ஓடு..
இன்னும் வேகமாக ஓடென்று கன்னத்தில்
மாறி மாறி அறைந்தது.
மீண்டும் மீண்டும் ஓடுகிறேன்
ஓடிக்கொண்டேயிருக்கிறேன்
இடையிடையே திரும்பிப் பார்த்துக் கொள்கையில்
சிலரென்னை கைகாட்டி
பொறியாளனென்றும்
மேலாளரென்றும்
படைப்பாளியென்றும் பேசிக்கொள்ளும் சப்தம் கேட்கிறது..
எனது எழுத்துக்களையும் ஆய்ந்து சிலரை
முனைவராக்கியத் தகுதி மெல்ல
பாடல்களாய் பரிணாமமெடுக்கிறது
பாடல்கள் வெள்ளித்திரையை நோக்கியும் நகர்கிறது
இப்படி மதித்தும்
மதிக்கப்படாமலுமின்று
வெற்றிகளில் சில கண்ணெதிரே கனக்க,
அதைத் தலையிலேற்றிக் கொள்ளாமல் - அன்று
பழையச் சாதத்தில் ஊற்றி ஊற்றிக் குடித்தத் தண்ணீரை
அடிக்கடி நன்றியோடு நினைத்துக்கொண்டு -
'திசைமாற்றியத் திருப்பங்கள்' தலைப்பு பற்றி
சிந்திக்கிறேன்;
உண்மையும்
முயற்சியும்
உழைப்பும்
நம்பிக்கையும்
நம்பிய மனிதர்களும்
கடவுளும்
திறந்துவைத்த வெற்றியின் கதவுகள்
வாழ்வின் வெளிச்சத்தில் பிரகாசிக்கிறது;
மனிதம் மட்டுமே அதில் பெரிதாக மின்னுகிறது..
-------------------------------------------------------------------
நன்றிகளுடன்...
வித்யாசாகர்
மடிதாங்கும் அன்னைக்கு
ஒளியாகி வளியாகி உயிராகி
உலகின் காட்சிகளாய் விரியும் பரமனுக்கே முதல்வணக்கம்!
மொழியாகி பேச்சின் அழகாகி
முதலாகி எழுத்தின் மூலமாகி
விழுதாகி எங்கும் செறிவாகி
தெளிவான எந்தன் அறிவே; தமிழே வணக்கம்!
நெருப்பின்றி நீளும் ஒளியாகி
மின்தெருவெங்கும் தமிழின் சுவையாகி
இலக்கிய வணப்பிற்கு பலம்சேர்க்கும் இடமாகி
எம் கருத்துக்கும் செவிசாய்க்கும் அவையே; சந்தவசந்தமே வணக்கம்!
கவியாலும் கற்றக் கல்வியாலும்
உழைப்பாலும் கலைத் திறனாலும்
திகட்டாத எம் தமிழுக்கு; சளைக்காது வார்த்தைச் சரம்கோர்த்து
மொழியாளுமெங்கள் தலைமைக்கு
இச் சிறியோனின் சிரந்தாழ்ந்திட்ட மரியாதை மிக்கதொரு வணக்கம்!!
கவியரங்கம் : 37
தலைமை : ஐயா தமிழ்த் திரு. வா.வே.சு.
தலைப்பு: “திசைமாற்றிய திருப்பங்கள்”
இடம் : சந்தவசந்தம் இணைய குழுமம்
மேலெறியப்பட்ட பந்தொன்று
கீழ்விழும்போன்ற சமையமது..
வாழ்வின் சறுக்கலில் சாய்ந்த குடும்பமொன்று
பசிப் பள்ளத்தில் விழுந்து
எழுந்திருக்கமுடியாமல்
குஞ்சுப் பறவைகளெல்லாம் தாயினலகைக் கொத்திய நாட்களது..
பழையச் சாதத்தில் தண்ணீர் ஊற்றி ஊற்றி
வயிறுகளை நிரப்புவோம்;
அம்மா
கண்ணீரைச் சிந்திச்சிந்தி வீடெங்கும் நனைப்பாள்;
வீடு
அப்பாயிருந்த நினைவுகளைச் சுமந்துக்கொண்டே
வறுமையில் மூழ்கும்..
வறுமை தனது வலிய கால்கொண்டு
மிதிக்கும்;
வாழ்க்கைச் சிறகுகளைப் பொருளாதாரம் உடைக்கும்
வீட்டாரின் சோற்றிற்கு வழி தேடியலைந்த நாட்களை
சித்திரம் வரைந்து வரைந்துப் புதைப்பேன்;
சில மீதநாட்களை
கராத்தே என்று தொலைப்பேன்..
கடைசியில் ஓவியம் ஒரு கையாகி
நம்பிக்கை மறு கையாகி
செல்வாக்கென்னும் துடுப்பின்றி
வெற்றியின் இலக்குநோக்கி
வறுமைக் கடலில் நீந்தியப் பயணமது..
வாழ்க்கையை
அன்னாந்து வாஞ்சையோடுப் பார்க்க
அதற்குமுன் வலித்த வலிகளெல்லாம்
வாசல்களாய் மெல்ல மெல்ல
திறந்துவந்த தருணமது..
தலைகொத்திய மீன்கள் பின் வருந்தி
திசைக்காட்டியதைப் போல;
உடல்சுட்ட வெல்டிங் வேலை
எழுத ஏடெடுத்தும் தந்ததெனக்கு,
மனஞ் சுடும் மிருகங்களுக்கிடையே
மனிதரை மதிக்கும் மேலுணர்வும்
கீறப்பட்ட இடமெங்கும் தழும்புகளாய்ப் பூத்தது..
சிறகுகளுக்குப் பறக்க கனவுகள்
கற்றுத் தருவதும்,
கனவில் விரிந்த வானம்
வாழ்க்கையை வெளுப்பதும் கவிதைகளாயின;
கதறிக் கதறியழுத அழைகளும்,
கல்லில் அடித்த
ஆணிபோன்ற பிடுங்கமுடியா வலிகளும்
கதைகளாயின..
இரவில் எழுத்தென்றும் பகலில்
பற்றவைப்பென்றும்,
பகலில் மேல்படிப்பென்றும் இரவில்
படைப்பென்றும்
உடம்பின் வலிகளை
வெற்றியின் நிலத்தில் புதைத்தேன்;
சிந்தும் வியர்வையையும்
சோர்ந்த சமையங்களையும் வாழ்வின் பாடத்தில் நிறைத்தேன் ..
வருடம் மாற மாற வாழ்க்கையும் இடம் மாறி
பசி தேடியலைந்த பாதை
பணம் தேடியலைய,
உழைப்பின் வலிமையில் நின்ற இடம் நகர்ந்து நகர்ந்து
உயர்ந்து உயர்ந்து
சற்றுத் திரும்பிப் பார்க்கையில் -
கண்ணீரின் தடம்..
காயங்கள் ஆறாத ஏமாற்றத்தின் வடு..
ம்ம் பார்க்காதே போ.. ஒடு.. ஓடு..
இன்னும் வேகமாக ஓடென்று கன்னத்தில்
மாறி மாறி அறைந்தது.
மீண்டும் மீண்டும் ஓடுகிறேன்
ஓடிக்கொண்டேயிருக்கிறேன்
இடையிடையே திரும்பிப் பார்த்துக் கொள்கையில்
சிலரென்னை கைகாட்டி
பொறியாளனென்றும்
மேலாளரென்றும்
படைப்பாளியென்றும் பேசிக்கொள்ளும் சப்தம் கேட்கிறது..
எனது எழுத்துக்களையும் ஆய்ந்து சிலரை
முனைவராக்கியத் தகுதி மெல்ல
பாடல்களாய் பரிணாமமெடுக்கிறது
பாடல்கள் வெள்ளித்திரையை நோக்கியும் நகர்கிறது
இப்படி மதித்தும்
மதிக்கப்படாமலுமின்று
வெற்றிகளில் சில கண்ணெதிரே கனக்க,
அதைத் தலையிலேற்றிக் கொள்ளாமல் - அன்று
பழையச் சாதத்தில் ஊற்றி ஊற்றிக் குடித்தத் தண்ணீரை
அடிக்கடி நன்றியோடு நினைத்துக்கொண்டு -
'திசைமாற்றியத் திருப்பங்கள்' தலைப்பு பற்றி
சிந்திக்கிறேன்;
உண்மையும்
முயற்சியும்
உழைப்பும்
நம்பிக்கையும்
நம்பிய மனிதர்களும்
கடவுளும்
திறந்துவைத்த வெற்றியின் கதவுகள்
வாழ்வின் வெளிச்சத்தில் பிரகாசிக்கிறது;
மனிதம் மட்டுமே அதில் பெரிதாக மின்னுகிறது..
-------------------------------------------------------------------
நன்றிகளுடன்...
வித்யாசாகர்
Similar topics
» தொட்டில் ஆடாத வயிறு - வித்யாசாகர்!
» எனது இறவாமை ரகசியம்.. (கவிதை) வித்யாசாகர்!
» வித்யாசாகர் கவிதைகள்
» இரத்தச் சுவடுகள் - வித்யாசாகர்!
» ஞானமடா நீயெனக்கு(17) - வித்யாசாகர்
» எனது இறவாமை ரகசியம்.. (கவிதை) வித்யாசாகர்!
» வித்யாசாகர் கவிதைகள்
» இரத்தச் சுவடுகள் - வித்யாசாகர்!
» ஞானமடா நீயெனக்கு(17) - வித்யாசாகர்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|