Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மன்னாரு - சினிமா விமர்சனம்
Page 1 of 1 • Share
மன்னாரு - சினிமா விமர்சனம்
இந்த மூஞ்சிக்கெல்லாம் இப்படியொரு அதிர்ஷ்டமா என்று இந்த ஒரு புகைப்படத்தை
பார்த்தே புஸ்ஸாகிப் போனார்கள் பல புதுமுக ஹீரோக்கள்..! ஆனால் ஹீரோவான
அப்புக்குட்டியோ தன் வாழ்க்கையில் தனக்குக் கிடைத்த இந்த முதல் முத்தத்தை
நினைத்தே இன்றுவரையில் உருகிப் போயிருக்கிறார்..!
1985-90-களில்
உள்ள போனோமா.. எதையும் மண்டைல ஏத்திக்காம வெளில வந்தோமா.. என்ற டைப்பில்
வெளியான புல் எண்ட்டெர்டெயிண்மெண்ட் டைப் கதை இது..! இதன் கருவை
இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ஏற்கெனவே பல வடிவங்களில் கொத்துப்
புரோட்டா போட்டுவி்ட்டார்கள் என்றாலும், இதில் புதிய நேட்டிவிட்டியில்,
புதிய திரைக்கதை அமைப்போடு களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் ஜெய்சங்கர்..!
கொடைக்கானலை பூர்வீகமாகக் கொண்ட அப்புக்குட்டி 3-ம் வகுப்பு வரை
படித்துவிட்டு லாரியில் மணல் லோடு அள்ளும் வேலைக்கு போய்க்
கொண்டிருக்கிறார். கூடவே மல்லிகா என்றொரு உறவுக்கார பெண்ணை காதலித்துக்
கொண்டிருக்கிறார்.! ஒரு நாள் வேலைக்குச் செல்லும் வழியில் ஷகிலா போஸ்டரின்
அழைப்பின்பேரில் பிட்டு படம் பார்க்கப் போகும் அன்றைய இரவில்தான் நம்ம
அப்புக்குட்டிக்கு சனி பிடிக்கிறது..! அவ்வப்போது அறையில் தங்க இடம்
கொடுக்கும் நண்பனுக்காக, அவனது ரிஜிஸ்தர் மேரேஜூக்கு சாட்சி கையெழுத்து
போடப் போய்.. வம்பை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறான் மன்னாரு..!
கல்யாணம்
முடிந்த கையோடு நண்பனோடும், அவனது புது மனைவியோடும் மன்னாரு
கொடைக்கானலுக்குக் கிளம்பும்போது பெண்ணின் அப்பாவும், வில்லன் கோஷ்டியும்
தேடி வர.. மாப்பிள்ளை நண்பன் பயந்து போய் "நீங்க ரெண்டு பேரும் இதே பஸ்ல
முன்னாடி போங்க, நான் பின்னாடியே வந்தர்றேன்.." என்று சொல்லி நின்று
விடுகிறான்..!
அப்புக்குட்டியும், ஸ்வாதியும் மட்டும்
கொடைக்கானலில் வந்திறங்கி ரூமில் தங்குவதற்காக கணவன், மனைவி என்று பொய்
சொல்லத் துவங்க.. லாட்ஜில் நின்று கொண்டிருந்த அப்புக்குட்டியின் மாமா,
அண்ணனிடம் சிக்கிக் கொண்டு ஊருக்குக் கொண்டு போகப்பட்டு, உண்மையைச் சொல்ல
முடியாமல் தம்பதிகளாக காட்சியளிக்க வேண்டிய கட்டாயம்..!
காதலித்த
முறைப் பெண் அழுது வடிய.. இங்கே பெண்ணின் அப்பாவும், வில்லனும் கொலை
வெறியோடு தேடத் துவங்க.. மாப்பிள்ளை போலீஸ் லாக்கப்பிலும், பின்பு
வில்லனின் லாக்கப்பிலும் சிக்கிக் கொண்டிருக்க.. எப்படி முடிந்தது கதை
என்பதை தியேட்டருக்கு போய் பாருங்க..!
மனைவியாக அழைத்து வந்தவரை
அப்படிச் சொல்ல முடியாமல் வேலைக்காரியாக காட்டும் கதைகள் நிறையவே
வந்திருக்கின்றன..! தன் மனைவியை, நண்பனின் மனைவி என்று சொல்லும் ஆள்
மாறாட்டக் கதைகளும் நிறையவே வந்திருக்கின்றன.. இதில்தான் இப்படியொரு
தினுசான கதையை வைத்து கொஞ்சம் கவர்ந்திருக்கிறார் இயக்குநர்..!
அப்புக்குட்டி
நிறைவாகவே நடித்திருக்கிறார்..! தண்ணியடித்துவிட்டு அவர் ஆடும் ஆட்டமும்,
பஸ்ஸில் அவர் செய்கின்ற கலாட்டாவும் மனிதருக்கு நகைச்சுவையும் வரும் என்பதை
நிரூபித்திருக்கிறது..! மல்லிகாவை நினைத்து ஒரு பக்கம் கோபப்பட்டும்,
ஸ்வாதியிடம் பேசவும் முடியாமல் மனிதர் தவியாய் தவித்து மனதுக்குள் எதுவும்
இல்லாத அப்பாவித்தனத்தை வெளிக்காட்டியிருக்கிறார்..!
ராட்டினம்
ஸ்வாதி ஹீரோயின் என்றாலும், உடன் நடித்திருக்கும் வைசாலிதான் எனக்குப்
பிடித்தமானவராக இருக்கிறார்..! ஆள் நல்ல கலர்.. களையான முகம்.. இந்தப்
படத்துக்காக கருப்பு மேக்கப்பை போட்டு கொஞ்சம் அழகை குறைத்துவிட்டார்கள்..!
அந்த
இயல்பான கிராமத்து இன்னொசென்ட் முகத்தை பார்த்த மாத்திரத்தில் கொண்டு
வந்துவிட்டார்.. அப்புக்குட்டியின் கல்யாணச் செய்தி கேட்டவுடன் ஓடி வந்து
பார்க்கும் அந்த வேகமும், அதே அப்புக்குட்டி தனது வீட்டு வாசலில் நிற்பதை
ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டு மருகுவதும்.. காதல் காட்சிகளில் அவர்
காட்டியிருக்கும் எக்ஸ்பிரஷன்கள் ரொம்பவே இம்ப்ரஸ்ஸிவ்..! தற்கொலைக்கு
முயலும் 2 காட்சிகளிலும் ஒரு பாட்டி தண்ணி இறைத்துக் கொடுக்கும்படி
கேட்கும்போது எரிச்சலுடன் “சாகவும் விட மாட்டேன்றீங்களே..?” என்ற தனது
வெகுளி குணத்தை கடைசிவரையிலும் காட்டியிருக்கிறார்.. வாய்ப்பு கிடைத்தால்
நிச்சயம் ஒரு ரவுண்டு வரலாம்..!
ராட்டினத்தின் மூலம் கிடைத்த
வாய்ப்பை நன்கு அறுவடை செய்து கொண்டிருக்கிறார் இந்த ஸ்வாதி..! உருட்டும்
விழிகளும், கேரளத்து மெதுவடை முகமும், உருளைக்கிழங்கு தோற்றமுமாக இன்னும்
கொஞ்சம் அழகாய் காட்சியளிக்கிறார். அப்புக்குட்டியின் அப்பாவை குற்றம்
சொல்லி பேசுகின்ற ஒரு காட்சியில் மட்டுமே ஏதோ ஒன்றாக நடித்திருக்கிறார்.
மற்றபடி இவருக்கு அதிகப்பட்சம் பரிதவிப்பு எக்ஸ்பிரஷன்களையே
கொடுத்திருப்பதால் அப்புக்குட்டியை பார்த்து நாம் பொறாமைப்பட மட்டுமே
இந்தச் சிவப்பழகியைப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் என்று
நினைக்கிறேன்...!
கொடைக்கானல், தாண்டிக்குடி பகுதிகளின் இயற்கை
அழகை.. அந்த நேட்டிவிட்டியை அழகாக படம் பிடித்திருக்கிறார்
ஒளிப்பதிவாளர்..! “இசையமைப்பாளர் உதயனின் இசையில் எனது குடும்பத்தின் சாயல்
தெரிகிறது..” என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் இசை வெளியீட்டு விழாவில்
பேசினார்.. அதற்கு அச்சாரமே “ஊரையெல்லாம் காவல் காக்கும்” பாட்டுதான்..!
மனதை வருடும், வார்த்தைகளை மென்று விழுங்காமல் அழகாக ஒலித்து, அழகாகவும்
படமாக்கப்பட்டிருக்கிறது..!
தம்பி இராமையா பாடல்களை எழுதி, வசனத்தை
எழுதியிருக்கிறார். நாய்கூட அப்புக்குட்டியை மதிப்பதில்லை என்பதை
நிரூபிப்பதற்காக டீக்கடையில் வறுக்கியை வாங்கி நாய்க்கு போட்டு சோதனை
செய்யும் காமெடி, வசனமும், கதையும் சேர்ந்தது.. அண்ணியின் கையைத்
தட்டிவிட்டு மரியாதை முக்கியம் என்று அப்புக்குட்டி மிரட்டுவதும்.. தம்பி
இராமையாவின் மீதான மரியாதையை நிரூபிக்கும் வகையில் பலரும் அவரை கிண்டல்
செய்யும் வசனங்களும் அவர் நல்லதொரு ரைட்டர் என்பதை நிரூபிக்கிறது..!
அந்த
புது மாப்பிள்ளைக்காரன் அடுத்த பஸ்ஸை பிடித்து ஓடி வந்திருந்தாலோ, அல்லது
போலீஸிடம் சிக்கிய பின்பு தப்பித்து இவர்களைத் தேடி வந்திருந்தாலோ படம்
உடனுக்குடன் முடிஞ்சு போயிருக்கும்.. அல்லது ஸ்வாதியே திரும்பிப்
போயிருந்தாலும் கதை காலிதான்.. இரண்டேகால் மணி நேர படத்திற்காக கதை
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதியிருப்பதால், அந்த லாஜிக்கை நாம்
சந்தேகிக்கவே கூடாது.. முடியாது..! எடுத்தவரைக்கும் படம்
ரசிக்கும்படியாகத்தான் உள்ளது..!
ஒரேயொரு குறை.. திருநங்கைகளை
கிண்டல் செய்வது போல பாடல் காட்சியை வைத்திருப்பதும், அது கதைக்கு ஒட்டாமல்
தனித்து நிற்பதும்தான்..! இந்த ஆட்டத்தில் பாண்டியராஜன் வேறு..!? ஏன்,
எதற்கு என்றுதான் தெரியவில்லை..!
வன்முறை. ஆபாசம்.. அதீத கவர்ச்சி..
இது எதுவுமில்லாமல் பொழுது போனால் போதும் என்று நினைத்தீர்களேயானால்
அவசியம் இந்தப் படத்திற்குச் செல்லவும்..!
நன்றி: இணையம்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மன்னாரு - சினிமா விமர்சனம்
அப்ப படம் நல்லாயிருக்கும்னு சொல்ற ம்ம்ம்ம் பாப்போம்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: மன்னாரு - சினிமா விமர்சனம்
Chellam wrote:அப்ப படம் நல்லாயிருக்கும்னு சொல்ற ம்ம்ம்ம் பாப்போம்
நெட்ல பார்க்கக்கூடாது...., திரை அரங்கு சென்று பாருங்கள்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மன்னாரு - சினிமா விமர்சனம்
தியட்டர்ல போய் பாத்துடுவோம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மன்னாரு - சினிமா விமர்சனம்
செந்தில் wrote:தியட்டர்ல போய் பாத்துடுவோம்
நல்லது அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மன்னாரு - சினிமா விமர்சனம்
என் உயிர் நீயே wrote:Chellam wrote:அப்ப படம் நல்லாயிருக்கும்னு சொல்ற ம்ம்ம்ம் பாப்போம்
நெட்ல பார்க்கக்கூடாது...., திரை அரங்கு சென்று பாருங்கள்
இந்த படத்தோட புரொடியூசர் மாதிரியே பேசுரியேடா ரொம்ப ஓவர்டா தம்பி இதெல்லாம்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: மன்னாரு - சினிமா விமர்சனம்
Chellam wrote:என் உயிர் நீயே wrote:Chellam wrote:அப்ப படம் நல்லாயிருக்கும்னு சொல்ற ம்ம்ம்ம் பாப்போம்
நெட்ல பார்க்கக்கூடாது...., திரை அரங்கு சென்று பாருங்கள்
இந்த படத்தோட புரொடியூசர் மாதிரியே பேசுரியேடா ரொம்ப ஓவர்டா தம்பி இதெல்லாம்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மன்னாரு - சினிமா விமர்சனம்
சரி சரி நெட்ல பாக்குற லிங்காவது கொடுடா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: மன்னாரு - சினிமா விமர்சனம்
Chellam wrote:சரி சரி நெட்ல பாக்குற லிங்காவது கொடுடா
அதுக்கு தான் நானும் காத்திருக்கிறேன்
கிடைத்தால் தாருங்கள்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மன்னாரு - சினிமா விமர்சனம்
Chellam wrote:நல்லது தம்பி நடக்கட்டும்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மன்னாரு - சினிமா விமர்சனம்
என் உயிர் நீயே wrote:
அண்ணா நான் ஆன்லைன் ல பாக்குறது இல்ல அண்ணா
ஓ அந்த அளவுக்கு போயாச்சா
Re: மன்னாரு - சினிமா விமர்சனம்
சூர்யா wrote:என் உயிர் நீயே wrote:
அண்ணா நான் ஆன்லைன் ல பாக்குறது இல்ல அண்ணா
ஓ அந்த அளவுக்கு போயாச்சா
எந்த அளவுக்கு
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மன்னாரு - சினிமா விமர்சனம்
ஆன்லைன்ல பாக்க எங்கடா உனக்கு நேரம் இருக்கு உனக்குதான் போன் பேசவே நேரம் சரியா இருக்கே அப்பறம் எப்படி இந்த படம்லாம் பாப்பியா நீ
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: மன்னாரு - சினிமா விமர்சனம்
Chellam wrote:ஆன்லைன்ல பாக்க எங்கடா உனக்கு நேரம் இருக்கு உனக்குதான் போன் பேசவே நேரம் சரியா இருக்கே அப்பறம் எப்படி இந்த படம்லாம் பாப்பியா நீ
எல்லாம் தெரிச்ச நீங்க இப்படி சொல்லுரிங்க நான் எப்பயாவது தான் பேசுவான்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மன்னாரு - சினிமா விமர்சனம்
சூர்யா wrote:உயிர் உன்னைபத்தி எல்லா மேட்டரும் என்கிட்ட செல்லம் சொல்லியாச்சு
என்ன சொன்னாங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மன்னாரு - சினிமா விமர்சனம்
சூர்யா wrote:விவரமா வேற கேளு
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» துப்பாக்கி - சினிமா விமர்சனம்
» சமர் - சினிமா விமர்சனம்
» பாகன் – சினிமா விமர்சனம்
» சூது கவ்வும் - சினிமா விமர்சனம்
» எதிர் நீச்சல்-சினிமா விமர்சனம்
» சமர் - சினிமா விமர்சனம்
» பாகன் – சினிமா விமர்சனம்
» சூது கவ்வும் - சினிமா விமர்சனம்
» எதிர் நீச்சல்-சினிமா விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|