தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முளை கட்டிய சொற்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

View previous topic View next topic Go down

முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty முளை கட்டிய சொற்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sun Oct 13, 2013 10:51 am

முளை கட்டிய சொற்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

நியூ செஞ்சுரி புக் ஹவுஷ் 41.பி .சிட்கோ இண்டஸ்டிரியஸ் எஷ்டேட் ,அம்பத்தூர் ,சென்னை .600098.விலை ரூபாய் 55.
தொலைபேசி 044- 26359906.

நியூ செஞ்சுரி புக் ஹவுஷ் நிறுவனத்தின் கையடக்கப் பதிப்பாக வந்துள்ளது .அட்டை வடிவமைப்பு ,உள் அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளன . நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா அவர்களின் இயற்பெயர் ஜோ .ஏசுதாஸ் இவரது முதல் நூல் கண்ணீர் வாசனை .இரண்டாம் நூல் காதல் திணை .இந்த நூல் மூன்றாம் நூல் .முத்திரைப் பதிக்கும் நூலாக வந்துள்ளது .முத்தாய்ப்பாக உள்ளது .பாராட்டுக்கள் .கவிஞர் சக்தி ஜோதியின் அணிந்துரை மிக நன்று .கவிதைகளைப் பிரசுரம் செய்த இதழ்களுக்கும் , நண்பர்களுக்கும் மறக்காமல் நன்றியைப் பதிவு செய்துள்ளார் . மண் மணக்கும் கவிதை என்பதைப் பறை சாற்றும் விதமாக முதல் கவிதையே மண் வாசனை வீசும் கவிதை. கவிதையின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது .

பறக்கும் நிலம் !

தரையிரங்கி
சேற்றில் இரைதேடி
பறந்து செல்லும் பறவையின் காலில்
ஒட்டியிருக்கிறது
சிறிது நிலம் !

திணைகளில் உயர் திணை மனிதன் என்கிறோம் .ஆனால் தினசரி செய்திதாளில் தற்கொலை என்ற செய்தி வராத நாளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தினசரிச் செய்தியாக தற்கொலை ஆகி விட்டது .பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் தற்கொலை செய்து கொள்ளும் மனித இனத்தின் தலையில் கொட்டும் வண்ணம் அக்றிணையான விலங்குகள் ,பறவைகள் தற்கொலை செய்து கொள்வதில்லை என்ற தகவலை உணர்த்தும் வண்ணம் உள்ள கவிதை நன்று .

படிப்பினை !

தனது கன்று இறந்து போனதை நினைத்து
புள் தின்னாமல் பசு !

தனது குட்டி விற்கப்பட்டதை நினைத்து
கத்துகிறது ஆடு !

நோய்வாய்ப்பட்ட நாய்
படுத்திருக்கிறது சோகத்தில் !

கூடு கலைத்து தன் குஞ்சுகள்
திருடப்பட்டதைப் பார்த்து
மார்பிலடித்துக் கொண்டு புலம்புகிறது
பறவை !

பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கூட
வலி வேதனை கவலை உண்டு .

ஆனால் அவை
மனிதனைப் போல்
தற்கொலை செய்து கொள்வதில்லை !

மனிதா விழுந்தால் வீழ்ந்து விடாதே .எழுந்து வா! என்பதை உணர்த்தும் விதமாக .உலகப் பொதுமறையான திருக்குறளான முயற்சி திருவினையாக்கும் என்பதை வழி மொழிந்து எழுதியுள்ள கவிதை நன்று .

முளைத்தல் !

கிளை இடுக்கில் சுவரில்
தொட்டியில் நிலத்தில் இப்படி
எங்கே விழுந்தாலும் முளைத்து
கற்றுக் கொடுக்கின்றன
வாழ்க்கைத் தத்துவத்தை
விதைகள் !

தமிழ் மருத்துவம் சித்த மருத்துவம் விதித்து மக்கள் ஆங்கில மோகம் போலவே ஆங்கில மருத்துவ மோகம் பிடித்து அலைகிறார்கள் .அதன் மருந்து விலைகளோ மயக்கம் தரும் விதமாக மிக உயர்வாக உள்ளன .நாட்டு நடப்பை உணர்த்தும் கவிதை .

வலி !

வயிற்று வலிக்கு மாத்திரை கேட்டால்
அதன் விலை தருகிறது
நெஞ்சு வழியை ...

புதுக் கவிதை ஹைக்கூ கவிதை இரண்டும் கலந்த கலவையாக உள்ளன .

உள்ளத்து உணர்வு கவிதை .மனதில் பட்டதை ,கண்ணில் கண்டதை, உணர்ந்ததை கவிதையாக்கி உள்ளார் .பெரியவர்களிடம் உள்ள கோபம் குழந்தைகளிடம் இல்லை என்ற உண்மையை உணர்த்திடும் கவிதை .

தனிக்குடித்தனம்
போகும்போது கூட
டாட்டா காட்டுகிறது குழந்தை !

உலகமயம் , தாராளமயம் , புதிய பொருளாதாரம் இவற்றின் விளைவு விடுதலை பெறும் போது ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாய் இன்று ஒரு டாலரின் மதிப்பு அறுபதுக்கு மேல் .இதுதான் அரசியல்வாதிகள் செய்த வேதனையான சாதனை .நமது ரூபாய் மதிப்பு மட்டுமல்ல நாட்டின் மதிப்பும் தாழ்ந்து விட்டது .பண்பாடு சிதைந்து விட்டது .வாழ்க்கை முறை மாறி விட்டது .என்பதை உணர்த்தும் ஹைக்கூ .

பின்னிரவு நுனியில்
அடுக்கு மாடிக் குடியிருப்பில்
சேவல் கூவியது அலைபேசியில் !

சிந்திக்க வைக்கும் வித்தியாசமான ஹைக்கூ நன்று .

சிலுவை மரம் தருகிறது
இயேசுவையும் மரம்தான்
தருகிறது !

நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .
.



.
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் ! நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» 15 முதல் 95 வயது வரை ! நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum