தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


''சீக்கிரம்..5.30 மணி ஆயிருச்சு, கரண்ட் போயிரும், மிக்சியில அரைக்க வேண்டியத அரைச்சிட்டியா?''

View previous topic View next topic Go down

''சீக்கிரம்..5.30 மணி ஆயிருச்சு, கரண்ட் போயிரும், மிக்சியில அரைக்க வேண்டியத அரைச்சிட்டியா?''  Empty ''சீக்கிரம்..5.30 மணி ஆயிருச்சு, கரண்ட் போயிரும், மிக்சியில அரைக்க வேண்டியத அரைச்சிட்டியா?''

Post by முரளிராஜா Tue Sep 18, 2012 11:13 am

சென்னை : சீக்கிரம்... சீக்கிரம்.... ஐந்தரை மணி ஆயிருச்சு. மிக்சியில அரைக்க வேண்டிய அரைச்சிட்டியா என்ற பதட்டக் கேள்விகள், படபடப்பு நிமிடங்களுடன் அரக்கப் பரக்க விடிகிறது தமிழர்களின் வாழ்க்கை.

இன்னும் ரெண்டு நிமிஷம் இருக்கு, இன்னும் ஒருநிமிஷம் இருக்கு கவுண்டவுன் போல ஓட ஆரம்பித்து விட்டது தமிழ்நாட்டு ஜனங்களின் அன்றாட வாழ்க்கை. கரண்ட் அபயர்ஸ் பற்றி யாரும் இப்போது கவலைப்படுவது இல்லை. மாறாக கரண்ட் இருக்கா, இல்லையா, இருந்தா, எப்ப போகும், போனா எப்ப வரும் இதுதான் மக்களின் ஒரே பேச்சாக, மூச்சாக மாறிப் போயுள்ளது.

ஊரிலிருந்து யாராவது போன் போட்டால் கூட அங்க மழை தண்ணி பெய்யுதா? என்று கேட்டது போய் அங்க கரண்ட் இருக்கா? எத்தனை தடவை போகுது, 12 மணி நேரமா, அட பரவாயில்லையே, எங்க ஏரியாவுல 10 மணி நேரம்தான் புடுங்குறாங்க என்ற விசாரிப்புகளுக்கு மக்கள் பழகிப் போய் விட்டார்கள்.

பருவமழையில் நனைகிறோமோ இல்லையோ இரவில் வியர்வை மழையில் நனைந்து கொண்டே உறங்க வேண்டியிருக்கிறது. எப்போ தீரும் இந்த கரண்டு பிரச்சினை என்று கேட்டது போய் அதுவே நாளடைவில் பழகிப்போய்விட்டது.

இன்னும் மூன்று மாதத்தில் சரியாகும், 6 மாதத்தில் சரியாகும் என்று அரசிடம் இருந்தும், அமைச்சரிடம் இருந்தும் நாளொரு அறிவிப்புகளும், பொழுதொரு பேட்டியுமா வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் சொன்னதுபோல மின்சாரம் வந்த பாடில்லை. ஆனால் அறிவிப்புகள் மட்டும் ஊடகங்களில் நின்றபாடில்லை.

சென்னையைத் தவிர தமிழ்நாடு முழுவதும் காலை 6 மணி முதல் 9 மணி வரை ஒரே நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. பிற்பகலில் 12 மணி முதல் 2 மணிவரையிலும் அதேபோல் மாலை 6 மணிக்கு துண்டிக்கப்படுகிறது. இரவில் கேட்கவே வேண்டாம் சொல்லாமல் கொல்லாமல் துண்டிக்கப்படுவதால் தலைநகரில் வசிப்பவர்களைத் தவிர தமிழனின் இரவுகள் தூக்கம் தொலைந்த இரவுகளாகவே விடிகின்றன.

இதற்கு என்றைக்கு விடிவு காலம் வரும் என்பதுதான் ஒவ்வொரு தமிழனின் முன்னால் நிற்கும் கேள்வி. தலைநகரத் தமிழன் மட்டும்தான் இன்று 'பவரோடு' இருக்கிறான், மற்றவர்கள் எல்லாம் பேட்டரி பிடுங்கப்பட்ட பொம்மைக் கார்களைப் போல அவலக் கொலுவீற்றிருக்கும் துயரம்தான்...!
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

''சீக்கிரம்..5.30 மணி ஆயிருச்சு, கரண்ட் போயிரும், மிக்சியில அரைக்க வேண்டியத அரைச்சிட்டியா?''  Empty Re: ''சீக்கிரம்..5.30 மணி ஆயிருச்சு, கரண்ட் போயிரும், மிக்சியில அரைக்க வேண்டியத அரைச்சிட்டியா?''

Post by Manik Tue Sep 18, 2012 11:15 am

எங்கள் ஊரில் அதிகபட்சம் 8 மணி நேரம் தடை செய்கிறார்கள் ஆனால் சில சமயம் அது 6 மணி நேரமாகிவிடுகிறது. ஹிஹிஹிஹி

எங்க வீட்லயும் அதே பிரச்சனைதான் 5.30 மணிக்கு எந்திரிச்சு சட்னி ஆட்ட சொன்னா உப்பு இல்லாம ஆட்டுறாங்க
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum