Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இன்றுமுதல் நான் பேசுவதைவிட அதிகமாக கேட்டுக் கொள்வேன்.
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1 • Share
இன்றுமுதல் நான் பேசுவதைவிட அதிகமாக கேட்டுக் கொள்வேன்.
அனைவருக்கும் பொருத்தமான ஒரு விஷயம் உண்டென்றால் அதுதான் பிறர் தம்மைக் கேட்க வேண்டும் என்றஆசை. மனிதர்களுக்குத் தேவை, தாம் சொல்வதைக் கேட்க ஒருவர், அவர்களுடைய பிரச்சனைகள் கவலைகள் மற்றும் சொல்ல விரும்பும் எல்லா விஷயங்களையும் கேட்க வேண்டும். அதனால் இன்றுமுதல் நீங்கள் கேட்பவராக இருக்க வேண்டும்.
மனிதர்களுக்கு இரண்டு காதுகள் உள்ளன. வாய் ஒன்று மட்டும்தான் உள்ளது ஏன் என்று தெரியுமா? நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள் என்பதற்கு முன் ஒன்றிற்கு இருமுறை கேட்க வேண்டும் என்பதற்குத்தான்.
மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது உண்மையிலேயே ஒரு ஆச்சரியமான மாறுதல் ஏற்படுகிறது நீங்கள் அதைச் செய்யத் தொடங்கும்போதுதான் மனிதர்கள் உங்களிடம் எவ்வளவு நன்றாகப் பழகுகிறார்கள் என்பது தெரிய வரும்.
உங்களை எல்லோரும் எப்படி நடத்த வேண்டும் என நினைக்கிறீர்களோ. அதை போல அவர்களை நடத்துவது போலத்தான் இது. தாங்கள் கேட்கப்பட வேண்டும் என மனிதர்கள் விரும்புகின்றனர். அதை இந்த பயிற்சி மூலமாக நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கலாம்.
இன்றுமுதல் நான் வாதாட மாட்டேன்.
“நான் சொல்றேன் இந்த வழிதான் சரி”
“இல்லவே இல்லை, அப்படி இருக்கவே முடியாது, இப்படித்தான் இருக்கணும்”
இந்த குறிப்பிட்ட உரையாடலில் இரண்டு பேர் தங்கள் காதுகளைப் பொத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிகிறது. “நான்” என்றஅகங்காரத்தை தற்காத்துக் கொள்ளும் இருவர் இங்கு இருக்கிறார்கள். மற்றவர் சொல்வதைக் கேட்கத் தயாராக இல்லாத இருவர் இங்கு பிரச்சனையைவிட யார் சரி என்பது பற்றித் தான் சண்டை என்று புரிகிறது. இதில் அடிப்படை விஷயம் என்னவென்றால் ஒரு நேரத்தில் ஒருவர்தான் சரியாக இருக்க முடியும்.
என்னைப் பொறுத்தவரை எதிரிகளை உண்டாக்கிக் கொள்ள சிறந்த வழி வாக்கு வாதம்தான். வாக்குவாதம் பற்றிய ஒரு உண்மை என்னவென்றால் ஒருவர் மற்றவரை சமாதானப் படுத்தி வாக்குவாதம் முடிவடையும் என்பது மிகவும் அரிதுதான். பெரும்பாலும் இது சண்டையில்தான் முடிகிறது. வருத்தத்தில் முடிகிறது. வெறுப்பில் முடிகிறது. முழுமையான ஒரு வாக்குவாதத்தினால் யாரும் சமாதானம் அடைவதில்லை.
வாக்குவாதம் என்பது இருமுனை கொண்ட வாள் போன்றது. ஒருபுறத்தில் அதை பயன் படுத்துபவர் மீது அது காயத்தை ஏற்படுத்து கிறது. அதனால் ஒருவரிடம் வாதாடும்போது, மற்றவர் பெரும்பாலும் வருத்தமடைகிறார்.
மற்றொருபுறம் வாக்குவாதம் சம்பந்தப் பட்ட நபரையும் காயப்படுத்துகிறது. அதுதான் நீங்கள். இதனால் என்ன கிடைக்கிறது? ஒன்றுமில்லை, அடுத்தவரை சமாதானப்படுத்தி விட்டோம் என்பதுதான். நீங்கள் இதை செய்திருந்தால் அதனால் என்ன பயன்? வாக்குவாதம் செய்யக்கூடாது. தற்காப்பு இல்லாமல் இருப்பது என்று நீங்கள் முதலில் முடிவெடுக்கலம். வாக்குவாதம் செய்யும்போது தேவையில்லாமல் சக்தியை செலவிடுகிறீர்கள். உங்கள் வாழ்க்கையிலேயே நீங்கள் ஏமாற்றத்தை உண்டாக்கிக் கொள்கிறீர்கள். உங்கள் ஆன்மீக பயணத்தின் வேகம் குறைகிறது. உங்கள் எல்லைக்கும் அப்பாற்பட்டு நீங்கள் இன்னும் அதிகமாக எட்ட முடியும் என்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. வாக்குவாதம் எனும் திசை திருப்பும் செய்கை களைத் தவிர்த்திடுங்கள்.
இன்றுமுதல் நான் ஒரு புதிய திறமையைக் கற்றுக் கொள்வேன்.
புதியவற்றைக் கற்பது இளம் பருவத் திற்குப் பின் அது நின்றுபோய்விட்டது. அதற்குப் பின் நீங்களே அறிந்து எதையும் கற்றுக் கொண்டிருக்க மாட்டீர்கள், உங்களுக் குள்ளே இருக்கும் மாணவன் ஆழ்ந்த உறக்கத்தில் சென்றுவிட்டான், உங்களுக்குள் உள்ள மாணவனை எழுப்ப இந்த குறிப்பு உதவும், முதலில் எழும் கேள்வி. ஒருவர் ஏன் கற்றுக் கொள்ள வேண்டும்? முதலாவது, கற்றுக் கொள்வது என்பது வேறொன்றுமில்லை, மன வளர்ச்சிதான் கற்றுக் கொள்வதன் மூலமாகத் தான் மனம் வளர்கிறது, புதிய விஷயங்கள் தோன்றுகின்றன. இதனால் புரிந்து கொள்வதற் கான உங்கள் திறமையும் அதிகரிக்கிறது, அதைத் தவிர கற்றுக் கொள்ளாமல் இருப்பது என்பது அகம்பாவத்திற்கான அறிகுறி. தமக்கு முதலில் கிடைக்கும் வெற்றியினால் பலரும் திருப்தி பட்டுக் கொள்கிறார்கள். இதுதான் வாழ்க்கை என நம்புகிறார்கள். நாம் மிகவும் தேர்ந்தவர் என்ற தவறான எண்ணம் ஏற்படுகிறது. நாம் கற்றுக்கொள்வதற்கும் இது தடையாக இருக்கிறது. கற்றுக்கொள்ளாமல் இருப்பது அறியாமையை உண்டாக்குகிறது. அறியாமையினால் தவறுகள் செய்கிறோம். இதிலிருந்து அச்சம் ஏற்படுகிறது.
வாழ்க்கையே ஒரு கற்றுக் கொள்ளும் பயிற்சிதான். நாம் வளரத்தான் இது வழி வகுக்கிறது, நாம் ஒவ்வொருவரும் தவறுகள் செய்கிறோம். அதிலிருந்து எழுந்து முன்னேறு கிறோம்.
ஒரு புதிய திறமையை வளர்த்துக் கொள்வதை ஆராயுங்கள். ஆம் எல்லா திறன் ளையும் கற்றுக்கொள்வதை ஆராயுங்கள். ஆம் எல்லா திறன்களையும் ஒரே நாளில் கற்றுக் கொள்ளமுடியாது. ஆனால் ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தலாம்.
இன்று முதல் நான் எதையும் மதிப்பிட மாட்டேன்.
“”நேற்று பார்த்த திரைப்படம் மோசமாக இருந்தது”. “”அவனுடன் பேசவே செய்யாதே. எனக்குத் தெரிந்தவரை அவன் யாருடனும் நன்றாகவே பழக மாட்டான்”. “”பெண்களை நம்பாதே – அவர்கள் எல்லோரும் ஒரே போலத் தான்”. நமது தினசரிப் பேச்சை கவனித்தால் நாம் எல்லாவற்றையும் நல்லது கெட்டது மோசமானது என்று எப்போதும் நமது தீர்ப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் நீதிமன்றத்தில ஒரு நீதிபதி போலவும், ஒவ்வொரு நபரையும், நிகழ்வையும் எடைபோட்டு, உங்கள் தீர்ப்பை அளிப்பது போல் தோன்றுகிறது. எதன் அடிப்படையில் நீங்கள் மதிப்பிடுகிறீர்கள்? ஒரு புத்தகத்தை அட்டையை வைத்து எடை போடாதீர்கள், முதல் பார்வையில் தோன்று வதை வைத்துதான் நாம் முடிவெடுக்கிறோம். இது பெரும்பாலும் உண்மையில்லை, ஆனால் ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறது.
மற்றொருபுறம் இது உங்களுக்கும் ஒரு அறிகுறியாக இருக்க வேண்டும். மற்றவர் களுக்கும் எப்போதும் உங்களை எடை போடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் மீது நீங்கள் ஏற்படுத்தும் முதல் எண்ணம்தான் கடைசியாக நிலைத்தும் விடுகிறது என்பதை நினைவில் வைத்திருங்கள். மதிப்பிடும்போது என்னவாகிறது? அந்த நபரைப் பற்றி உங்கள் மனதில் நல்லெண்ணம் ஏற்பட முடியாமல் அதை தடை செய்கிறீர்கள். அவருடன் பேசும்போது பெரும்பாலும் உங்கள் மனதில் அவரைப் பற்றிய எண்ணமும் மனதில் இருந்து கொண்டே இருக்கும். “ஒவ்வொருமுறை மதிப்பிடும்போதும் மனதிற்குள் ஒரு அதிருப்தி ஏற்படுகிறது”
இன்று முதல் நடக்கும் எதையும் நீங்கள் எதையும் மதிப்பிட மாட்டீர்கள், எதையாவது எடைபோடுவது போல் தோன்றியவுடன் உடனடியாக அதை நிறுத்திவிடுங்கள். மனதிற் குள் “நிறுத்து” எனக் கூறிக் கொள்ளுங்கள். மனது உடனடியாக கேட்கும். ஆனால் திரும்பவும் பழைய வழிக்கு சென்று விடும், மனம் ஒரு குழந்தை போல அதை பொறுமையுடன் கையாள வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள், இன்றுமுதல் ஒரு சவாலான பயிற்சி தொடங்குகிறது, அதுதான் எதையும் எடைபோடாமல் இருப்பது.
நன்றி முக நூல்!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: இன்றுமுதல் நான் பேசுவதைவிட அதிகமாக கேட்டுக் கொள்வேன்.
நானும் இதுபோல் இருக்க முயற்சிக்கிறேன்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» இன்றுமுதல் நான் ஆக்கபூர்வ கருத்துக்களை எடுத்துக் கொள்வேன்
» இன்றுமுதல் நான் ஒரு புதிய திறமையை கற்றுக் கொள்வேன்...
» இன்றுமுதல் நான் ஒத்திப் போடும் ஒரு வேலையைச் செய்வேன்...
» நீங்கள் உங்களை கேட்டுக் கொள்ள வேண்டிய 75கேள்விகள்
» நீங்கள் உங்களை கேட்டுக் கொள்ள வேண்டிய 75 கேள்விகள்
» இன்றுமுதல் நான் ஒரு புதிய திறமையை கற்றுக் கொள்வேன்...
» இன்றுமுதல் நான் ஒத்திப் போடும் ஒரு வேலையைச் செய்வேன்...
» நீங்கள் உங்களை கேட்டுக் கொள்ள வேண்டிய 75கேள்விகள்
» நீங்கள் உங்களை கேட்டுக் கொள்ள வேண்டிய 75 கேள்விகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|