Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கர்ப்பிணிகளே விரதம் இருக்காதீங்க குழந்தைக்கு நல்லதில்லை!
Page 1 of 1 • Share
கர்ப்பிணிகளே விரதம் இருக்காதீங்க குழந்தைக்கு நல்லதில்லை!
கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும் அதுதான் கருவில் உள்ள குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதேசமயம் கர்ப்பகாலத்தில் என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம் அவற்றை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம் என்கின்றனர் அனுபவசாலிக்கள்.
விரதம் வேண்டாமே
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எந்த காரணத்தைக் கொண்டும் பட்டினியாக இருக்கக் கூடாது. சுகப்பிரசவம் ஆகவேண்டுமே? குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டுமே என்பதற்காக சிலர் கோவிலுக்கு நேர்ந்து கொண்டு விரதம் இருப்பார்கள். இது போன்ற விரதம் எல்லாம் கர்ப்பகாலத்தில் கூடவே கூடாது என்கின்றனர் நிபுணர்கள். அது கர்ப்பிணிகளுக்கும் கரு குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமாம்.
அழுகியதை சாப்பிடவேண்டாம்
அழுகிய, கொஞ்சம் கெட்டுப்போன காய்கறி, பழங்களை நறுக்கிவிட்டு நல்ல பாகத்தை சாப்பிடும் பழக்கம் அறவே வேண்டாம். அதேபோல் வேக வைக்காத, அரை வேக்காட்டுப் பொருட்களை கர்ப்பிணிகள் உண்ண வேண்டாம். ஏனென்றால் நன்கு வேக வைத்த பொருட்களில் அழிக்கப்படும் கிருமிகள், வேக வைக்கப்படாத பொருட்களில் அழிவதில்லை. அதேபோல் அன்றைய தினம் சமைத்த உணவுப் பொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும்.
அதிக சூடு, அதிக குளிர்ச்சி
மிகவும் சூடான பொருட்களை சாப்பிட வேண்டாம். இது கர்ப்பத்தின் போதும், குழந்தை பிறந்த பிறகும் கடைபிடிக்கலாம். அதேபோல் உடலுக்கு அதிக குளிர்ச்சி, அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும் பொருட்களை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல் பழச்சாறுகளை அதிகமாகக் குடிக்க வேண்டாம். ஏனெனில் அதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையற்ற சர்க்கரை சேர்வதால் நீரிழிவு ஏற்படலாம். எனவே பழங்களை கடித்து சாப்பிடுங்க.
அதிக எடையை தூக்காதீங்க
உடலுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும் செயல்களை செய்யக் கூடாது. குனிந்து எடை அதிகம் கொண்ட பொருட்களை தூக்குவது, இடுப்பில் வைப்பது, எட்டாத பொருளை எட்டி எடுப்பது, குதிப்பது, வேகமாக நடப்பது, வாகனம் ஓட்டுவது, நீண்ட தூரப் பயணம் செல்வது, அதிகமான எடையை தூக்கிக் கொண்டு படி ஏறுதல் போன்றவற்றை தவிர்த்தல் நலம். நீண்ட பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் போகக் கூடாது. பேருந்தை தவிர்த்துவிட்டு ரயிலில் செல்லலாம்.
மல்லாக்காகப் படுப்பது கூடாது என்பார்கள். ஏனெனில் குழந்தையின் எடை உங்களது ரத்தக்குழாய்களை அழுத்துவதால் உங்களுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படும். உங்கள் மூச்சுக் காற்றின் அளவு குறையும்போது அது குழந்தையின் உடலையும் தாக்கும். எனவேதான் மல்லாக்காகப் படுக்கக் கூடாது ஒரு பக்கம் ஒருக்களித்து படுக்கவேண்டும் என்கிறார்கள்.
கண்ட மாத்திரை சாப்பிடக்கூடாது
ரத்தப் போக்கு, நீர்க்கசிவு, வயிற்றின் இரு புறத்திலும் லேசான வலி, மலச்சிக்கல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அஜீரணம் போன்றவற்றை உங்களது மகப்பேறு மருத்துவரிடம் சொல்லி உரிய மருத்துவம் பெறுவது அவசியம். இதில் எதையும் அலட்சியப்படுத்தக் கூடாது.
அதேபோல் சாதாரண காய்ச்சல், பேதி போன்ற எந்த நோய்க்கும் மருந்துக் கடைக்காரரிடம் சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது. உங்களது மகப்பேறு மருத்துவரிடம்தான் செல்ல வேண்டும். அவசரத்திற்கு சாதாரண மருத்துவரிடம் செல்ல வேண்டி இருக்கும் பட்சத்தில் கர்ப்பமாக இருப்பதை முதலில் தெரிவித்துவிட வேண்டும்.
மேக் அப் போடாதீங்க
கர்ப்ப காலத்தில் அதிக மேக் அப் வேண்டாம் இயல்பாக இருங்கள். ஏனெனில் அவற்றில் உள்ள ரசாயனங்கள் கருக் குழந்தையை பாதிக்கும் என்கின்றனர். அதேபோல் முகத்திற்கோ, தலைக்கோ, உடலுக்கோ எந்த வித புதிய க்ரீம்களையும் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் எப்போதும் பயன்படுத்தி வந்த பொருட்களையும் அளவோடு பயன்படுத்துங்கள்.
உடலுக்கு இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்திற்கு என்று தளர்த்தியான ஆடைகளை வாங்கி அணியவும். கர்ப்ப காலத்தில் உள்ளாடைகளின் அளவுகளிலும் மாற்றம் ஏற்படும். எனவே அதற்கேற்ற உள்ளாடைகளைத் தேர்வு செய்யவும். அதிக உயரம் கொண்ட குதிகால் செருப்புகள், காற்றுப்புகாத ஆடைகள், அதிக வாசனை திரவியங்கள் வேண்டாம். அதேபோல் மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மனஅழுத்தம் வேண்டாமே
அதிகமான கவலை மற்றும் மன அழுத்தம் பிறக்கும் குழந்தையின் மனநிலையை பாதிக்கும். எனவே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள் அவ்வாறு இல்லாவிட்டாலும் மனதில் கண்டதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமலாவது இருக்க முயற்சி செய்யுங்கள். அதிகமான அலைச்சல், அதிகமான மன, உடல் அழுத்தம் போன்றவையும் தவிர்த்தல் நலம்.
கர்ப்பகாலத்தில் இந்த ஆலோசனைகளை கடைபிடிப்பதன் மூலம் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். பின்பற்றிப் பாருங்களேன்.
boldsky
Re: கர்ப்பிணிகளே விரதம் இருக்காதீங்க குழந்தைக்கு நல்லதில்லை!
நல்ல பயனுள்ள தகவல் அண்ணா நன்றி ......,
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கர்ப்பிணிகளே விரதம் இருக்காதீங்க குழந்தைக்கு நல்லதில்லை!
பயனுள்ள பகிர்வு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கர்ப்பிணிகளே! மூலிகை டீ குடிக்கப் போறீங்களா?
» கழுத்து வலி தான்னு சும்மா இருக்காதீங்க
» நவராத்திரி விரதம்
» மகா சிவராத்திரி விரதம்!
» உங்கள் குழந்தைக்கு
» கழுத்து வலி தான்னு சும்மா இருக்காதீங்க
» நவராத்திரி விரதம்
» மகா சிவராத்திரி விரதம்!
» உங்கள் குழந்தைக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|