Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆர்க்கிமிடீஸ் (கி.மு.287-212)
Page 1 of 1 • Share
ஆர்க்கிமிடீஸ் (கி.மு.287-212)
ஒரு பொருளானது தண்ணீரில் மூழ்கினால் அது தன் எடைக்குச் சமமான நீரை வெளியேற்றுகிறது என்ற அரிய உண்மையைக் கண்டறிந்து உலகிற்குக் கூறியவர் ஆர்க்கிமிடீஸ் என்ற அறிவியல் அறிஞர்.
இந்த அறிவியல் உண்மை அவர் பெயராலேயே "ஆர்க்கிமிடீஸ் கோட்பாடு' என்று அழைக்கப்படுகிறது. கணிதம், பெüதிகம், வானவியல் போன்ற பல துறைகளில் இவர் மேதையாக விளங்கினார். சிசிலித் தீவில் உள்ள சைரக்யூஸ் என்னும் இடத்தில் கி.மு.287-இல் பிறந்தார்.
நெம்புகோல் மற்றும் புவிஈர்ப்பு உருளை ஆகியவற்றைக் கண்டறிந்தவரும் இவரே. "இவ்வுலகை விட்டு வெளியே நிற்க எனக்கு ஓர் இடம் கிடைக்குமானால், பூமிப் பந்தையே நெம்புகோல் கொண்டு என்னால் புரட்டி விட முடியும்! என்று கூறி நெம்புகோல்களின் தத்துவத்தை விளக்கினார்.
புவி ஈர்ப்பு விசையின் பயன்பாட்டின் அடிப்படையில் "தளங்களின் சமநிலை' என்ற நூலை எழுதினார். திரவ நிலையியல் தத்துவங்களை "மிதக்கும் பொருள்கள்' என்ற நூலின் மூலம் விளக்கினார். கணித ஜியோமிதியில் இவர் கண்டறிந்த உண்மைகள் அளவில்லாதவை.
அன்றாட வாழ்வை வசதியாக்கப் பல எளிய இயந்திரங்களை இவர் உருவாக்கினார். சாய்தளத்தின் அடிப்படையில் திருகுகள் அமைகின்றன என்ற தத்துவத்தின் அடிப்படையில் கீழே தேங்கியுள்ள நீரை மேலேற்ற ஒருவிதத் திருகு போன்ற கருவியையும் கப்பியையும் வடிவமைத்து நீரை மேலே எற்றிக் காட்டினார்.
சைரக்யூஸ் நாட்டு மன்னர் ஹீரானுக்கு, அவருடைய கிரீடத்தில் தங்கத்துடன் வெள்ளியை அரண்மனைப் பொற்கொல்லர் கலந்திருப்பாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அந்த கிரீடத்தை உருக்கிப் பரிசோதிக்கவும் மனமில்லாதவராக இருந்தார்.
அரசர், ஆர்க்கிமிடீஸிடம் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
குளியல் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்த ஆர்க்கிமிடீஸ் "யுரேகா... யுரேகா...' என்று கத்தியபடியே அரண்மனைக்கு ஓடிச்சென்று தாம் கண்டறிந்த உண்மையை விளக்கினார். அதுவே "ஆர்க்கிமிடீஸ் கோட்பாடு' ஆகும். இக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே கப்பல்கள் உருவாக்கப்படுகின்றன.
இவருக்கு எழுபது வயதானபோது ரோமாபுரிக்கும் சிசிலிக்கும் போர் மூண்டது. இரும்பினால் செய்யப்பட்ட பிரமாண்டமான உருளைக் குண்டுகளை, மிகப் பெரிய கவண் பொறியில் வைத்து அடித்து ரோமானியக் கப்பல்களின் மீது வீசி, அவற்றை கடலில் மூழ்கடித்தார்.
மிகப் பெரிய லென்சுகளை உருவாக்கி, அவற்றின் மூலம் சூரிய ஒளியைக் குவித்து, அந்த ஒளிக்கற்றைகளை எதிரி நாட்டுப் பாய்மரக் கப்பல்களின் மீது விழச் செய்தார். இதனால் அந்தப் பாய்மரங்கள் தீப்பிடித்து சேதமடைந்தனவாம்.
ஆனால் இதற்கெல்லாம் ரோமானியர் சளைக்கவில்லை. இறுதியாக சிசிலியைக் கைப்பற்றினர். அவர்கள் முதலில் கைது செய்ய விரும்பியது ஆர்க்கிமிடீûஸ மட்டுமே!
ஆர்க்கிமிடீஸ் கணித ஆராய்ச்சியில் மூழ்கிவிட்டால் உலகையே மறந்துவிடுவார்.ரோமானியர்கள் சிசிலியைக் கைப்பற்றிய அன்றும் மணலில் ஏதோ கணக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தார். அவரைக் கண்ட ரோமானிய வீரன் ஒருவன் அவரை வெட்டி வீழ்த்தினான்.
இறக்கும் தறுவாயிலும், "இன்னும் சில மணி நேரம் தாமதமாக வந்திருந்தால் ஓர் அரிய கணித உண்மை உலகுக்குக் கிடைத்திருக்கும்! உங்களால் என் உடலை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்... என் அறிவை அல்ல' என்று கூறியபடியே உயிர்நீத்தார் அந்த மாமேதை!
-ந.லெட்சுமி, கடுவெளி.
இந்த அறிவியல் உண்மை அவர் பெயராலேயே "ஆர்க்கிமிடீஸ் கோட்பாடு' என்று அழைக்கப்படுகிறது. கணிதம், பெüதிகம், வானவியல் போன்ற பல துறைகளில் இவர் மேதையாக விளங்கினார். சிசிலித் தீவில் உள்ள சைரக்யூஸ் என்னும் இடத்தில் கி.மு.287-இல் பிறந்தார்.
நெம்புகோல் மற்றும் புவிஈர்ப்பு உருளை ஆகியவற்றைக் கண்டறிந்தவரும் இவரே. "இவ்வுலகை விட்டு வெளியே நிற்க எனக்கு ஓர் இடம் கிடைக்குமானால், பூமிப் பந்தையே நெம்புகோல் கொண்டு என்னால் புரட்டி விட முடியும்! என்று கூறி நெம்புகோல்களின் தத்துவத்தை விளக்கினார்.
புவி ஈர்ப்பு விசையின் பயன்பாட்டின் அடிப்படையில் "தளங்களின் சமநிலை' என்ற நூலை எழுதினார். திரவ நிலையியல் தத்துவங்களை "மிதக்கும் பொருள்கள்' என்ற நூலின் மூலம் விளக்கினார். கணித ஜியோமிதியில் இவர் கண்டறிந்த உண்மைகள் அளவில்லாதவை.
அன்றாட வாழ்வை வசதியாக்கப் பல எளிய இயந்திரங்களை இவர் உருவாக்கினார். சாய்தளத்தின் அடிப்படையில் திருகுகள் அமைகின்றன என்ற தத்துவத்தின் அடிப்படையில் கீழே தேங்கியுள்ள நீரை மேலேற்ற ஒருவிதத் திருகு போன்ற கருவியையும் கப்பியையும் வடிவமைத்து நீரை மேலே எற்றிக் காட்டினார்.
சைரக்யூஸ் நாட்டு மன்னர் ஹீரானுக்கு, அவருடைய கிரீடத்தில் தங்கத்துடன் வெள்ளியை அரண்மனைப் பொற்கொல்லர் கலந்திருப்பாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அந்த கிரீடத்தை உருக்கிப் பரிசோதிக்கவும் மனமில்லாதவராக இருந்தார்.
அரசர், ஆர்க்கிமிடீஸிடம் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
குளியல் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்த ஆர்க்கிமிடீஸ் "யுரேகா... யுரேகா...' என்று கத்தியபடியே அரண்மனைக்கு ஓடிச்சென்று தாம் கண்டறிந்த உண்மையை விளக்கினார். அதுவே "ஆர்க்கிமிடீஸ் கோட்பாடு' ஆகும். இக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே கப்பல்கள் உருவாக்கப்படுகின்றன.
இவருக்கு எழுபது வயதானபோது ரோமாபுரிக்கும் சிசிலிக்கும் போர் மூண்டது. இரும்பினால் செய்யப்பட்ட பிரமாண்டமான உருளைக் குண்டுகளை, மிகப் பெரிய கவண் பொறியில் வைத்து அடித்து ரோமானியக் கப்பல்களின் மீது வீசி, அவற்றை கடலில் மூழ்கடித்தார்.
மிகப் பெரிய லென்சுகளை உருவாக்கி, அவற்றின் மூலம் சூரிய ஒளியைக் குவித்து, அந்த ஒளிக்கற்றைகளை எதிரி நாட்டுப் பாய்மரக் கப்பல்களின் மீது விழச் செய்தார். இதனால் அந்தப் பாய்மரங்கள் தீப்பிடித்து சேதமடைந்தனவாம்.
ஆனால் இதற்கெல்லாம் ரோமானியர் சளைக்கவில்லை. இறுதியாக சிசிலியைக் கைப்பற்றினர். அவர்கள் முதலில் கைது செய்ய விரும்பியது ஆர்க்கிமிடீûஸ மட்டுமே!
ஆர்க்கிமிடீஸ் கணித ஆராய்ச்சியில் மூழ்கிவிட்டால் உலகையே மறந்துவிடுவார்.ரோமானியர்கள் சிசிலியைக் கைப்பற்றிய அன்றும் மணலில் ஏதோ கணக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தார். அவரைக் கண்ட ரோமானிய வீரன் ஒருவன் அவரை வெட்டி வீழ்த்தினான்.
இறக்கும் தறுவாயிலும், "இன்னும் சில மணி நேரம் தாமதமாக வந்திருந்தால் ஓர் அரிய கணித உண்மை உலகுக்குக் கிடைத்திருக்கும்! உங்களால் என் உடலை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்... என் அறிவை அல்ல' என்று கூறியபடியே உயிர்நீத்தார் அந்த மாமேதை!
-ந.லெட்சுமி, கடுவெளி.
Re: ஆர்க்கிமிடீஸ் (கி.மு.287-212)
தகவலுக்கு நன்றி!"இன்னும் சில மணி நேரம் தாமதமாக வந்திருந்தால் ஓர் அரிய கணித உண்மை உலகுக்குக் கிடைத்திருக்கும்! உங்களால் என் உடலை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்... என் அறிவை அல்ல' என்று கூறியபடியே உயிர்நீத்தார் அந்த மாமேதை!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: ஆர்க்கிமிடீஸ் (கி.மு.287-212)
நல்லதொரு பகிர்வு தம்பி. நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஆர்க்கிமிடீஸ் (கி.மு.287-212)
அறிய வரலாற்று நிகழ்வுகளை அறிய தந்தமைக்கு நன்றி பிரபு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|