Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நாற்காலியுடன் பின்னிப் பிணைந்திருப்பது ஆபத்து
Page 1 of 1 • Share
நாற்காலியுடன் பின்னிப் பிணைந்திருப்பது ஆபத்து
அமர்ந்த நிலையில் இருப்பது, எல்லாருக்குமே பிடிக்கும். 50 ஆண்டு காலத்திற்கு முன், இப்படி அமர்ந்து கிடப்பவர்கள், 'திண்ணைச் சோத்து தடிராமனா நீ...' என, வசவு வாங்குவர். வசவை விடுங்கள்... இப்போதெல்லாம், இது போன்ற, திண்ணை சோத்து, 'வெட்டி ஆபீசர்'களைப் பார்க்க முடிவதில்லை. ஆனால், தடி ராமன்களைப் பார்க்க முடிகிறது. காரணம், கம்ப்யூட்டர் முன், முழு நேரமும் அமர்ந்த நிலையில், வேலை பார்க்க வேண்டிய நிலை.
அத்தியாவசியமாகி விட்டது: அலுவலகங்களில், கம்ப்யூட்டர் இன்றி, எந்த வேலையும் நடப்பதில்லை. புராஜெக்ட்டை, நேரத்திற்குள் முடிக்க வேண்டும்; வந்திருக்கும் இ-மெயில்களுக்கு, உடனடியாக பதில் தர வேண்டும்; அடுத்த பணிக்காக, பின்னணி தகவல்கள் திரட்ட வேண்டும்; வாடிக்கையாளர்களுக்கு, குறித்த நேரத்தில் தகவல் தர வேண்டும் என, பலதரப்பட்ட துறைகளில், பலதரப்பட்ட வேலைகளை, நாற்காலியுடன், பின்னிப் பிணைந்த நிலையில் செய்ய வேண்டி உள்ளது.
இப்போதெல்லாம், பொழுதுபோவது கூட, 'வீடியோ கேம்ஸ்' விளையாடுவது, 'பேஸ் புக், ட்விட்டர்' மூலம், அளவளாவுவது என்றாகி விட்டது.
வேலை நிமித்தமாக, நாற்காலி மீது காதல் கொள்வது, எவ்வளவு பெரிய ஆபத்தில் முடிகிறது என்பதை, உடலில் பாதிப்பு ஏற்படும்போது தான், அனைவரும் உணர்கிறோம்.
பாதிப்பை எப்போது உணர ஆரம்பிக்கிறோம் தெரியுமா? கழுத்து, முதுகு போன்ற பகுதிகளில் வலி ஏற்படும்போது தான். அப்போது கூட, களிம்பு தடவி, அதன் விறுவிறுப்பில் மயங்கி, சில நிமிட நேரத்திற்கு, வலியை மறக்கிறோம்... அவ்வளவே!
பணிக்கு இடையூறாக, வலி, பூதாகாரமாகி நிற்கும்போது தான், மருத்துவரிடம் கேட்க வேண்டும் என்ற நினைப்பிற்கு வருகிறோம். மருத்துவரும், சில மாத்திரைகளைக் கொடுத்து, வலியை தற்காலிகமாக நீக்க, சில ஆலோசனைகளைச் சொல்வார். 'வலியை நிர்வகிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்' எனச் சொல்வார். முடியுமா... வலியை அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும், அந்த வேதனை!
எனவே, இனி, நாற்காலியோடு பின்னிப் பிணைந்து பணி செய்ய நேர்ந்தால், நாற்காலியை விட்டு, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, எழுந்து நடப்பது, சில உடற்பயிற்சிகளைச் செய்வது என்பதை, வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
நாற்காலியா... உஷார்!
'நான் தினமும் காலையில், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். அந்தப் பழக்கமே, என் உடலை சீராக வைக்கும். நீங்கள் சொல்வதை, என்னால் பின்பற்ற முடியாது' என்ற, உங்களின் மன ஓட்டம் புரிகிறது. ஆனால், ஒரு மணி நேர உடற்பயிற்சியும், பத்து மணி நேர, நாற்காலி மீதான காதலும், உங்கள் உடலை சீராக வைத்துக் கொள்ளாது.
பத்து மணி நேரம் நாற்காலியில் அமர்ந்தால், காலில் நீர் கோர்க்கும்; சீரான ரத்த ஓட்டத்திற்கு கேடு உண்டாகும்; நாளாவட்டத்தில், ரத்தத்தில் கெட்ட கொழுப்பு சேர்ந்து, இதய பாதிப்பை உண்டாக்கும்; உடல் பருத்து, உடல் இயக்கத்தில் மந்த நிலை ஏற்படும்; நீரிழிவு நோய் ஏற்படும்; முதுகு, கழுத்து வலி உண்டாகும்; தசை அழற்சி ஏற்படும்; ஒட்டுமொத்தத்தில், உங்கள் ஆயுசு குறையும்.
பயப்பட வேண்டாம்... இந்தப் பிரச்னைக்கு தீர்வு உண்டு!
தேவையான உடற்பயிற்சிகள்: நாற்காலியில் அமர்ந்தபடி செய்யக் கூடிய உடற்பயிற்சிகள் உண்டு.
அதைப் பார்ப்போம்:
* முதுகு நிமிர்ந்த நிலையில், நாற்காலி நுனியில் அமர வேண்டும்.
* இடுப்பு எலும்புக்கு நேராக, கால் முட்டி இருக்கும் வகையிலும், இரண்டு கால்களுக்கும் இடையில், ஒரு தலையணை வைத்துக் கொள்ளும் வகையிலும் அமர வேண்டும். தோள் நிமிர்ந்த நிலையில், கைகளைத் தொங்க விட்டு விடலாம்.
* கால் இடுக்கில் தலையணை வைத்து, இரண்டு முட்டிகளாலும், மெதுவாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
* முன் பாதத்தை மட்டும், தரையில் வைத்து, குதிகாலை மெதுவாகத் தூக்கி, பின், தரையில் வைக்க வேண்டும்.
* இது போல், மூன்று முறை செய்ய வேண்டும்.
இப்படி செய்யும்போது, இடுப்பு எலும்புக்கு உருவாகக் கூடிய அழுத்தம், தசைகளுக்குப் பரவி, எலும்பின் அதீத உழைப்பு குறையும்.
* முன் சொன்னபடியே, நாற்காலி நுனியில் அமர வேண்டும்; கால்களின் நிலையிலும் மாற்றம் இருக்கக் கூடாது.
* முதுகு நிமிர்ந்த நிலையில், இரண்டு தோள்களையும், பின்னுக்கும், முன்னுக்குமாக மெதுவாக அசைக்க வேண்டும்; மேலும், கீழுமாக அசைத்து விடாதீர்கள்; தவறு.
* இது போல், மூன்று முறை.
இதைச் செய்தால், நெஞ்சுக் கூடு விரிவடைந்து, இதய பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க முடியும்
* முன் சொன்னபடியே அமர்ந்த நிலை.
* கால்களின் இடுக்கில் தலையணை வைத்து, அழுத்தம் கொடுத்தவாறே, கையில், கட்டை விரல் தவிர, மற்ற நான்கு விரல்களையும் மடக்கி, தலையில் இரண்டு பக்க பொட்டுகளின் (காதுக்கு மேலே, நெற்றியின் இரண்டு புறங்கள்) மீது வைக்க வேண்டும்.
* மெதுவாக, இரண்டு கைகளின் முட்டியை, ஒருங்கிணைக்கும் வகையில், கைகளை முன் கொண்டு வர வேண்டும்.
* பின், மெதுவாக முட்டிகளை விலக்க வேண்டும்.
* இது போல், 25 முறை செய்ய வேண்டும்.
இந்த பயிற்சியால், இடுப்புக் கீழ் பகுதிகளும், மேல் பகுதிகளும், சீரான உடல் அசைவைப் பெறும்.
* முன் சொன்ன அதே அமர்வு நிலை.
* கால்களுக்கு இடையே தலையணை வைத்து, 20 முறை அழுத்தம் கொடுத்து, விலக்க வேண்டும். கால்கள் இடுக்கில் இருந்து, தலையணை நழுவாத நிலையில், இதைச் செய்ய வேண்டும்.
இடுப்புப் பகுதியில் அசைவைத் தந்து, தசைகளுக்கு வலு சேர்க்கும் பயிற்சி இது.
நன்றி
பரத் சங்கர், ப்ரீத்தி பரத்,
உடல் ஒருங்கிணைப்பு நிபுணர்கள்,
ஹெவன்லி பாடீஸ் ஹியூமன்
பயோ மெக்கானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்,
நெ.6/2, பழைய எண். 79/2, முதல் தளம், 53வது தெரு, ஆஞ்சநேயர் கோவில் அருகில்,
அசோக் நகர், சென்னை - 63.
98408 99950/99623 72909
Re: நாற்காலியுடன் பின்னிப் பிணைந்திருப்பது ஆபத்து
எனக்கு சேரில் உட்காருவதை விட தரையில் தான் சவுகரியமா இரூக்
பகிர்வுக்கு நன்றீ
பகிர்வுக்கு நன்றீ
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: நாற்காலியுடன் பின்னிப் பிணைந்திருப்பது ஆபத்து
விழிப்புணர்வு பகிர்வு சூப்பர்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» உட்கார்ந்திருந்தால் உயிருக்கு ஆபத்து
» வாழ்வில் பின்னிப் பிணைந்த முதுமை ஒரு சுமையல்ல!
» ADHD அலட்சியப்படுத்தினால் ஆபத்து!
» சப்பாத்திக்கு ஆபத்து
» பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களால் ஆபத்து
» வாழ்வில் பின்னிப் பிணைந்த முதுமை ஒரு சுமையல்ல!
» ADHD அலட்சியப்படுத்தினால் ஆபத்து!
» சப்பாத்திக்கு ஆபத்து
» பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களால் ஆபத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|