தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாம் அனைவரும் (மாணவர்கள்) கற்க வேண்டிய 10 பாடங்கள்

View previous topic View next topic Go down

நாம் அனைவரும் (மாணவர்கள்) கற்க வேண்டிய 10 பாடங்கள் Empty நாம் அனைவரும் (மாணவர்கள்) கற்க வேண்டிய 10 பாடங்கள்

Post by முழுமுதலோன் Fri Oct 11, 2013 10:06 am

நமது நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் கொடி கட்டிப்பறக்கும் முக்கிய நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஜீம் பிரேம்ஜி, ஒரு விழாவில் மாணவர்கள் கற்க வேண்டிய பத்துப் பாடங்களை விளக்கினார். அவை…
 1. பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள்
 உங்களை நீங்களே நம்ப வேண்டும். அதேபோல மிகப்பெரிய சவாலைச் சந்திக்கும் போது, நீங்கள் அதைவிட்டு ஓடிவிட நினைக்கலாம். அல்லது பிரச்சினையை மற்றவர்களிடம் தள்ளிவிட நினைக்கலாம். அல்லது அதில் உங்களது தலையை நுழைக்கலாம். அப்படி இல்லாமல், உங்களது பணிகளை நீங்களே தீர்மானியுங்கள்.
 2. மகிழ்ச்சியைச் சம்பாதியுங்கள்
 நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்படும்போது, நினைவில் கொள்ளத்தக்க சாதனைகளை விளக்குகிறார்கள். அதேசமயம் அவர்கள் சந்தித்த கடினங்களும் கூட அவர்களது மகிழ்ச்சியின் ஒருங்கிணைந்த பகுதி தான். பாராட்டை சம்பாதிப்பதில் இருப்பதைப் போல வேறு பெரிய திருப்தி இல்லை என்பதைக் கண்டறிந்தேன். கஷ்டப்பட்டு போராடி சம்பாதித்தால் தான் அதன் மதிப்பு நமக்குத் தெரியும்.
 3. தோல்வியே வெற்றிக்கு வழி
 ஒவ்வொரு முறையும் பாராட்டே கிடைத்துக் கொண்டிருக்காது. வாழ்க்கையில் பல சவால்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். சில வெற்றிகளைப் பெறலாம். சில தோல்விகளைப் பெறலாம். வெற்றியால் மகிழலாம். ஆனால், அதைத் தலையில் ஏற்றிக் கொள்ளக்கூடாது. அவ்வாறு, தலையில் ஏற்றிக் கொள்ளும் கணத்திலிருந்தே நீங்கள் தோல்விப் பாதையில் பயணம் செய்யத் தொடங்கி விடுவீர்கள். தோல்வியை எதிர்கொள்ள நேர்ந்தால் கவலைப்படாதீர்கள். வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுங்கள். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள். இழப்பைச் சந்திக்கும் போது இழப்பிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதை இழந்துவிடாதீர்கள்.
 4. வெற்றியைப் போல தோல்வி
தன்னம்பிக்கைக்கும் கர்வத்துக்கும் இடையே மெல்லிய கோடுதான் இருக்கிறது. தன்னம்பிக்கை உள்ளவர்கள் எப்போதும் கற்றுக் கொள்ள திறந்த மனதுடன் இருப்பார்கள். எந்த நிலையிலும் கற்றுக் கொள்ள விரும்புவதே தலைமைப் பண்புக்கு முக்கியமானது. மற்றொருபுறம் கர்வம். அனைத்தும் நமக்குத் தெரியும் என்று நினைப்பது, நாம் கற்றுக் கொள்வதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. மாறி வரும் உலகில் விதிமுறைகள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும். பிரச்சினைகளின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாமல் மனநிறைவு கொள்வது உங்களது உணர்வுகளை சோம்பேறி ஆக்கும். உங்களைச் சுற்றி நடப்பதைப் புரிந்து கொள்வதைத் தடுக்கும். இதுதான் தோல்விக்கு முதல்படி.
5. சிறந்த வழி இருக்கிறது.
 சிறப்புடன் செயல்படுதல் என்பது இலக்கு அல்ல. அது தொடர்ந்து செல்ல வேண்டிய பயணம். தொடர்ந்து முன்னேற்றம் நிகழ வேண்டுமானால், அதில் நம்பிக்கை வைக்க வேண்டும். அதற்காக உழைக்கவும் விரும்ப வேண்டும். நமது படைப்பாக்கத்திற்கும் புத்தாக்கத்திற்கும் மற்ற துறைகளிலிருந்து ஊக்கம் பெற வேண்டியது அவசியம். இயற்பியலில் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவுக்கு இசையிலும் ஆர்வம் காட்டினார் ஐன்ஸ்டீன். பெட்ரண்ட் ரஸ்ஸல் தத்துவமேதை மட்டுமல்ல, கணிதவியலாளரும் கூட. திறமையும் படைப்பாக்கமும் ஒன்றிணைந்து நடைபோட வேண்டும்.
 6. சாதகமான எதிர்வினை, எதிர்நிலைச் செயல்பாடு
 அமைதியான மனநிலையில் நாம் மதிப்பீடு செய்யும்போது சாதகமாக எதிர்வினை செய்கிறோம். நமது செயல்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. ஆனால், எதிர்நிலையாக செயல்படும்போது, எதிராளிகள் நாம் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறார்களோ அதையே செய்து கொண்டிருக்கிறோம். ஒரு விசயத்தை ஏற்க இயலாத நிலையில், மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில் சாதகமான எதிர் வினை இருக்க வேண்டும். அதுவே தற்போதைய நிலைமைக்க்கு சவா லையும் வளங்குன்றாத சமூக சீர்திருத்தத்திற்கு யனுள்ளதாகவும் இருக்கும்.
 7. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்
 இளம் வயதில் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. 24 வயதில் நுழையும்போது நேரப்படி செயல்பட வேண்டியதிருக்கும். நேர நெருக்கடிக்குள் ஆளாகாமல் இருக்க பிசிக்கல் பிட்னஸ் அவசியம். உடற் பயிற்சி, நாம் உழைக்கச் செலவழிக்கும் நேரத்தின் தரத்தை மேம்படுத்துவ துடன், படுக்கச் சென்றதும் சீக்கிரம் தூக்கம் வரவும் உதவியாக இருக்கும். மன உளைச்சலை தவிர்க்கவும் உதவியாக இருக்கும்.
8. அடிப்படை நெறிகளில் சமரசம் வேண்டாம்
 ‘மனதின் ஜன்னல்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும். அதேசமயம், காற்றில் நமது கால்கள் அடித்துக் கொண்டு போய்விடக்கூடாது’ என்று மகாத்மா காந்தியடிகள் அடிக்கடி கூறுவார். நீங்கள் எதற்காக நிற்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அறநெறி என்பது சொல்லும் வார்த்தைகளில் இல்லை. செயல்களில் இருக்க வேண்டும். அடிப்படை நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் சமரசம் வேண்டாம்.
 9. வெற்றி பெற விளையாடு
வெற்றி பெற விளையாடு. எப்படியாவது விளையாடு என்று அர்த்தம் அல்ல. கண்ணியமற்ற விளையாட்டு வேண்டாம். ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. மற்றவர்களின் உழைப்பில் வெற்றி பெற வேண்டாம். கடந்த முறை செய்ததைவிட இந்த முறை மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டும். நோக்கத்தில் வெற்றி பெற முழுத் திறமையைக் காட்ட வேண்டும். இதற்கான உறுதி இருக்க வேண்டும்.
 10.சமூகத்திற்குத் திருப்பிக் கொடு
 இந்தியா மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்றாலும், பல சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, இதற்குத் தீர்வு காணும் வகையில் நம் அனைவருக்கும் ஒருங்கிணைந்த சமூகப் பொறுப்புணர்வு அவசியம் தேவை. அனைத்துச் சவால்களிலும் முக்கியமானது கல்வி. ஒரு புறம் வேலைக்குத் தகுந்த திறமையாளர்கள் கிடைக்காத நிலை உள்ளது. மற்றொருபுறம் வேலை இன்மையும், வறுமையும் உள்ளன. இந்த இரு முனைகளையும் இணைப்பதற்கு அனைவருக்கும் தரமான கல்வியை கிடைக்கச் செய்ய வேண்டும்.
Sikkandar Badusha
- See more at: http://chittarkottai.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நாம் அனைவரும் (மாணவர்கள்) கற்க வேண்டிய 10 பாடங்கள் Empty Re: நாம் அனைவரும் (மாணவர்கள்) கற்க வேண்டிய 10 பாடங்கள்

Post by sawmya Fri Oct 11, 2013 10:31 am

சூப்பர் சூப்பர் சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum