தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்

View previous topic View next topic Go down

திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் Empty திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்

Post by முழுமுதலோன் Thu Jun 20, 2013 7:57 am

அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்
 
திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் T_500_115
 
 
 
மூலவர்:வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான்
 உற்சவர்:-
 அம்மன்/தாயார்:வண்டார்குழலி, மகாகாளி
 தல விருட்சம்:பலா
 தீர்த்தம்:முத்தி
 ஆகமம்/பூஜை:-
 பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
 புராண பெயர்:-
 ஊர்:திருவாலங்காடு
 மாவட்டம்:திருவள்ளூர்
 மாநிலம்:தமிழ்நாடு
 
திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் Lபாடியவர்கள்:திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் R
   
 திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் 
தேவாரப்பதிகம்


கூடினார் உமைதன் னோடே குறிப்புடை வேடங் கொண்டு சூடினார் கங்கையாளைச் சுவறிடு சடையர் போலும் பாடினார் சாமவேதம் பைம்பொழில் பழனை மேயார் ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே.

-திருநாவுக்கரசர் 
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 15வது தலம்.
 
   
திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் L திருவிழா:திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் R
   
 மார்கழி திருவாதிரை இங்கு மிக சிறப்பு. இது தவிர சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு கொண்டாடப்படுகிறது. 
   
திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் L தல சிறப்பு:திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் R
   
 சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது ரத்தின சபை.இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது. அம்மனின் சக்தி பீடங்களில் இது காளி பீடம். 
   
திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் Lதிறக்கும் நேரம்:திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் R
   
 காலை 6 மணி முதல் 9 மணி வரை நடை திறந்து இருக்கும். 
   
திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் Lமுகவரி:திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் R
   
 அருள்மிகு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு-609 810, திருவள்ளூர் மாவட்டம். 
   
திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் Lபோன்:திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் R
   
 +91- 4118-272 608. 
   
திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் L பொது தகவல்:திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் R
   
 முன் காலத்தில் ஆலமரக்காடாக இருந்து அதில் இறைவன் சுயம்புவாக தோன்றி, நடனம் செய்த படியால் இத்தல இறைவன் வடாரண்யேஸ்வரர்என்றழைக்கப்படுகிறார். 
   
 
திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் Lபிரார்த்தனைதிருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் R
   
 நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலம்.
 
   
திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் Lநேர்த்திக்கடன்:திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் R
   
 மார்கழி திருவாதிரையில் சிவனுக்கு அபிஷேக ஆராதனை செய்தல். 
   
திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் L தலபெருமை:திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் R
   
 காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெற்ற சிறப்புடையது. தாமரை மலர் விரித்தாற் போல் அமைந்து அதன் மேல் அமைந்துள்ள "கமலத்தேர்' இங்கு தனி சிறப்பு. 
   
திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் L  தல வரலாறு:திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் R
   
 சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை அழித்து அவர்களது ரத்தத்தை உண்ட காளி, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரை கண்ட காளி, ""நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்,''என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார்.

இதைக்கண்ட காளி, இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது என தோற்று விடுகிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி,""என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்,''என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.
 
   
திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் Lசிறப்பம்சம்:திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் R
   
 அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum