Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
64 திருவிளையாடல்-கடலை வற்றச் செய்த படலம்!
Page 1 of 1 • Share
64 திருவிளையாடல்-கடலை வற்றச் செய்த படலம்!
கடலை வற்றச் செய்த படலம்!
![64 திருவிளையாடல்-கடலை வற்றச் செய்த படலம்! TN_161006000000](https://2img.net/h/img1.dinamalar.com/kovilimages/news/TN_161006000000.jpg)
பாண்டியனின் ஆட்சி தழைத்தோங்கிய நேரத்தில் ஆண்டுதோறும் மதுரையில் சித்ரா பவுர்ணமியன்று இரவில் சொக்கலிங்கப் பெருமானுக்கு நெய், பச்சைக்கற்பூரம், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும் முறையை உருவாக்கினான் அபிஷேகப் பாண்டியன். அதுவரை, தேவலோக தலைவனான இந்திரனே பவுர்ணமி அபிஷேகத்தை பூலோக மக்கள் அறியாத வண்ணம் நடத்திக் கொண்டிருந்தான். அபிஷேகப் பாண்டியன் மாலையில் அவனுக்கு முன்னதாகவே வந்து அபிஷேகம் செய்ததால், அவன் அங்கு வந்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒருமுறை சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள், வருணன் மதுரை சொக்கலிங்க பெருமான் கோயிலுக்கு வந்தான். வருத்தமான முகத்துடன் இருந்த இந்திரனைக் கண்ட அவன், தேவேந்திரா! உன் முகம் ஏன் வாட்டமாக இருக்கிறது? தேவலோக தலைவனான நீ இந்த பூலோகத்தில் வந்து வருந்துவதன் காரணம் என்ன? என்றான்.
வருணனே! சொக்கலிங்கப் பெருமானுக்கு சித்ரா பவுர்ணமியன்று நான் தான் முதலில் அபிஷேகம் செய்வேன். நேற்றோ, அபிஷேகப் பாண்டியன் முன்னதாக அபிஷேகம் செய்ய வந்துவிட்டதால், நான் காத்திருக்க வேண்டியதாயிற்று. சாதாரண மானிடனுக்கு கிடைத்த சிறப்பு தேவர் தலைவனான எனக்கு இல்லையே எனும் போது வருத்தப்படுவதைத் தவிர வேறு என்ன வழி? என்றான். இந்திரனே! யார் முதலில் அபிஷேகம் செய்தால் என்ன? முதன்முதலாக அபிஷேகம் செய்யுமளவுக்கு இந்த சொக்கநாதப் பெருமான் அவ்வளவு சக்தி வாய்ந்தவரா? என்று கேட்ட வருணனிடம், அதிலென்ன சந்தேகம்! என்றான் இந்திரன். அப்படியானால், எனக்கு தீராத வயிற்று வலி இருக்கிறது. தேவலோக வைத்தியர்கள் மருந்து தந்தும் குணமாகவில்லை. இதை இந்த சொக்கநாதர் குணமாக்கி விடுவாரா? எனக்கேட்டான் வருணன். நமது சொக்கநாதர் பிறவி என்ற கொடிய நோயையே குணமாக்கக் கூடியவர். அவருக்கா உனக்கு வந்துள்ள சாதாரண வயிற்று வலியைக் குணமாக்க முடியாது! என இந்திரன் பதிலளித்தான். சரி இந்திரரே! அப்படியானால் அந்தப் பெருமானின் மகிமையை உலகறியச் செய்யும் விதத்தில் நான் ஒரு காரியம் செய்யப் போகிறேன். அவரது திருவிளையாடலைக் காண ஆவலாக உள்ளேன், என்றான் வருணன். அவன் என்ன செய்யப்போகிறான் என்பதைக் காண ஆவலுடன் நின்றான் இந்திரன்.
வருணன், சமுத்திரராஜனை வரவழைத்தான். சமுத்திரராஜா! உடனே கடலை மதுரைக்கு அனுப்பு. பொங்கி வரும் கடல் மதுரையை அழிக்க வேண்டும், என்று உத்தரவிட்டான். அதற்கு கட்டுப்பட்டான் சமுத்திரராஜன். பெரும் பிரளயம் ஏற்பட்டது. கடல் பொங்கி மதுரை நகருக்குள் புகுந்து விட்டது. மாட மாளிகைகள் தகர்ந்தன. மதுரை மக்கள் அலறியடித்து ஓடி என்ன பயன்? பலர் வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர். எங்கும் மரண ஓலம். தப்பிப் பிழைத்த அபிஷேகப்பாண்டியனும், இன்னும் சிலரும் சுந்தரேஸ்வரர் கோயிலை மட்டும் அழிக்காமல் சுற்றி நின்ற வெள்ளத்தைக் கடந்து கோயிலுக்குள் புகுந்தனர். சோமசுந்தரப் பெருமானிடம் தங்களை காப்பாற்றுமாறு விண்ணப்பித்தனர். இரக்கமே வடிவான சொக்கநாதனாகிய சோமசுந்தரர், அவர்கள் முன் தோன்றினார். மேகங்களை வரவழைத்து, மேகங்களே! இந்த கடல் நீரை உறிஞ்சுங்கள், என ஆணையிட்டார். கணநேரத்தில் மதுரையில் வெள்ளம் வந்த சுவடே இல்லாமல் மறைந்து விட்டது. பெருமானின் அருளால் மாண்ட மக்களெல்லாம் உயிர் பெற்றனர். எம்பெருமானின் கருணையை அனைவரும் போற்றினர்.
நன்றி தினமலர்
![64 திருவிளையாடல்-கடலை வற்றச் செய்த படலம்! TN_161006000000](https://2img.net/h/img1.dinamalar.com/kovilimages/news/TN_161006000000.jpg)
பாண்டியனின் ஆட்சி தழைத்தோங்கிய நேரத்தில் ஆண்டுதோறும் மதுரையில் சித்ரா பவுர்ணமியன்று இரவில் சொக்கலிங்கப் பெருமானுக்கு நெய், பச்சைக்கற்பூரம், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும் முறையை உருவாக்கினான் அபிஷேகப் பாண்டியன். அதுவரை, தேவலோக தலைவனான இந்திரனே பவுர்ணமி அபிஷேகத்தை பூலோக மக்கள் அறியாத வண்ணம் நடத்திக் கொண்டிருந்தான். அபிஷேகப் பாண்டியன் மாலையில் அவனுக்கு முன்னதாகவே வந்து அபிஷேகம் செய்ததால், அவன் அங்கு வந்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒருமுறை சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள், வருணன் மதுரை சொக்கலிங்க பெருமான் கோயிலுக்கு வந்தான். வருத்தமான முகத்துடன் இருந்த இந்திரனைக் கண்ட அவன், தேவேந்திரா! உன் முகம் ஏன் வாட்டமாக இருக்கிறது? தேவலோக தலைவனான நீ இந்த பூலோகத்தில் வந்து வருந்துவதன் காரணம் என்ன? என்றான்.
வருணனே! சொக்கலிங்கப் பெருமானுக்கு சித்ரா பவுர்ணமியன்று நான் தான் முதலில் அபிஷேகம் செய்வேன். நேற்றோ, அபிஷேகப் பாண்டியன் முன்னதாக அபிஷேகம் செய்ய வந்துவிட்டதால், நான் காத்திருக்க வேண்டியதாயிற்று. சாதாரண மானிடனுக்கு கிடைத்த சிறப்பு தேவர் தலைவனான எனக்கு இல்லையே எனும் போது வருத்தப்படுவதைத் தவிர வேறு என்ன வழி? என்றான். இந்திரனே! யார் முதலில் அபிஷேகம் செய்தால் என்ன? முதன்முதலாக அபிஷேகம் செய்யுமளவுக்கு இந்த சொக்கநாதப் பெருமான் அவ்வளவு சக்தி வாய்ந்தவரா? என்று கேட்ட வருணனிடம், அதிலென்ன சந்தேகம்! என்றான் இந்திரன். அப்படியானால், எனக்கு தீராத வயிற்று வலி இருக்கிறது. தேவலோக வைத்தியர்கள் மருந்து தந்தும் குணமாகவில்லை. இதை இந்த சொக்கநாதர் குணமாக்கி விடுவாரா? எனக்கேட்டான் வருணன். நமது சொக்கநாதர் பிறவி என்ற கொடிய நோயையே குணமாக்கக் கூடியவர். அவருக்கா உனக்கு வந்துள்ள சாதாரண வயிற்று வலியைக் குணமாக்க முடியாது! என இந்திரன் பதிலளித்தான். சரி இந்திரரே! அப்படியானால் அந்தப் பெருமானின் மகிமையை உலகறியச் செய்யும் விதத்தில் நான் ஒரு காரியம் செய்யப் போகிறேன். அவரது திருவிளையாடலைக் காண ஆவலாக உள்ளேன், என்றான் வருணன். அவன் என்ன செய்யப்போகிறான் என்பதைக் காண ஆவலுடன் நின்றான் இந்திரன்.
வருணன், சமுத்திரராஜனை வரவழைத்தான். சமுத்திரராஜா! உடனே கடலை மதுரைக்கு அனுப்பு. பொங்கி வரும் கடல் மதுரையை அழிக்க வேண்டும், என்று உத்தரவிட்டான். அதற்கு கட்டுப்பட்டான் சமுத்திரராஜன். பெரும் பிரளயம் ஏற்பட்டது. கடல் பொங்கி மதுரை நகருக்குள் புகுந்து விட்டது. மாட மாளிகைகள் தகர்ந்தன. மதுரை மக்கள் அலறியடித்து ஓடி என்ன பயன்? பலர் வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர். எங்கும் மரண ஓலம். தப்பிப் பிழைத்த அபிஷேகப்பாண்டியனும், இன்னும் சிலரும் சுந்தரேஸ்வரர் கோயிலை மட்டும் அழிக்காமல் சுற்றி நின்ற வெள்ளத்தைக் கடந்து கோயிலுக்குள் புகுந்தனர். சோமசுந்தரப் பெருமானிடம் தங்களை காப்பாற்றுமாறு விண்ணப்பித்தனர். இரக்கமே வடிவான சொக்கநாதனாகிய சோமசுந்தரர், அவர்கள் முன் தோன்றினார். மேகங்களை வரவழைத்து, மேகங்களே! இந்த கடல் நீரை உறிஞ்சுங்கள், என ஆணையிட்டார். கணநேரத்தில் மதுரையில் வெள்ளம் வந்த சுவடே இல்லாமல் மறைந்து விட்டது. பெருமானின் அருளால் மாண்ட மக்களெல்லாம் உயிர் பெற்றனர். எம்பெருமானின் கருணையை அனைவரும் போற்றினர்.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: 64 திருவிளையாடல்-கடலை வற்றச் செய்த படலம்!
கடலை சேரா வைகை நதி என்பார்கள். அப்படி பட்ட மதுரை மாநகரில் கடல் தண்ணீர் புகுந்ததும், அதை வற்ற செய்ததும் எம்பெருமானின் திருவிளையாடல்தான். பலர் இறந்தனரே அவர்கள் என்ன பாவம் செய்தார்களோ?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|