தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


---- என் வாழ்கைக்கு எடுத்து கொண்ட சில பொன்மொழிகள் இவை ----

View previous topic View next topic Go down

---- என் வாழ்கைக்கு எடுத்து கொண்ட சில பொன்மொழிகள் இவை ----  Empty ---- என் வாழ்கைக்கு எடுத்து கொண்ட சில பொன்மொழிகள் இவை ----

Post by முழுமுதலோன் Wed Aug 14, 2013 10:52 am



---- என் வாழ்கைக்கு எடுத்து கொண்ட சில பொன்மொழிகள் இவை ---- 
[color][font]



[/font][/color]
நீ செய்யும் காரியம் தவறாகும் போது, 

நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது, 

உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது, 

உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது, 

அவசியமானால் ஓய்வெடுத்து கொள். 

ஆனால் ஒருபோது மனம் தளராதே.. 

---டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ---- 


எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட 

ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல். 

---திரு. டெஸ்கார்டஸ்-- 


இந்த உலகில் தலைவிதி என்று எதுவும் கிடையாது. 

எல்லாம் நீயாக தேடி கொண்டதுதான். 

--பெயர் தெரியா பெரியவர்--- 


தனக்கு நிகழும்வரை எல்லாமே வேடிக்கைதான். 

--புத்தர்--- 


அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல. 

உழைக்கும் நேரம். 

--பெயர் தெரியா பெரியவர்--- 


இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல 

கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான். 

---மாவீரன் நெப்போலியன்--- 


தீமை செய்வதற்கும் மட்டும் பயப்படு. 

வேறு எந்த பயமும் உனக்கு வேண்டாம். 

--பெயர் தெரியா பெரியவர்--- 


நான் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் வாழ்ந்த 

வாழ்வின் அடையாளமின்றி சாக அஞ்சுகிறேன். 

---திரு. மிக்கேல் லேர்மொண்டஸ்--- 


எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருக்காதே 

எதுவும் தெரியாது என்று தெளிவோடு இரு.. 

--பெயர் தெரியா பெரியவர்--- 


தேவையற்ற பொருட்களை வாங்கும் வழக்கம் 

தேவையான பொருட்களை விற்கும் நிலைக்கு 

கொண்டு வந்துவிடும். 

--பெயர் தெரியா பெரியவர்--- 


போலியான நண்பனாக இருப்பதைவிட 

வெளிப்படையான எதிரியாக இரு 

--பெயர் தெரியா பெரியவர்--- 


ஆயிரம் வருடம் மௌனமாக நின்ற மரம் விழும்போது காடே அதிரும்படி செய்துவிடுகிறது. நீ? 

--ரஸ்கின்--- 


எல்லோருக்கும் சொர்க்கத்திற்கு செல்ல ஆசை 

ஆனால் யாருக்கும் சாகத்தான் விருப்பமில்லை. 

--பெயர் தெரியா பெரியவர்--- 


ஒவ்வொருவரும் அசலாக பிறந்து நகலாக இறக்கிறோம். 

---திரு. எட்மன்ட் பார்க்--- 


முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல்.

புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல் 

--திரு. ஜார்ஜ் பெர்னாட்ஷா--- 


காதல் என்பது அரசியலைப் போல் ஒரு சூதாட்டம். 

ஏனெனில் இரண்டிலும் பொய்யும் பித்தலாட்டமும் 

செய்தால்தான் வெற்றி பெற முடியும். 

--பெயர் தெரியா பெரியவர்--- 


நீ பின்பற்ற வேண்டிய நற்பண்புகள், 

நீ வெறுக்கும் மனிதர்களிடம் இருக்ககூடும். 

--பெயர் தெரியா பெரியவர்--- 


ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகின்றனர். 

யாரும் கீழ்படிவதற்கு தயாராகயில்லை. 

முதலில் நல்ல வேலைக்காரனாக இருக்க கற்றுகொள். 

பின் எஜமானனாகும் தகுதி உனக்கு வந்துவிடும். 

--சுவாமி விவேகாந்தர்-- 


எல்லாரும் தன்னை சீர்திருத்துவதை விட்டு, 

உலகத்தை சீர்திருத்த விரும்புகின்றனர். 

--பெயர் தெரியா பெரியவர்--- 


நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ? 

அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு. 

--- அண்ணல் காந்தி --- 


நீ இருக்கும் வரை மரணம் வரப்போவது கிடையாது. 

மரணம் வந்த பிறகு நீ இருக்க போவது கிடையாது. 

---தத்துவஞானி சாக்ரடீஸ்-- 


இருள் இருள் என்று சொல்லி கொண்டு சும்மா இருப்பதை விட, 

ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை. 

--தத்துவஞானி கன்பூசியஸ்--- 


அதிர்ஷ்டமுள்ளவன் ஒரு நல்ல நண்பனை சந்திக்கிறான். 

அதிர்ஷ்டம் இல்லாதவன் ஒரு அழகியை சந்திக்கிறான். 

--பெயர் தெரியா பெரியவர்--- 


உன்னால் நூறு பேருக்கு உணவளிக்க முடியாது என்றாலும், 

ஒருவருக்கு உணவளி அது போதும் 


உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி. 

உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி. 

--அன்னை திரசா-- 


ஒரு முள் குத்திய அனுபவம் காடளவு எச்சரிக்கைக்கு சமம். 

--திரு. வோயாஸ்--- 


நூறு பேர் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு நல்ல இல்லறம் அமைய ஒரு பெண் வேண்டும். 

--கவிஞர் ஹோமர்-- 


சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது. 

--பெயர் தெரியா பெரியவர்--- 


வெற்றியில் புதிதாக விரல் ஒன்றும் முளைபதில்லை. 

தோல்வியில் உயிர் ஒன்றும் போவதில்லை.போராடு.. 

--கவிஞர் சுகி--- 


உழைப்பவனின் காலம் பொன் ஆகுகிறது. 

உழைக்காதவனின் பொன் காலமாகுகிறது. 

--பெயர் தெரியா பெரியவர்--- 


உன்னை ஒரு கூட்டம் எப்படியாவது கீழே விழவைக்க திட்டமிடுகிறதா? 

அப்படியென்றால் சந்தோசப்படு 

நீ அவர்களை விட மேலே இருக்கிறாய். 

--பெயர் தெரியா பெரியவர்--- 


ஒருவன் கடவுளை நோக்கி நொண்டியடித்து செல்கிறான். 

சாத்தனை நோக்கி குதித்தொடுகிறான். 

--பெயர் தெரியா பெரியவர்--- 


இதயத்தை சுத்தபடுத்தி விட்டு இறைவனை கூப்பிடு. நிச்சயம் வருவார். 

---பைபிள்--- 


வேரை வெட்டுகிறவன் அந்த மரத்திற்கு எத்தனை கிளைகள் என்று பார்த்து வெட்ட வேண்டும். 

---திரு. ஹென்றி டேவிட் தேரோ---- 


அறிஞர்கள் சித்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள். அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகுகிறார்கள். 

-- தத்துவஞானி கன்பூசியஸ்--- 


உங்களை ஒருவர் விமர்சித்தல் உங்களுக்கு எரிச்சல் வருகிறதா? 

அப்படியென்றால் அந்த விமர்சனம் சரியானதுதான். 

--திரு. டாக்டஸ்-- 


வாக்குறுதி முழுமதியை போன்றது.. உடனே நிறைவேற்றா விட்டால் அது நாளுக்கு நாள் தேய்ந்துவிடும். 

--பெயர் தெரியா பெரியவர்--- 


உன்னால் இது முடியும் என்று சொல்கிறபோது 

அந்த செயலை செய்ய 

என்னைப் போல் ஒரு சோம்பேறியை பார்க்க முடியாது. 

உன்னால் இது முடியாது என்று சொல்கிறபோது 

என்னைப்போல் ஒரு இயந்திரத்தை பார்க்க முடியாது. 

-- நான்--- 


அடுத்தவனுக்கு ஆயிரம் அறிவுரைகள் சொல்வதைவிட, அதில் ஒன்றை கடைபிடி. 

--பெயர் தெரியா பெரியவர்--- 


எல்லாம் கடைசியில் சரியாகிவிடும் 

அப்படி சரியாகவில்லை என்றால் 

அது கடைசியல்ல 

--பெயர் தெரியா பெரியவர்--- 


சாதிக்க துடிக்கும் நண்பர்களுக்கு சமர்ப்பணம் 


---தமிழ்தாசன்---


Posted by Sakthivel Balasubramanian
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

---- என் வாழ்கைக்கு எடுத்து கொண்ட சில பொன்மொழிகள் இவை ----  Empty Re: ---- என் வாழ்கைக்கு எடுத்து கொண்ட சில பொன்மொழிகள் இவை ----

Post by முழுமுதலோன் Wed Aug 14, 2013 10:53 am

நம்பிக்கை மேற்கோள்கள்

நீங்கள் உங்களை நம்ப வேண்டும். அதுதான் வாழ்வின் ரகசியம். நான் அனாதை விடுதியில் இருந்த போதும், உணவுக்காக தெருக்களில் சுற்றித் திரிந்த போதும், என்னை நான் உலகின் மிகச் சிறந்த நடிகனாகவே எண்ணிக் கொள்வேன்" - சார்லி சாப்ளின்


*****


"திறமை, தைரியம் மற்றும் உழைப்பு இவைகளின் கூட்டுச்சேர்க்கையின் மூலமாக நிகழ்வதே அதிசயங்கள்" - பாப் ரிச்சர்ட்ஸ், ஒலிம்பிக் சாம்பியன்

*****


"நேற்றைய தோல்விகளே இன்றைய விதைகள். அவ்விதைகளை சரியான முறையில் பயிர் செய்வதன் மூலம் நாளைய வெற்றியை சிறந்த முறையில் அறுவடை செய்ய முடியும்" - பீடஜாப்ரா

*****


"மிகவும் எளிய முறையில் அமைதியான மனநிலையைப் பெற முடியும். எதற்காகவும் கவலைப்படாதீர்கள். அனைத்திற்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்" - பெயர் தெரியாத ஓர் அறிஞர்

*****


"நீங்கள் உங்கள் மூதாதையர்கள் மற்றும் சக மனிதர்களைக் காட்டிலும் சிறப்பாகத் திகழ்வதை விட, உங்களை விட நீங்கள் சிறப்பாகத் திகழ முயற்சி செய்யுங்கள்" - வில்லியம் பால்க்னர்

*****


"நான் இன்று முழுமையாக சாதித்தவைகளைக் கண்டு ஆரம்ப நாட்களில் மரண பயம் கொண்டிருக்கிறேன்" - பெட்டி பென்டர்

*****


"நீங்கள் வெற்றி என்ற ஓர் இலக்கை அடைய பல முறை போராட வேண்டியிருக்கலாம்" - மார்க்ரெட் தாட்சர்

*****


"நன்மைகளைத் தேடுங்கள். அது உங்கள் சுற்றுப்புறத்தில் தான் உள்ளது. தேடுங்கள், கண்டறிந்த பின் அதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். பிறகு நீங்களே அதில் நம்பிக்கை கொள்வீர்கள்" - ஜெ ஓவென்ஸ்

*****


"உற்சாகம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். உற்சாகம் என்பது வானளாவிய எண்ணங்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை" - ஹென்ரி போர்டு



Posted by Sakthivel Balasubramanian
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum