தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தானமும் அன்பும்.. ..

View previous topic View next topic Go down

தானமும் அன்பும்.. .. Empty தானமும் அன்பும்.. ..

Post by sawmya Thu Sep 26, 2013 11:55 am

தானமும் அன்பும்.. ..

மனதை நெகிழ வைத்த சில நிகழ்வுகள்தான் முத்துக்களாய் சிதறுகின்றன!

முதலாம் முத்து.

வாழ்க்கை முழுவதும் ஆச்சரியங்கள் நம்மைப் பின்னிப் பிணைந்தே வருகின்றன. சமீபத்தில் படித்து வியந்த செய்தி இது. எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் எனத் தெரியவில்லை

கடலூர் மாவட்டம் நெய்வேலிக்கு மிக அருகிலுள்ள வடலூரில் இருக்கிறது சத்திய தருமசாலை. ‘வாடிய பயிரைக் கண்டு வாடியவள்ளலார் வாடிய வயிற்றையும் கண்டு வாடி 1867-ல் இதைத்தோற்றுவித்தார். அவர் ஏற்றிய அடுப்பு 143 வருடங்களாக அணயாது எரிந்து கொண்டிருக்கின்றது. அன்றாடம் பசித்திருப்பவர்களுக்கு அன்னதானம் செய்விக்கிறது

காலையில் பொங்கல், மதியம் சாம்பார், கூட்டு, பொரியல் ரசத்துடன் சாப்பாடு, இரவு சாதம் என்று மூன்று வேளைகளும் பசியோடு வருபவர்களுக்கு சாப்பாடு போடுகிறார்கள். பசியோடு யார் வந்தாலும், குணம், குற்றம் பாராது, யார் என்று கேளாது, பசித்திருப்பவனின் பசி போக்கு' என்ற வள்ளலாரின் உபதேசப்படி, பசிக்கிற நேரம் மட்டுமல்லாது எந்த நேரத்தில் யார் பசி என்று வந்தாலும் அன்னதானம் செய்து பசியைப்போக்குகிறார்கள் இங்கு! தினந்தோறும் நிறைய பேர் வந்து அரிசி, மற்ற பொருள்கள் என்று தந்து செல்வதாலும் வருடத்தில் ஒவ்வொரு நாள் என்று யாராவது அன்னதானப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாலும் வள்லலார் ஏற்று வைத்த ஜோதி இன்னும் அணையாமல் எரிந்து கொண்டேயிருக்கிறது. தினமும் ஆயிரம் பேருக்கு சமையல் செய்ய விறகும் கிடைப்பது ஆச்சரியம்தான். மாட்டு வண்டி ஒன்று சுற்றியிருக்கும் கிராமங்களுக்குச் செல்கிறது. வண்டியைப் பார்த்ததுமே கிராமத்தார் தங்களிடமுள்ள விறகுகளை வண்டியிலேற்றி அனுப்பி வைக்கிறார்கள். இங்கே காலடி வைத்ததுமே முதலில் எதிர்படுகிற கேள்விசாப்பிடுகிறீர்களா?’ என்பதுதான். தானத்திலே சிறந்தது என்று சொல்லப்படுகின்ற அன்னதானம் இங்கே எத்தனை உன்னதமாக நடைபெறுகிறது!

இரண்டாம் முத்து:

அனுபவப்பட்டவர் ஒருத்தர் எழுதியிருந்தார். அவர் ஒரு முறை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடச் சென்ற போது, பலரும் பலவிதமாக சாப்பாட்டு வகைகளைச் சொல்ல, அதில் பாதிக்கும் மேல் யாருமே தொடாமல் இருந்த சாப்பாட்டு வகைகளை, இவரது தோழி பேரர் உதவியுடன் pack up செய்து, வெளியே வந்ததும் சாலையோரத்தில் அமர்ந்திருந்த ஒரு பிச்சைக்காரரிடம் கொடுத்தாராம். பெற்றுக்கொண்ட பிச்சைக்காரரின் கண்களில் கண்ணீர் மின்னியதாம். மனசுக்கு நெகிழ்வாக இருந்தது படித்தபோது. நாம் செலவு செய்ததும் வீணாகாது, மற்றவர் பசி போக்க இதுவும் ஒரு வழி!

மூன்றாம் முத்து:

மனம் மிகவும் கலங்கிப்போன சமீபத்திய செய்தி. கணவன் வெளி நாட்டில் இருக்க, மனைவி[தமிழ் நாடு] வேறு ஒருவருடன் முறையற்ற உறவு கொண்டிருக்க, புரிந்தும் புரியாத அவளது ஆறு வயதுக் குழந்தை பக்கத்து வீட்டில் அதைப்பற்றிப்பேசியதை அறிந்ததும் கோபம் கொண்ட அந்த தாய் [ தாய் என்று எழுத அருவருப்பாக உள்ளது] அடுப்பூதும் ஊதுகுழலால் சூடு வைத்தும் ஆத்திரம் அடங்காது அயர்ன் பாக்ஸை சூடு பண்ணி முதுகில் இழுத்திருக்கிறாள். குற்றுயிராகக் கிடந்த குழந்தையை மீட்டு, அந்தப் பெண்ணையும் அவள் காதலனையும் காவல்துறையினர் சிறையில் அடைத்திருக்கிறார்கள்

இதைப்படித்தபோது மனம் துடித்து விட்டது. மலரை விட மெல்லியது குழந்தையின் மனமும் உடலும். எப்படித் துடித்திருக்கும் அது! தூக்கு தண்டனை வேண்டுமா, வேண்டாமா என்று வாதங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த மாதிரி தாய்மையின் உன்னதமான அர்த்ததைக் கெடுக்கும், பிஞ்சுக்குழந்தையை சித்திரவதை செய்யும் ஒருத்தருக்கு உடனேயே அந்த மாதிரி தண்டனைதான் தரவேண்டும்.

நான்காம் முத்து:

நான் ரசித்தஓஷோவின் ஒரு குட்டிக்கதை:

ஒரு துறவி தன் சீடர்களிடம்கோபமாக நாம் இருக்கும்போது நாம் ஏன் கத்துகிறோம்?’ என்று கேட்டாரம்.

அவரது சீடர்கள்அமைதியை இழந்து விடுவதால்தான் கத்துகிறோம்என்றார்களாம்.

அந்தத் துறவி, ‘கேள்வி அதல்ல. கோபமாக இருக்கும்போது நாம் கோபம் கொள்பவர் அருகிலேயே இருந்தாலும் ஏன் கத்துகிறோம்? மென்மையான குரலில் பேசினால் அவருக்குக் கேட்காதா?’ என்று கேட்டாராம். சீடர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கவே துறவி மீண்டும் தொடர்ந்தாராம்.

ஒருவர் மீது மற்றவர் கோபப்படும்போது இருவரது இதயங்களிலும் அகங்காரம் தலை தூக்குவதால் அவர்கள் மனதளவில் தொலைதூரம் விலகிப்போய் விடுகிறார்கள். அதனால்தான் கத்திப் பேசுகிறார்கள். ஆனால் ஒருத்தரை மற்றவர் நேசிக்கும்போது அங்கே அகந்தை அற்றுப்போய் இதயங்கள் நெருங்கிப்போகின்றன. அதனால் மென்மையாகவே அவர்களால் பேச முடிகிறது. தன்னலமற்ற அன்பில் அகந்தை முழுவதுமாய்க் கரைந்து காணாமல் போகிறது

எத்தனை சத்தியமான வார்த்தை!


-நன்றி! கலா
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum