தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒரு வாலி வதைப்படலம் -ருத்ரா

View previous topic View next topic Go down

ஒரு வாலி வதைப்படலம் -ருத்ரா Empty ஒரு வாலி வதைப்படலம் -ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 24, 2013 7:50 am

ஒரு வாலி வதைப்படலம்.
===================================================ருத்ரா

வாலி வதைப்படலம்
அந்த நுரையீரல்பூக்களின்
மராமரங்களுக்கு இடையிலா?

எமதர்மன்
ராமன் வேடம் போட்டு
வந்தாலும் வந்திருப்பான்.
தமிழ் மேல் காதல் கொண்டது
வாலியின் குற்றம் அல்ல.

எதிர்மறையான ஒரு கதா"பாத்திரத்தில்"
வழிய வழிய‌
தமிழ்க்கவிதை வடித்ததும்
குற்றம் போலும்.

ராவணன் என்ற புனைபெயரில்
ராமாயணம் எழுதியது போல் தான்
வாலி
தமிழ்க்கவிதை என்றொரு வாள் தூக்கினான்
என்று
"மடி" யாகிப்போனதே என்று சிலர்
மனம் நொந்திருக்கலாம்.

பக்கம் பக்கமாய்
என்னை அவதார புருஷனாய்
உயிர்ப்பித்துத் தந்த
இந்த கவித்திருமுகமா
வதை படுவது
என்று அந்த சக்கரவர்த்தி திருமகனே
அவர்க்கு
"மடி" சுமந்து இருக்கும்
மானசீக காட்சியே அங்கு தெரிகிறது.

ஆனால்
வாலியின்
ஆத்மிக உள்ளத்திலும்
தமிழே செழித்தது.

பகுத்தறிவு வாதத்தை
அவன் பயங்கரப்படுத்தவில்லை.
திராவிட எழுச்சியைக்கண்டு
அவன் இன்னமும் எழுச்சி கொண்டான்.

கலைஞர் கவிதை மீதும்
கிறக்கம் கொண்ட‌
கலைஞன் அல்லவா அவன்.

வெண்தாடி வேந்தருக்கும்
இவர் வணக்கம் செய்யும்
ப்டம் ஒன்றில்
கருப்பு சூரியனுக்கு
இவர் ஆதித்ய ஹ்ருதயம்
சொல்வது போல் தான் இருந்தது.

வாலியின் பாடல்களில்
எதுகையும் மோனயும்
கொண்டிருந்தது
இலக்கிய கூட்டணி அல்ல.
ஒரு அரசியல் கூட்டணியே ஆகும்.
நான் ஆணையிட்டால்
என்று
அவன் பேனா
சாட்டையை சொடுக்கிய போது
தமிழ் நாட்டின் அரசியல் சரித்திரம்
சரிந்தே போனது.
காலைச்சூரியன் கண்விழிக்கப்போகிறது
என்ற தைரியத்தில்
இருட்டில் நீதி மறையட்டுமே
என்று
அவன் எழுதியதில்
எத்தனை நம்பிக்கை.
எத்தனை வெற்றி.

புதுக்கவிதையை விழுங்கி
மரபுக்கவிதையை
புடம் போட்டவன். அவன்.

சொல் தெறிக்கும் பொருளுக்குள்
பொறி பறக்க வைத்தவன் அவன்.

தமிழ்ச்சொல்லை
அவன்
ஒடித்து ஒடித்து
போட்டாலும்
அவை கற்கண்டுகள்.

கண்ணதாசன்
திராவிட வழியாய் வந்து
ஆரியத்தை ஆலிங்கனம்
செய்துகொண்டவர்.

வாலியோ
ஆரியத்தைக்கூட‌
வளைத்து நிமிர்த்தி
ஒரு மாதிரியான‌
திராவிடமாக்கிக்கொண்டவர்.

எந்த வரிகள் பாடியிருந்தாலும்

"வெள்ளி நிலாவே
விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு"..
என்று எழுதியிருந்தாரே
அதில் எரியும் கண்ணீர்த்தீக்கு
எத்தனை "நோபல் பரிசு"கள்
வந்தாலும்
அந்த "டைனமைட்" கண்டுபிடித்த‌
நோபலே
மனம் நொந்து "தூள் தூளாய்"
உடைந்து போயிருப்பான்.
இவன் கவிதைக்கு என்று
தனியாக அல்லவா
ஒரு பரிசுக்கமிட்டி அமைக்கவேண்டும் என்று
தவித்திருப்பான்.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
என்று
முழங்கிக்கொண்டு வந்தார்
அவரவர்களுக்கு வேண்டியதை
அவரவர்கள் எடுத்துக்கொண்டார்கள்.
எல்லாருமே மறந்து போனார்கள்
அவர் மூச்சிலும் உள்ள‌
தமிழ் என்ற மூன்றெழுத்தை.

====================================================ருத்ரா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum