தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மகளிர் விளையாடல் கலை

View previous topic View next topic Go down

மகளிர் விளையாடல் கலை Empty மகளிர் விளையாடல் கலை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 8:37 pm

பழந்தமிழிலக்கியங்களில் அம்மாணை, பந்து, சாழல், ஈசல் போன்ற விளையாட்டுகளைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம். இவை மகளிர்கே உரிய விளையாட்டுகள். பண்டையத் தமிழர்கள் ஆடவர்க் கென்றும் மகளிர்க்கென்றும், சிறுவர்களுக்கென்றும் முதியோர்களுக்கென்றும் இருபாலருக்கும் உரியதென்றும் பல்வகை விளையாடல்களைப் பகுத்து வைத்திருந்தனர். பெரும்பான்மையான விளையாட்டுகள் பெண்களுக்குரியவனவாகவே காணப்பெறுகின்றன. அவை இயற்கையோடு இயைந்தவனவாயும் அமைந்துள்ளன.

ஆடிப்பாடிக் கொண்டே குறி சொல்லும் வழக்கம் தொன்று தொட்டு தொடர்ந்து வரும் ஒரு கலை. இதனை வெறியாட்டு என்பர். இந்த வெறியாட்டு மகளிரை அணங்குறு மகளிர்(குறிஞ்சி:175).கானவர் வியப்ப... நடுவூர் மன்றத்தடி பெயர்த்தாடி’ (சிலம்பு:வேட்டுவரி) என்பர்.

செம்மூதாயாட்டு என்பது ஒரு வகை விளையாட்டு. செம்மூதாய் என்பது தம்பலப்பூச்சி ஆகும். மழைபெய்து ஓய்ந்த பின் தரையில் ஓடித்திரிவது இது. இன்று இதனைப் பட்டுப்பூச்சி என்று அழைக்கின்றனர். இப்பூச்சிகளின் பின்னால் சென்று அவற்றின் அழகினையும் போக்கினையும் கவனித்து அவற்றைத் தேடிப்பிடித்து குவித்து வைத்து விளையாடும் மகளிர் விளையாட்டு இது.

வண்டு ஓட்டுதல் இன்னொரு விளையாட்டு. வண்டுகள் பின் ஓடி எந்தப் பூவில் அதிகமாய் அவை மொய்க்கின்றன என அறிந்து, அந்தப் பூவில் தேன் மிகுந்திருக்கும் என்பதை அறிவர். அந்த வண்டுகளை விரட்டிவிட்டுப் பூந்தேனைச் சுவைப்பது இவ்விளையாட்டு. தொண்ணூற்றொன்பது வகையான வண்ண மலர்களைத் தேடிக் கொய்து தலைவியும் தோழியரும் அவற்றைச் சூடி ஆடி மகிழும் விளையாட்டைப்பற்றி புலவர் கபிலர் தம் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடுகின்றார். இதனைப் போதாட்டு என்பர்.

‘இந்திரையோ, இவள் சுந்தரியோ,
தெய்வரம்பையோ, மோகினியோ
மனமுந்தியதோ, வழி முந்தியதோ, கரம் முந்தியதோ
எனவே, உயர் சந்திர சுடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே மணிப்
பைந்தொடி நாரி வசந்தடுவாய் யாரி பொற்
பந்து கொண்டாடினனே

(குற்றாலக்குறவஞ்சி)

இவற்றோடு அலவனாட்டு(நீர்க்கரையில் நீண்டினை விரட்டிப் பிடித்தாடும் ஆட்டம்) களி கொய்யு(மாலைப்பொழுதில் மொட்டுகளைக் கொய்து பல வடிவங்களில் கோத்து ஆடுதல்- அத்தியம் போது ஆடும் களிக்கொய்யு’
(அடியார்க்கு நல்லார் உரை)

வருதிரை உதைத்தல்(கடற்கரையில் எழும் அலைகளை எதிர்த்து காலால் உதைத்து விளையாடல்) வண்டலயர்தல் ( மணலைக் குவித்து, பாவை செய்து விளையாடல்)கிலிகிலி (கிளர்ப்பூட்புதல்வரோடு கிலிகிலியாடுதல்- சிறுபாணாற்றுப்படை) இவற்றோடு துணங்கைக் கூத்து( ஆடவர் கைகொடுக்க ஆடுதல்) குரவைக் கூத்து, புனல் ஆடுதல் போன்றவை எல்லாம் தமிழ்ப்பெண்கள் ஆடும் ஆட்டங்களாகும். கோலமிடுதல், கும்மியடித்தல், பூப்பந்தாடல், கோலாட்டம் முதலானவை இன்றும் பெருவழக்கிலுள்ள மகளிர் ஆட்டக் கலைகளாகும்.

நன்றி : உமா பதிப்பகம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum