Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஏற்காடு - சுற்றுலாத்தலம்
Page 1 of 1 • Share
ஏற்காடு - சுற்றுலாத்தலம்
[You must be registered and logged in to see this link.]தமிழகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்த மலை சுற்றுலாத் தலமாக ஏற்காடு விளங்குகிறது. வடக்குப் பகுதி பெரும்பாலும் பாறைகள் நிறைந்ததாகவும், வறட்சியான பகுதியாகக் காணப்பட்டாலும், ஏற்காடு இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பகுதியையும், அதனை ஒட்டி அழகான ஏரியையும் ஒருங்கே அமைந்து பசுமையாகக் காட்சியளிக்கிறது.
இங்கு எப்போதுமே 30 டிகிரி செல்சியசுக்கு மேலும், 13 டிகிரி செல்சியசுக்குக் கீழும் வெப்பநிலை போனதில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். இதனாலேயே, இங்கு எப்போதுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இங்கு சீசன் என்று எதுவுமில்லை. எப்போதுமே இங்கு சீசன் தான்.
மலைச் சுற்றுலா தலங்களில் ஊட்டி மற்றும் கொடைக்கானலை ஒப்பிடும் போது இங்கு குறைந்த செலவில் வந்து போகலாம் என்பதும் இதன் மற்றொரு சிறப்பு.
இங்கு வாழை, பலா மற்றும் ஆரஞ்சு பழங்களின் விளைச்சல் அமோகமாக இருக்கிறது. ஏற்காட்டில் கண்களுக்கு விருந்தளிக்கும் பல இடங்கள் உள்ளன. படகு வசதியுடன் கூடிய ஏரி, லேடிஸ் ஸீட், கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, பகோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில் என சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன.
ஏரியில் படகுப் போக்குவரத்து
ஏற்காட்டில் அமைந்துள்ள ஏரியும், அதில் படகுச் சவாரியும், ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் விஷயங்களாகும். ஏரியைச் சுற்றி அழகான தோட்டமும், ஓங்கி வளர்ந்த மரங்களும் காட்சி அளிப்பது இயற்கை விரும்பிகளுக்கு பிடித்த இடமாக மாறக் காரணமாகிறது. இந்த ஏரிக்கு அருகே அண்ணா பூங்கா என்ற அழகான பூங்காவும் அமைந்துள்ளது. இந்த ஏரியில் நாமே படகு சவாரி செய்து மகிழலாம். ஏரி முழுவதும் படகுப் பயணம் செய்ய தனி வாடகை உண்டு.
லேடீஸ் சீட்
சேலம் மாநகரின் ஒட்டுமொத்த அழகையும் ஒரே இடத்தில் இருந்து ரசிக்க இந்த இடத்தை விட்டால் வேறு எங்கும் வாய்ப்பு கிட்டாது. லேடீஸ் சீட் என்ற இப்பகுதியை பார்க்கத் தவறினால், ஏற்காடு சென்று வந்ததே வீணாகி விடும் என்ற அளவுக்கு மிகவும் பிரம்மிக்கத் தக்க இடமாக இது உள்ளது. இரவு நேரத்தில் இங்கு வந்தால், சேலம் மாநகரமே விண்வெளியில் நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையே மிதப்பது போல் தோன்றும். இதேப்போல பகோடா பாயிண்ட் என்ற இடமும் பாதுகாப்பாக சுற்றுலாப் பயணிகள் சேலம் நகரைப் பார்க்க அமைக்கப்பட்ட ஒரு இடமாக உள்ளது.
கிள்ளியூர் நீர்வீழ்ச்சி
சுமார் 3000 அடி உயர நீர்வீழ்ச்சி ஏற்காட்டின் சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்த்து வருகிறது. இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் ஏராளமான இயற்கைக் காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது.
சேர்வராயன் மலையும், கோயிலும்
சேர்வராயன் மலையின் உச்சியில் அமைந்துள்ளது சேர்வராயன் கோயிலாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடைபெறும் திருவிழாவில் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா வரும் பயணிகளும் பங்கேற்பர்.
ஏப்ரல், மே மாதங்களில் இங்கு மலர்க்கண்காட்சி நடைபெறும். ஏற்காடு அடிவாரத்தில் குருவம்பட்டி உயிரியல் பூங்கா உள்ளது. ஏற்காடு செல்வோர் இங்கும் சென்று வரலாம்.
[You must be registered and logged in to see this link.]
ஏராளமான கருப்பு வெள்ளை திரைப்படங்கள் ஏற்காட்டை சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டவையே. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அதன் அடிவாரப் பகுதியில் அமைந்திருந்தது. தற்போது அந்தப் பகுதி இடிக்கப்பட்டு குடியிருப்புப் பகுதியாக மாற்றப்பட்டுவிட்டாலும், ஸ்டுடியோவின் முகப்புப் பகுதி மட்டும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது. இது சினிமா ஆர்வலர்கள் அவசியம் காண வேண்டிய இடம் என்றும் கூறலாம்.
ஏற்காடு செல்வோர் பஸ் அல்லது ரயில் மூலம் சேலம் வந்து அங்கிருந்து மலைக்குச் செல்லும் சிறப்புப் பேருந்தில் பயணம் செய்யலாம். ஏற்காட்டில் ஒரு சில தங்கும் விடுதிகள் உள்ளன. சேலம் நகரில் குறைந்த வாடகையிலும் அறை வசதிகள் உள்ளன.
மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள அங்குள்ள சுற்றுலாத் துறை அலுவலகத்தின் தொலைபேசி எண் 416449 என்ற எண்ணுக்கும், 413066 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளலாம்.
தினமணி பிளாக்
இங்கு எப்போதுமே 30 டிகிரி செல்சியசுக்கு மேலும், 13 டிகிரி செல்சியசுக்குக் கீழும் வெப்பநிலை போனதில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். இதனாலேயே, இங்கு எப்போதுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இங்கு சீசன் என்று எதுவுமில்லை. எப்போதுமே இங்கு சீசன் தான்.
மலைச் சுற்றுலா தலங்களில் ஊட்டி மற்றும் கொடைக்கானலை ஒப்பிடும் போது இங்கு குறைந்த செலவில் வந்து போகலாம் என்பதும் இதன் மற்றொரு சிறப்பு.
இங்கு வாழை, பலா மற்றும் ஆரஞ்சு பழங்களின் விளைச்சல் அமோகமாக இருக்கிறது. ஏற்காட்டில் கண்களுக்கு விருந்தளிக்கும் பல இடங்கள் உள்ளன. படகு வசதியுடன் கூடிய ஏரி, லேடிஸ் ஸீட், கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, பகோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில் என சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன.
ஏரியில் படகுப் போக்குவரத்து
ஏற்காட்டில் அமைந்துள்ள ஏரியும், அதில் படகுச் சவாரியும், ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் விஷயங்களாகும். ஏரியைச் சுற்றி அழகான தோட்டமும், ஓங்கி வளர்ந்த மரங்களும் காட்சி அளிப்பது இயற்கை விரும்பிகளுக்கு பிடித்த இடமாக மாறக் காரணமாகிறது. இந்த ஏரிக்கு அருகே அண்ணா பூங்கா என்ற அழகான பூங்காவும் அமைந்துள்ளது. இந்த ஏரியில் நாமே படகு சவாரி செய்து மகிழலாம். ஏரி முழுவதும் படகுப் பயணம் செய்ய தனி வாடகை உண்டு.
லேடீஸ் சீட்
சேலம் மாநகரின் ஒட்டுமொத்த அழகையும் ஒரே இடத்தில் இருந்து ரசிக்க இந்த இடத்தை விட்டால் வேறு எங்கும் வாய்ப்பு கிட்டாது. லேடீஸ் சீட் என்ற இப்பகுதியை பார்க்கத் தவறினால், ஏற்காடு சென்று வந்ததே வீணாகி விடும் என்ற அளவுக்கு மிகவும் பிரம்மிக்கத் தக்க இடமாக இது உள்ளது. இரவு நேரத்தில் இங்கு வந்தால், சேலம் மாநகரமே விண்வெளியில் நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையே மிதப்பது போல் தோன்றும். இதேப்போல பகோடா பாயிண்ட் என்ற இடமும் பாதுகாப்பாக சுற்றுலாப் பயணிகள் சேலம் நகரைப் பார்க்க அமைக்கப்பட்ட ஒரு இடமாக உள்ளது.
கிள்ளியூர் நீர்வீழ்ச்சி
சுமார் 3000 அடி உயர நீர்வீழ்ச்சி ஏற்காட்டின் சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்த்து வருகிறது. இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் ஏராளமான இயற்கைக் காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது.
சேர்வராயன் மலையும், கோயிலும்
சேர்வராயன் மலையின் உச்சியில் அமைந்துள்ளது சேர்வராயன் கோயிலாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடைபெறும் திருவிழாவில் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா வரும் பயணிகளும் பங்கேற்பர்.
ஏப்ரல், மே மாதங்களில் இங்கு மலர்க்கண்காட்சி நடைபெறும். ஏற்காடு அடிவாரத்தில் குருவம்பட்டி உயிரியல் பூங்கா உள்ளது. ஏற்காடு செல்வோர் இங்கும் சென்று வரலாம்.
[You must be registered and logged in to see this link.]
ஏராளமான கருப்பு வெள்ளை திரைப்படங்கள் ஏற்காட்டை சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டவையே. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அதன் அடிவாரப் பகுதியில் அமைந்திருந்தது. தற்போது அந்தப் பகுதி இடிக்கப்பட்டு குடியிருப்புப் பகுதியாக மாற்றப்பட்டுவிட்டாலும், ஸ்டுடியோவின் முகப்புப் பகுதி மட்டும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது. இது சினிமா ஆர்வலர்கள் அவசியம் காண வேண்டிய இடம் என்றும் கூறலாம்.
ஏற்காடு செல்வோர் பஸ் அல்லது ரயில் மூலம் சேலம் வந்து அங்கிருந்து மலைக்குச் செல்லும் சிறப்புப் பேருந்தில் பயணம் செய்யலாம். ஏற்காட்டில் ஒரு சில தங்கும் விடுதிகள் உள்ளன. சேலம் நகரில் குறைந்த வாடகையிலும் அறை வசதிகள் உள்ளன.
மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள அங்குள்ள சுற்றுலாத் துறை அலுவலகத்தின் தொலைபேசி எண் 416449 என்ற எண்ணுக்கும், 413066 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளலாம்.
தினமணி பிளாக்
Re: ஏற்காடு - சுற்றுலாத்தலம்
நிஜமாகவே அருமையான குளிர்ச்சியான இடம்! ஆடம்பரம் அணியாத பசுமை! நான் சென்று ரசித்திருக்கிறேன் பிரபு!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|