தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


64 திருவிளையாடல்-வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்!

View previous topic View next topic Go down

64 திருவிளையாடல்-வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்! Empty 64 திருவிளையாடல்-வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்!

Post by முழுமுதலோன் Fri Oct 04, 2013 8:05 am

வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்!

64 திருவிளையாடல்-வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்! TN_151846000000

வரகுணபாண்டியன் ஒருமுறை வேட்டைக்கு கிளம்பினான். மிருகங்களை வேட்டையாடி விட்டு, காட்டு வழியே குதிரைகளில் தனது படைகளுடன் வேகமாக வந்து கொண்டிருந்தான். அப்போது இருள் சூழ்ந்துவிட்டது. வரும் வழியில் அந்தணர் ஒருவர் படுத்திருந்தார். அதை வரகுணபாண்டியன் கவனிக்கவில்லை. அவனது குதிரை அவர் மேல் ஏறி மிதித்தபடியே ஓட, அந்தணர் அலறியபடியே இறந்துபோனார். குதிரைகளில் குளம்பொலி சப்தத்தில் யாருமே இதைக் கவனிக்கவில்லை. ஆனால், அந்தக் காட்டில் யாகம் முதலானவற்றுக்காக சுள்ளி பொறுக்க வந்த அந்தணர்கள் சிலர் இதைக் கவனித்து விட்டனர். அவர்கள் அந்தணரின் உடலை எடுத்து வந்து, குதிரை மிதித்ததால், அவர் இறந்து போன விஷயத்தை மன்னனிடம் தெரிவித்தனர். வரகுணபாண்டியன் மிகுந்த துக்கமடைந்தான். அந்தணரைக் கொன்ற பாவம் பொல்லாததாயிற்றே,என்று கூறிய அவன், அவரது குடும்பத்திற்கு வாழும் வரை காலம் தேவையான பொன்னும் பொருளும் கொடுத்தான். தான தர்மங்கள் பல செய்தான். ஆனாலும், அவனை பிரம்மஹத்தி (கொலை செய்தவர்களை பிடிக்கும் தோஷம்) பற்றிக் கொண்டது. இதன்பிறகு மன்னன் பட்ட கஷ்டங்களுக்கு அளவே இல்லை. இதுகுறித்து பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டான். கொலைப்பழி தோஷம் தீர வேண்டுமானால், தொடர்ந்து பத்துநாட்கள் சுந்தரேஸ்வரரின் ஆலயத்திற்கு சென்று, 1008 முறை சுற்றி வழிபட வேண்டும், என அவர்கள் தெரிவித்தனர். மன்னனும், உடனடியாக அந்த வழிபாட்டை ஆரம்பித்தான். பத்தாம் நாள் முடிவில் அசரீரி ஒலித்தது.

வரகுணா! உன் வழிபாட்டை ஏற்றேன். நீ ஆலய வலம் வரும்போது, எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். உன் பிரம்மஹத்தி விலக திருவிளையாடல் புரியப் போகிறேன். உன்னை எதிர்த்து காவிரிச்சோழன் போருக்கு வருவான். அவனை நீ எதிர்த்து நில். அவன் புறமுதுகிட்டு ஓடும் போது, திருவிடைமருதூர் என்னும் திருத்தலத்தை அடைவாய். அங்கு வீற்றிருக்கும் என்னை வழிபடு. உன் பிரம்மஹத்தி விலகும், என்றது. எம்பெருமானே அருளிய இந்த வார்த்தைகளால் மகிழ்ச்சியடைந்த பாண்டியமன்னன், சோழனின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தான். படைகளை முன்கூட்டியே தயார் செய்து வைத்திருந்த பாண்டியன், உற்சாகத்துடன் அவனை எதிர்த்தான். சோழர் படை இந்த தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் பின்நோக்கி ஓடினர். சோழனை விரட்டியடித்த பாண்டியன் திருவிடைமருதூரை வந்தடைந்தான். அங்குள்ள கோபுரத்தைக் கண்டதும் தன்னிலை மறந்து சுவாமியை வணங்கினான். இதற்குள் சோழன் தப்பித்தால் போதுமென ஓடி விட்டான். வரகுணபாண்டியன் கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே சென்றதும், அவனைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி அகன்று தனியாக நின்றது. சோழன் வெளியே வரும்போது பிடித்துக் கொள்ளலாம் என அது நினைத்தது. ஆனால், அசரீரி மீண்டும் தோன்றி, பாண்டியா! நீ மேற்கு வாசல் வழியே வெளியேறி விடு, என்றது. பாண்டியனும், அதன் வழியாக வெளியேறி மதுரைக்கு வந்துவிட்டான். (இப்போதும், அந்த பிரம்மஹத்தி கோயில் வாசலில் நிற்பதாக நம்பிக்கையுண்டு) மேற்குவாசலில் கோபுரம் ஒன்றைக் கட்ட ஏற்பாடு செய்தான். ஒருமுறை சிவபெருமானிடம், தனக்கு சிவலோகக் காட்சியை காட்ட வேண்டும் என பிரார்த்தித்தான். சிவபெருமானும் நந்திதேவர் மூலமாக அரிய அந்தக் காட்சியை காட்டியதுடன், தானும், பார்வதியும் விநாயகர், முருகன் முதலான குழந்தைகளுடன் இருக்கும் அரிய தரிசனத்தைக் கொடுத்தார்.

தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

64 திருவிளையாடல்-வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்! Empty Re: 64 திருவிளையாடல்-வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்!

Post by ஸ்ரீராம் Sun Oct 06, 2013 5:39 pm

திருவிளையாடல் கதைகள் அனைத்தும் அருமை
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

64 திருவிளையாடல்-வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்! Empty Re: 64 திருவிளையாடல்-வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்!

Post by மகா பிரபு Mon Oct 07, 2013 9:57 am

அருமை அண்ணா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

64 திருவிளையாடல்-வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்! Empty Re: 64 திருவிளையாடல்-வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum