Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நெஞ்சு எரிச்சலா?
Page 1 of 1 • Share
நெஞ்சு எரிச்சலா?
நெஞ்சு எரிச்சல்... வயிற்றின் மேல் பகுதியில் இருந்து தொண்டை வரை எரிச்சல்... காரசாரமான சாப்பாடு சாப்பிட்டாலும் எரிச்சல்... காலி வயிறாக இருக்கும் போது எரிச்சல்... சாப்பாடே சங்கடமா போச்சு அசிடிட்டி.... அமிலத்தால் உள்ளுக்குள்ள வெந்திருக்குமோ... இதிலிருந்து விடுபட வழி. இதனை உடனடியாக கவனிக்க வேண்டும் என்கிறார் டாக்டர் ராஜ்குமார்.
அவர் மேலும் கூறியாதவது:-
திருமண விருந்தில் சாப்பாட்டை ஒருபிடி பிடிப்பவர்களுக்கும், விதவிதமான மசாலாப் பொடி, எண்ணெய், இதையெல்லாம் எதிர்கொள்ளும் சக்தி எல்லாருடைய வால்வுகளுக்கும் இருப்பதில்லை. வால்வு என்பது இரைப்பைக்கும் உணவுக்குழாய்க்கும் நடுவே இருக்கிற வால்வு.
அமிலம் சுரப்பது இயற்கை. அமிலத்தின் வீரியத்தை சமப்படுத்த ஜீரணிக்க சாப்பாட்டையும் தண்ணீரையும் சாப்பிடுவது அவசியம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல் காலி வயிற்றில் அமிலம் மட்டும் பொங்கி உணவுக்குழாயின் உள் உறையில் பட்டால் எரிச்சல்கள் உருவாகும். இது தொடரத் தொடர உணவுக்குழாயின் உள் உறை செல்களில் மாற்றம் ஏற்படுகிறது.
இதை உடனடியாக கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டியது மிக அவசியம். கவனிக்காவிட்டால் புற்று நோய்க்கு இடம் கொடுத்தாற்போல ஆகும். புற்றுநோயின் ஆரம்பத்திற்கு நெஞ்செரிச்சல் அறிகுறியாக இருக்கும். இதய பாதிப்புள்ளவர்களுக்கும் நெஞ்சு எரிச்சல் வரும். இதை ஹார்ட்பர்ன் என்று சொல்வார்கள். எரிச்சல் எதனால் என்று எண்டோஸ்கோபி மூலம் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பது மிக மிக அவசியம்.
நெஞ்செரிச்சலுக்கு 6 மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை மாத்திரை மருந்துகளை கொடுத்து அமிலம் சுரக்கும் அளவை குறைத்து மாத்திரைகளாலேயே வால்வை இறுகச் செய்ய முயற்சி செய்வதுதான் உலகளவில் மருத்துவ தீர்வு. ஆனால் சில பேருக்கு அதற்கு பின்பும் சரியாகாது. நெஞ்செரிச்சலோடு வால்வு பலவீனமாக இருப்பதால் குனியும் போது சாப்பிட்ட சாப்பாடும் தண்ணீரும் உமிழ் நீர்மாதிரி வெளியில் வரும். இந்த அறிகுறிகள் இருக்கும் நோயாளிகளுக்கு அமில அளவை, நெஞ்செரிச்சலை மாத்திரை மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாது.
வால்வு பலஹீனமாக இருக்கும். இருந்தாலும் மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முயல்வோம். அப்படி சரியாகிவிட்டால் அதோடு சிகிச்சை முடிந்து விடும். ஆனால் மாத்திரை சாப்பிட்டும் எந்த பலனும் இல்லை என்று ஒரு மாதத்திலேயே வருவார்கள்.
அவர்களுக்கு எல்லாம் லாப்ராஸ் கோபிக், லேன்டோபளைகேஷன், டுபேபண்டோ ப்ளைகேஷன், எண்டோசின்ச் சிமெண்ட் இன்ஜெக்ஷன் என பல முறைகளில் தீர்வு கண்டு விடலாம். நெஞ்செரிச்சலை சரிப்படுத்திக் கொள்ளாமல் அலட்சியபடுத்தினால் பேரட் ஓசோபாகஸ் என உணவுக் குழாயின் உறையின் சிகப்பு பகுதி வழியாக உள்ளே அமிலம் சென்று கட்டிவர புற்று நோய் வர வாய்ப்பிருக்கிறது.
இன்று அடினோ காஸினோமா என்ற புற்று நோய், நெஞ்செரிச்சலினால் வரக்கூடிய புற்று நோய், இந்தியாவில் அதிகமாக வருகிறது. நிறைய பேர் பேரட் ஓசோபாக்ஸ் என்னும் நிலை வரும் போது தள்ளிப் போடலாமென்று நினைக்கின்றனர். இது கூடவே கூடாது.
இந்த நிலை புற்று நோய் வர நிறைய வாய்ப்பை கொடுக்கிறது. உணவுக்குழாயின் உறையில் அமிலம் பட்டு இரைப்பை போல உணவுக்குழாயின் உறை தடித்து விடும். அதில் கட்டிகளும் வரும். இந்த நிலையிலும் லேஸர் மூலம் உணவுக் குழாயின் உறையை சுட்டு விட்டால் பொசுங்கிப் போய் புற்று நோய் வராமல் தடுக்க முடியும். இப்படி நெஞ்செரிச்சலிலிருந்து விடுபட மட்டுமில்லாமல் மேலும் பாதிப்பை உணர்ந்து புற்றுநோய்க்கு ஆளாகாமல் காப்பாற்றிக் கொள்ள மருத்துவ உலகில் உருவாகியுள்ள நவீன சிகிச்சை முறைகள் கை கொடுக்கின்றன.
எந்த பாதிப்பையும் ஆரம்ப நிலையில் முளையிலேயே கிள்ளி எறிவது போல் நீக்குவதும், பாதிப்பிலிருந்து விடுபடுவதும் சுலபம். அதில்லாமல் பிரச்சினையை வளரவிட்டால் தள்ளிப் போய் முற்றவிட்டால் போராடுவது நோயாளி மட்டுமல்ல. காப்பாற்றத் துடிக்கும் மருத்துவரும் அவர் குழுவினரும்தான் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர் ராஜ்குமார்.
நன்றி தமிழ் செய்தி
Similar topics
» நெஞ்சு எரிச்சல்
» நெஞ்சு வலி
» நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்?
» நெஞ்சு பொறுக்குதில்லையே!
» நெஞ்சு கரித்தல் மருந்துகள் antacids
» நெஞ்சு வலி
» நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்?
» நெஞ்சு பொறுக்குதில்லையே!
» நெஞ்சு கரித்தல் மருந்துகள் antacids
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|