தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலக நீரிழிவு தினம்: சர்க்கரை நோயால் 37 கோடி பேர் பாதிப்பு

View previous topic View next topic Go down

உலக நீரிழிவு தினம்: சர்க்கரை நோயால் 37 கோடி பேர் பாதிப்பு Empty உலக நீரிழிவு தினம்: சர்க்கரை நோயால் 37 கோடி பேர் பாதிப்பு

Post by முரளிராஜா Thu Nov 14, 2013 12:11 pm

[You must be registered and logged in to see this image.]
இன்று உலக நீரிழிவு தினம்.நீரிழிவு நோயை குணப்படுத்துவதற்கு இன்சுலின் மருந்தை கண்டுபிடித்த சார்லஜ் ஹெர்பர்ட் பெஸ்ட் மற்றும் பிரெட்ரிக் பேண்டிங்கை கவுரபடுத்தும் விதமாக, அவரது பிறந்த தினமான இன்று நவம்பர் 14, உலக நீரிழிவு நோய் தினமாக ஐ.நா., அமைப்பால் அறிவிக்கப்பட்டது. 

நமது உடலில் இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகளில் குறை ஏற்படுவதால், ரத்தத்தில் சர்க் கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் ஏற்படுவதே நீரிழிவு நோய். இதில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை, இன்சுலின் முற்றிலும் சுரக்காமல் நின்று விடுவது, இது குழந்தைகளை அதிகளவு பாதிக்கிறது. 

இரண்டாவது வகை, இன்சுலின் போதிய அளவு சுரக்காமல் இருப்பது அல்லது செயல்படாமல் இருப்பது. இவ்வகை தான் நீரிழிவு நோய் உள்ளவர்களில், 90 சதவீதம் பேருக்கு உள்ளது. 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள், இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சிலர் இந்த பாதிப்பு இருப்பது தெரியாமல் கூட வாழ்கின்றனர். 

எங்கு அதிகம்: உலகம் முழுவதும் 37 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2030-க்குள் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 2012-ல் 48 லட்சம் பேர் இறந்துள்ளனர். 

நீரிழிவு நோயால் இறப்பவர்களில் 80 சதவீதம்பேர், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகளை சேர்ந்தவர்கள். 20 வயது முதல் 79 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா உள்ளது. 

இந்தியாவில் மட்டும் ஐந்து கோடிக்கும் அதிகமானோர், இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்நாள் முழுவதும் துரத்தும் இந்த நோய், குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. இந்த குழந்தைகளுக்கு பெற்றோரின் கண்காணிப்பு அவசியம். 

அவர்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதோ, குறைவதோ கூட ஆபத்தில் முடியலாம். மருத்துவ பராமரிப்பும், மருத்துவரின் ஆலோசனையுடன் கூடிய உணவுக் கட்டுப்பாடும் அவசியம். அதிக உணவு, குறைவான வேலை என இருக்கக் கூடாது. 

உடல் எடையில் மாற்றம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி பசி, அதிக தாகம் போன்றவை இதன் அறிகுறிகள். துவக்கத்திலேயே இதற்கு சிகிச்சை எடுக்கத் தவறினால் கண், இருதயம், சிறுநீரகம், கால்பாதம் ஆகியவற்றை பாதிப்படைய செய்யும். உணவு முறைகளாலும், உடற்பயிற்சியாலும் இரண்டாவது வகை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம். 

மரபு ரீதியாக மற்றும் உணவு முறை மூலமாக நீரிழிவு நோய் வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு மனிதனின் வாழ்க்கை முறையும் அவனது சுற்றுப் புறமும் இரண்டாம் நிலை நீரிழிவு நோயில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அவன் தனது பெற்றோரின் மரபணு மூலமாக பெறுவதை விடவும், அவர்களிடமிருந்து வாழ்க்கைமுறை பாடத்தை அதிகமாகக் கற்றுக் கொள்கிறான். 

அவர்களது ஊட்டச்சத்துகளற்ற தவறான உணவு பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளற்ற வாழ்க்கை முறை அவனிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. அக்குபஞ்சர் முறையில் நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுவதாகத் தெரியவந்துள்ளது. 

ஆனால் இதற்கு, மேலும் அறிவியல் சான்றுகள் தேவைப்படுகிறது. அக்குபஞ்சர் முறையில் நரம்பு தொடர்பான வலிகள், நாள்பட்ட வலிகள் போன்றவைக்கு தீர்வு கிடைக்கலாம். இரண்டாம் நிலை நீரிழிவு நோயாளிகளின் உடலில் இன்சுலின் சுரப்பு குறிப்பிட்ட அளவில் இருக்கும். 

ஆனால், அந்த இன்சுலினும் சரியாக வேலை செய்யும் என்று சொல்ல முடியாது. இவ்வகையான இரண்டாம் நிலைநீரிழிவு பெரியவர்களுக்கேவருகிறது. அத்துடன் ஒபீசிட்டி எனப்படும் அதிக எடை உள்ளவர்களையும் அதிகம் தாக்குகிறது. 

டயட், உடற்பயிற்சி மற்றும் வாய் வழியாக மருந்துகள் உட்கொள்வதன் மூலம் இவ்வகை நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். தற்போது டைப் 1 டயபட்டீஸ் அல்லது இன்சுலின் சார்ந்த டயபட்டீஸ் எனப்படுகிறது. பெரும்பாலும் 20 வயதுக்கு உட்பட்டோரே பாதிக்கப்பட்டாலும் எந்த வயதினரும் இவ்வகை நீரிழிவால் பாதிக்கப்படலாம். 

முன்பெல்லாம் கைக்குத்தல் அரிசி உணவைத்தான் உண்டு வந்தார்கள். தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில், பச்சரிசியோ அரை வேக்காட்டு புழுங்கல் அரிசியோ எதுவானாலும் இன்று பாலிஷ் செய்யப்பட்டே கிடைக்கிறது. 

இந்த பாலிஷ் செய்யப்பட்ட அரிசியில் அதிலுள்ள நார்ச்சத்து மட்டுமில்லாமல் அதலிலுள்ள அனைத்து சத்துக்களும் நீக்கப்பட்டுவிடுகின்றன. இத்தகைய அரிசியால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடாது. 

அதிகமான காய்கறிகளுடன் கூடிய மிதமான கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட உணவு வகைகளே சர்க்கரை வராமல் தடுக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும் இதுவே ஏற்றது. 

இந்நோயாளிகளுக்கு சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் சில வகைப் பழங்களையும் சாப்பிடலாம் சத்துக்கள் நிறைந்த உணவுப் பழக்கத்தால் நீரிழிவு மட்டுமல்லாமல் ஹைபர் டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு சேர்தல், வளர்சிதை மாற்றம் மற்றும் உடல்பருமன் போன்றவற்றிலிருந்து தப்பலாம். 

டிவி பார்த்தல், மொபைல் போன் மற்றும் ஐபாட்களில் விளையாடுவது உள்ளிட்ட அனைத்து கேட்ஜெட்டுகளால் குழந்தைகள் அதிக எடை மற்றும் ஒபிசிட்டியால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான குழந்தைகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட "ஜங்க் புட்' களை அதிகம் சாப்பிடுவதாலும், செயற்கை இனிப்புகளாலான பானங்கள், சிப்ஸ், பீட்சா, பர்கர் போன்றவற்றை அதிகம் உண்பதால் சிக்கல் உண்டாகிறது. 

வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளை மட்டுமே உண்டு வெளிஅரங்க விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்தாலே நோய் அண்டாது. ஓட்ஸ் மற்றும் கோதுமை கூட பட்டை தீட்டப்பட்டிருந்தால் அதன் மூலம் சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். 

எதைச் சாப்பிடுவதென்றாலும், அது சிவப்பு அரிசி, முழு கோதுமை ரொட்டி அல்லது ஓட்ஸ் தவிடு நீக்கப்படாத முழு தானியமாக இருப்பது நல்லது. கலோரிகளைக் கூட்டும் விருந்துகளால் சிக்கல்தான். இவை சர்க்கரை அளவை உயர்த்தத் தவறுவதில்லை. 

காரணம், இத்தகைய பார்ட்டிகளில் நொறுக்கு தீனிகளான சிப்ஸ், நாக்கோஸ் மற்றும் எண்ணெயில் பொரிக்கப்படும் ஸ்டார்ட்டர் வகை உணவுப் பண்டங்களே அதிகம் பரிமாறப்படுகின்றன. 

இதுவே, ஆரோக்கியமான, சத்தான உணவு வகைகளைக் கொண்ட சாலட்டுகள், முழு தானியங்கள், பாதாம், முந்திரி போன்ற புரதம் நிறைந்த உணவுகள் கொண்ட பார்ட்டிகள் என்றால் ஆரோக்கியமானதும் கூட. கொழுப்பும் குறையும். முன் சொன்ன முறையே என்றாலும் எப்போதாவது ஒரு முறையென்றால் சரி... 

வாராவாரம் என்றால் அது கூடாததுதான். கருத்தரித்த நிலையில் சில பெண்களுக்கு சர்க்கரை இருப்பதாகக் கண்டு பிடிக்கப்படுகிறது. இதற்குப் பெயர் கர்ப்பகால நீரிழிவு என்று பெயர். கர்ப்பகாலத்தில் உடலில் நிகழும் ஹார்மோன் மாறுபாடுகளாலே சர்க்கரை நோய் வருகிறது. 

கர்ப்பிணிப் பெண்ணின் பெற்றோருக்கு சர்க்கரை இருப்பின், மரபு ரீதியாக அவருக்கும் சர்க்கரை பாதித்து அது கர்ப்பகாலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சர்க்கரை பாதித்த கர்ப்பிணிகளின் உடலில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தாவிட்டால் அது குழந்தையைப் பாதிக்கும். 

மேலும் கருச்சிதைவு மற்றும் குழந்தையின் உடலில் பிறவி ஒழுங்கின்மையை ஏற்படுத்தலாம். பொதுவாக, இவ்வகை கர்ப்பகாலத்தில் வளரும் சர்க்கரை குழந்தை பெற்ற பின்பு தாய்க்கு சரியாகிவிடும். ஆனால், குழந்தை பெற்ற பின்பு 5 10 ஆண்டுகளில் அந்த தாய்க்கு திரும்பவும் நீரிழிவு வருவதற்கு 50-70 சதவீத வாய்ப்புண்டு.

எனவே, ஆரோக்கியமான உணவுத் திட்டத்தின் மூலமும் முறையான குழந்தை பெற்ற பின்பு உடற்பயிற்சிகளை மேற் கொண்டு உடல் எடையை சரியாகப் பேணுவதன் மூலமும் நீரிழிவுத் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.  
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலக நீரிழிவு தினம்: சர்க்கரை நோயால் 37 கோடி பேர் பாதிப்பு Empty Re: உலக நீரிழிவு தினம்: சர்க்கரை நோயால் 37 கோடி பேர் பாதிப்பு

Post by முழுமுதலோன் Thu Nov 14, 2013 12:46 pm

விழிப்புணர்வு பதிவு 

ரொம்பவே கவனமா இருக்கணும் 

silent killer 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum