Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
Page 2 of 3 • Share
Page 2 of 3 • 1, 2, 3
தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
First topic message reminder :
யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்; பதஞ்சலீம் ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ
குரு வணக்கம்:
குருவழியே ஆதி ஆதி
குருமொழியே வேதம் வேதம்
குருவிழியே தீபம் தீபம்
குருபதமே காப்பு காப்பு
சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் யோகசூத்திரம் என அழைக்கபடினும் சாஸ்திரம் என்று கூறுவதே மேன்மையாகும். "அத யோகானுசானம்"- என்று முதல் சூத்திரம் துவங்கி
புருஷார்த்த சூன்யானம் குணானம் ப்ரதி-ப்ரஸவ
கைவல்யம் ஸ்வரூப-பிரதிஷ்டா வாசுதி-சுக்தே : இதி
என முடியும் 196 சூத்திரங்களில் ஓர் யோக வேதத்தை உலகுக்கு தந்துள்ளார். இந்த யோகசூத்திரத்தை பயில்வது என்பது ஆழ்ந்து தொடர்ந்து உணர்வதும் பயிற்சி செய்வதும் ஆகும். ஏனைய சாஸ்திரங்களைப் போல் கற்பதும் விவாதிப்பதுமல்ல.யோக என்ற சமஸ்க்ருத சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. யோகம் என்றால் இணைவித்தல், அதாவது, பலவற்றின் செயல்பாட்டை ஒருமிப்புவித்தல் (சிங்க்ரோனைஸ்) என்பது ஒரு பொருள். சைக்கிள் ஓட்டும் போது, நம் கையும் காலும், கண்ணும் காதும் இணைந்து செயல்படுகின்றன. அதுபோலவே, முதலில், உடலையும் உள்ளத்தையும் ஒன்றுவித்து, பிறகு, அவ்விரண்டையும் உண்மைப் பொருளோடு ஒன்றுவித்தல் (யுனிபிகேஷன்) என்பது யோகத்தின் இன்னொரு அர்த்தமாகும்.
பதஞ்சலி யோக சூத்திரம்
காலங்காலமாக நமக்குக் கிடைத்திருக்கின்ற, பல நல்வாழ்முறைகளில் ஒன்று தான் பதஞ்சலி மாமுனிவர் அருளிய யோக சூத்திரம் என்ற நூலாகும். இவர் அன்றாட வாழ்செயல்பாட்டை யோக சூத்திரத்தில் பகுத்தருளியுள்ளார். இதில் கூறப்படும் வாழ்முறைக்கு அஷ்டாங்க யோகம் (எட்டு படிகள் உடைய வாழ்முறை, என்று பெயர்)இதில் 3வது படியே ஆசனம்.
உலகில் 84 லட்சம் உயிர்வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு உயிருக்கு ஒரு ஆசனம் வீதம் 84 லட்சம் ஆசனங்கள் உள்ளன என்று யோகிகள் கூறுகின்றனர். இதில் 250 ஆசனங்கள் வரை பழக்கத்தில் உள்ளன. எனினும் இவைகளில் 18 வகை ஆசனங்கள் தான் மிக முக்கியமானவை. இவற்றைப் பயில்வதன் மூலம் ஏனைய ஆசனங்கள் தானாக வந்து விடும்.
யோக சூத்திர அஷ்டாங்கங்கள் சுருக்கமான விளக்கம்
அஷ்டாங்கங்கள் என்றால் 8 பகுதிகள். அவை
1. யமம்; 2. நியமம்; 3. ஆசனம்; 4. பிராணாயாமம்; 5. பிரத்யாகாரம்; 6. தாரணம்; 7. தியானம்; 8. சமாதி
1. யமம்: யமம் என்றால் சுயக்கட்டுப்பாடு என்று பொருள். அக்கட்டுப்பாடுகளில் முக்கியமானவை அஹிம்சை, சத்யம், அஸ்தேயம், பிரம்மசர்யம், அபரிக்ரஹம் ஆகியவை.
அ) அஹிம்சை: (அ+ஹிம்சை) துன்பம்/வேதனை ஏற்படுத்தாதிருத்தல் என்று அர்த்தம்.
ஆ) சத்யம் (உண்மை): உண்மை என்பது நாம் அறிந்ததை, அறிந்தவாறு, அப்படியே தெரிவிப்பதுடன், உண்மை நிøலையை உணர்ந்து உண்ணையாக வாழ்வதை குறிக்கும்.
இ) அஸ்தேயம் : தம்மிடம் இருப்பதை முழுமையாக தனக்காகவும், முடிந்தவரை பிறருக்காகவும் பயன்படுத்துவது.
ஈ) பிரம்மசரியம் : தனியாகவோ, இல்லறத்தில் இருந்து கொண்டோ பரம்பொருளை அடைய நினைப்பது.
உ) அபரிக்ரஹம் : மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது.
சிறு வயதிலிருந்து, படிப்படியாக, உணவை, படிப்பை, செயல்களைக் கூட்டுவது போல, சுயக் கட்டுப்பாடுகளையும் மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மனக்கட்டுப்பாடு வசப்பட்டு, உடல் பாதுகாப்பு எளிதாவதால் தான், யமத்தை அடுத்து நியமம் வருகிறது.
2. நியமம்: நியமம் என்றால் நெறிமுறை என்று பொருள். இறைவனை அடைய விரும்புவர்களுக்கு சௌச்சம், சந்தோஷம், தமாஸ், ஸ்வாத்யாயம், ஈசுவரப்ராயதானம் என 5 நெறிமுறைகள் அவசியம்.
அ) சௌச்சம் என்றால் தூய்மை. இதில் எங்கும் தூய்மை, எதிலும் தூய்மை மிக அவசியம்.
ஆ) சந்தோஷம் : உள்ளத்தில் மனநிறைவு என்று பொருள். போதுமென்ற மனதே பொன் செய்யும்.
இ) தமாஸ் (தபஸ்) : ஒரு செயல் (எண்ணம்) நிறைவடையும் வரை தொடர்ந்த முயற்சி என்று பொருள், சொல், செயல், சிந்தனை என்ற மூன்று நிலையிலும் இத்தொடர் முயற்சி இருக்க வேண்டும்.
ஈ) ஸ்வாத்யாவம் : தானே அறிவது; தன்னை அறிவது என்பன முக்கிய அர்த்தங்கள்.
உ) ஈசுவரப்ராயதானம்: எல்லாமே இறைவன் அருளால் தான் நிகழ்கிறது. அணு முதல் அண்டம் வரை, யாவுமே, கடவுள் என்ற ஏதோ ஒரு அளப்பரிய சக்தியினால் இயங்குகின்றன என்ற எண்ணம் வளர வேண்டும். இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கு, முதல் படியே, ஈசுவர அர்ப்பணம். ஈசுவரனுக்கு அர்ப்பணிக்கின்ற போக்கு வளர வளர, யோகத்தில் கடைசிப் படியான சமாதி. இறைவனுடன் ஐக்கியமாவது எளிதாகிவிடும்.
3. ஆசனம்: ஆசனம் என்றால் ஒரு நிலை என்று பொருள். அதாவது நம் உடலை, உடல் உறுப்புக்களை, ஒரு குறிப்பிட்ட வகையில், அசைவின்றி நிலைப்பித்த நிலை என்று பொருள். ஆனால் தேகத்தை சமச்சீர் நிலையில் வைத்திட தேகப் பயிற்சியும், அதைவிட நுண்ணிய ஆசனமும் தேவை ஆகும். ஆனால் ஆசனத்திற்கும், தேகப்பயிற்சிக்கும் வித்தியாசம் உள்ளது
யோகாசனம் ஒரு அறிமுகம்!
யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்; மலம் சரீரஸ்ய து வைத்ய கேனயோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்; பதஞ்சலீம் ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ
குரு வணக்கம்:
குருவழியே ஆதி ஆதி
குருமொழியே வேதம் வேதம்
குருவிழியே தீபம் தீபம்
குருபதமே காப்பு காப்பு
சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் யோகசூத்திரம் என அழைக்கபடினும் சாஸ்திரம் என்று கூறுவதே மேன்மையாகும். "அத யோகானுசானம்"- என்று முதல் சூத்திரம் துவங்கி
புருஷார்த்த சூன்யானம் குணானம் ப்ரதி-ப்ரஸவ
கைவல்யம் ஸ்வரூப-பிரதிஷ்டா வாசுதி-சுக்தே : இதி
என முடியும் 196 சூத்திரங்களில் ஓர் யோக வேதத்தை உலகுக்கு தந்துள்ளார். இந்த யோகசூத்திரத்தை பயில்வது என்பது ஆழ்ந்து தொடர்ந்து உணர்வதும் பயிற்சி செய்வதும் ஆகும். ஏனைய சாஸ்திரங்களைப் போல் கற்பதும் விவாதிப்பதுமல்ல.யோக என்ற சமஸ்க்ருத சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. யோகம் என்றால் இணைவித்தல், அதாவது, பலவற்றின் செயல்பாட்டை ஒருமிப்புவித்தல் (சிங்க்ரோனைஸ்) என்பது ஒரு பொருள். சைக்கிள் ஓட்டும் போது, நம் கையும் காலும், கண்ணும் காதும் இணைந்து செயல்படுகின்றன. அதுபோலவே, முதலில், உடலையும் உள்ளத்தையும் ஒன்றுவித்து, பிறகு, அவ்விரண்டையும் உண்மைப் பொருளோடு ஒன்றுவித்தல் (யுனிபிகேஷன்) என்பது யோகத்தின் இன்னொரு அர்த்தமாகும்.
பதஞ்சலி யோக சூத்திரம்
காலங்காலமாக நமக்குக் கிடைத்திருக்கின்ற, பல நல்வாழ்முறைகளில் ஒன்று தான் பதஞ்சலி மாமுனிவர் அருளிய யோக சூத்திரம் என்ற நூலாகும். இவர் அன்றாட வாழ்செயல்பாட்டை யோக சூத்திரத்தில் பகுத்தருளியுள்ளார். இதில் கூறப்படும் வாழ்முறைக்கு அஷ்டாங்க யோகம் (எட்டு படிகள் உடைய வாழ்முறை, என்று பெயர்)இதில் 3வது படியே ஆசனம்.
உலகில் 84 லட்சம் உயிர்வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு உயிருக்கு ஒரு ஆசனம் வீதம் 84 லட்சம் ஆசனங்கள் உள்ளன என்று யோகிகள் கூறுகின்றனர். இதில் 250 ஆசனங்கள் வரை பழக்கத்தில் உள்ளன. எனினும் இவைகளில் 18 வகை ஆசனங்கள் தான் மிக முக்கியமானவை. இவற்றைப் பயில்வதன் மூலம் ஏனைய ஆசனங்கள் தானாக வந்து விடும்.
யோக சூத்திர அஷ்டாங்கங்கள் சுருக்கமான விளக்கம்
அஷ்டாங்கங்கள் என்றால் 8 பகுதிகள். அவை
1. யமம்; 2. நியமம்; 3. ஆசனம்; 4. பிராணாயாமம்; 5. பிரத்யாகாரம்; 6. தாரணம்; 7. தியானம்; 8. சமாதி
1. யமம்: யமம் என்றால் சுயக்கட்டுப்பாடு என்று பொருள். அக்கட்டுப்பாடுகளில் முக்கியமானவை அஹிம்சை, சத்யம், அஸ்தேயம், பிரம்மசர்யம், அபரிக்ரஹம் ஆகியவை.
அ) அஹிம்சை: (அ+ஹிம்சை) துன்பம்/வேதனை ஏற்படுத்தாதிருத்தல் என்று அர்த்தம்.
ஆ) சத்யம் (உண்மை): உண்மை என்பது நாம் அறிந்ததை, அறிந்தவாறு, அப்படியே தெரிவிப்பதுடன், உண்மை நிøலையை உணர்ந்து உண்ணையாக வாழ்வதை குறிக்கும்.
இ) அஸ்தேயம் : தம்மிடம் இருப்பதை முழுமையாக தனக்காகவும், முடிந்தவரை பிறருக்காகவும் பயன்படுத்துவது.
ஈ) பிரம்மசரியம் : தனியாகவோ, இல்லறத்தில் இருந்து கொண்டோ பரம்பொருளை அடைய நினைப்பது.
உ) அபரிக்ரஹம் : மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது.
சிறு வயதிலிருந்து, படிப்படியாக, உணவை, படிப்பை, செயல்களைக் கூட்டுவது போல, சுயக் கட்டுப்பாடுகளையும் மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மனக்கட்டுப்பாடு வசப்பட்டு, உடல் பாதுகாப்பு எளிதாவதால் தான், யமத்தை அடுத்து நியமம் வருகிறது.
2. நியமம்: நியமம் என்றால் நெறிமுறை என்று பொருள். இறைவனை அடைய விரும்புவர்களுக்கு சௌச்சம், சந்தோஷம், தமாஸ், ஸ்வாத்யாயம், ஈசுவரப்ராயதானம் என 5 நெறிமுறைகள் அவசியம்.
அ) சௌச்சம் என்றால் தூய்மை. இதில் எங்கும் தூய்மை, எதிலும் தூய்மை மிக அவசியம்.
ஆ) சந்தோஷம் : உள்ளத்தில் மனநிறைவு என்று பொருள். போதுமென்ற மனதே பொன் செய்யும்.
இ) தமாஸ் (தபஸ்) : ஒரு செயல் (எண்ணம்) நிறைவடையும் வரை தொடர்ந்த முயற்சி என்று பொருள், சொல், செயல், சிந்தனை என்ற மூன்று நிலையிலும் இத்தொடர் முயற்சி இருக்க வேண்டும்.
ஈ) ஸ்வாத்யாவம் : தானே அறிவது; தன்னை அறிவது என்பன முக்கிய அர்த்தங்கள்.
உ) ஈசுவரப்ராயதானம்: எல்லாமே இறைவன் அருளால் தான் நிகழ்கிறது. அணு முதல் அண்டம் வரை, யாவுமே, கடவுள் என்ற ஏதோ ஒரு அளப்பரிய சக்தியினால் இயங்குகின்றன என்ற எண்ணம் வளர வேண்டும். இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கு, முதல் படியே, ஈசுவர அர்ப்பணம். ஈசுவரனுக்கு அர்ப்பணிக்கின்ற போக்கு வளர வளர, யோகத்தில் கடைசிப் படியான சமாதி. இறைவனுடன் ஐக்கியமாவது எளிதாகிவிடும்.
3. ஆசனம்: ஆசனம் என்றால் ஒரு நிலை என்று பொருள். அதாவது நம் உடலை, உடல் உறுப்புக்களை, ஒரு குறிப்பிட்ட வகையில், அசைவின்றி நிலைப்பித்த நிலை என்று பொருள். ஆனால் தேகத்தை சமச்சீர் நிலையில் வைத்திட தேகப் பயிற்சியும், அதைவிட நுண்ணிய ஆசனமும் தேவை ஆகும். ஆனால் ஆசனத்திற்கும், தேகப்பயிற்சிக்கும் வித்தியாசம் உள்ளது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
சித்த பத்மாசனம்
இந்த உலகில் என்ன தான் விஞ்ஞானம் முன்னேறினாலும் நமது உடல், மன இயக்கங்களில் சக்தியை ஒரு சேர அதிகரிக்க ரிஷிகள் கூறிய யோகாசன பயிற்சி முறைகளை தான் பின்பற்றுகிறோம். அவ்வழியில் நாமும் யோகம்+ஆசனம் என இருவித பயிற்சிகளை ஒருசேரப் பெறுவோம். நலமுடன் வாழ்வோம்.
யோகாசனம் செய்யும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் :
தடித்த அதே சமயம் மிருதுவான துணி விரிப்பில் அமர்ந்து யோகாசனம் செய்வது நலம். மஞ்சள் காமாலை போன்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாத காலத்திற்கு பின்னும், உடலில் எந்த பாகத்தில் அறுவை சிகிச்சை செய்திருப்பவர்கள் 6 மாத காலத்திற்கு பின்னும் பயிற்சி செய்ய வேண்டும். பெண்களைப் பொறுத்த வரை மாதவிடாய் காலத்திலும், கர்ப்பம் தரித்த காலங்களிலும் பயிற்சி மேற்கொள்ளக்கூடாது. முதலில் சித்த பத்மாசனம் பற்றி தெரிந்து கொள்வோம்.
செய்முறை : முதுகை வளைக்காமல், தலை நிமிர்ந்து அமர்ந்து கழுத்தை நேராக வைத்துக் கொள்ளவும். வலது காலை மடித்து இடது தொடைமீதும், இடது காலை மடித்து வலது தொடைமீதும் வைக்கவும். இடது கையின் மேல் வலது கையை திறந்த நிலையில் மேல் நோக்கி வைக்கவும், கண்களை மெதுவாக மூடி அதன் பார்வை மையம் இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்க வேண்டும். ஒரே சீராக நிமிடத்திற்கு 14 முதல் 16 தடவை மூச்சை இழுத்து விடவும். இந்த பயிற்சியை காலை 6 மற்றும் மாலை 6 மணியளவில் குறைந்தது 15 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை செய்யலாம். வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி கொண்டு பயிற்சி செய்வது நலம்.
பலன் : ரத்த ஓட்டம் சீராக அமையும், மன அமைதி கிடைக்கும்.
இந்த உலகில் என்ன தான் விஞ்ஞானம் முன்னேறினாலும் நமது உடல், மன இயக்கங்களில் சக்தியை ஒரு சேர அதிகரிக்க ரிஷிகள் கூறிய யோகாசன பயிற்சி முறைகளை தான் பின்பற்றுகிறோம். அவ்வழியில் நாமும் யோகம்+ஆசனம் என இருவித பயிற்சிகளை ஒருசேரப் பெறுவோம். நலமுடன் வாழ்வோம்.
யோகாசனம் செய்யும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் :
தடித்த அதே சமயம் மிருதுவான துணி விரிப்பில் அமர்ந்து யோகாசனம் செய்வது நலம். மஞ்சள் காமாலை போன்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாத காலத்திற்கு பின்னும், உடலில் எந்த பாகத்தில் அறுவை சிகிச்சை செய்திருப்பவர்கள் 6 மாத காலத்திற்கு பின்னும் பயிற்சி செய்ய வேண்டும். பெண்களைப் பொறுத்த வரை மாதவிடாய் காலத்திலும், கர்ப்பம் தரித்த காலங்களிலும் பயிற்சி மேற்கொள்ளக்கூடாது. முதலில் சித்த பத்மாசனம் பற்றி தெரிந்து கொள்வோம்.
செய்முறை : முதுகை வளைக்காமல், தலை நிமிர்ந்து அமர்ந்து கழுத்தை நேராக வைத்துக் கொள்ளவும். வலது காலை மடித்து இடது தொடைமீதும், இடது காலை மடித்து வலது தொடைமீதும் வைக்கவும். இடது கையின் மேல் வலது கையை திறந்த நிலையில் மேல் நோக்கி வைக்கவும், கண்களை மெதுவாக மூடி அதன் பார்வை மையம் இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்க வேண்டும். ஒரே சீராக நிமிடத்திற்கு 14 முதல் 16 தடவை மூச்சை இழுத்து விடவும். இந்த பயிற்சியை காலை 6 மற்றும் மாலை 6 மணியளவில் குறைந்தது 15 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை செய்யலாம். வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி கொண்டு பயிற்சி செய்வது நலம்.
பலன் : ரத்த ஓட்டம் சீராக அமையும், மன அமைதி கிடைக்கும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
பர்வத ஆசனம் (மலை)
பர்வத ஆசனம் (மலை)
மனம் : தோள்கள்
மூச்சின் கவனம்: கைகளை மேலே தூக்கும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, கீழே இறங்கும் போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : தோள்கள் வலிமையடையும். புஜங்கள் மெலிந்து சீராக அமையும். இதயம் வலிமையடையும். இடுப்பு பகுதி ஊளைச்சதை கரையும்.
குணமாகும் நோய்கள் : தோள்களில் படியும் தேவையற்ற அதிக கால்சியம் குறையும் அதிக உடல் எடை குறையும்.
ஆன்மீக பலன்கள் : மலை போன்று உறுதியாக மனநிலை அமையும்.
எச்சரிக்கை : கழுத்து தேய்மானம் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோயுள்ளவர்கள் இந்த ஆசனத்தைச் செய்யக்கூடாது.
மனம் : தோள்கள்
மூச்சின் கவனம்: கைகளை மேலே தூக்கும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, கீழே இறங்கும் போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : தோள்கள் வலிமையடையும். புஜங்கள் மெலிந்து சீராக அமையும். இதயம் வலிமையடையும். இடுப்பு பகுதி ஊளைச்சதை கரையும்.
குணமாகும் நோய்கள் : தோள்களில் படியும் தேவையற்ற அதிக கால்சியம் குறையும் அதிக உடல் எடை குறையும்.
ஆன்மீக பலன்கள் : மலை போன்று உறுதியாக மனநிலை அமையும்.
எச்சரிக்கை : கழுத்து தேய்மானம் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோயுள்ளவர்கள் இந்த ஆசனத்தைச் செய்யக்கூடாது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
யோக முத்ரா
மனம் : முதுகெலும்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதி
மூச்சின் கவனம் : குனியும்போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு
உடல் ரீதியான பலன்கள் : முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மை பெறும். சிறுநீரகம் வலிமை அடையும். தலைப்பகுதியில் இரத்த ஓட்டம் மிகும். ஞாபக சக்தி கூடும். பிட்யுட்டரி, பீனியல் தைராய்டு, பாராதைராய்டு ஆகிய சுரப்பிகள் தூண்டி விடப்படும். வாழ்நாள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மிகவும் ஏற்ற ஆசனம்.
குணமாகும் நோய்கள் : மலச்சிக்கல் நீங்கும். கர்ப்பப்பை பிரச்சனைகள் நீங்கும். நீரிழிவு நோய் நீங்கும்.
ஆன்மீக பலன்கள் : மனம் கட்டுப்படும். குண்டலினி சக்தி மேல் எழும்பும்.
எச்சரிக்கை : இந்த ஆசனத்தை உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இடுப்பு வலி உள்ளவர்கள், இதய நோயாளிகள் செய்யக்கூடாது.
மனம் : முதுகெலும்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதி
மூச்சின் கவனம் : குனியும்போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு
உடல் ரீதியான பலன்கள் : முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மை பெறும். சிறுநீரகம் வலிமை அடையும். தலைப்பகுதியில் இரத்த ஓட்டம் மிகும். ஞாபக சக்தி கூடும். பிட்யுட்டரி, பீனியல் தைராய்டு, பாராதைராய்டு ஆகிய சுரப்பிகள் தூண்டி விடப்படும். வாழ்நாள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மிகவும் ஏற்ற ஆசனம்.
குணமாகும் நோய்கள் : மலச்சிக்கல் நீங்கும். கர்ப்பப்பை பிரச்சனைகள் நீங்கும். நீரிழிவு நோய் நீங்கும்.
ஆன்மீக பலன்கள் : மனம் கட்டுப்படும். குண்டலினி சக்தி மேல் எழும்பும்.
எச்சரிக்கை : இந்த ஆசனத்தை உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இடுப்பு வலி உள்ளவர்கள், இதய நோயாளிகள் செய்யக்கூடாது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
கோமுகாசனம்
மனம் : தோள்கள், மார்பு புஜங்கள்
மூச்சின் கவனம் : இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள் : மார்பு விரிந்து நுரையீரல்கள், இதயம் வலுவடையும்.
குணமாகும் நோய்கள் : பசியின்மை நீங்கும். எலும்புகள் மற்றும் மூட்டுகள் வலிமை பெறும். மூட்டு வீக்கம் சம்பந்தமான நோய்கள் குணமடையும். தசைப்பிடிப்பு நீங்கும். மூலபந்தம் நடைபெறுவதால் மூல நோயும் குணமாகும்.
எச்சரிக்கை : இந்த ஆசனத்தை கழுத்து தேய்மானம், முதுகெலும்பு தேய்மானம் உள்ளவர்கள் செய்யக்கூடாது.
மனம் : தோள்கள், மார்பு புஜங்கள்
மூச்சின் கவனம் : இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள் : மார்பு விரிந்து நுரையீரல்கள், இதயம் வலுவடையும்.
குணமாகும் நோய்கள் : பசியின்மை நீங்கும். எலும்புகள் மற்றும் மூட்டுகள் வலிமை பெறும். மூட்டு வீக்கம் சம்பந்தமான நோய்கள் குணமடையும். தசைப்பிடிப்பு நீங்கும். மூலபந்தம் நடைபெறுவதால் மூல நோயும் குணமாகும்.
எச்சரிக்கை : இந்த ஆசனத்தை கழுத்து தேய்மானம், முதுகெலும்பு தேய்மானம் உள்ளவர்கள் செய்யக்கூடாது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
வக்ராசனம்
மனம் : இடுப்பு முதுகெலும்பு
மூச்சின் கவனம் : இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள் : உடலின் பக்கவாட்டைச் சுழற்றுவதற்கு சாத்தியமாகிறது. முதுகெலும்பு முழுவதும் நீட்டப்பட்டு ஊக்கமடைகிறது. கீழ்முதுகின் வளையும் தன்மை அதிகரிக்கின்றது. முதுகுத் தண்டு நரம்பின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகின்றது. கல்லீரல், மண்ணீரல், கணையம், குடல்கள், சிறுநீரகப்பை ஆகியவை நன்கு அழுத்தப்படுகின்றன. பாலணுச் சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. கணைய நீர், அட்ரினலின் ஆகிய சுரப்பிகள் நன்கு சுரக்கின்றன. தொடைப்பகுதி வலிமை அடையும்.
குணமாகும் நோய்கள் : மலச்சிக்கல், அஜீரணம், நீரிழிவு நோய், சிறுநீரகக் கோளாறுகள், விரிவடைந்த அல்லது சுருங்கிய கல்லீரல் மண்ணீரல் முதுகின் பின்புறம் ஏற்படும் வலி, இடுப்பு மூட்டுக்களில் வலி, உடல் பருமன், வயிற்றுப் பொருமல் முதலானவற்றிற்கு நல்லது. இடுப்பைச் சுற்றியுள்ள சதையினைக் குறைக்கிறது.
ஆன்மீக பலன்கள் : சோம்பலை அகற்றி யோகி மத்ஸ்யெந்திரர் என்ற மஹான் அடைந்த நிலையை அடைய உதவுகின்றது. சூட்சும நாடி திறக்கப்பட்டு குண்டலினி சக்தி மேல் எழும்.
எச்சரிக்கை : குடல்வாயு (ஹெர்னியா நோய்) உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல்
மனம் : இடுப்பு முதுகெலும்பு
மூச்சின் கவனம் : இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள் : உடலின் பக்கவாட்டைச் சுழற்றுவதற்கு சாத்தியமாகிறது. முதுகெலும்பு முழுவதும் நீட்டப்பட்டு ஊக்கமடைகிறது. கீழ்முதுகின் வளையும் தன்மை அதிகரிக்கின்றது. முதுகுத் தண்டு நரம்பின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகின்றது. கல்லீரல், மண்ணீரல், கணையம், குடல்கள், சிறுநீரகப்பை ஆகியவை நன்கு அழுத்தப்படுகின்றன. பாலணுச் சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. கணைய நீர், அட்ரினலின் ஆகிய சுரப்பிகள் நன்கு சுரக்கின்றன. தொடைப்பகுதி வலிமை அடையும்.
குணமாகும் நோய்கள் : மலச்சிக்கல், அஜீரணம், நீரிழிவு நோய், சிறுநீரகக் கோளாறுகள், விரிவடைந்த அல்லது சுருங்கிய கல்லீரல் மண்ணீரல் முதுகின் பின்புறம் ஏற்படும் வலி, இடுப்பு மூட்டுக்களில் வலி, உடல் பருமன், வயிற்றுப் பொருமல் முதலானவற்றிற்கு நல்லது. இடுப்பைச் சுற்றியுள்ள சதையினைக் குறைக்கிறது.
ஆன்மீக பலன்கள் : சோம்பலை அகற்றி யோகி மத்ஸ்யெந்திரர் என்ற மஹான் அடைந்த நிலையை அடைய உதவுகின்றது. சூட்சும நாடி திறக்கப்பட்டு குண்டலினி சக்தி மேல் எழும்.
எச்சரிக்கை : குடல்வாயு (ஹெர்னியா நோய்) உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
அர்த்த மச்சேந்திராசனம்
விரிப்பில் கால்களை நீட்டியவாறு அமரவும். பின்பு வலது காலை உள்பக்கமாக மடித்து, உட்காரும் பாகத்தருகே பாதத்தை வைத்து கொள்ளவும். இடது காலை மேல்புறமாக மடித்து குத்திட்ட நிலையில் பாதத்தை வலத்தொடையில் வெளிப்புறம் தரையில் பதிக்கவும். இடது முழங்கால் நெஞ்சை ஒட்டியபடி இருக்குமாறும், வலது கையை மடித்து நிறுத்தியுள்ள காலின் உள்வழியாக இடது முட்டியை பிடித்தும், இடது கை முதுகைத் தொட்டும் இருக்க வேண்டும்.
ஒட்டு மொத்தமாக இடுப்பு, முதுகு, தோள்பட்டைகள், தலை, கழுத்து, முதலிய உறுப்புகள் இடது புறம் முறுக்கிய படி பார்வையை நேராக செலுத்தியபடி பத்து விநாடிகள் இந்த ஆசனத்தில் இருக்க வேண்டும். முதுகுத்தண்டு திருகப்படுவதால் உடற்சக்கரங்கள் தூண்டுதல் அடைகிறது. விறைத்த முதுகுத்தண்டு நெகிழும் தன்மையாவதால் முகுள நீர் அழுத்தம் சீர் அடைகிறது. உடல் பருமன் குறையும். மன அழுத்தம் சீரடையும். சிறுநீரக கோளாறு நீங்கும். மொத்தத்தில் உடல், மனம் இரண்டையும் செம்மையாக்கும் அரிய வகை ஆசனம்.
விரிப்பில் கால்களை நீட்டியவாறு அமரவும். பின்பு வலது காலை உள்பக்கமாக மடித்து, உட்காரும் பாகத்தருகே பாதத்தை வைத்து கொள்ளவும். இடது காலை மேல்புறமாக மடித்து குத்திட்ட நிலையில் பாதத்தை வலத்தொடையில் வெளிப்புறம் தரையில் பதிக்கவும். இடது முழங்கால் நெஞ்சை ஒட்டியபடி இருக்குமாறும், வலது கையை மடித்து நிறுத்தியுள்ள காலின் உள்வழியாக இடது முட்டியை பிடித்தும், இடது கை முதுகைத் தொட்டும் இருக்க வேண்டும்.
ஒட்டு மொத்தமாக இடுப்பு, முதுகு, தோள்பட்டைகள், தலை, கழுத்து, முதலிய உறுப்புகள் இடது புறம் முறுக்கிய படி பார்வையை நேராக செலுத்தியபடி பத்து விநாடிகள் இந்த ஆசனத்தில் இருக்க வேண்டும். முதுகுத்தண்டு திருகப்படுவதால் உடற்சக்கரங்கள் தூண்டுதல் அடைகிறது. விறைத்த முதுகுத்தண்டு நெகிழும் தன்மையாவதால் முகுள நீர் அழுத்தம் சீர் அடைகிறது. உடல் பருமன் குறையும். மன அழுத்தம் சீரடையும். சிறுநீரக கோளாறு நீங்கும். மொத்தத்தில் உடல், மனம் இரண்டையும் செம்மையாக்கும் அரிய வகை ஆசனம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
ஆகர்ண தனுராசனம்
காலை 6 மணிக்குள் அல்லது மாலை 6 மணிக்கு மேல் இந்த ஆசனம் செய்ய வேண்டும். வெறும் வயிற்றிலோ அல்லது சாப்பிட்ட 3 மணி நேரத்திற்கு மேல் செய்யலாம்.
செய்முறை : அமர்ந்த நிலையில் கை கால்கள் இணைந்த செயல் ஆசனம். இயல்பான மூச்சுடன் நமது முழு சிந்தனையும் காதை நோக்கி இருக்க வேண்டும். இடது கால் நீட்டப்பட்டு, வலது காலை மடித்து, வலது பாத கட்டை விரலை வலது கையால் பிடித்து பாதத்தை வலது காதருகே கொண்டு செல்ல வேண்டும். இப்படி வலம் இடம் மாற்று முறையில், கை மற்றும் கால்களை எதிர்புறம் மாற்றி செய்யப்படுவதாகும்.
பலன் : செவிப்பறை, காது குருத்தெலும்பு சம்பந்தப்பட்ட நோய், காது அடைப்பு, காதில் இரைச்சல், கேட்கும் திறன் குறைவு, காதில் சீழ் வடிதல் ஆகிய காது சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். காது கேட்கும் சக்தி அதிகரிக்கும்.
காலை 6 மணிக்குள் அல்லது மாலை 6 மணிக்கு மேல் இந்த ஆசனம் செய்ய வேண்டும். வெறும் வயிற்றிலோ அல்லது சாப்பிட்ட 3 மணி நேரத்திற்கு மேல் செய்யலாம்.
செய்முறை : அமர்ந்த நிலையில் கை கால்கள் இணைந்த செயல் ஆசனம். இயல்பான மூச்சுடன் நமது முழு சிந்தனையும் காதை நோக்கி இருக்க வேண்டும். இடது கால் நீட்டப்பட்டு, வலது காலை மடித்து, வலது பாத கட்டை விரலை வலது கையால் பிடித்து பாதத்தை வலது காதருகே கொண்டு செல்ல வேண்டும். இப்படி வலம் இடம் மாற்று முறையில், கை மற்றும் கால்களை எதிர்புறம் மாற்றி செய்யப்படுவதாகும்.
பலன் : செவிப்பறை, காது குருத்தெலும்பு சம்பந்தப்பட்ட நோய், காது அடைப்பு, காதில் இரைச்சல், கேட்கும் திறன் குறைவு, காதில் சீழ் வடிதல் ஆகிய காது சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். காது கேட்கும் சக்தி அதிகரிக்கும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
அமர்ந்த ஏகபாத ஆசனம்
முனிவர்கள் அருளிய ஆயிரக்கணக்கான ஆசன வகைகள் நடைமுறையில் இருந்தும் உடலை வலுப்படுத்தும் ஆசனங்கள் மட்டுமே அதிகமாக கற்பிக்கப்படுகின்றன. ஆனால் ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரம் வெளிப்படுத்தும் மருந்துகளால் குணப்படுத்தமுடியாத நோய்களை நிரந்தரமாக நீக்கும் சஞ்சீவி ஆசனங்களாகும். விரிப்பில் சம்மணமிட்டு அமர்ந்து, விழிகளை திறந்து மூச்சை இயல்பாக விடவும். பிறகு சம்மண நிலையிலிருந்து கால்களை பிரிந்து, வலது காலை அமர்ந்த நிலையில் உள்பக்கம் மடித்து, இடது கால் பாதத்தை கழுத்தின் பின்னால் பிடரியில் படும்படி வைக்கவும். இருகைகளை நெஞ்சருகே வணங்கிய நிலையில் வைக்கவும். இந்த ஆசனம் செய்யும் போது நமது எண்ணத்தை முதுகு தண்டெலும்பில் கீழிருந்து மேல் நோக்கியிருக்கும்படி செய்யவும். அடுத்து இடக்கால் நிலையை வலது காலுக்கும், வலது கால் நிலையை இடது காலுக்கும் மாற்றி செய்யலாம்.
பலன் : இடுப்பு, முழங்கால் பந்து கிண்ணங்கள், அவைகளை இணைக்கும் தசை நார்கள், ரத்தக்குழாய்கள் சீரடைகிறது. முதுகெலும்பு வளையங்களின் இடையே உள்ள ஜவ்வுப்பகுதி சீரடைகிறது. சர்க்கரை நோயாளிகள் பாதம், கால் விரல்களின் பாதிப்பு குறைகிறது. மாலை நேரங்களில் 15 நிமிடம் செய்வது ஏற்றது. எவ்வித அறுவை சிகிச்சை செய்தவர்களும் 6 மாத காலத்திற்கு பின் இந்த பயிற்சியை செய்யலாம்.
முனிவர்கள் அருளிய ஆயிரக்கணக்கான ஆசன வகைகள் நடைமுறையில் இருந்தும் உடலை வலுப்படுத்தும் ஆசனங்கள் மட்டுமே அதிகமாக கற்பிக்கப்படுகின்றன. ஆனால் ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரம் வெளிப்படுத்தும் மருந்துகளால் குணப்படுத்தமுடியாத நோய்களை நிரந்தரமாக நீக்கும் சஞ்சீவி ஆசனங்களாகும். விரிப்பில் சம்மணமிட்டு அமர்ந்து, விழிகளை திறந்து மூச்சை இயல்பாக விடவும். பிறகு சம்மண நிலையிலிருந்து கால்களை பிரிந்து, வலது காலை அமர்ந்த நிலையில் உள்பக்கம் மடித்து, இடது கால் பாதத்தை கழுத்தின் பின்னால் பிடரியில் படும்படி வைக்கவும். இருகைகளை நெஞ்சருகே வணங்கிய நிலையில் வைக்கவும். இந்த ஆசனம் செய்யும் போது நமது எண்ணத்தை முதுகு தண்டெலும்பில் கீழிருந்து மேல் நோக்கியிருக்கும்படி செய்யவும். அடுத்து இடக்கால் நிலையை வலது காலுக்கும், வலது கால் நிலையை இடது காலுக்கும் மாற்றி செய்யலாம்.
பலன் : இடுப்பு, முழங்கால் பந்து கிண்ணங்கள், அவைகளை இணைக்கும் தசை நார்கள், ரத்தக்குழாய்கள் சீரடைகிறது. முதுகெலும்பு வளையங்களின் இடையே உள்ள ஜவ்வுப்பகுதி சீரடைகிறது. சர்க்கரை நோயாளிகள் பாதம், கால் விரல்களின் பாதிப்பு குறைகிறது. மாலை நேரங்களில் 15 நிமிடம் செய்வது ஏற்றது. எவ்வித அறுவை சிகிச்சை செய்தவர்களும் 6 மாத காலத்திற்கு பின் இந்த பயிற்சியை செய்யலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
குதபாத ஆசனம்
விரிப்பின் மீது கால்களை நீட்டியபடி உட்கார்ந்து, பின் இரு பாதங்களையும் உள்பக்கமாக ஒட்டியபடி இணைக்கவும். இரு கைகளாலும் சேர்த்து கால்களை உள்பக்கமாக இழுத்து உடலை உயர்த்தி, கட்டை விரல் தெரிய கால்களில் மேல் சின் முத்திரையிட்டு வைக்கவும். ஆசனம் செய்யும் போது நமது சிந்தனையை முதுகுத்தண்டின் மீது செலுத்தவும் காலை, மாலை இரு வேளைகளிலும் செய்யலாம். ஒவ்வொரு தடவையும் 30 விநாடிகள் செய்வது நலம்.
பலன் : ஆண்மைக்குறைவு, ஆண்மலடு நீங்கி பெரிதும் பலனளிக்கும். உடல் உஷ்ணம் நீங்கி, மன உளைச்சல்கள் நீங்கும். யானைக்கால் விரைவில் குணமாகும். பெண்கள் மாதத்தில் 5 நாட்களும், கருவுற்ற காலங்களிலும் செய்யக்கூடாது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
புஜங்காசனம்
மனம் : முதுகெலும்பு, அடிவயிறு
மூச்சின் கவனம் : உடலை உயர்த்தும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, உடலை இறக்கும்போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : எடை குறையும். மேற்புற முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மையுடையதாகவும், உறுதியானதாகவும் ஆகிறது. மார்புத்தசைகள் விரிவடைந்து முதுகுதண்டு நரம்புகள் ஊக்கமடைகின்றன. இளமைத் தன்மை நீடிக்கும்.
குணமாகும் நோய்கள் : அதிகவேலைப் பளுவினால் வரும் முதுகுவலி, கழுத்துவலி, கழுத்துப் பிடிப்பு கூன் முதுகு, நுரையீரல் அலர்ச்சி, ஆஸ்துமா, ஜீரணக் கோளாறுகள், வயிற்றுக் கொழுப்பு போன்றவற்றை சரி செய்கின்றது. ஜீரணசக்தி குடலின் இயக்கம் ஆகியவை அதிகரிக்கின்றன. சர்க்கரை நோய் குணமாகும்.
ஆன்மீக பலன்கள் : குண்டலினியின் எழுச்சி உடல் அளவில் வெப்பம் மற்றும் ஆற்றல் வெளிப்பாடாக உணரபடுகின்றது.
எச்சரிக்கை : குடல்வாயு, அதிக இரத்தஅழுத்தம் உள்ளவர்கள் செய்தல் கூடாது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
சலபாசனம்
மனம் : முதுகெலும்பு, அடிவயிறு, கால்கள், தொடைகள்
மூச்சின் கவனம் : கால்கள் உயர்த்தும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, இறக்கும் போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : உடல் எடை குறையும். அட்ரினல் சுரப்பி நன்கு வேலை செய்யும். புஜங்காசனத்தின் பலன்களை இது பூர்த்தி செய்கிறது. இடுப்பு, முதுகின் கீழ்ப்பகுதி, இடுப்பெலும்புக்கூடு, வயிறு, தொடை, சிறுநீரகம், கால்கள் ஆகியவை ஊக்கமடைகின்றன. கணையம் நன்கு செயல்படுகின்றது. கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகங்களில் கல் அடைப்பு ஏற்படாது.
குணமாகும் நோய்கள் : மலச்சிக்கல், வாயுத்தொல்லை, நீரிழிவு, இடுப்பு வாயுப்பிடிப்பு ஆகியவை குணமாகும். கர்ப்பப்பை பிரச்சனைகள் தீரும். விரை வீக்கம் நீங்கும். சுவாச பிரச்சனைகள் நீங்கும்.
ஆன்மீக பலன்கள் : உடல் லேசாக சுறுசுறுப்பானதாக, நன்கு செயல்படக்கூடியதாக ஆகிறது. புலன்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
எச்சரிக்கை : இந்த ஆசனத்தை சிறுநீரகக் கோளாறினால் அவதிப்படுவோர், குடல்வாயு மற்றும் அதிக இரத்த அழுத்தக்காரர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது.
மனம் : முதுகெலும்பு, அடிவயிறு, கால்கள், தொடைகள்
மூச்சின் கவனம் : கால்கள் உயர்த்தும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, இறக்கும் போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : உடல் எடை குறையும். அட்ரினல் சுரப்பி நன்கு வேலை செய்யும். புஜங்காசனத்தின் பலன்களை இது பூர்த்தி செய்கிறது. இடுப்பு, முதுகின் கீழ்ப்பகுதி, இடுப்பெலும்புக்கூடு, வயிறு, தொடை, சிறுநீரகம், கால்கள் ஆகியவை ஊக்கமடைகின்றன. கணையம் நன்கு செயல்படுகின்றது. கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகங்களில் கல் அடைப்பு ஏற்படாது.
குணமாகும் நோய்கள் : மலச்சிக்கல், வாயுத்தொல்லை, நீரிழிவு, இடுப்பு வாயுப்பிடிப்பு ஆகியவை குணமாகும். கர்ப்பப்பை பிரச்சனைகள் தீரும். விரை வீக்கம் நீங்கும். சுவாச பிரச்சனைகள் நீங்கும்.
ஆன்மீக பலன்கள் : உடல் லேசாக சுறுசுறுப்பானதாக, நன்கு செயல்படக்கூடியதாக ஆகிறது. புலன்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
எச்சரிக்கை : இந்த ஆசனத்தை சிறுநீரகக் கோளாறினால் அவதிப்படுவோர், குடல்வாயு மற்றும் அதிக இரத்த அழுத்தக்காரர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
தனுராசனம்
மனம் : முதுகெலும்பு அடி வயிறு தொடைப்பகுதி
மூச்சின் கவனம் : கால்களையும் உடலையும் உயர்த்தும்போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, விடும் போது வெளிமூச்சு
உடல் ரீதியான பலன்கள் : உடலை மெலிய வைத்து சுறுசுறுப்பு ஆக்குகிறது. இடுப்பை வளைக்க உதவும் ரெக்டி தசைகள் நன்கு ஆரோக்கியம் அடைகின்றன. வயிற்றுப் பகுதியில் உள்ள அதிகக் கொழுப்பு குறைகின்றது. இரத்தக்குழாய் சுத்தமடையும். முதுகு எலும்பு நன்கு வலுப்பெறும். அட்ரினல் சுரப்பி நன்கு வலுப்பெறும். அடிவயிற்றுக்கு நல்ல அழுத்தம் கிடைத்து மலம் மலக்குடலுக்குத் தள்ளப்படும். இனப் பெருக்க மண்டலம் வலிமை பெறும்.
குணமாகும் நோய்கள் : சுவாசக் கோளாறுகள், முதுகுவலி, மூட்டு சம்பந்தமான நோய்கள், நீரிழிவு, இரைப்பை, குடல் சம்பந்தமான பிரச்சினைகள் ஆகியவற்றிற்கு நல்லது. ஜீரண சக்தியினை அதிகப்படுத்துகின்றது. மாதவிடாய்ப் பிரச்சனைகள் தீரும். தூக்க மின்மை விலகும்.
ஆன்மீக பலன்கள் : சோம்பலை நீக்கி உடலை சுறுசுறுப்பாக்குகிறது.
எச்சரிக்கை : குடல் வாயு மற்றும் அதிக இரத்த அழுத்தக்காரர்கள் இந்த ஆசனத்தைச் செய்தல் கூடாது. ஆசன நிலையில் ஆடக்கூடாது. இதய நோயாளிகள் இந்த ஆசனத்தை ச் செய்தல் கூடாது.
மனம் : முதுகெலும்பு அடி வயிறு தொடைப்பகுதி
மூச்சின் கவனம் : கால்களையும் உடலையும் உயர்த்தும்போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, விடும் போது வெளிமூச்சு
உடல் ரீதியான பலன்கள் : உடலை மெலிய வைத்து சுறுசுறுப்பு ஆக்குகிறது. இடுப்பை வளைக்க உதவும் ரெக்டி தசைகள் நன்கு ஆரோக்கியம் அடைகின்றன. வயிற்றுப் பகுதியில் உள்ள அதிகக் கொழுப்பு குறைகின்றது. இரத்தக்குழாய் சுத்தமடையும். முதுகு எலும்பு நன்கு வலுப்பெறும். அட்ரினல் சுரப்பி நன்கு வலுப்பெறும். அடிவயிற்றுக்கு நல்ல அழுத்தம் கிடைத்து மலம் மலக்குடலுக்குத் தள்ளப்படும். இனப் பெருக்க மண்டலம் வலிமை பெறும்.
குணமாகும் நோய்கள் : சுவாசக் கோளாறுகள், முதுகுவலி, மூட்டு சம்பந்தமான நோய்கள், நீரிழிவு, இரைப்பை, குடல் சம்பந்தமான பிரச்சினைகள் ஆகியவற்றிற்கு நல்லது. ஜீரண சக்தியினை அதிகப்படுத்துகின்றது. மாதவிடாய்ப் பிரச்சனைகள் தீரும். தூக்க மின்மை விலகும்.
ஆன்மீக பலன்கள் : சோம்பலை நீக்கி உடலை சுறுசுறுப்பாக்குகிறது.
எச்சரிக்கை : குடல் வாயு மற்றும் அதிக இரத்த அழுத்தக்காரர்கள் இந்த ஆசனத்தைச் செய்தல் கூடாது. ஆசன நிலையில் ஆடக்கூடாது. இதய நோயாளிகள் இந்த ஆசனத்தை ச் செய்தல் கூடாது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
உத்தன பாதாசனம்
மனம் : அடி வயிறு
மூச்சின் கவனம் : கால்களைத் தூக்கும்போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, இறக்கும் போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : தொப்பையினைக் குறைக்கும். தொடைகள் வலிமை பெறும். சுவாசம் சீராகும்.
குணமாகும் நோய்கள் : ஜீரண உறுப்புகளும், நரம்புகளும் சீராகும்.
மனம் : அடி வயிறு
மூச்சின் கவனம் : கால்களைத் தூக்கும்போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, இறக்கும் போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : தொப்பையினைக் குறைக்கும். தொடைகள் வலிமை பெறும். சுவாசம் சீராகும்.
குணமாகும் நோய்கள் : ஜீரண உறுப்புகளும், நரம்புகளும் சீராகும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
சர்வாங்காசனம்
மனம் : இருதோள்கள், கழுத்து
மூச்சின் கவனம் : ஆசனங்களின் தாயாக இந்த ஆசனம் திகழ்கிறது. நூறுக்கும் மேற்பட்ட பலன்கள் கிடைக்கும். அனைத்து நோய்களுக்கும் சிறந்த நிவாரணி. தைராய்டை நல்ல நிலையில் வைத்து உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இடுப்புப் பகுதியில் உள்ள உறுப்புகளை நல்லவிதமாகத் தூண்டி பலமடையச் செய்கிறது. மூளை நல்ல இரத்தஓட்டம் பெறுகின்றது. கண் பார்வை கூடும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
குணமாகும் நோய்கள் : வெரிகோஸ்வைன் என்னும் ரத்தக்குழாய் புடைத்துப் போகுதல். தோல் நோய், ஆஸ்துமா, சைனஸ், காதடைப்பு நீங்கும். மூலநோய், குடல்வாயு, தைராய்டு குறைவினால் ஏற்படும் நோய்கள், உள்ளுறுப்புகளில் பலவீனம், அஜீரணம், மலச்சிக்கல், மாதவிடாய்க் கோளாறுகள் முதலியவற்றிற்கு நல்லது. தூக்கமின்மை சரியாகும். அதிக தூக்கம் குறையும். ஆரம்ப கட்ட ஹெர்னியா கர்ப்பப்பை இறக்கம் சரியாகும். வளர்சிதை மாற்றம் கட்டுப்படும்.
ஆன்மீக பலன்கள் : நினைவாற்றல் வளர்கின்றது. மனஒருமைப்பாட்டுக்கும், சமநிலையான மனதிற்கும் நல்லது.
எச்சரிக்கை : அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இடுப்பு கீழ் வாயுவினால் அவதிப்படுவோர், முள்ளெலும்பு நகர்ந்தவர்கள், இதய நோய்கள், கழுத்து பிடிப்பு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது. ஆசனத்தில் இருக்கும் போது தலையினை பக்கவாட்டில் திரும்பி பார்க்ககூடாது.
மனம் : இருதோள்கள், கழுத்து
மூச்சின் கவனம் : ஆசனங்களின் தாயாக இந்த ஆசனம் திகழ்கிறது. நூறுக்கும் மேற்பட்ட பலன்கள் கிடைக்கும். அனைத்து நோய்களுக்கும் சிறந்த நிவாரணி. தைராய்டை நல்ல நிலையில் வைத்து உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இடுப்புப் பகுதியில் உள்ள உறுப்புகளை நல்லவிதமாகத் தூண்டி பலமடையச் செய்கிறது. மூளை நல்ல இரத்தஓட்டம் பெறுகின்றது. கண் பார்வை கூடும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
குணமாகும் நோய்கள் : வெரிகோஸ்வைன் என்னும் ரத்தக்குழாய் புடைத்துப் போகுதல். தோல் நோய், ஆஸ்துமா, சைனஸ், காதடைப்பு நீங்கும். மூலநோய், குடல்வாயு, தைராய்டு குறைவினால் ஏற்படும் நோய்கள், உள்ளுறுப்புகளில் பலவீனம், அஜீரணம், மலச்சிக்கல், மாதவிடாய்க் கோளாறுகள் முதலியவற்றிற்கு நல்லது. தூக்கமின்மை சரியாகும். அதிக தூக்கம் குறையும். ஆரம்ப கட்ட ஹெர்னியா கர்ப்பப்பை இறக்கம் சரியாகும். வளர்சிதை மாற்றம் கட்டுப்படும்.
ஆன்மீக பலன்கள் : நினைவாற்றல் வளர்கின்றது. மனஒருமைப்பாட்டுக்கும், சமநிலையான மனதிற்கும் நல்லது.
எச்சரிக்கை : அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இடுப்பு கீழ் வாயுவினால் அவதிப்படுவோர், முள்ளெலும்பு நகர்ந்தவர்கள், இதய நோய்கள், கழுத்து பிடிப்பு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது. ஆசனத்தில் இருக்கும் போது தலையினை பக்கவாட்டில் திரும்பி பார்க்ககூடாது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
மச்சாசனம்
மனம் : நுரையீரல்கள், மார்பு
மூச்சின் கவனம் : ஆசனத்தில் வேகமான மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, மார்பு சுவாசம்.
உடல் ரீதியான பலன்கள் : சர்வாங்காசனத்தைப் பூர்த்தி செய்யும் ஆசனமாதலால் அதனுடைய எல்லா பலன்களையும் அதிகரிக்கின்றது. மிக நீண்ட நேர மேசை வேலை செய்வோர்க்கு புத்துணர்வு அளிக்கிறது.
குணமாகும் நோய்கள் : நீரிழிவு, ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள் தைராய்டு, பாரா தைராய்டு முதலியவை சரியாகும்.
ஆன்மீக பலன்கள் : உடலும் மனமும் மிகவும் இலேசாக, சுறுசுறுப்பாக, புத்துணர்வாக ஓய்வாக ஆகின்றது.
எச்சரிக்கை :அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கழுத்துப் பிடிப்பு உள்ளவர்கள் செய்யக்கூடாது. வலப்பக்கமோ இடப்பக்கமோ சாயாமல் சரியாக உச்சந்தலை தரையில் வைக்கப்பட வேண்டும்.
மனம் : நுரையீரல்கள், மார்பு
மூச்சின் கவனம் : ஆசனத்தில் வேகமான மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, மார்பு சுவாசம்.
உடல் ரீதியான பலன்கள் : சர்வாங்காசனத்தைப் பூர்த்தி செய்யும் ஆசனமாதலால் அதனுடைய எல்லா பலன்களையும் அதிகரிக்கின்றது. மிக நீண்ட நேர மேசை வேலை செய்வோர்க்கு புத்துணர்வு அளிக்கிறது.
குணமாகும் நோய்கள் : நீரிழிவு, ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள் தைராய்டு, பாரா தைராய்டு முதலியவை சரியாகும்.
ஆன்மீக பலன்கள் : உடலும் மனமும் மிகவும் இலேசாக, சுறுசுறுப்பாக, புத்துணர்வாக ஓய்வாக ஆகின்றது.
எச்சரிக்கை :அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கழுத்துப் பிடிப்பு உள்ளவர்கள் செய்யக்கூடாது. வலப்பக்கமோ இடப்பக்கமோ சாயாமல் சரியாக உச்சந்தலை தரையில் வைக்கப்பட வேண்டும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
பவன முக்தாசனம் (காற்றுக்கு விடுதலை)
மனம் : வயிற்றுப்பகுதி
மூச்சின் கவனம் : வயிறு அழுத்தும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பாக மூச்சு, விடுபடும் போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : வாயுத்தொல்லை நீங்கி ஜீரண சக்தி அதிகரிக்கும். அபான வாயுத்தொல்லை பெருமளவு நீங்கும். அதிக உடல் எடை தொப்பை குறையும். வயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
குணமாகும் நோய்கள் : சர்க்கரை நோய் கட்டுப்படும். மலச்சிக்கல் நீங்கும்.
எச்சரிக்கை : கழுத்துவலி உள்ளவர்கள் முதுகெலும்புப் பிரச்சனைகள் உள்ளவர்கள் செய்யக்கூடாது.
மனம் : வயிற்றுப்பகுதி
மூச்சின் கவனம் : வயிறு அழுத்தும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பாக மூச்சு, விடுபடும் போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : வாயுத்தொல்லை நீங்கி ஜீரண சக்தி அதிகரிக்கும். அபான வாயுத்தொல்லை பெருமளவு நீங்கும். அதிக உடல் எடை தொப்பை குறையும். வயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
குணமாகும் நோய்கள் : சர்க்கரை நோய் கட்டுப்படும். மலச்சிக்கல் நீங்கும்.
எச்சரிக்கை : கழுத்துவலி உள்ளவர்கள் முதுகெலும்புப் பிரச்சனைகள் உள்ளவர்கள் செய்யக்கூடாது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
விபரீத கரணி
மனம் : இடுப்பு கழுத்து
மூச்சின் கவனம்: இயல்பான மூச்சு
பலன்கள்: சர்வாங்கசனத்தின் அனைத்துப் பலன்களும் இதில் கிட்டும். இரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதை செய்யலாம்.
மனம் : இடுப்பு கழுத்து
மூச்சின் கவனம்: இயல்பான மூச்சு
பலன்கள்: சர்வாங்கசனத்தின் அனைத்துப் பலன்களும் இதில் கிட்டும். இரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதை செய்யலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
கூர்மாசனம்
விரிப்பின் மீது அமர்ந்த நிலையில் முழங்காலை மடித்து இருகால்களின் அடிப்பாகம், ஒன்றுக்கொன்று எதிராக சுமார் பத்து அங்குல இடைவெளி இருக்கும்படி கொண்டு வரவும், அவ்விடைவெளியில் முகத்தை புதைத்து நெற்றியை தரையில் பதித்தபடி, இரு கைகளை நீட்டி வணங்கியபடி கைகளை தரைமீது பரவச் செய்யவும். இவ்வாறு நிமிர்ந்த நிலையிலிருந்து குனியும் போது மூச்சை உள்ளிழுக்கவும். இந்த நிலையில் 10 வினாடிகள் கழித்து மெதுவாக கூப்பிய கைகளோடு நிமிரவும். நிமிரும் போது மூச்சை வெளிவிட்டபடி அமர்ந்த நிலைக்கு வந்து கைகளை பிரித்து பக்கவாட்டில் கொண்டு வரவும். குனியும் போது முதுகுத்தண்டின் கீழே (நுனிபாகத்தை) யும், நிமிரும் போது புருவ மத்தியிலும் நினைவை செலுத்தவும். இரண்டு முறை இந்த ஆசனத்தை 2 நிமிட இடைவெளி விட்டு செய்யவும்.
பலன்கள் : மன அமைதி கிடைக்கும். இடுப்பு எலும்பு, முதுகுத்தண்டு எலும்பு, கழுத்தெலும்பு சம்பந்தப்பட்ட வலி நீங்கும் ரத்தத்தில் சிகப்பணுக்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் குறைந்து, குழந்தை பாக்கியம் கிடைக்க செய்யும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
அர்த்த சர்வாங்காசனம்
விரிப்பின் மேல் நோக்கியவாறு (மல்லாந்து) படுத்து கை, கால்களைத் தளர்ந்த நிலையில் வைக்கவும், பின் கால்களை முட்டிவரை மடக்கி, இடுப்பை உயரத்தூக்கி (மேல்நோக்கி) கைகளால் இடுப்பைத் தாங்கி பிடித்து கொள்ளவும். இரு முட்டிக் கால்களை நெற்றியருகே இருக்கும்படி கொண்டு வரவும். பாதங்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும்.
கர்பப்பையில் ஏற்படும் சிறு சிறு ரத்தக்கட்டிகள் மறையும், நச்சு ரத்தம் தேங்கிவிடாமல் வெளியேறும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சூதகவலி ஏற்படாதிருக்கும். அதிக உதிரப்போக்கு, உண்டாகாமலும், காலந்தவறாத மாதவிடாய் ஏற்படும். அனைத்து குடல் உபாதைகள் நீங்குவதோடு, குடலிறக்க நோயும் வராதிருக்கும். இது பெண்களுக்குரிய முக்கியமான ஆசனமாகும்.
விரிப்பின் மேல் நோக்கியவாறு (மல்லாந்து) படுத்து கை, கால்களைத் தளர்ந்த நிலையில் வைக்கவும், பின் கால்களை முட்டிவரை மடக்கி, இடுப்பை உயரத்தூக்கி (மேல்நோக்கி) கைகளால் இடுப்பைத் தாங்கி பிடித்து கொள்ளவும். இரு முட்டிக் கால்களை நெற்றியருகே இருக்கும்படி கொண்டு வரவும். பாதங்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும்.
கர்பப்பையில் ஏற்படும் சிறு சிறு ரத்தக்கட்டிகள் மறையும், நச்சு ரத்தம் தேங்கிவிடாமல் வெளியேறும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சூதகவலி ஏற்படாதிருக்கும். அதிக உதிரப்போக்கு, உண்டாகாமலும், காலந்தவறாத மாதவிடாய் ஏற்படும். அனைத்து குடல் உபாதைகள் நீங்குவதோடு, குடலிறக்க நோயும் வராதிருக்கும். இது பெண்களுக்குரிய முக்கியமான ஆசனமாகும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
யோக நித்ராசனம்
கைகால்களை தளர்த்திய நிலையில் விரிப்பில் மல்லாந்து படுக்கவும். இரு கால்களை நீட்டிய நிலையில் மடித்து இரு பாதங்களை பின்னியவாறு தலையணையாக்கி அதன் மேல் தலையை கிடத்தி கழுத்தின் பின்புறம் நன்கு பதியும்படி வைக்கவும். இரு தொடைகளின் இடையே உள்ளிருந்து கைகளை வெளியே கொண்டு வரவும். பின் விரல்களை கோர்த்து பின்னிய கைகளின் உள்ளே உட்காரும் பாகத்தை தாங்கிய படி ஆசனம் அமைக்கவும் ஆரம்பத்தில் 3 முதல் 10 நிமிடங்களும், பின் படிப்படியாக கால அளவைக் கூட்டியவாறு விரும்பு காலம் வரை இந்த ஆசனத்தில் இருக்கலாம். கால்களை மூடிய நிலையில் மிக இயல்பாக மூச்சை இழுத்து விடவும். இது ஒரு கிடந்த நிலை தியான ஆசனமாகும். மருந்துகளில் சஞ்சீவி போல, ஆசனங்களில் இது சஞ்சீவி ஆகும். பயிற்சியாளரின் நேரடி கண்காணிப்பின்றி இந்த ஆசனத்தை செய்ய முயற்சி செய்ய கூடாது.
பலன் : உடலில் உள்ள ஒட்டு மொத்த சுரப்பிகளை ஒரு சேர சீராக இயக்கும். அடைபட்ட வியர்வைக் கண்கள் திறக்கப்பட்டு, உடலின் துர்நீர் வெளியேற்றப்படும். ரத்தக்குழாய்களில் அடைப்புகள் இருந்தால் அவை நீங்கி ரத்தம் சீராக பாயும். மனதை அமைதி அடைய செய்யும். ஆசனங்களில் அரசி என இது புகழப்படுகிறது.
கைகால்களை தளர்த்திய நிலையில் விரிப்பில் மல்லாந்து படுக்கவும். இரு கால்களை நீட்டிய நிலையில் மடித்து இரு பாதங்களை பின்னியவாறு தலையணையாக்கி அதன் மேல் தலையை கிடத்தி கழுத்தின் பின்புறம் நன்கு பதியும்படி வைக்கவும். இரு தொடைகளின் இடையே உள்ளிருந்து கைகளை வெளியே கொண்டு வரவும். பின் விரல்களை கோர்த்து பின்னிய கைகளின் உள்ளே உட்காரும் பாகத்தை தாங்கிய படி ஆசனம் அமைக்கவும் ஆரம்பத்தில் 3 முதல் 10 நிமிடங்களும், பின் படிப்படியாக கால அளவைக் கூட்டியவாறு விரும்பு காலம் வரை இந்த ஆசனத்தில் இருக்கலாம். கால்களை மூடிய நிலையில் மிக இயல்பாக மூச்சை இழுத்து விடவும். இது ஒரு கிடந்த நிலை தியான ஆசனமாகும். மருந்துகளில் சஞ்சீவி போல, ஆசனங்களில் இது சஞ்சீவி ஆகும். பயிற்சியாளரின் நேரடி கண்காணிப்பின்றி இந்த ஆசனத்தை செய்ய முயற்சி செய்ய கூடாது.
பலன் : உடலில் உள்ள ஒட்டு மொத்த சுரப்பிகளை ஒரு சேர சீராக இயக்கும். அடைபட்ட வியர்வைக் கண்கள் திறக்கப்பட்டு, உடலின் துர்நீர் வெளியேற்றப்படும். ரத்தக்குழாய்களில் அடைப்புகள் இருந்தால் அவை நீங்கி ரத்தம் சீராக பாயும். மனதை அமைதி அடைய செய்யும். ஆசனங்களில் அரசி என இது புகழப்படுகிறது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}
அனைத்தும் பயனுள்ளவை நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மென்று சுவைப்பது நன்று
» புற்று நோயாளிகளுக்கு உதவும் யோகாசனம்
» நோய் தீர்க்கும் யோகாசனம் நிச்சயம் படியுங்கள்
» யோகாசனம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை
» தினம் தினம் வெந்நீர் குடிச்சா நன்மையாமே.. மெய்யாலுமேவா..!
» புற்று நோயாளிகளுக்கு உதவும் யோகாசனம்
» நோய் தீர்க்கும் யோகாசனம் நிச்சயம் படியுங்கள்
» யோகாசனம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை
» தினம் தினம் வெந்நீர் குடிச்சா நன்மையாமே.. மெய்யாலுமேவா..!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|