தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீங்களும் மகுடம் சூடலாம் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ,முனைவர் இளசை சுந்தரம் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

View previous topic View next topic Go down

நீங்களும் மகுடம் சூடலாம் !  நூல் ஆசிரியர் கலைமாமணி ,முனைவர் இளசை சுந்தரம் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty நீங்களும் மகுடம் சூடலாம் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ,முனைவர் இளசை சுந்தரம் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Fri Jul 12, 2013 9:33 am

நீங்களும் மகுடம் சூடலாம் !

நூல் ஆசிரியர் கலைமாமணி ,முனைவர் இளசை சுந்தரம் .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

புகழ் பதிப்பகம் .B.5-3 அக்ரிணி குடியிருப்பு ,ஆண்டாள் புறம் ,மதுரை .625003.
விலை ரூபாய் 100.

நூல் ஆசிரியர் கலைமாமணி , முனைவர் இளசை சுந்தரம் அவர்கள் மதுரை வானொலி நிலையத்தில் இயக்குனராகப் பணி புரிந்து ஒய்வு பெற்ற பின் இலக்கியப் பணி ,தமிழ்ப் பணி என்று ஓய்வின்றி உலகம் சுற்றி வருபவர் .கனடா அரசாங்கத்தின் விருது பெற்றவர் .இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று இருந்தேன் .நூல் வெளியீட்டு விழா நடந்த அரங்கத்தை இலவசமாக வழங்கியவரும், விஸ்வாஸ்ப்ரோமொடேர்ஸ் மேலாண்மை இயக்குனருமான திரு .சங்கர சீதாராமன் இந்த நூலினைப் பற்றி மிகச் சிறப்பான ஆய்வுரை நிகழ்த்தினார் .

நூல் ஆசிரியர் ஏற்புரையின் போது நான் உலக நாடுகள் பல சென்று வந்ததற்கு கவிஞர் இரா .இரவிதான் சாட்சி என்றார்கள் .அவரது இலண்டன் பயணத்தை நண்பர் பொன் பாலசுந்தரம் அவர்களுக்கு தகவல் தந்தேன் .அவர் அவரை சந்தித்தார் .கனடாவில் உள்ள நண்பர் திரு .அகில் அவர்களுக்கு நூல் ஆசிரியர் கனடா பயணத்தை தகவல் தந்தேன். அவரை திரு .அகில் சந்தித்தார்.நான் சென்ற வெளி நாடுகளில் எல்லாம் இரவியின் நண்பர்கள் சந்தித்தார்கள் என்று சொன்னார் .

.ஓய்வின்றி பயணம் செய்து உரையாற்றுவது மட்டுமன்றி எழுத்துப் பணியிலும் கவனம் செலுத்தி வருகிறார் .பாக்யா வார இதழில் தொடராக எழுதிய கட்டுரைகள் நூலாகி உள்ளது .பாக்யா வார இதழில் வாராவாரம் படித்த போதும் மொத்தமாக நூலாகப் படித்தபோது மிகச் சிறப்பாக இருந்தது .20 நூல்கள் எழுதி உள்ளார்கள் .இந்த நூலிற்கு ' உங்கள் மகுடம் உங்கள் கையில் ' என்று இருந்த தலைப்பை பாக்யா வார இதழின் ஆசிரியர் இயக்குனர் திலகம் திரு .பாக்யராஜ் அவர்கள் நீங்களும் மகுடம் சூடலாம் ! என்று பெயர் சூட்டி உள்ளார் .

கட்டுரைகளின் தலைப்புகளே நூல் படிக்கும் வாசகரை சிந்திக்க வைக்கும் விதமாக உள்ளன .29 கட்டுரைகள் உள்ளன .குறிக்கோளை குறி வையுங்கள் ,கனவு காணுங்கள் ,செயலில் இறங்குங்கள் ,இப்படி தலைப்புகளே தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக உள்ளன .சிந்திக்க வைக்கும் சிறந்த நகைச் சுவை துணுக்குகளும் நூலில் உள்ளன.

சின்னச் சின்ன கதைகளும் இருப்பதால், படிக்க சுவையாகவும் ,சுகமாகவும் உள்ளன .தன் முன்னேற்றக் கருத்துக்களின் .சுரங்கமாக உள்ளது .பதச் சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு .இதோ .

" சிலர் இளமையிலேயே முதுமை அடைந்து விடுகிறார்கள் .சிலரோ முதுமையிலும்
இளமையாய் இருக்க முடிகிறது .உற்சாகமும் , சந்தோசமும் கொண்டவர்கள் வயதானாலும் இளைஞர்கள் தாம் .உற்சாகமற்ற பேர்வழிகள் இளமையிலேயே கிழவராகி விடுவார்கள் ."

உண்மைதான் நாம் வாழ்கையை உறசாகமாக ரசித்து வாழ வேண்டும் .என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் .

சிந்திக்க வைக்கும் வைர வரிகள் நூல் முழுவதும் நிறைந்து உள்ளன .

" சந்திர மண்டலத்தில் இடம் பிடிப்பது மட்டும் அறிவல்ல மற்றவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் ."
மற்றவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டுமானால் நாம் மனிதநேயத்தோடு பல பணிகள் செய்ய வேண்டும் .

நம்மில் பலருக்கு அடுத்தவரை பாராட்டு மனம் இருக்காது .அப்படியே பாராட்டினாலும் அதிலும் கஞ்சத்தனம் இருக்கும் .காசா பணமா மனம் திறந்து பாராட்ட ஏன் யோசிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் நல்ல சிந்தனை விதைக்கும் கருது இதோ .

வாரியார் சுவாமிகள் சொல்வார் .

"பாராட்டிப் பழகுங்கள் ஒருவன் குழந்தையாக இருக்கும்போது அவனுக்குக் கிடைப்பது தாலாட்டு .கடைசியில் வாழ்க்கை முடித்து விட்டு போகும்போது அவனுக்குக் கிடைப்பது நீராட்டு .இரண்டுக்கும் இடையில் அவனை வாழ வைப்பது பாராட்டுத்தான் ."

நூலில் நிறைய நகைச்சுவைகள் இருந்தாலும் ஒன்று மட்டும் உங்கள் பார்வைக்கு .

ஓர் இளைஞர் ஒரு கைரேகை நிபுணரிடம் போனார் .தான் நினைத்த காரியம் நிறைவேறுமா ? என்று கேட்டார் .ரேகைகளையும் மேடுகளையும் ஆராந்தா சோதிடர் எல்லாம் நன்றாக இருக்கிறது .நினைத்தது நிறைவேறும் .என்றார் .
எதிர்ப்பு எதுவும் இருக்காதே !
இருக்காது .
சண்டை சச்சரவு பிரசனை எதுவும் ஏற்படுமா ?
ஏற்படாது .
அப்படின்னா என்னை வாழ்த்தி அனுப்புங்க மாமா .நானும் உங்கள் மகளும் பதிவுத் திருமணம் செய்யப் போகிறோம்.,

.எவ்வளவு கவனமாகப் பார்த்தாலும் எழுத்துப் பிழைகள் வந்து விடுவதுண்டு .இந்த நூலில் சில இடங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளன .அடுத்த பதிப்பில் திருத்தி வெளியிடுங்கள் .

வாழ்க்கையில் முன்னேற , சாதிக்க , வெற்றிப் பெற எப்படி திட்டமிட வேண்டும் என்று கற்றுத் தரும் நல்ல நூல் .இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நூல் .சாதிக்க வேண்டும் என்ற வெறியைத் தூண்டும் வண்ணம் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .இந்த நூல் படிக்கும் முன் இருந்த மன நிலைக்கும் படித்த முடித்தபின் உள்ள மன நிலைக்கும் உள்ள முன்னேற்றமே நூலின் வெற்றி. நூல் ஆசிரியர் கலைமாமணி ,முனைவர் இளசை சுந்தரம் .வெற்றி
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» "கவிதை அலை வரிசை " நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன். நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி .
» கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் ! நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» திறமைதான் நமது செல்வம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum