Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கரிநாள் !
Page 1 of 1 • Share
கரிநாள் !
பேனை எடுத்தவனெல்லாம்
பெருங் கவிஞனென்று
வெற்றெழுத்து கிறுக்கி
வீராப்பு செய்யும் கால்...
எதுகை மோனை வைத்து
எள்ளி நகையாடி – நெஞ்சங்களைக்
கிள்ளி விளையாடி,
நரகத்தில் எழுதியது போதுமென்று
சொர்கத்தில் கவியெழுதப் போனாயோ ?
வெற்றிலைப் பாக்குடன்
வெண்தாடி நீ -
அழையாமல் ஓடிவரும்
மோனையோடு எதுகை
இனி - அதையிங்கு
அழைத்துவர ஏதுகை?
தமிழுக்கு
தவப் புதல்வனாய்
வந்தவன் போகிறான் - இன்று
தமிழர்மனம் உடைத்த
சவப் புதல்வனாய் !
வீரமோ விரசமோ
குமுகாயமோ சமுதாயமோ,
எண்ணமெல்லாம் வண்ணமய
கவிதைகளைத் தூவி
பாடிவிட்டு போகிறாயே பாவி - உன்
கூடு விட்டு ஓடியதே ஆவி !
தமிழோடு உறவாடி
தமிழர்மனம் களவாடி
ஆடவைக்க பாட்டெழுதி
ஆட்டுவித்த தமிழா – நீ
ஆடியிலே போவதற்கு ஆசைப்பட்டு
எம்மை ஆட்டுவித்துப் போகிறாயே சரியா?
துட்டுக்கு எழுதினாலும் – தமிழ்
மெட்டுக்கு எழுதினாலும்
கேட்டுத் துள்ளா மனசில்லை
இந்த கெட்டச் செய்தி
கேட்டு விட்டு – மனசு
கெட்டுப்போகா மனுஷனுமில்லை !
சித்தமெல்லாம் பித்தாக்கிய
ஸ்ரீரங்கப் கவிப்புலியே
எம்மைச் சிதைத்துவிட்டுக்
கூற்றனுக்குப் பாட்டெழுத
கூடுவிட்டுப் போனாயோ !
நீ பாடையேறும் வேளை
சினிமாவும் இனி கொஞ்சம்
ஆகிப் போகும் ஏழை –
தமிழனுக்கு
எப்போதும்
ஜூலை கருப்பு !
இந்த ஜூலையிலே - உனக்கும்
ஊற்ற வைத்த பாலை - தமிழன்
மனசிங்கே ஆகியதே பாலை !
தாடித் தமிழனுன்னை
சளிப்பிடித்துக் கூட்டிப் போக
வாடித் தமிழன்னை
சனிப்பிடித்துக் கிடக்கிறதே !
கருப்பு நாள்
இந்த வெறுப்பு நாள்
நெருப்புக் கவிஞன்
பயணம் போகும் இறுதி நாள்
தமிழனுக்கு மற்றுமொரு கரிநாள் !
------------------------------வலியோடு வாலிக்கு !
பெருங் கவிஞனென்று
வெற்றெழுத்து கிறுக்கி
வீராப்பு செய்யும் கால்...
எதுகை மோனை வைத்து
எள்ளி நகையாடி – நெஞ்சங்களைக்
கிள்ளி விளையாடி,
நரகத்தில் எழுதியது போதுமென்று
சொர்கத்தில் கவியெழுதப் போனாயோ ?
வெற்றிலைப் பாக்குடன்
வெண்தாடி நீ -
அழையாமல் ஓடிவரும்
மோனையோடு எதுகை
இனி - அதையிங்கு
அழைத்துவர ஏதுகை?
தமிழுக்கு
தவப் புதல்வனாய்
வந்தவன் போகிறான் - இன்று
தமிழர்மனம் உடைத்த
சவப் புதல்வனாய் !
வீரமோ விரசமோ
குமுகாயமோ சமுதாயமோ,
எண்ணமெல்லாம் வண்ணமய
கவிதைகளைத் தூவி
பாடிவிட்டு போகிறாயே பாவி - உன்
கூடு விட்டு ஓடியதே ஆவி !
தமிழோடு உறவாடி
தமிழர்மனம் களவாடி
ஆடவைக்க பாட்டெழுதி
ஆட்டுவித்த தமிழா – நீ
ஆடியிலே போவதற்கு ஆசைப்பட்டு
எம்மை ஆட்டுவித்துப் போகிறாயே சரியா?
துட்டுக்கு எழுதினாலும் – தமிழ்
மெட்டுக்கு எழுதினாலும்
கேட்டுத் துள்ளா மனசில்லை
இந்த கெட்டச் செய்தி
கேட்டு விட்டு – மனசு
கெட்டுப்போகா மனுஷனுமில்லை !
சித்தமெல்லாம் பித்தாக்கிய
ஸ்ரீரங்கப் கவிப்புலியே
எம்மைச் சிதைத்துவிட்டுக்
கூற்றனுக்குப் பாட்டெழுத
கூடுவிட்டுப் போனாயோ !
நீ பாடையேறும் வேளை
சினிமாவும் இனி கொஞ்சம்
ஆகிப் போகும் ஏழை –
தமிழனுக்கு
எப்போதும்
ஜூலை கருப்பு !
இந்த ஜூலையிலே - உனக்கும்
ஊற்ற வைத்த பாலை - தமிழன்
மனசிங்கே ஆகியதே பாலை !
தாடித் தமிழனுன்னை
சளிப்பிடித்துக் கூட்டிப் போக
வாடித் தமிழன்னை
சனிப்பிடித்துக் கிடக்கிறதே !
கருப்பு நாள்
இந்த வெறுப்பு நாள்
நெருப்புக் கவிஞன்
பயணம் போகும் இறுதி நாள்
தமிழனுக்கு மற்றுமொரு கரிநாள் !
------------------------------வலியோடு வாலிக்கு !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|