தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை

View previous topic View next topic Go down

உங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை  Empty உங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை

Post by முழுமுதலோன் Sun Jul 07, 2013 6:24 pm

உங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை 
உங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை  Images?q=tbn:ANd9GcQIKpFAf4Rm6qhoNJsg0qdPB0Vn4nLF6Qub5bJQw2mZy6l1_N9g   உங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை  Images?q=tbn:ANd9GcSBvXc7aAviIwkEP35xiWOLdVJIzGrAnSHFxfaV30aOZeCDq2g
108 WISHES TO UPLIFT YOUR LIFE 
உங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை  Images?q=tbn:ANd9GcTQJ1xI8otdk05E90lePqbW6wB9-eM3z_5kIr0r0pECQw_5jPkyTAஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை  Images?q=tbn:ANd9GcSP0KWagRSNL_ZpM3wGG4AwLfwGs8gPrDqBYfSnvC02Xy6M4Rnx


தினம் தினம் காலைபொழுது விடியும்போது கூடவே விடியாத கஷ்டங்கள் பலவும் கண் முன்னால் வந்து பயமுறுத்துவது தான் தினமும் எதிர்கொள்ளும் உண்மை. எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் கையில் தங்குவதோ காயங்களும் , வலிகளும் தான். அத்தகைய சந்தர்ப்பத்தில் யாருடைய உதவியைத் தேடுவது? எவ்வாறு உதவிகளைக் கேட்பது? 


இதோ, உங்களுக்கு  மட்டுமில்லாது அனைவருக்கும் பொதுவான 108 அருள்களை எந்த சமயத்திலும், எந்த நிலையிலும் அசையாத நம்பிக்கை தந்து வாழ்வில் தினமும் மகிழ்ச்சியை எப்போதும் அள்ளித்தர மாலையாகத் தொகுத்து கொடுத்துள்ளேன். தங்களுடைய இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்துக்கொண்டு அமைதியான நேரத்தில் இந்த அருள்மாலையினை சொல்லிக்கொண்டு வந்தால் நினைத்த காரியம் இனிதே நடக்கும். எதைக்கண்டு பயம் கொள்ளாமல் உங்களுக்கு அதிக சக்தி கிடைக்கும். நாளுக்கு நாள் இந்த அருள்மாலையினைச் சொல்ல சொல்ல அதன் பலன் உங்களுக்கு கைமேல் கிடைக்கும். அனைத்தும் சொல்ல முடியாவிட்டாலும் ஏதாவது ஆறு மட்டும் சொன்னாலேப் போதும்.  இப்போதே சொல்ல ஆரம்பியுங்கள்...
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை  Empty Re: உங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை

Post by முழுமுதலோன் Sun Jul 07, 2013 6:29 pm

1. இப்பிறவியைக் கடக்க சக்தி தந்தருள்வாய்
2. இன்றும் உன்னை மறவாத வரம் தந்தருள்வாய்

3. நல்ல காலைப் பொழுதை தந்தருள்வாய்
4. நலமிக்க உடலைத் தந்தருள்வாய்

5. ஞாயிறு போல் பிரகாசம் தந்தருள்வாய்
6. சந்திரனின் குளிர்ச்சியைத் தந்தருள்வாய்

7. குடும்பம் செழிக்க மகிழ்வைத் தந்தருள்வாய்
8. குறைவில்லாத நிறைவுகளைத் தந்தருள்வாய்

9. கனி கொடுக்கும் காலத்தை தந்தருள்வாய்
10. கருணை மிக்க தரிசனம் தந்தருள்வாய்

11. கஷ்டத்தை அகற்றி சுகத்தை தந்தருள்வாய்
12. கஷ்டமில்லாப் பெருவாழ்வு தந்தருள்வாய்

13. உன்னை அடைய நற்கதி தந்தருள்வாய்
14. உயிர்களை இரட்சிக்க வரம் தந்தருள்வாய்

15. பகை விரட்டும் வீரம் தந்தருள்வாய்
16. பந்தங்களை காக்க அன்பைத் தந்தருள்வாய்

17. உழைப்பவர்களுக்கு உயர்வைத் தந்தருள்வாய்
18. உண்மையாய் இருப்போருக்கு ஆசி தந்தருள்வாய்

19. வலிமையான இதயத்தை தந்தருள்வாய்
20. வளமையான எண்ணங்களைத் தந்தருள்வாய்

21. எதையும் தாங்கும் பொறுமை தந்தருள்வாய்
22. எல்லோரும் போற்றும் பெருமை தந்தருள்வாய்

23. சாதிக்கும் தன்னம்பிக்கை தந்தருள்வாய்
24. சாய்ந்து விடாத முயற்சியைத் தந்தருள்வாய்

25. இனிமையான உறவுகளத் தந்தருள்வாய்
26. இணைபிரியாத நட்புகளைத் தந்தருள்வாய்

27. உலகம் போற்றும் அறிவைத் தந்தருள்வாய்
28. உலகைக் காக்கும் சக்தியைத் தந்தருள்வாய்

29. வாழ்கையில் அதிர்ஷ்டம் தந்தருள்வாய்
30. வருபவனவற்றில் வெற்றியைத் தந்தருள்வாய்

31. பொய் களவு கலவாமை தந்தருள்வாய்
32. பொன்னான வாய்ப்புகளைத் தந்தருள்வாய்

33. சிந்தனையில் திடம் தந்தருள்வாய்
34. சிதறாத கவனம் தந்தருள்வாய்

35. காரியத்தில் நிதானம் தந்தருள்வாய்
36. காற்றும் மழையும் அளவோடு தந்தருள்வாய்

37. பயத்தை துரத்தும் உறுதியைத் தந்தருள்வாய்
38. பயன் தரும் நினைவுகளைத் தந்தருள்வாய்

39. கேட்கும் வரத்தை தந்தருள்வாய்
40. கேடு ஒழிக்கும் பலத்தை தந்தருள்வாய்

41. எதையும் ஏற்கும் பக்குவம் தந்தருள்வாய்
42. எதையும் கற்கும் அனுபவம் தந்தருள்வாய்

43. சாகா வரம் தரும் கல்வியைத் தந்தருள்வாய்
44. சாகும் பின்னும் புகழைத் தந்தருள்வாய்

45. தேன் கலந்த சொற்களைத் தந்தருள்வாய்
46. தேடிக்கிடைத்திடாத செல்வங்களை தந்தருள்வாய்

47. வற்றாத அமுத சுரபியைத் தந்தருள்வாய்
48. வாரி வழங்கும் குணத்தினை தந்தருள்வாய்

49. பொருள் ஈட்டும் வழியைத் தந்தருள்வாய்
50. பொறாமை படாத உள்ளத்தினைத் தந்தருள்வாய்

51. நோயில்லா நீண்ட ஆயுளைத் தந்தருள்வாய்
52. நோன்பு கொண்டு தூய உள்ளம் தந்தருள்வாய்

53. நிறைவேறும் ஆசைகளைத் தந்தருள்வாய்
54. நிறைவான மனதினைத் தந்தருள்வாய்

55. பசித்தோர்களுக்கு அமுதினைத் தந்தருள்வாய்
56. பஞ்சம் தீர்க்க வழியினைத் தந்தருள்வாய்

57. இழந்த செல்வங்களைத் தந்தருள்வாய்
58. இருள் நீக்கி ஒளியைத் தந்தருள்வாய்

59. உயர்வு தாழ்வில்லா சமுதாயம் தந்தருள்வாய்
60. உயர்ந்தோர்களுக்கு இரக்க குணம் தந்தருள்வாய்

61. மக்களைக் காக்கும் ஆட்சியைத் தந்தருள்வாய்
62. மக்களைப் போற்றும் தலைவர்களைத் தந்தருள்வாய்

63. சுயநலம் அழித்து பொதுநலன் தந்தருள்வாய்
64. சுரக்கும் இன்பம் கோடி கோடித் தந்தருள்வாய்

65. லஞ்சம் வாங்காத கைகளைத் தந்தருள்வாய்
66. லட்சியப் பயணத்தில் வெற்றியைத் தந்தருள்வாய்

67. காலமும் நேரமும் கைகொடுக்கத் தந்தருள்வாய்
68. காணும் திசையெங்கும் நீயாக தந்தருள்வாய்

69. நரகம் வழி அடைத்து சொர்க்கம் தந்தருள்வாய்
70. நரன் வாழ்வு போக்கி தேவன் வாழ்வு தந்தருள்வாய்

71. கலைகளைக் கற்கும் திறனைத் தந்தருள்வாய்
72. கலையாத கல்வியினைத் தந்தருள்வாய்

73. காண்பவர் கண்படும் அழகினைத் தந்தருள்வாய்
74. கண்டு வணங்கும் பணிவினைத் தந்தருள்வாய்

75. மாய வலையில் சிக்காதபடி வரம் தந்தருள்வாய்
76. மாய வடிவைக் காண அகக்கண்களைத் தந்தருள்வாய்

77. எந்நாளும் உனைப் போற்றும் நாவினைத் தந்தருள்வாய்
78. எந்நிலையிலும் மறவாத உள்ளத்தைத் தந்தருள்வாய்

79. எங்கும் எதிலும் மகிழ்ச்சியைத் தந்தருள்வாய்
80. எட்டுத் திசைகளில் அமைதியைத் தந்தருள்வாய்

81. பாசமுடன் வாழ்த்தும் நல்இதயங்களைத் தந்தருள்வாய்
82. பாவத்தை அழித்து வளமான வாழ்வினைத் தந்தருள்வாய்

83. பேராசை கொள்ளாத மனதினைத் தந்தருள்வாய்
84. பேர் சொல்லும் பிள்ளைகளைத் தந்தருள்வாய்

85. நாட்டுக்குநாடு ஒற்றுமையினைத் தந்தருள்வாய்
86. நாடு போற்றும் சாதியினைத் தந்தருள்வாய்

87. பயம் வரும்போது உன்துணை தந்தருள்வாய்
88. பேய் பிசாசு ஓட்டும் துணிவைத் தந்தருள்வாய்

89. ஏமாறாமல் விழிப்புணர்வைத் தந்தருள்வாய்
90. ஏன் என்கிற கேள்விகளுக்கு பதிலைத் தந்தருள்வாய்

91. ஊசல் இல்லாத நிலையினைத் தந்தருள்வாய்
92. ஊக்கம் கொடுக்கும் நெஞ்சத்தைத் தந்தருள்வாய்

93. கொடியவர்களிமிருந்து விடுதலைத் தந்தருள்வாய்
94. கொடுத்து சிவக்கும் கரங்களைத் தந்தருள்வாய்

95. மயக்கம் கலக்கம் குழப்பமில்லாமைத் தந்தருள்வாய்
96. மதி கொண்டு விதியை வெல்லத் தந்தருள்வாய்

97. தோல்விகளைத் தாங்கும் மனதினைத் தந்தருள்வாய்
98. தோல்வி காணும்போது ஆறுதல் தந்தருள்வாய்

99. வேதனைகளை சாதனைகளாக மாற்றித் தந்தருள்வாய்
100. வேர் போன்று உறுதியினைத் தந்தருள்வாய்

101. சோர்வின்போது சத்தான மந்திரம் தந்தருள்வாய்
102. சோம்பலை ஒழித்து சுறுசுறுப்பைத் தந்தருள்வாய்

103. எளியோருக்கு அன்பு கருணை தந்தருள்வாய்
104. எண்ணுபவர்களுக்கு உதவிகளைத் தந்தருள்வாய்

105. கடன்படாத செல்வத்தினைத் தந்தருள்வாய்
106. கடல் அலையைப்போல பாசத்தினையைத் தந்தருள்வாய்

107. உன்னை ஆட்கொள்ளும் உரிமையைத் தந்தருள்வாய்
108. உன்னையே சரணாகதி அடைய தந்தருள்வாய்


http://easyhappylifemaker.blogspot.in/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum