தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அறிந்தும் அறியாத பழமொழிகள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by முழுமுதலோன் Tue Oct 01, 2013 3:11 pm

First topic message reminder :

தமிழ்ப் பழமொழிகள் - அ
[*]அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
[*]அகல உழுகிறதை விட ஆழ உழு.
[*]அகல் வட்டம் பகல் மழை.
[*]அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
[*]அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
[*]அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
[*]அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
[*]அடக்கமே பெண்ணுக்கு அழகு.
[*]அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
[*]அடாது செய்தவன் படாது படுவான்.
[*]அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
[*]அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
[*]அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
[*]அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
[*]அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
[*]அந்தி மழை அழுதாலும் விடாது.
[*]அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
[*]அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
[*]அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
[*]அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
[*]அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
[*]அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
[*]அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
[*]அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
[*]அழுத பிள்ளை பால் குடிக்கும்.
[*]அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
[*]அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
[*]அறச் செட்டு முழு நட்டம் .
[*]அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
[*]அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
[*]அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
[*]அறமுறுக்கினால் அற்றும் போகும்.
[*]அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
[*]அறிய அறியக் கெடுவார் உண்டா?
[*]அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
[*]அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
[*]அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
[*]அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
[*]அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
[*]அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.
[*]அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
[*]அற்ப அறிவு அல்லற் கிடம்.
[*]அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
[*]அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
[*]அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
[*]அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
[*]அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by முழுமுதலோன் Fri Oct 11, 2013 12:07 pm

தமிழ்ப் பழமொழிகள் - கோ
[*]கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
[*]கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
[*]கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
[*]கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
[*]கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
[*]கோபம் சண்டாளம்.
[*]கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
[*]கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
[*]கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
[*]கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
[*]கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
[*]கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by முழுமுதலோன் Fri Oct 11, 2013 12:08 pm

தமிழ்ப் பழமொழிகள் - ச, சா
[*]சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
[*]சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
[*]சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
[*]சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
[*]சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா
[*]சர்க்கரை என்றால் தித்திக்குமா?
[*]சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.
[*]சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
[*]சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
[*]சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
[*]சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
[*]சாண் ஏற முழம் சறுக்கிறது.
[*]சாது மிரண்டால் காடு கொள்ளாது.
[*]சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.
[*]சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
[*]சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

[*]http://muthu.org/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by முழுமுதலோன் Sun Oct 13, 2013 10:40 am

தமிழ்ப் பழமொழிகள் - சு, சூ
[*]சுக துக்கம் சுழல் சக்கரம்.
[*]சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
[*]சுட்ட சட்டி அறியுமா சுவை.
[*]சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
[*]சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.
[*]சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
[*]சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
[*]சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே
[*]சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
[*]சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
[*]சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
[*]சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
[*]சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.
[*]சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by முழுமுதலோன் Sun Oct 13, 2013 10:41 am

தமிழ்ப் பழமொழிகள் - செ, சே, சை
[*]செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
[*]செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
[*]செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?
[*]செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
[*]செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
[*]செயவன திருந்தச் செய்.
[*]செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
[*]செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
[*]செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
[*]சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
[*]சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
[*]சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
[*]சேற்றிலே செந்தாமரை போல.
[*]சைகை அறியாதவன் சற்றும் அறியான்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by முழுமுதலோன் Sun Oct 13, 2013 10:42 am

தமிழ்ப் பழமொழிகள் - சொ, சோ
[*]சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
[*]சொல் அம்போ வில் அம்போ?
[*]சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
[*]சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
[*]சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
[*]சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
[*]சொல்வல்லவனை வெல்லல் அரிது.
[*]சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
[*]சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
[*]சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
[*]சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
[*]சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..
[*]சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.

[*]http://muthu.org/

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by முழுமுதலோன் Tue Oct 15, 2013 1:54 pm

தமிழ்ப் பழமொழிகள் - த
[*]தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
[*]தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
[*]தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
[*]தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
[*]தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
[*]தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
[*]தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
[*]தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
[*]தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
[*]தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
[*]தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
[*]தருமம் தலைகாக்கும்.
[*]தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
[*]தலை இருக்க வால் ஆடலாமா ?
[*]தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
[*]தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
[*]தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
[*]தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
[*]தவளை தன் வாயாற் கெடும்.
[*]தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by முழுமுதலோன் Tue Oct 15, 2013 1:55 pm

தமிழ்ப் பழமொழிகள் - ந
[*]நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.
[*]நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.
[*]நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
[*]நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !
[*]நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.
[*]நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்
[*]நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.
[*]நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
[*]நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
[*]நயத்திலாகிறது பயத்திலாகாது.
[*]நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
[*]நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
[*]நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.
[*]நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்.
[*]நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.
[*]நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?
[*]நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.
[*]நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
[*]நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by sawmya Tue Oct 15, 2013 4:23 pm

அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
முழித்தல் ???
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by முழுமுதலோன் Fri Oct 25, 2013 4:39 pm

தமிழ்ப் பழமொழிகள் - நா
[*]நா அசைய நாடு அசையும்.
[*]நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
[*]நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ?
[*]நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.
[*]நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.
[*]நாய் இருக்கிற சண்டை உண்டு.
[*]நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை.
[*]நாய் விற்ற காசு குரைக்குமா?
[*]நாலாறு கூடினால் பாலாறு.
[*]நாள் செய்வது நல்லார் செய்யார்.
[*]நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.
[*]நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by முழுமுதலோன் Fri Oct 25, 2013 4:41 pm

தமிழ்ப் பழமொழிகள் - நி, நீ
[*]நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
[*]நித்திய கண்டம் பூரண ஆயிசு.
[*]நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?
[*]நித்திரை சுகம் அறியாது.
[*]நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
[*]நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.
[*]நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.
[*]நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.
[*]நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.
[*]நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
[*]நீர் மேல் எழுத்து போல்.
[*]நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
[*]நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by முழுமுதலோன் Fri Oct 25, 2013 4:42 pm

தமிழ்ப் பழமொழிகள் - நு, நூ, நெ, நே, நை, நொ, நோ
[*]நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
[*]நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.
[*]நூல் கற்றவனே மேலவன்.
[*]நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
[*]நூற்றைக் கொடுத்தது குறுணி.
[*]நெய் முந்தியோ திரி முந்தியோ.
[*]நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
[*]நெருப்பு என்றால் வாய்வெந்து போமா?
[*]நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?
[*]நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.
[*]நேற்று உள்ளார் இன்று இல்லை.
[*]நைடதம் புலவர்க்கு ஒளடதம்.
[*]நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
[*]நொறுங்கத் தின்றால் நூறு வயது.
[*]நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.
[*]நோய் கொண்டார் பேய் கொண்டார்.
[*]நோய்க்கு இடம் கொடேல்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by sawmya Fri Oct 25, 2013 7:15 pm

சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by முரளிராஜா Sat Oct 26, 2013 11:10 am

கைதட்டல் 
கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by முழுமுதலோன் Tue Oct 29, 2013 2:58 pm

தமிழ்ப் பழமொழிகள் - ப
[*]பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
[*]பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.
[*]பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
[*]பக்கச் சொல் பதினாயிரம்.
[*]பசியுள்ளவன் ருசி அறியான்.
[*]பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்
[*]பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.
[*]பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
[*]பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
[*]படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
[*]படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
[*]படையிருந்தால் அரணில்லை.
[*]படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
[*]பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
[*]பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
[*]பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
[*]பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
[*]பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
[*]பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
[*]பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.
[*]பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
[*]பணம் உண்டானால் மணம் உண்டு.
[*]பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
[*]பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
[*]பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
[*]பதறாத காரியம் சிதறாது.
[*]பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
[*]பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
[*]பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
[*]பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
[*]பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
[*]பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
[*]பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
[*]பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
[*]பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
[*]பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.
[*]பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
[*]பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
[*]பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
[*]பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
[*]பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
[*]பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
[*]பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
[*]பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
[*]பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by முழுமுதலோன் Tue Oct 29, 2013 2:59 pm

தமிழ்ப் பழமொழிகள் - பு, பூ
[*]புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
[*]புத்திமான் பலவான்.
[*]புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
[*]புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
[*]பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
[*]பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
[*]பூவிற்றகாசு மணக்குமா?
[*]பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by முழுமுதலோன் Tue Oct 29, 2013 3:00 pm

தமிழ்ப் பழமொழிகள் - பெ, பே
[*]பெண் என்றால் பேயும் இரங்கும்.
[*]பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
[*]பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
[*]பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
[*]பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
[*]பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
[*]பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
[*]பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
[*]பேசப் பேச மாசு அறும்.
[*]பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
[*]பேராசை பெருநட்டம்.
[*]பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்

[*]http://muthu.org
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by sawmya Tue Oct 29, 2013 5:28 pm

பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by ரானுஜா Tue Oct 29, 2013 5:52 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by முழுமுதலோன் Sun Nov 03, 2013 4:14 pm

தமிழ்ப் பழமொழிகள் - பொ, போ
[*]பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
[*]பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
[*]பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
[*]பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.
[*]பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
[*]பொறுமை கடலினும் பெரிது.
[*]பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
[*]பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
[*]போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
[*]போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
[*]போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by முழுமுதலோன் Sun Nov 03, 2013 4:15 pm

தமிழ்ப் பழமொழிகள் - ம
[*]மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கனும்.
[*]மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
[*]மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
[*]மண் குதிர்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
[*]மண்டையுள்ள வரை சளி போகாது.
[*]மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
[*]மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
[*]மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
[*]மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.
[*]மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
[*]மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
[*]மருந்தே யாயினும் விருந்தோடு உண்.
[*]மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.
[*]மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
[*]மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
[*]மவுனம் கலக நாசம்
[*]மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.
[*]மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
[*]மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.
[*]மனமுரண்டிற்கு மருந்தில்லை.
[*]மனம் உண்டானால் இடம் உண்டு.
[*]மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
[*]மனம் போல வாழ்வு.
[*]மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி.
[*]மண்னுயிரை தன்னுயிர்போல் நினை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by முழுமுதலோன் Sun Nov 03, 2013 4:16 pm

தமிழ்ப் பழமொழிகள் - மா
[*]மாடம் இடிந்தால் கூடம்.
[*]மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
[*]மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?
[*]மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.
[*]மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
[*]மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
[*]மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
[*]மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.
[*]மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
[*]மாரடித்த கூலி மடி மேலே.
[*]மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
[*]மாரி யல்லது காரியம் இல்லை.
[*]மாவுக்குத் தக்க பணியாரம்.
[*]மாற்றானுக்கு இடங் கொடேல்.
[*]மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
[*]மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.

[*]http://muthu.org/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by முழுமுதலோன் Wed Nov 06, 2013 9:52 am

தமிழ்ப் பழமொழிகள் - மி, மீ, மு, மூ
[*]மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
[*]மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
[*]மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
[*]மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
[*]மீ தூண் விரும்பேல்.
[*]முகத்துக்கு முகம் கண்ணாடி
[*]முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
[*]முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
[*]முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா
[*]முதல் கோணல் முற்றுங் கோணல்
[*]முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.
[*]முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
[*]முருங்கை பருத்தால் தூணாகுமா?
[*]முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.
[*]முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
[*]முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
[*]முன் ஏர் போன வழிப் பின் ஏர்
[*]முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
[*]முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
[*]முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
[*]முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்
[*]முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு
[*]மூட கூட்டுறவு முழுதும் அபாயம்.
[*]மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by முழுமுதலோன் Wed Nov 06, 2013 9:52 am

தமிழ்ப் பழமொழிகள் - மெ, மே, மொ, மோ,மெள
[*]மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
[*]மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.
[*]மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்
[*]மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.
[*]மொழி தப்பினவன் வழி தப்பினவன்
[*]மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.
[*]மெளனம் மலையைச் சாதிக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by முழுமுதலோன் Wed Nov 06, 2013 9:53 am

தமிழ்ப் பழமொழிகள் - வ, வா, வி
[*]வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
[*]வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
[*]வடக்கே கருத்தால் மழை வரும்.
[*]வட்டி ஆசை முதலுக்கு கேடு.
[*]வணங்கின முள் பிழைக்கும்.
[*]வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
[*]வருந்தினால் வாராதது இல்லை.
[*]வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
[*]வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
[*]வளவனாயினும் அளவறிந் தளித்துண்
[*]வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
[*]வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்
[*]வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
[*]வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
[*]வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
[*]வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
[*]வாழ்வும் தாழ்வும் சில காலம்.
[*]விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
[*]விதி எப்படியோ மதி அப்படி.
[*]வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
[*]விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
[*]விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
[*]வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
[*]விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
[*]விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
[*]விளையும் பயிர் முளையிலே தெரியும்.
[*]வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்.

[*]http://muthu.org
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிந்தும் அறியாத பழமொழிகள்  - Page 2 Empty Re: அறிந்தும் அறியாத பழமொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum