Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
64 திருவிளையாடல்-சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்!
Page 1 of 1 • Share
64 திருவிளையாடல்-சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்!
சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்!
தமிழ்ச்சங்கத்தில் 48 புலவர்கள் இருந்தனர். அகத்தியர் கற்றுத்தந்த இலக்கணத்திற்கு அகத்தியம் என்று அவரது பெயரைச் சூட்டினர். இலக்கண அடிப்படையில் அதுவரை தாங்கள் இயற்றிய பாடல்களைப் புலவர்கள் சரிபார்த்துக் கொண்டனர். அதன்பின், இலக்கண அடிப்படையில் தங்கள் பாடலே சிறந்தது என ஒருவருக்கொருவர் வாதிட்டனர். யார் பாடல் உயர்ந்தது என ஒரு கலவரமே நடந்தது. காலப்போக்கில் இது பெருமளவில் உருவெடுத்து, சங்கமே அழியும் நிலை வந்துவிட்டது.இது தொடர்ந்தால் சங்கத்தைக் காப்பாற்ற முடியாது என்ற நிலையில், அவர்கள் சுந்தரேஸ்வரரிடமே ஓடினர். இறைவா! எங்களில் யாருடைய பாடல் சிறந்தது என்று அறியும் ஆவலில் சண்டையிடுகிறோம். தாங்களே இவற்றைப் படித்து, எது சிறந்தபாடல் என விடையளிக்க வேண்டும், எனக்கூறி வணங்கினர்.அப்போது சுந்தரேஸ்வரர் அவர்கள் முன் தோன்றினார். புலவர்களே! உங்கள் பாடலில் எது உயர்ந்தது என்பதை நமது நகரில் வசிக்கும் வணிகர் தனபதியின் மகனாலேயே முடியும். நீங்கள் அங்கே சென்று, அந்தப் பிள்ளையிடம் சுவடிகளைக் கொடுங்கள். அவன் சொல்லும் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள், என திருவாய் மலர்ந்தார். புலவர்கள் தனபதியின் இல்லத்துக்கு விரைந்தனர். சங்கப்புலவர்கள் தங்கள் இல்லத்திற்கு வந்தது கண்ட தனபதியின் துணைவி குணசாலினி மிகுந்த ஆனந்தமடைந்தாள். அதே நேரம் அவர்கள் அங்கு வந்த காரணம் தெரியாமல் தவித்தாள்.
புலவர்கள் அவளிடம், அம்மா! வணிகர் எங்கே? உங்கள் பிள்ளை இருக்கிறாரா? என்றனர். இருவரும் இங்கு தான் உள்ளனர், என்றதும், உங்கள் பிள்ளை ருத்ரசர்மனை நாங்கள் காண வேண்டும். சுந்தரேஸ்வரப் பெருமானே அவரைப் பார்த்து, எங்கள் பாடல்களில் எது சிறந்தது என கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும், என்றனர். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அவனால் பிறவியிலேயே பேச முடியாதே. அவன் எப்படி உங்கள் பிரச்னையை தீர்த்து வைக்க முடியும் , என்றாள் அவள். புலவர்கள் சிரித்தனர். அம்மா! இந்தத் தகவல் எங்களுக்கு முன்பே தெரியும். இந்த விஷயத்தையும் சுந்தரேஸ்வரப் பெருமான் எங்களிடம் சொல்லிவிட்டார், என்றதும் ஆச்சரியப்பட்ட அந்தத்தாய் பேச முடியாத தன் பிள்ளைக்கு இத்தகைய ஒரு பெருமையா? சுந்தரேஸ்வரா! மதுரை மண்ணில் வசிக்கும் யாரையும் நீ கைவிட்டதில்லை, என கோயில் இருக்கும் திசைநோக்கி கைகூப்பி வணங்கினாள். சங்கப்புலவர்கள் ருத்ரசர்மனைச் சந்தித்தனர். தங்கள் பிரச்னையை எடுத்துச் சொன்னார்கள். தமிழ்ச்சங்கத்திற்கே வந்துவிட்டார் ருத்ரசர்மன். புலவர்கள் தங்கள் பாடல்களை பாட ஆரம்பித்தனர். அவற்றில் பிடித்தமானவற்றை தாளம் போட்டு ரசித்துக் கேட்டார் அவர். இறுதியாக நக்கீரர்,கபிலர், பாணர் ஆகியோரின் பாட்டுகளே உயர்ந்தவை என தீர்ப்பளித்தான். அதற்காக மற்ற பாடல்களையும் அவர் புறந்தள்ளவில்லை. அவற்றிலுள்ள குற்றங்குறைகளைத் திருத்திக் கொடுத்து, அவற்றையும் அவையில் அங்கீகரிக்கச் செய்தார்.
நன்றி தினமலர்
தமிழ்ச்சங்கத்தில் 48 புலவர்கள் இருந்தனர். அகத்தியர் கற்றுத்தந்த இலக்கணத்திற்கு அகத்தியம் என்று அவரது பெயரைச் சூட்டினர். இலக்கண அடிப்படையில் அதுவரை தாங்கள் இயற்றிய பாடல்களைப் புலவர்கள் சரிபார்த்துக் கொண்டனர். அதன்பின், இலக்கண அடிப்படையில் தங்கள் பாடலே சிறந்தது என ஒருவருக்கொருவர் வாதிட்டனர். யார் பாடல் உயர்ந்தது என ஒரு கலவரமே நடந்தது. காலப்போக்கில் இது பெருமளவில் உருவெடுத்து, சங்கமே அழியும் நிலை வந்துவிட்டது.இது தொடர்ந்தால் சங்கத்தைக் காப்பாற்ற முடியாது என்ற நிலையில், அவர்கள் சுந்தரேஸ்வரரிடமே ஓடினர். இறைவா! எங்களில் யாருடைய பாடல் சிறந்தது என்று அறியும் ஆவலில் சண்டையிடுகிறோம். தாங்களே இவற்றைப் படித்து, எது சிறந்தபாடல் என விடையளிக்க வேண்டும், எனக்கூறி வணங்கினர்.அப்போது சுந்தரேஸ்வரர் அவர்கள் முன் தோன்றினார். புலவர்களே! உங்கள் பாடலில் எது உயர்ந்தது என்பதை நமது நகரில் வசிக்கும் வணிகர் தனபதியின் மகனாலேயே முடியும். நீங்கள் அங்கே சென்று, அந்தப் பிள்ளையிடம் சுவடிகளைக் கொடுங்கள். அவன் சொல்லும் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள், என திருவாய் மலர்ந்தார். புலவர்கள் தனபதியின் இல்லத்துக்கு விரைந்தனர். சங்கப்புலவர்கள் தங்கள் இல்லத்திற்கு வந்தது கண்ட தனபதியின் துணைவி குணசாலினி மிகுந்த ஆனந்தமடைந்தாள். அதே நேரம் அவர்கள் அங்கு வந்த காரணம் தெரியாமல் தவித்தாள்.
புலவர்கள் அவளிடம், அம்மா! வணிகர் எங்கே? உங்கள் பிள்ளை இருக்கிறாரா? என்றனர். இருவரும் இங்கு தான் உள்ளனர், என்றதும், உங்கள் பிள்ளை ருத்ரசர்மனை நாங்கள் காண வேண்டும். சுந்தரேஸ்வரப் பெருமானே அவரைப் பார்த்து, எங்கள் பாடல்களில் எது சிறந்தது என கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும், என்றனர். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அவனால் பிறவியிலேயே பேச முடியாதே. அவன் எப்படி உங்கள் பிரச்னையை தீர்த்து வைக்க முடியும் , என்றாள் அவள். புலவர்கள் சிரித்தனர். அம்மா! இந்தத் தகவல் எங்களுக்கு முன்பே தெரியும். இந்த விஷயத்தையும் சுந்தரேஸ்வரப் பெருமான் எங்களிடம் சொல்லிவிட்டார், என்றதும் ஆச்சரியப்பட்ட அந்தத்தாய் பேச முடியாத தன் பிள்ளைக்கு இத்தகைய ஒரு பெருமையா? சுந்தரேஸ்வரா! மதுரை மண்ணில் வசிக்கும் யாரையும் நீ கைவிட்டதில்லை, என கோயில் இருக்கும் திசைநோக்கி கைகூப்பி வணங்கினாள். சங்கப்புலவர்கள் ருத்ரசர்மனைச் சந்தித்தனர். தங்கள் பிரச்னையை எடுத்துச் சொன்னார்கள். தமிழ்ச்சங்கத்திற்கே வந்துவிட்டார் ருத்ரசர்மன். புலவர்கள் தங்கள் பாடல்களை பாட ஆரம்பித்தனர். அவற்றில் பிடித்தமானவற்றை தாளம் போட்டு ரசித்துக் கேட்டார் அவர். இறுதியாக நக்கீரர்,கபிலர், பாணர் ஆகியோரின் பாட்டுகளே உயர்ந்தவை என தீர்ப்பளித்தான். அதற்காக மற்ற பாடல்களையும் அவர் புறந்தள்ளவில்லை. அவற்றிலுள்ள குற்றங்குறைகளைத் திருத்திக் கொடுத்து, அவற்றையும் அவையில் அங்கீகரிக்கச் செய்தார்.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» 64 திருவிளையாடல்=மா பாதகம் தீர்த்த படலம்!
» 64 திருவிளையாடல்-பாண்டியன் சுரம் தீர்த்த படலம்!
» 64 திருவிளையாடல்-இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்!
» 64திருவிளையாடல் -வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்!
» 64 திருவிளையாடல்-விடையிலச்சினையிட்ட படலம்!
» 64 திருவிளையாடல்-பாண்டியன் சுரம் தீர்த்த படலம்!
» 64 திருவிளையாடல்-இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்!
» 64திருவிளையாடல் -வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்!
» 64 திருவிளையாடல்-விடையிலச்சினையிட்ட படலம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|