Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எப்படி? எப்படி? எப்படி?
Page 1 of 1 • Share
எப்படி? எப்படி? எப்படி?
தேர்ந்தெடுப்பது எப்படி?
தேர்ந்தெடுத்தல் அவசியமா? – எனும் கேள்வி எழுப்பப்பட்டால் நாம் அனைவரும் ஒரே குரலில் “அவசியம்… அவசியம்” என்று தான் பதிலளிப்போம் அல்லவா? ஏன்னல் தினந்தோறும் என்பதை விட கணந்தோறும் நாம் ஒவ்வொருவரும் நம்மை அறிந்தோ அறியாமலோ, தேர்ந்தெடுக்கும் திறனில் தேர்ச்சி பெற்றிருக்கிறோமோ இல்லையோ, எதையாவது தேர்ந்தெடுத்துக் கொண்டே தான் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.
நாம் தேர்ந்தெடுத்திருப்பவை சரியா தவறா என்பது வேறு விஷயம், என்றாலும் தேர்ந்தெடுத்தே தீரவேண்டியது ஒரு கட்டாயமாக; தவிர்க்க இயலாததாக; நம் வாழ்க்கையில் அங்கம் வகிக்கிறதல்லவா?
தேர்ந்தெடுப்பதென்பது காலை முதல் இரவு வரை, இளமை முதல் முதுமை வரை – ஏன்? நாம் வாழும் நான் வரையிலான ஒரு தொடர் இயக்கமாக இருந்துகொண்டே இருப்பதை அன்றாட அனுபவத்திலிருந்து நம்மால் உணரமுடியும்.
எடுத்துக்காட்டாக சிலவற்றைப் பட்டியலிட்டால் – எளிதில் விளங்கும்.
காலையில் 5 மணிக்கு எழலாமா? தாமதித்து எழலாமா?
அருந்துவது தேநீரா காபியா வேறு ஏதாவது ஆரோக்கிய பானமா?
குளிப்பது வெந்நீரிலா? தண்ணீரிலா?
அணிவது தனக்குப் பிடித்த நீல உடையா? எல்லோருக்கும் பிடித்த சந்தன நிற உடையா?
உண்பது இட்லியா, தோசையா, பூரியா அல்லது விரைவில் கிடைக்கும் ஏதோ ஒரு பதார்த்தமா?
வெளிக்கிளம்புவது இரு சக்கர வாகனத்திலா, பேருந்திலா?
எனத் தொடங்கும் இந்தத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு..
பிரசவம் பார்ப்பது இந்த மருத்துவமனையிலா அல்லது அந்த மருத்துமனையிலா?
பிள்ளையைச் சேர்ப்பது இந்தப் பள்ளியிலா? அல்லது அந்த பள்ளியிலா?
அல்லது அருகிலிருக்கும் ஏதோ ஒரு பள்ளியிலா?
பணியில் சேர்வதா? தொழில் தொடங்குவதா?
மளிகைக் கடை வைக்கலாமா? அல்லது ஜவுளிக்கடை வைக்கலாமா?
டிரைவிங் கற்றுக்கொள்ளலாமா? டெய்லரிங் படிக்கலாமா?
பள்ளி இறுதிப் படிப்பில் எந்தப் பாடம் எடுப்பது?
உள்ளூர்க் கல்லூரியில் சேர்வதா? வெளியூரில் படிக்கலாமா?
வாடகை வீட்டில் சொந்த வீடு கட்டலாமா?
தனி வீடு பார்க்கலாமா அல்லது அடுக்குமாடி பாதுகாப்பானதா?
இரவு நேரப் பயணம் போகலாமா? பகலில் பயணிக்கலாமா?
பேருந்துப் பயணம் போகலாமா? இரயிலில் போகலாமா?
எந்த டி.வி. வாங்குவது? எந்தச் சேனல் பார்ப்பது?
எந்த திரைப்படத்திற்கு செல்வது?
எனும் அன்றாடச் செயல்பாடுகளில் “தேர்ந்தெடுக்கும் கலையானது முக்கிப் பங்கு வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல்…
திருமணத் தரகர் கூறும் மூன்று வரன்களில் எந்த வரனைத் தேர்ந்தெடுப்பது?
திருமணத்தை விரிவாக நடத்துவதா? சிக்கனமாகச்செய்வதா?
உள்நாட்டில் பணிபுரிவதா? அல்லது வெளிநாடு செல்வதா?
நோய்வாய்ப்பட்டிருகும்போது எந்த மருத்துவத்தைக் கடைப்பிடிப்பது?
அலோபதியா, ஹோமியோபதியா, ஆயுர்வேதமா, சித்தமா?
தேவை, இடமாற்றத்தோடு கூடிய பதவி உயர்வா? அல்லது அதே பதவியில் அதே இடத்தில் நீடிப்பதா?
“போதும்” என்று அமைதி காண்பதா? இன்னும் “வேண்டும்” என்று மீண்டும் மீண்டும் வெற்றியை நோக்கி முயல்வதா?
ஒரு நேரத்தில் நடக்கும் மூன்று விழாக்களில் எந்த விழாவில் கலந்து கொள்வது? இவறிற்கெல்லாம் மேலாக
நடக்கவிருக்கும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது? போன்ற தேசிய அளவிலான விஷயங்களிலும் நமது தேர்ந்தெடுக்கும் திறனுக்கு பெரும் சோதனை காத்திருக்கிறது. இதுபோன்ற பட்டிமன்றங்கள் நம் மனமென்னும் மன்றத்தில் அடிக்கடி அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
தேர்ந்தெடுக்க நாம் தடுமாறும் தருணங்கள் ஒன்றா இரண்டா? அப்படிப்பட்ட தடுமாற்றங்களால் எண்ணற்றோர் தடம் மாறிப் போயிருக்கிறார்கள். அன்றாடம் நாம் நடைபாதையில் காணும் சாமானியன் முதல் உலகை ஆளும் ஆளுமை படைத்த மாமன்னன் அலெக்சாண்டர் வரை, பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற இளைய மாணவன் முதல் மிகப்பெரிய கணிப்பொறி முடிவுகளால் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். தோல்வியும் அடைந்திருக்கிறார்கள். மிகப்பெரிய வெற்றியாளர்கள் தமது தவறான சறுக்கலைச் சந்தித்திருக்கிறார்கள். உலகையே ஆட்டுவித்த சர்வாதகாரிகள் – தற்கொலை செய்து கொள்ளும் அவலமான முடிவுக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இப்படி நாம் தேர்ந்தெடுப்பதே நமது வாழ்க்கையாகவும் அமைவதை அன்றாடம் கண்ணுற நேர்கிறது அல்லவா? ஆகவேதான் முடிவெடுக்கும் கலையே நம்மை முன்னேற்றும் கலையின் மிக முக்கியமான அம்சம் என்று கருதுகிறேன்.
Author: திருவள்ளுவர் ம
தேர்ந்தெடுத்தல் அவசியமா? – எனும் கேள்வி எழுப்பப்பட்டால் நாம் அனைவரும் ஒரே குரலில் “அவசியம்… அவசியம்” என்று தான் பதிலளிப்போம் அல்லவா? ஏன்னல் தினந்தோறும் என்பதை விட கணந்தோறும் நாம் ஒவ்வொருவரும் நம்மை அறிந்தோ அறியாமலோ, தேர்ந்தெடுக்கும் திறனில் தேர்ச்சி பெற்றிருக்கிறோமோ இல்லையோ, எதையாவது தேர்ந்தெடுத்துக் கொண்டே தான் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.
நாம் தேர்ந்தெடுத்திருப்பவை சரியா தவறா என்பது வேறு விஷயம், என்றாலும் தேர்ந்தெடுத்தே தீரவேண்டியது ஒரு கட்டாயமாக; தவிர்க்க இயலாததாக; நம் வாழ்க்கையில் அங்கம் வகிக்கிறதல்லவா?
தேர்ந்தெடுப்பதென்பது காலை முதல் இரவு வரை, இளமை முதல் முதுமை வரை – ஏன்? நாம் வாழும் நான் வரையிலான ஒரு தொடர் இயக்கமாக இருந்துகொண்டே இருப்பதை அன்றாட அனுபவத்திலிருந்து நம்மால் உணரமுடியும்.
எடுத்துக்காட்டாக சிலவற்றைப் பட்டியலிட்டால் – எளிதில் விளங்கும்.
காலையில் 5 மணிக்கு எழலாமா? தாமதித்து எழலாமா?
அருந்துவது தேநீரா காபியா வேறு ஏதாவது ஆரோக்கிய பானமா?
குளிப்பது வெந்நீரிலா? தண்ணீரிலா?
அணிவது தனக்குப் பிடித்த நீல உடையா? எல்லோருக்கும் பிடித்த சந்தன நிற உடையா?
உண்பது இட்லியா, தோசையா, பூரியா அல்லது விரைவில் கிடைக்கும் ஏதோ ஒரு பதார்த்தமா?
வெளிக்கிளம்புவது இரு சக்கர வாகனத்திலா, பேருந்திலா?
எனத் தொடங்கும் இந்தத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு..
பிரசவம் பார்ப்பது இந்த மருத்துவமனையிலா அல்லது அந்த மருத்துமனையிலா?
பிள்ளையைச் சேர்ப்பது இந்தப் பள்ளியிலா? அல்லது அந்த பள்ளியிலா?
அல்லது அருகிலிருக்கும் ஏதோ ஒரு பள்ளியிலா?
பணியில் சேர்வதா? தொழில் தொடங்குவதா?
மளிகைக் கடை வைக்கலாமா? அல்லது ஜவுளிக்கடை வைக்கலாமா?
டிரைவிங் கற்றுக்கொள்ளலாமா? டெய்லரிங் படிக்கலாமா?
பள்ளி இறுதிப் படிப்பில் எந்தப் பாடம் எடுப்பது?
உள்ளூர்க் கல்லூரியில் சேர்வதா? வெளியூரில் படிக்கலாமா?
வாடகை வீட்டில் சொந்த வீடு கட்டலாமா?
தனி வீடு பார்க்கலாமா அல்லது அடுக்குமாடி பாதுகாப்பானதா?
இரவு நேரப் பயணம் போகலாமா? பகலில் பயணிக்கலாமா?
பேருந்துப் பயணம் போகலாமா? இரயிலில் போகலாமா?
எந்த டி.வி. வாங்குவது? எந்தச் சேனல் பார்ப்பது?
எந்த திரைப்படத்திற்கு செல்வது?
எனும் அன்றாடச் செயல்பாடுகளில் “தேர்ந்தெடுக்கும் கலையானது முக்கிப் பங்கு வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல்…
திருமணத் தரகர் கூறும் மூன்று வரன்களில் எந்த வரனைத் தேர்ந்தெடுப்பது?
திருமணத்தை விரிவாக நடத்துவதா? சிக்கனமாகச்செய்வதா?
உள்நாட்டில் பணிபுரிவதா? அல்லது வெளிநாடு செல்வதா?
நோய்வாய்ப்பட்டிருகும்போது எந்த மருத்துவத்தைக் கடைப்பிடிப்பது?
அலோபதியா, ஹோமியோபதியா, ஆயுர்வேதமா, சித்தமா?
தேவை, இடமாற்றத்தோடு கூடிய பதவி உயர்வா? அல்லது அதே பதவியில் அதே இடத்தில் நீடிப்பதா?
“போதும்” என்று அமைதி காண்பதா? இன்னும் “வேண்டும்” என்று மீண்டும் மீண்டும் வெற்றியை நோக்கி முயல்வதா?
ஒரு நேரத்தில் நடக்கும் மூன்று விழாக்களில் எந்த விழாவில் கலந்து கொள்வது? இவறிற்கெல்லாம் மேலாக
நடக்கவிருக்கும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது? போன்ற தேசிய அளவிலான விஷயங்களிலும் நமது தேர்ந்தெடுக்கும் திறனுக்கு பெரும் சோதனை காத்திருக்கிறது. இதுபோன்ற பட்டிமன்றங்கள் நம் மனமென்னும் மன்றத்தில் அடிக்கடி அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
தேர்ந்தெடுக்க நாம் தடுமாறும் தருணங்கள் ஒன்றா இரண்டா? அப்படிப்பட்ட தடுமாற்றங்களால் எண்ணற்றோர் தடம் மாறிப் போயிருக்கிறார்கள். அன்றாடம் நாம் நடைபாதையில் காணும் சாமானியன் முதல் உலகை ஆளும் ஆளுமை படைத்த மாமன்னன் அலெக்சாண்டர் வரை, பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற இளைய மாணவன் முதல் மிகப்பெரிய கணிப்பொறி முடிவுகளால் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். தோல்வியும் அடைந்திருக்கிறார்கள். மிகப்பெரிய வெற்றியாளர்கள் தமது தவறான சறுக்கலைச் சந்தித்திருக்கிறார்கள். உலகையே ஆட்டுவித்த சர்வாதகாரிகள் – தற்கொலை செய்து கொள்ளும் அவலமான முடிவுக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இப்படி நாம் தேர்ந்தெடுப்பதே நமது வாழ்க்கையாகவும் அமைவதை அன்றாடம் கண்ணுற நேர்கிறது அல்லவா? ஆகவேதான் முடிவெடுக்கும் கலையே நம்மை முன்னேற்றும் கலையின் மிக முக்கியமான அம்சம் என்று கருதுகிறேன்.
Author: திருவள்ளுவர் ம
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி?
» தொடங்குவது எப்படி தொடர்வது எப்படி?
» எப்படி தொடங்குகிறோம் என்பது முக்கியமல்ல..எப்படி முடிக்கின்றோம் என்பது தான் முக்கியம்...
» மயில் தேசியப்பறவையானது எப்படி?
» எப்படி?
» தொடங்குவது எப்படி தொடர்வது எப்படி?
» எப்படி தொடங்குகிறோம் என்பது முக்கியமல்ல..எப்படி முடிக்கின்றோம் என்பது தான் முக்கியம்...
» மயில் தேசியப்பறவையானது எப்படி?
» எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|