தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


படித்ததில் பிடித்த கவிதைகள்....

View previous topic View next topic Go down

படித்ததில் பிடித்த கவிதைகள்....  Empty படித்ததில் பிடித்த கவிதைகள்....

Post by ஸ்ரீராம் Sun Jul 28, 2013 4:29 pm

படித்ததில் பிடித்த கவிதைகள்....  62307_367610866699402_260377384_n

ஆனந்த தூறல்கள் நம்
வாழ்வினில் வந்திடவே
அன்பினை பொழிந்திட்டாயோ
மௌனங்களும் உயிர்பெற்று எழுந்தது
உந்தன் வாய்மொழி கேட்கையிலே
கண்விழிக்கும் முன் முணுமுணுக்கிறேன்
உந்தன் பெயரை.....
உன் குரல் கேட்டதும் துயில் கலைகிறேன்
தினந்தோறும்.....
வாழ்வினில் இனிமைகள் சேர்ந்திட
இனிதாய் வந்திட்டாயோ என் பகல்நிலவாய்....!


**********


கவிதை பாட மறந்தேன்
கற்சிலையாய் நின்றேன்
கற்பனை சிறகுகள் விரித்திடாமல்
கண்மூடியே நான் இருந்தேன்...!

விரல் மீட்டும் இசையினையே
விடியும் வரையும் ரசித்தேன்
விடையில்லா வினாவாக
விடிந்ததிங்கே பொழுது...!

கருங்குயிலின் இசைகேட்டும்
கண்திறக்க மறுத்தேன்
கனிவு கொண்ட உன் அன்பில்
கரைந்து விடவே துடித்தேன்...!

விளைநிலத்தை போல மனதில்
விளைந்திடுமே அன்புமொழிகள்
விளையாட்டாய் சில பேரும்
விதைக்கிறார்கள் கடுஞ்சொற்கள்...!

கரும்பின் இனிய சுவை போல
கனியமுத சொற்கள் எல்லாம்
கற்கண்டாய் இனிக்கிறதே
கவிதை படைக்கும் உன் முன்னே...!

விதைக்கும் விதையே பலனாகும் - நீ
விதைக்கும் சொற்களும் தான்
வினையினை நீ விதைத்துவிட்டால்
விதியும் உனக்கு எதிராகும்...!
 

**********


இதயங்கள் துடிக்கும் ஓசை
அறிந்து விடுதல் இயல்பானது
இயற்கையுடன் ஒன்றிணைந்த
உறவானதால் இணைந்துவிட்டோம்
இயற்கையுடன்...!

தொலைதூரம் இருந்தாலும்
தொடர்ந்து வரும்
நான் காணும் மேகங்கள்
என் அன்பை சொல்லிவிடத்தான்
தூது செல்லும் எப்பொழுதும்...!

வாசமிகு மலர்களும் தான்
கூறிடுமே நேசத்தை
நான் சுவாசிக்கும் போதினிலே
உன்னைச்சேர தவழ்ந்து
செல்லும் காற்றினிலே...!

புள்ளினங்கள் பாட்டினிலே
மனம்மயங்கும் வேளையிலும்
நான் கேட்கும் இசையினையே
கூறிடுமே மெல்லிசையாக....!


**********


வானத்து மேகங்களை
கேட்டுப்பார் அது சொல்லும்
நான் உன்னிடம் கொண்ட
ஆழமான அன்பை
நீ என் நிலவாக ஜொலிப்பதால்...!

வையகத்து பூவிதழ்களை
கேட்டுப்பார் அது சொல்லும்
நான் உன்னிடம் கொண்ட
ஆழமான சுவாசத்தை
நீ என் நிஜமாக வாழ்வதால்...!

பறந்து செல்லும் புள்ளினங்களை
கேட்டுப்பார் அது சொல்லும்
நான் உன்னிடம் கொண்ட
ஆழமான பாசத்தை
நீ என் உணர்வாக கலந்துவிட்டதால்...!

வேறெப்படி உரைப்பேன் உனக்கு
என் இனியவனே என் சொந்தம்
நீ மட்டுமே என்று...!

உயிர் பெற்ற கவிதைகள்...!


**********


நான் எழுத நினைக்கும் போதெல்லாம்
என் நினைவுக்குள்ளே வந்துவிடுகிறாய்
என்னை அறியாமலே...!

என்னிடம் நீ பேசிய வார்த்தைகள்
ஒவ்வொன்றும் எனக்குள்ளே
ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கிறது...!

உன் அன்பான பேச்சினையும்
அதட்டலான பேச்சினையும்
இனிமையாக ரசிக்கும் வேளையெல்லாம்
தென்றல் என்னை இதமாக வருடுகிறது...!

என் நினைவுக்குள் எழுகின்ற
வரிகள் அனைத்தும் இனியவனே
உனக்கே உனக்கானது...!

உள்ளம் முழுவதும் உன்னன்பாலே
ஒவ்வொரு நொடித்துளியையும்
நான் அழகாக உணர்ந்து இலயிக்கின்றேன்...!

என் இயல்பான குணத்தினையே
மாற்றித்தந்தாயே இது என்ன மாயமோ...?

காலங்கள் சென்றாலும் வினை ஏதும் வந்தாலும்
தொடரும் இந்த பந்தம்
நம் நேசம் புதிது மணம் கமழும் மலர் போலானது
ஊர் என்ன சொன்னாலும் யார் வினையாக வந்தாலும்
மாறாத சொந்தம் இது...!


**********


அடர் இருள் சூழ்ந்திடினும்
சந்திர நிலவின் முகம் காண
தனியளாய் தவித்து நின்றேன்...!

நீ வரும் வேளை பார்த்து
காரிருளும் என்னைச்சூழ
அழகான உன் ஒளி முகத்தை
பார்த்ததில் நானும்
ஆனந்தம் என்னில் கண்டேன்...!

முத்து முத்தாய் மல்லிகைப்பூவும்
தோட்டத்திலே பூத்திருக்குது
என் கூந்தலிலே சூடிக்கொள்ள
என் நெஞ்சம் தவிக்குது...!

வளையல்களின் நாதங்களை
கேட்டு தினம் மனசு மயங்குது
கொலுசு ஒலியை கேட்டிடத்தானே
என் மனசோ ஏங்குது...!

வருவாயா உன்னைக் கண்டு
மயங்க விடுவாயா
புவி வாழ்த்த என் கரம் கோர்ப்பாயா...!

நன்றி J.ஆர், உயிர் பெற்ற கவிதைகள்...! முகநூல் பக்கம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

படித்ததில் பிடித்த கவிதைகள்....  Empty Re: படித்ததில் பிடித்த கவிதைகள்....

Post by முரளிராஜா Mon Aug 12, 2013 6:49 pm

அனைத்துமே அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

படித்ததில் பிடித்த கவிதைகள்....  Empty Re: படித்ததில் பிடித்த கவிதைகள்....

Post by Muthumohamed Tue Aug 13, 2013 12:26 am

கவிதைகள் அனைத்துமே சூப்பருங்க
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

படித்ததில் பிடித்த கவிதைகள்....  Empty Re: படித்ததில் பிடித்த கவிதைகள்....

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 31, 2013 9:29 am

ரசித்தேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்ததில் பிடித்த கவிதைகள்....  Empty Re: படித்ததில் பிடித்த கவிதைகள்....

Post by சரண் Sat Aug 31, 2013 10:25 am

காலங்கள் சென்றாலும் வினை ஏதும் வந்தாலும்
தொடரும் இந்த பந்தம்
நம் நேசம் புதிது மணம் கமழும் மலர் போலானது
ஊர் என்ன சொன்னாலும் யார் வினையாக வந்தாலும்
மாறாத சொந்தம் இது...!
அருமை!
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

படித்ததில் பிடித்த கவிதைகள்....  Empty Re: படித்ததில் பிடித்த கவிதைகள்....

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 02, 2013 7:29 pm

எனக்கும் பிடித்தது
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்ததில் பிடித்த கவிதைகள்....  Empty Re: படித்ததில் பிடித்த கவிதைகள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum