Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
15 முதல் 95 வயது வரை ! நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 • Share
15 முதல் 95 வயது வரை ! நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
15 முதல் 95 வயது வரை !
நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா !
செல் 9345555623.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
வெளியீடு ; மின்னல் கலைக்கூடம் ,117.எல்டாம்ஸ் சாலை .சென்னை .600018. விலை ரூபாய் 100.
15 முதல் 95 வயது வரை நூலின் தலைப்பே மிக வித்தியாசமாக உள்ளது .இந்த நூலில் 15 வயது முதல் 95 வயது வரை பல்வேறு வயதினர் 108 கவிஞர்களின் தொகுப்பு நூல் இது .நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா அவர்கள் மிகவும் சிரமப்பட்டு 108 படைப்பாளிகளிடமிருந்து படைப்புகளைப் பெற்று தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .இந்த நூலில் மரபுக் கவிதை ,புதுக் கவிதை ,ஹைக்கூ கவிதை மூன்றும் உள்ளளன .தொகுப்பு நூல் வெளியிடுவது சாதாரண பணி அன்று .சாதனைப் பணி .தொகுப்பு நூல் வெளியிடுவது ஒரு கலை .தொகுப்பு ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார் .
எல்லாக் கவிஞர்களின் படிப்புகள் பிடித்து இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .
சிலந்திவலை ! கவிஞர் சா .சையத் முஹம்மத் !
சிலந்திப் பூச்சி ! சிலந்திப் பூச்சி ! வலைபல செய்கின்றாய் !
சிக்க்கனமாய் சீராகவே வாழ்கிறாய் !
செலவில்லா வலைவீட்டை விரும்பியே கட்டுகிறாய் !
உலகத்தின் அற்புதமாம் மும்தாஜின் மஹால் போலவே
உணர்ந்தாயோ உன் கூட்டை !
ஹைக்கூ கவிதைகள் பல மிகவும் ரசிக்கும்படியாக உள்ளன .இறுதி எழுத்து ஒன்றி வரும் இயைபு நயத்துடன் உள்ள ஹைக்கூ ஒன்று .
கவிஞர் பி .முஹம்மத் அலி !
இயலாமை
முயலாமை
வறுமை !
வித்தியாசமாக சிந்தித்து ஹைக்கூ வடித்துள்ளார் பாருங்கள் .
கவிஞர் டி .இராஜேந்திரன் !
நிலாச்சோறு
உண்போம்
நிலாவில் சமைத்து !
அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாத்துரை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஹைக்கூ .
.
குழந்தை பிறக்காதது பெரும் குற்றம் இல்லை .சமுதாயத்தில் அதனை குறையாகப் பேசும் நிலை உள்ளது .அதனை உணர்த்தும் ஹைக்கூ .
கவிஞர் இரத்தினப்பிரியன் !
வயிறு கனக்கவில்லை
மனம் கனக்கிறது
மலடிப்பட்டம் !
மெழுகுவர்த்தியை வித்தியாசமாக பார்க்கிறார் .
கவிஞர் பாரியன்பன் !
வெள்ளை ரத்தம் சிந்தி
வெளிச்சம் தருகிறது
மெழுகுவர்த்தி !
மூன்று வரிகளில் சிக்கனமான சொற்களில் தமிழ் உணர்வு விதைக்கும் விதமாக உள்ள ஹைக்கூ .
கவிஞர் பொன்னியின் செல்வன் !
தமிழன் வீடுகளில்
எகிப்து
மம்மி !
குடி கெடுக்கும் குடிக்கு எதிரான ஹைக்கூ நன்று .
கவிஞர் அன்னை சிவா !
மதுக்கடை வருமானம்
மகத்தான சாதனை
போதை மாநிலம் !
விவசாய நாடு என்கிறோம் .ஆனால் விவசாயி வறுமையில் வாடும் துன்பம் உணர்த்தும் ஹைக்கூ .
கவிஞர் மரியா தெரசா !
பயிர் வளர்க்கும்
விவசாயி
பட்டினியாய் !
மிக வித்தியாசமாக நடப்போடு ஒப்பிட்டு சிந்தித்து ஹைக்கூ வடித்துள்ளார் .
கவிஞர் பொன் ரவிச்சந்திரன் !
குயில் முட்டை
வாடகைத்தாய்
காகம் !
மனித நேய மாண்பாளர்கள் எல்லாம் மிகவும் மனம் வருந்திய, உலகில் இதுவரை எங்குமே நடந்திராத படுகொலைகளும், வன்முறைகளும் இலங்கை சிங்கள அரசு நடத்தியது .அதற்கு மனிதாபிமானமற்ற பல நாடுகளும் உதவின .தடுக்க வேண்டிய ஐ.நா .மற்றமும் பாரமுகமாக இருந்துவிட்டு தற்போது தண்டிக்க வேண்டிய கொடூரனை தண்டிக்காமல் நீலிக்கண்ணீர் வடிக்கிறது .அந்த கொடுமையைச் சுட்டும் கவிதை ஒன்று .
ஈழம் ! கவிஞர் கு .தமயந்தி !
மதம் பிடித்த சிங்களவன் வதம் செய்தான் எங்களை
கொடுமையின் உச்சிக்கு கொண்டு சென்றான் பெண்களை
அமைதியை காணாத தமிழ் நெஞ்சம்
அங்கே அல்லல் படுகிறது உயிர் கொஞ்சம் !
இந்த நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா அவர்களின் கவிதை !
பாசம் !
நம்ம மாட்டுப்பொண்ணு
மலடிபோலிருக்கு .
மாமியாரின் சொல்லம்புகளைத்
தாங்கிக் கொண்டது
அவளின் மனசு !
விசேஷம் ஏதுமில்லையா
கேள்விக்கணைகள் !
பிள்ளைப் பேற்றைத் தள்ளிப்போடும்
காரணத்தை அவள் மட்டுமே அறிவாள் .
திருமணக் கடனே தீர்ந்தபாடில்லை .
வலைகாப்புச் செலவைத்
தாங்குவாரா தந்தை !
மனிதநேயம் குறைந்து வரும் அவலம் சுட்டும் கவிதை ஒன்று .
கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
எங்கே போகிறோம் !
பேருந்து மோதிக் கொண்டது
" அய்யோ " - என்ற அலறல்
கூடியது கூட்டம் .
ஓடோடி வந்தனர் !
கூட்டத்தில் எட்டிப் பார்த்தனர்
தங்கள் உறவில்லை என்று
அமைதியாக கலைந்து போனார்கள் !
பல்வேறு இதழ்களின் போட்டிக்கு பரிசுத் தொகை வழங்கி வரும் மனமும் , குணமும் , பணமும் பெற்ற கவிஞர் கார்முகிலன் அவர்களின் பகுத்தறிவை விதைக்கும் ஹைக்கூ .
கவிஞர் கார்முகிலன் !
ஜாதகம் பார்த்து
வீணாகிப் போனது
விவாகரத்து !
மாணவர்கள் குடிக்கும் பழக்கம் வந்து விட்ட சமுதாயம் கண்டு கொதித்து வடித்த கவிதை நன்று .
பதிப்பாளர் கவிஞர் வசீகரன் !
வேண்டாம் தீய மது வேண்டியே கேட்கிறோம் !
சீச்சீஅதை ஒதுக்கு !
மேமிகு திறத்தோடு பார்புகழ வாழலாம் !
மதியை மேம்படுத்து !
.
மொத்தத்தில் பல்சுவை விருந்தாக உள்ளது .நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா அவர்களுக்கும் ,மிக நன்றாக பதிப்பித்த கவிஞர் வசீகரன் அவர்களுக்கும் , .ஓவியம் வரைந்த ஓவியர் மஜ்ஹருல் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
.
நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா !
செல் 9345555623.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
வெளியீடு ; மின்னல் கலைக்கூடம் ,117.எல்டாம்ஸ் சாலை .சென்னை .600018. விலை ரூபாய் 100.
15 முதல் 95 வயது வரை நூலின் தலைப்பே மிக வித்தியாசமாக உள்ளது .இந்த நூலில் 15 வயது முதல் 95 வயது வரை பல்வேறு வயதினர் 108 கவிஞர்களின் தொகுப்பு நூல் இது .நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா அவர்கள் மிகவும் சிரமப்பட்டு 108 படைப்பாளிகளிடமிருந்து படைப்புகளைப் பெற்று தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .இந்த நூலில் மரபுக் கவிதை ,புதுக் கவிதை ,ஹைக்கூ கவிதை மூன்றும் உள்ளளன .தொகுப்பு நூல் வெளியிடுவது சாதாரண பணி அன்று .சாதனைப் பணி .தொகுப்பு நூல் வெளியிடுவது ஒரு கலை .தொகுப்பு ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார் .
எல்லாக் கவிஞர்களின் படிப்புகள் பிடித்து இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .
சிலந்திவலை ! கவிஞர் சா .சையத் முஹம்மத் !
சிலந்திப் பூச்சி ! சிலந்திப் பூச்சி ! வலைபல செய்கின்றாய் !
சிக்க்கனமாய் சீராகவே வாழ்கிறாய் !
செலவில்லா வலைவீட்டை விரும்பியே கட்டுகிறாய் !
உலகத்தின் அற்புதமாம் மும்தாஜின் மஹால் போலவே
உணர்ந்தாயோ உன் கூட்டை !
ஹைக்கூ கவிதைகள் பல மிகவும் ரசிக்கும்படியாக உள்ளன .இறுதி எழுத்து ஒன்றி வரும் இயைபு நயத்துடன் உள்ள ஹைக்கூ ஒன்று .
கவிஞர் பி .முஹம்மத் அலி !
இயலாமை
முயலாமை
வறுமை !
வித்தியாசமாக சிந்தித்து ஹைக்கூ வடித்துள்ளார் பாருங்கள் .
கவிஞர் டி .இராஜேந்திரன் !
நிலாச்சோறு
உண்போம்
நிலாவில் சமைத்து !
அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாத்துரை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஹைக்கூ .
.
குழந்தை பிறக்காதது பெரும் குற்றம் இல்லை .சமுதாயத்தில் அதனை குறையாகப் பேசும் நிலை உள்ளது .அதனை உணர்த்தும் ஹைக்கூ .
கவிஞர் இரத்தினப்பிரியன் !
வயிறு கனக்கவில்லை
மனம் கனக்கிறது
மலடிப்பட்டம் !
மெழுகுவர்த்தியை வித்தியாசமாக பார்க்கிறார் .
கவிஞர் பாரியன்பன் !
வெள்ளை ரத்தம் சிந்தி
வெளிச்சம் தருகிறது
மெழுகுவர்த்தி !
மூன்று வரிகளில் சிக்கனமான சொற்களில் தமிழ் உணர்வு விதைக்கும் விதமாக உள்ள ஹைக்கூ .
கவிஞர் பொன்னியின் செல்வன் !
தமிழன் வீடுகளில்
எகிப்து
மம்மி !
குடி கெடுக்கும் குடிக்கு எதிரான ஹைக்கூ நன்று .
கவிஞர் அன்னை சிவா !
மதுக்கடை வருமானம்
மகத்தான சாதனை
போதை மாநிலம் !
விவசாய நாடு என்கிறோம் .ஆனால் விவசாயி வறுமையில் வாடும் துன்பம் உணர்த்தும் ஹைக்கூ .
கவிஞர் மரியா தெரசா !
பயிர் வளர்க்கும்
விவசாயி
பட்டினியாய் !
மிக வித்தியாசமாக நடப்போடு ஒப்பிட்டு சிந்தித்து ஹைக்கூ வடித்துள்ளார் .
கவிஞர் பொன் ரவிச்சந்திரன் !
குயில் முட்டை
வாடகைத்தாய்
காகம் !
மனித நேய மாண்பாளர்கள் எல்லாம் மிகவும் மனம் வருந்திய, உலகில் இதுவரை எங்குமே நடந்திராத படுகொலைகளும், வன்முறைகளும் இலங்கை சிங்கள அரசு நடத்தியது .அதற்கு மனிதாபிமானமற்ற பல நாடுகளும் உதவின .தடுக்க வேண்டிய ஐ.நா .மற்றமும் பாரமுகமாக இருந்துவிட்டு தற்போது தண்டிக்க வேண்டிய கொடூரனை தண்டிக்காமல் நீலிக்கண்ணீர் வடிக்கிறது .அந்த கொடுமையைச் சுட்டும் கவிதை ஒன்று .
ஈழம் ! கவிஞர் கு .தமயந்தி !
மதம் பிடித்த சிங்களவன் வதம் செய்தான் எங்களை
கொடுமையின் உச்சிக்கு கொண்டு சென்றான் பெண்களை
அமைதியை காணாத தமிழ் நெஞ்சம்
அங்கே அல்லல் படுகிறது உயிர் கொஞ்சம் !
இந்த நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா அவர்களின் கவிதை !
பாசம் !
நம்ம மாட்டுப்பொண்ணு
மலடிபோலிருக்கு .
மாமியாரின் சொல்லம்புகளைத்
தாங்கிக் கொண்டது
அவளின் மனசு !
விசேஷம் ஏதுமில்லையா
கேள்விக்கணைகள் !
பிள்ளைப் பேற்றைத் தள்ளிப்போடும்
காரணத்தை அவள் மட்டுமே அறிவாள் .
திருமணக் கடனே தீர்ந்தபாடில்லை .
வலைகாப்புச் செலவைத்
தாங்குவாரா தந்தை !
மனிதநேயம் குறைந்து வரும் அவலம் சுட்டும் கவிதை ஒன்று .
கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
எங்கே போகிறோம் !
பேருந்து மோதிக் கொண்டது
" அய்யோ " - என்ற அலறல்
கூடியது கூட்டம் .
ஓடோடி வந்தனர் !
கூட்டத்தில் எட்டிப் பார்த்தனர்
தங்கள் உறவில்லை என்று
அமைதியாக கலைந்து போனார்கள் !
பல்வேறு இதழ்களின் போட்டிக்கு பரிசுத் தொகை வழங்கி வரும் மனமும் , குணமும் , பணமும் பெற்ற கவிஞர் கார்முகிலன் அவர்களின் பகுத்தறிவை விதைக்கும் ஹைக்கூ .
கவிஞர் கார்முகிலன் !
ஜாதகம் பார்த்து
வீணாகிப் போனது
விவாகரத்து !
மாணவர்கள் குடிக்கும் பழக்கம் வந்து விட்ட சமுதாயம் கண்டு கொதித்து வடித்த கவிதை நன்று .
பதிப்பாளர் கவிஞர் வசீகரன் !
வேண்டாம் தீய மது வேண்டியே கேட்கிறோம் !
சீச்சீஅதை ஒதுக்கு !
மேமிகு திறத்தோடு பார்புகழ வாழலாம் !
மதியை மேம்படுத்து !
.
மொத்தத்தில் பல்சுவை விருந்தாக உள்ளது .நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா அவர்களுக்கும் ,மிக நன்றாக பதிப்பித்த கவிஞர் வசீகரன் அவர்களுக்கும் , .ஓவியம் வரைந்த ஓவியர் மஜ்ஹருல் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
.
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: 15 முதல் 95 வயது வரை ! நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Similar topics
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» இலக்கிய மாலை ! ( அணிந்துரைகளின் தொகுப்பு ) நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கவிதைக் கீற்றுகள் ! நூல் ஆரிசியர்கள் சச்சிதானந்த ஜோதி நிகேதன் மாணவர்கள் ! தொகுப்பு ஆசிரியர் வீ .கே .கார்திகேயன் தமிழ்த்துறை ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» இலக்கிய மாலை ! ( அணிந்துரைகளின் தொகுப்பு ) நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கவிதைக் கீற்றுகள் ! நூல் ஆரிசியர்கள் சச்சிதானந்த ஜோதி நிகேதன் மாணவர்கள் ! தொகுப்பு ஆசிரியர் வீ .கே .கார்திகேயன் தமிழ்த்துறை ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|