Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தொகுத்த முல்லாவின் கதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: முல்லா கதைகள்
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
தொகுத்த முல்லாவின் கதைகள்
First topic message reminder :
நாற்றம்
முல்லா ஒரு செல்லப் பிராணியை வளர்க்க விரும்பினார்.
உடனே அவர் மனைவி ஒரு குரங்கைக் கொண்டு வந்தார்.
முல்லாவுக்கு இது பிடிக்கவில்லை.''குரங்கு என்ன சாப்பிடும்?''என்று கேட்டார்.
மனைவி,''நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதை குரங்கும் சாப்பிடும்.''என்று பதில் கூறினார்.'
'அது எங்கே தூங்கப் போகிறது?''என்று அவர் கேட்க,மனைவி,''நம்முடைய படுக்கையில் நம் கூடத்தான்.''என்றார்.முல்லா கோபமுடன்,''நம் படுக்கையிலா?
நாற்றத்தை யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்?''என்று கேட்டார்.
அவர் மனைவி அமைதியாக சொன்னார்,''என்னால் அதைப் பொறுத்துக்
கொள்ள முடியும் என்றால்,குரங்காலும் முடியும் என்று தான் நினைக்கிறேன்.''
நன்றி ; அனைத்து கதைகளும்
இருவர் உள்ளம் தளம்
நாற்றம்
முல்லா ஒரு செல்லப் பிராணியை வளர்க்க விரும்பினார்.
உடனே அவர் மனைவி ஒரு குரங்கைக் கொண்டு வந்தார்.
முல்லாவுக்கு இது பிடிக்கவில்லை.''குரங்கு என்ன சாப்பிடும்?''என்று கேட்டார்.
மனைவி,''நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதை குரங்கும் சாப்பிடும்.''என்று பதில் கூறினார்.'
'அது எங்கே தூங்கப் போகிறது?''என்று அவர் கேட்க,மனைவி,''நம்முடைய படுக்கையில் நம் கூடத்தான்.''என்றார்.முல்லா கோபமுடன்,''நம் படுக்கையிலா?
நாற்றத்தை யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்?''என்று கேட்டார்.
அவர் மனைவி அமைதியாக சொன்னார்,''என்னால் அதைப் பொறுத்துக்
கொள்ள முடியும் என்றால்,குரங்காலும் முடியும் என்று தான் நினைக்கிறேன்.''
நன்றி ; அனைத்து கதைகளும்
இருவர் உள்ளம் தளம்
Re: தொகுத்த முல்லாவின் கதைகள்
குட்டிக்கதை:
****************
"முல்லா ஒருமுறை தன் வீட்டில் மாட்டுவதற்காக கடிகாரம் ஒன்றை வாங்கி வந்தார். சுவரில் கடிகாரத்தை மாட்ட ஆணி அடிக்கலாமென சுத்தியல் தேடினார். கிடைக்கவில்லை.. பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் கேட்டு வாங்கலாமென நினைத்தார். ஆனால், இந்த இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு கதவைத் தட்டி சுத்தியல் கேட்டால் அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ என நினைத்து மறுநாள் காலையில் கேட்டுக் கொள்ளலாம் என்று தீர்மானித்தார்.
ஆனால், மறுநாள் காலையில் பக்கத்து வீட்டுக்கு முல்லா கிளம்பும் போதே ஒரு யோசனை... "சுத்தியலை இரவல் கேட்க காலங்காத்தால வந்துட்டான் பாரு"- னு அவர் நினைச்சிட்டா என்ன பண்றது? சரி.. பிறகு போய் வாங்கிக்கலாம் என்று விட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டார் முல்லா.
இப்படி ஒவ்வொரு முறை முல்லா பக்கத்து வீட்டுக்காரரிடம் சுத்தியலை இரவல் வாங்க கிளம்பும் போதும்.. "விளக்கு வைக்கற நேரத்தில சுத்தியல இரவல் கேட்டு வந்திருக்கான் பாரு".... "வெள்ளிக்கிழமை அதுவுமா சுத்தியலை யாரவது கடன் கொடுப்பாங்களா .." பக்கத்து வீட்டுக்காரர் இப்படி எதாவது சொல்லிவிட்டால் அவமானமாக போய்விடுமே என்று தயங்கி தயங்கியே சுத்தியலை இரவல் கேட்காமல் பல நாட்களை கழித்துவிட்டார் முல்லா.
மாட்டப்படாத கடிகாரம் அடிக்கடி முல்லாவின் கண்களில் பட்டு வெறுப்பேற்றிக் கொண்டிருந்தது.
ஒரு நாள் முல்லா விருட்டென்று பக்கத்து வீட்டுக்குச் சென்றார். "யோவ்.. உன் சுத்தியும் வேணாம்.. ஒண்ணும் வேணாம்.. அத நீயே வெச்சுக்கோ" என்று சத்தம் போட ஆரம்பித்தார். பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒன்றுமே புரியவில்லை"..
நகைச்சுவை கதையாகத் தெரிந்தாலும் இது தெரிவிக்கும் ஆழமான கருத்தையும் நாம் உணர வேண்டும். இதில் வரும் முல்லாவைப் போலத் தான் கணவன் மனைவி தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாகச் பகிர்வதைத் தவிர்த்து மனசுக்குள்ளேயே போட்டுப் புழுங்குகின்றனர். இறுதியில் உறவை அறுத்து எறியும் அளவுக்கு பெரிய சண்டை அவர்களுக்குள் ஏற்படுகிறது.
இந்த நோய்க்கான வைத்தியமும் முக்கியம், நோயே வராதவாறு தடுப்பு முறைகளை கையாளுவதும் மிக முக்கியம்..
ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ்
****************
"முல்லா ஒருமுறை தன் வீட்டில் மாட்டுவதற்காக கடிகாரம் ஒன்றை வாங்கி வந்தார். சுவரில் கடிகாரத்தை மாட்ட ஆணி அடிக்கலாமென சுத்தியல் தேடினார். கிடைக்கவில்லை.. பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் கேட்டு வாங்கலாமென நினைத்தார். ஆனால், இந்த இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு கதவைத் தட்டி சுத்தியல் கேட்டால் அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ என நினைத்து மறுநாள் காலையில் கேட்டுக் கொள்ளலாம் என்று தீர்மானித்தார்.
ஆனால், மறுநாள் காலையில் பக்கத்து வீட்டுக்கு முல்லா கிளம்பும் போதே ஒரு யோசனை... "சுத்தியலை இரவல் கேட்க காலங்காத்தால வந்துட்டான் பாரு"- னு அவர் நினைச்சிட்டா என்ன பண்றது? சரி.. பிறகு போய் வாங்கிக்கலாம் என்று விட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டார் முல்லா.
இப்படி ஒவ்வொரு முறை முல்லா பக்கத்து வீட்டுக்காரரிடம் சுத்தியலை இரவல் வாங்க கிளம்பும் போதும்.. "விளக்கு வைக்கற நேரத்தில சுத்தியல இரவல் கேட்டு வந்திருக்கான் பாரு".... "வெள்ளிக்கிழமை அதுவுமா சுத்தியலை யாரவது கடன் கொடுப்பாங்களா .." பக்கத்து வீட்டுக்காரர் இப்படி எதாவது சொல்லிவிட்டால் அவமானமாக போய்விடுமே என்று தயங்கி தயங்கியே சுத்தியலை இரவல் கேட்காமல் பல நாட்களை கழித்துவிட்டார் முல்லா.
மாட்டப்படாத கடிகாரம் அடிக்கடி முல்லாவின் கண்களில் பட்டு வெறுப்பேற்றிக் கொண்டிருந்தது.
ஒரு நாள் முல்லா விருட்டென்று பக்கத்து வீட்டுக்குச் சென்றார். "யோவ்.. உன் சுத்தியும் வேணாம்.. ஒண்ணும் வேணாம்.. அத நீயே வெச்சுக்கோ" என்று சத்தம் போட ஆரம்பித்தார். பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒன்றுமே புரியவில்லை"..
நகைச்சுவை கதையாகத் தெரிந்தாலும் இது தெரிவிக்கும் ஆழமான கருத்தையும் நாம் உணர வேண்டும். இதில் வரும் முல்லாவைப் போலத் தான் கணவன் மனைவி தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாகச் பகிர்வதைத் தவிர்த்து மனசுக்குள்ளேயே போட்டுப் புழுங்குகின்றனர். இறுதியில் உறவை அறுத்து எறியும் அளவுக்கு பெரிய சண்டை அவர்களுக்குள் ஏற்படுகிறது.
இந்த நோய்க்கான வைத்தியமும் முக்கியம், நோயே வராதவாறு தடுப்பு முறைகளை கையாளுவதும் மிக முக்கியம்..
ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ்
Re: தொகுத்த முல்லாவின் கதைகள்
உங்களால் நம்ப முடியுமா?
***************************************
முல்லாவின் மனைவி அவரிடம் சொன்னார்,''நேற்று நான் என் தோழியின் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.அவள் வீட்டுச் சுவற்றில் ஒரு ஓவியர் அழகாக சிலந்திவலை போன்று வரைந்திருந்தார்.அதை உண்மையான சிலந்திவலை என்று கருதி அவள் வீட்டு வேலைக்காரி ஒட்டடைக்கம்பு கொண்டு சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டாள்.'' முல்லா பளிச்சென்று சொன்னார்,''இதை என்னால் நம்ப முடியவில்லை.''முல்லாவின் மனைவிக்குக் கோபம்.''நான் நேரில் பார்த்தேன் என்று சொல்கிறேன்.நீங்கள் நம்ப முடியவில்லை என்று சொல்கிறீர்களே.இது மாதிரி தத்ரூபமாக வரையக் கூடிய ஓவியர்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?''முல்லா அமைதியாகச் சொன்னார்,''நான் நம்ப முடியவில்லை என்று சொன்னது ஓவியத்தைப் பற்றி அல்ல.வேலைக்காரி சுத்தம் செய்தாள் என்று சொன்னாயே,அதைத்தான்.''
நன்றி தென்றல்
***************************************
முல்லாவின் மனைவி அவரிடம் சொன்னார்,''நேற்று நான் என் தோழியின் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.அவள் வீட்டுச் சுவற்றில் ஒரு ஓவியர் அழகாக சிலந்திவலை போன்று வரைந்திருந்தார்.அதை உண்மையான சிலந்திவலை என்று கருதி அவள் வீட்டு வேலைக்காரி ஒட்டடைக்கம்பு கொண்டு சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டாள்.'' முல்லா பளிச்சென்று சொன்னார்,''இதை என்னால் நம்ப முடியவில்லை.''முல்லாவின் மனைவிக்குக் கோபம்.''நான் நேரில் பார்த்தேன் என்று சொல்கிறேன்.நீங்கள் நம்ப முடியவில்லை என்று சொல்கிறீர்களே.இது மாதிரி தத்ரூபமாக வரையக் கூடிய ஓவியர்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?''முல்லா அமைதியாகச் சொன்னார்,''நான் நம்ப முடியவில்லை என்று சொன்னது ஓவியத்தைப் பற்றி அல்ல.வேலைக்காரி சுத்தம் செய்தாள் என்று சொன்னாயே,அதைத்தான்.''
நன்றி தென்றல்
Re: தொகுத்த முல்லாவின் கதைகள்
யார் செய்தால் என்ன
***********************
முல்லாவின் நண்பர் வருத்தத்துடன் அவரிடம் சொன்னார்,''பத்து ஆண்டுகளுக்கு முன் எனக்குத் திருமணம் ஆனது.அப்போதெல்லாம் வேலை முடித்து நான் வீட்டுக்கு வரும் போதெல்லாம் என் மனைவி,நான் வீட்டினுள் உபயோகிக்கும் செருப்புக்களை தயாராக எடுத்து வெளியே வைத்துக் காத்துக் கொண்டிருப்பாள்.என் நாயும் வேகமாக வந்து என்னைச் சுற்றி சுற்றி வாலாட்டிக் குரைக்கும்.
இப்போது எல்லாம் மாறிவிட்டது.இப்போது என் நாய் செருப்பைக் கொண்டு வந்து தருகிறது.என் மனைவி என்னைப் பார்த்து குரைக்கிறாள்.''முல்லா சொன்னார்,'அதனால் என்ன?முன்னால் அனுபவித்த வசதிகளை இப்போதும் அனுபவிக்கிறாய் அல்லவா?யார் செய்தால் என்ன?''
***********************
முல்லாவின் நண்பர் வருத்தத்துடன் அவரிடம் சொன்னார்,''பத்து ஆண்டுகளுக்கு முன் எனக்குத் திருமணம் ஆனது.அப்போதெல்லாம் வேலை முடித்து நான் வீட்டுக்கு வரும் போதெல்லாம் என் மனைவி,நான் வீட்டினுள் உபயோகிக்கும் செருப்புக்களை தயாராக எடுத்து வெளியே வைத்துக் காத்துக் கொண்டிருப்பாள்.என் நாயும் வேகமாக வந்து என்னைச் சுற்றி சுற்றி வாலாட்டிக் குரைக்கும்.
இப்போது எல்லாம் மாறிவிட்டது.இப்போது என் நாய் செருப்பைக் கொண்டு வந்து தருகிறது.என் மனைவி என்னைப் பார்த்து குரைக்கிறாள்.''முல்லா சொன்னார்,'அதனால் என்ன?முன்னால் அனுபவித்த வசதிகளை இப்போதும் அனுபவிக்கிறாய் அல்லவா?யார் செய்தால் என்ன?''
Re: தொகுத்த முல்லாவின் கதைகள்
உலகத்தில் சிறந்தது (முல்லா கதைகள்)
-----
நஸ்ருதீன் முல்லா அவர்கள் துருக்கி மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார். முல்லாவின் மீது மன்னருக்கு அதிக அபிமானம் இருந்தது. அதனால் அவரை எப்போதுமே தன்னுடன் வைத்துக் கொண்டு அவருடன் உரையாடி மகிழ்ந்தார்.
மன்னர் உணவருந்தும் சமயத்திலெல்லாம் முல்லாவையும் தம்முடன் அமர்ந்து உணவருந்தச் சொல்வார். ஒருநாள் மன்னரும் முல்லாவும் வழக்கம்போல அருகருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.
அன்று பீன்ஸ் கறி சமைக்கப்பட்டிருந்தது. மன்னருக்கு அன்று அதிகமான பசியாக இருந்ததால் பீன்ஸ் கறியை மிகவும் விரும்பிச் சாப்பிட்டார்.
சாப்பாட்டின் இடையே மன்னர் முல்லாவை நோக்கி, “முல்லா உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது நீர் என்ன நினைக்கிறீர் ? “ என்று கேட்டார்.
“சந்தேகமே வேண்டாம். பீன்ஸ் காய்க்கு நிகராக வேறு காயைச் சொல்லவே முடியாது” என்று முல்லா ஆமாம் போட்டார்.
மன்னர் உடனே சமையற்காரனை அழைத்து “இனி சமையலில் பீன்ஸ் கறிக்குத் தான் முதலிடம் தர வேண்டும். அன்றாடம் ஏதாவது ஒரு உருவத்தில் பீன்ஸை உணவுடன் சேர்ந்து விடு” என்று உத்திரவிட்டார்.
நாள் தவறாமல் உணவில் பீன்ஸை சேர்த்துக் கொண்டதால் மன்னருக்கு அந்த காயின் மீது சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டது.
அன்று சாப்பாட்டின் போது பீன்ஸ் பரிமாறப்பட்டபோது மன்னர் முல்லாவை நோக்கி “உலகத்திலேயே மிகவும் மோசமான காய் பீன்ஸ் என்றுதான் நினைக்கிறேன். நீர் என்ன நினைக்கிறீர் ? “ என்று கேட்டார்.
“ஆமாம் மன்னர் அவர்களே, எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் அறிந்த மட்டில் இவ்வளவு மோசமான சுவையே இல்லாத பீன்ஸைப் போன்ற காயைக் கண்டதே இல்லை” என்றார் முல்லா
“என்ன முல்லா, பத்து நாட்களுக்கு முன்னால் நான் கேட்டபோது உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்று சொன்னீர். இப்பொழுது தலை கீழாக மாற்றிப் பேசுகிறீரே” என்று மன்னர் கேட்டார்.
முல்லா சிரித்துக் கொண்டே “மன்னர் அவர்களே! என்ன செய்வது? நான் தங்களிடம் அல்லவா வேலை பார்க்கிறேன். பீன்ஸிடமல்லவே” என்றார்.
மன்னரும் விழுந்து விழுந்து சிரித்தார்.
-----
நஸ்ருதீன் முல்லா அவர்கள் துருக்கி மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார். முல்லாவின் மீது மன்னருக்கு அதிக அபிமானம் இருந்தது. அதனால் அவரை எப்போதுமே தன்னுடன் வைத்துக் கொண்டு அவருடன் உரையாடி மகிழ்ந்தார்.
மன்னர் உணவருந்தும் சமயத்திலெல்லாம் முல்லாவையும் தம்முடன் அமர்ந்து உணவருந்தச் சொல்வார். ஒருநாள் மன்னரும் முல்லாவும் வழக்கம்போல அருகருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.
அன்று பீன்ஸ் கறி சமைக்கப்பட்டிருந்தது. மன்னருக்கு அன்று அதிகமான பசியாக இருந்ததால் பீன்ஸ் கறியை மிகவும் விரும்பிச் சாப்பிட்டார்.
சாப்பாட்டின் இடையே மன்னர் முல்லாவை நோக்கி, “முல்லா உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது நீர் என்ன நினைக்கிறீர் ? “ என்று கேட்டார்.
“சந்தேகமே வேண்டாம். பீன்ஸ் காய்க்கு நிகராக வேறு காயைச் சொல்லவே முடியாது” என்று முல்லா ஆமாம் போட்டார்.
மன்னர் உடனே சமையற்காரனை அழைத்து “இனி சமையலில் பீன்ஸ் கறிக்குத் தான் முதலிடம் தர வேண்டும். அன்றாடம் ஏதாவது ஒரு உருவத்தில் பீன்ஸை உணவுடன் சேர்ந்து விடு” என்று உத்திரவிட்டார்.
நாள் தவறாமல் உணவில் பீன்ஸை சேர்த்துக் கொண்டதால் மன்னருக்கு அந்த காயின் மீது சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டது.
அன்று சாப்பாட்டின் போது பீன்ஸ் பரிமாறப்பட்டபோது மன்னர் முல்லாவை நோக்கி “உலகத்திலேயே மிகவும் மோசமான காய் பீன்ஸ் என்றுதான் நினைக்கிறேன். நீர் என்ன நினைக்கிறீர் ? “ என்று கேட்டார்.
“ஆமாம் மன்னர் அவர்களே, எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் அறிந்த மட்டில் இவ்வளவு மோசமான சுவையே இல்லாத பீன்ஸைப் போன்ற காயைக் கண்டதே இல்லை” என்றார் முல்லா
“என்ன முல்லா, பத்து நாட்களுக்கு முன்னால் நான் கேட்டபோது உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்று சொன்னீர். இப்பொழுது தலை கீழாக மாற்றிப் பேசுகிறீரே” என்று மன்னர் கேட்டார்.
முல்லா சிரித்துக் கொண்டே “மன்னர் அவர்களே! என்ன செய்வது? நான் தங்களிடம் அல்லவா வேலை பார்க்கிறேன். பீன்ஸிடமல்லவே” என்றார்.
மன்னரும் விழுந்து விழுந்து சிரித்தார்.
Page 2 of 2 • 1, 2
![-](https://2img.net/i/empty.gif)
» *முல்லாவின் கதை
» முல்லாவின் கதை.
» முல்லா கதைகள் 4 - முல்லாவின் ஆராய்ச்சி
» முல்லா கதைகள் 7 _ முல்லாவின் உடைவாள்
» படித்து தொகுத்த 200 நகைசுவைகள்
» முல்லாவின் கதை.
» முல்லா கதைகள் 4 - முல்லாவின் ஆராய்ச்சி
» முல்லா கதைகள் 7 _ முல்லாவின் உடைவாள்
» படித்து தொகுத்த 200 நகைசுவைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: முல்லா கதைகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|