தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உணவுகளே விஷமாகிறது

View previous topic View next topic Go down

உணவுகளே விஷமாகிறது Empty உணவுகளே விஷமாகிறது

Post by முரளிராஜா Thu Jul 25, 2013 11:32 am

உணவுகளே விஷமாகிறது 8e32c153-3912-43d7-86a3-3cdec07fdefc_S_secvpf

வித்தியாசமான உணவை, ருசியாக சாப்பிட எல்லோரும் விரும்பத்தான் செய்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் அந்த சுவை மிகுந்த உணவே விஷமாகி, உடலை கடுமையாக பாதித்துவிடுகிறது. பெரும்பாலும் வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் உடலுக்கு ஏற்புடையதாக இருக்கிறது.

எந்தெந்த உணவுகள் நமது உடலுக்கு ஏற்றதாக இருக்குமோ, அதில் நமக்கு பிடித்த மசாலாக்கள் சேர்த்து சமைப்பதால் வீட்டு உணவுகள் பெரும்பாலும் உடலுக்கு பிரச்சினை தராததாக இருக்கிறது. வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் சிறந்ததாக இருந்தாலும், அது முழு ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும் என்றால், அதிலும் கவனிக்கவேண்டிய விஷயங்கள் சில உண்டு.

* காய்கறிகளை நன்றாக கழுவவேண்டும். நன்றாக கழுவாவிட்டால் அதில் அழுக்கும், பயன்படுத்தப்பட்ட பூச்சி மருந்துகளின் தாக்கமும் இருக்கும். அதனால் பெயரளவுக்கு கழுவாமல் நன்றாக கழுவவேண்டும். காய்கறிகளை சிறிது நேரம் மஞ்சள் தூள், உப்பு கலந்த நீரில் போட்டுவைத்துவிட்டு பின்பு கழுவி, நறுக்குங்கள். அவ்வாறு செய்தால் பூச்சிக் கொல்லி மருந்துகளால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் அகன்றுவிடும்.

* வேலைக்கு போகும் அவசரத்திலோ, பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் அவசரத்திலோ காய்கறிகளை சுத்தம் செய்து சமைக்காதீர்கள். அதை சாப்பிடும்போது குறிப்பாக உங்கள் குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படலாம்.

* சிலரது உடலுக்கு ஒருசில காய்கறிகள் ஒத்துக் கொள்வதில்லை. அவற்றை முழுமையாக தவிர்த்திட வேண்டும்.

* குழந்தைகளும், பெரியவர்களும் இப்போது புதிய உணவு வகைகளை தேடிச் சென்று சுவைக்கிறார்கள். அதை ஒரு பொழுது போக்காக விரும்பி செய்கிறார்கள். துரித உணவுகளில் கண்களைக் கவரும் நிறத்திற்காக வண்ணப் பொடிகள் சேர்க்கப்படுகின்றன. ருசிக்காகவும் சில பொருட்களை சேர்க்கிறார்கள். அவைகள் உடலுக்கு பெரும் கேடுகளை உருவாக்குகிறது.

* பெரும்பாலான சாலையோரக் கடைகள் தூய்மையாக இருப்பதில்லை. அவர்கள் தரமான உணவுப் பொருட்களை வாங்கி, சுகாதாரமாக உணவுகள் தயாரிப்பதும் இல்லை. பழைய உணவுகளையும் வழங்கிவிடுகிறார்கள். அது விஷத்தன்மை கொண்டதாகிவிடுகிறது.

* எண்ணெய்யில் பொரிக்கப்படும் உணவு வகைகள் வாய்க்கு ருசியாக இருந்தாலும் வயிற்றுக்கு தொந்தரவாகவும், ஆரோக்கியத்திற்கு கெடுதியாகவும் மாறிவிடுகிறது. ஏற்கனவே பொரித்த எண்ணெய்யில் மீண்டும் மீண்டும் சமைப்பதால் ஏற்படும் விளைவு மிக மோசமானது.

* சாலையோர கடைகளில் பஜ்ஜி, பக்கோடா, சமோசா போன்றவை அமோகமாக விற்பனை யாகிறது. பொரித்துக்கொண்டே இருக்கும் போது, எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும்போது ஒருசில கடைகளில், பாலிதீன் கவரில் இருக்கும் எண்ணெய்யை, வெட்டி அதன் உள்ளே ஊற்றுவதற்கு பதில், ஏற்கனவே கொதித்துக்கொண்டிருக்கும் எண்ணெய்யில் பாக்கெட்டின் ஓரத்தை அப்படியே காட்டிவிடுகிறார்கள்.

பாலிதீன் கவர் உருகி எண்ணெய் உள்ளே பாய்கிறது. பாலிதீன் எண்ணெய்யில் கலப்பதும், அதை மக்கள் வாங்கி சுவைப்பதும் திகிலான விஷயம். ஆபத்தான நோய்களை இது உருவாக்கும். இது மட்டுமல்ல, இதுபோன்ற ஆபத்தான அதிரடி வேலைகள் பலவற்றை சாலையோர கடைகளில் செய்கிறார்கள்.

* உயர்ரக ஓட்டல்களில் மக்கள் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். வாடிக்கையாளர்களின் தேவைக்காக அங்கே கோழி, மீன் போன்றவைகளை பதப்படுத்திவைத்திருக்கிறார்கள். அவைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் சமைத்திடவேண்டும்.

சமைத்ததை அதிகம் தாமதிக்காமல் வாடிக்கையாளர்கள் சாப்பிடவும் வேண்டும். ஒருசில ஓட்டல்களில் காலங் கடந்த உணவுகளில் வாசனைப் பொருட்களை கலந்து புதியதுபோல் வழங்கிவிடுகிறார்கள். அதுவும் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

* கீரை வகைகளை சமைக்கும்போது குறிப்பிட்ட நேரம் வரை அதை வேகவிட வேண்டும். குறைந்த நேரமே வேகவைத்து அவசரமாக சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.

* மூடாமல் வைத்திருக்கும் உணவுகளில் ஈக்களால் பல தொற்று கிருமிகள் உருவாகுகின்றன. அவை வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி போன்றவற்றை ஏற்படுத்தும். பெரும்பாலான வயிற்றுக் கோளாறுகளுக்கு நாம் சாப்பிடும் உணவுதான் காரணம். உணவால் நம் உடலுக்கு 250 விதமான பாதிப்புகள் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உணவுகளே விஷமாகிறது Empty Re: உணவுகளே விஷமாகிறது

Post by செந்தில் Thu Jul 25, 2013 12:05 pm

கைதட்டல் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum