Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
டாஸ்மாக்குகள்"எனும் முரண்பாடுகள் - ருத்ரா
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
டாஸ்மாக்குகள்"எனும் முரண்பாடுகள் - ருத்ரா
டாஸ்மாக்குகள்"எனும் முரண்பாடுகள்.
=============================================ருத்ரா
அழகிய புள்ளிமான்.
அதை விரட்டிக்கொண்டு
கொடிய புலி.
இரண்டும் ஓடுகிறது.
புழுதி பறக்கிறது.
கடைசியில்
மானின் தொடை
புலியின் வாயில்.
துள்ளுகின்ற மானின்
குரல் வளையைக்குதறி
அதன் திமிறலுக்கு
ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது புலி.
அப்புறம்
அதை இழுத்துக்கொண்டு
புலி தன் புதருக்கு கொண்டுபோகிறது
அங்கே
அந்த அழகிய புள்ளி
ஒவ்வொன்றும்
மறைந்து போகிறது.
இதன் விலா எலும்புகள்
விறைத்துக்கிடக்கின்றன.
மாட்டு ஈக்கள் மொய்க்கின்றன.
அவற்றின் நீலச்சிறகுகளிடயே
மானின் அழுகும் குருதி
"அனிமல் ப்ளேனட்" டி.வி.யில்
அற்புதமாய் கள களத்து
குமிழி காட்டிக்கொண்டு ஓடுகிறது.
எங்கோ ஒரு பெருமாள் கோயிலில்
கிருஷ்ணன்
"நானே புலியும் மானுமாய்
அவதரித்திருக்கிறேன்"
என்று
சொற்பொழிவு நிகழ்த்துகிறான்.
இதிலே
"சம்பவாமி யுகே யுகே" என்று
தம்பட்டம் வேறு.
நாம் தான்
நம் எண்டெர்டெயின்மெண்டுக்கு
"டாஸ்மாக்" டி.வி.
நடத்துகிறோம்.
இது ஒரு
சோசியல் சேடிஸம்.
மொத்த சமுதாயம்
ஒரு பகுதி அழுகி
புரையோடும்போது
அல்லது
மொத்த சமுதாயமுமே
ரத்த சகதியில்
புதைந்து கிடக்கும்போதும் அதில்
கீதையின் தேர்
உருட்டுகிறோம்.
சங்கத்தமிழின்
"நறியவும் உளவோ நீ அறியும் பூவே"
என்று
அந்த தும்பியிடம்
வேறு எங்கு நல்ல "டாஸ்மாக்"
கிடைக்கும்
என்று கேட்கிறோம்.
சோமம் எனும்
ஒரு வகை கஞ்சாச்செடியின்
சாறு பிழியும்
எந்திர இயக்கங்கள்
இத்யாதி இத்யாதி பற்றியும்
அந்தக்கள்ளை
இந்திரன்
மூக்கு மூட்டக்குடிக்கும் வரை
இந்திரனையே
இந்திரன் சந்திரன் என்று
புகழ்வது பற்றியும்
வரும் ஸ்லோகங்களையெல்லாம்
கழித்து விட்டால்
நமக்கு
ரிக்வேதமே கிடைக்காது.
மனிதனைக்
கரடு முரடாக
பொது நன்மையைக்கருதும்
ஒரு ரோபாவாக மட்டுமே
ஆக்க வேண்டும் என்று
மூர்க்கத்தோடு
எந்திரத்தனமாய்
மாற்றிவிடலாம்
என்று மனப்பால் குடித்த
மாபெரும் கம்யூனிசத்தையே
"நைட் க்ளப்"களும்
"வாட் 69 அல்லது ஒரு
ஷாம்பெய்ன்"பாட்டிலும்
கவிழ்த்துப்போட்டதே.
அறநூல்களையெல்லாம்
கூழாக்கி
அதில் ஒரு
"இறை மனிதனை"வார்த்து
அப்படியே
பில்லியன் கணக்காய்
அவனை அச்சடித்து விடவேண்டும்
என்று கனவு கண்டு
ஏறக்குறைய
அதையும் ஒரு
"டாஸ்மாக்"போதையாக்கி
கூவி கூவி
விற்றுக்கொண்டிருக்கும்
மதங்களும்
இப்படி
மண்ணைக் கவ்விக்கொண்டிருக்கிறதே.
ஆம்.
அந்த சோசியல் சேடிஸம் தான்
அதாவது
அந்த "சமுதாய வதையின்பம்"
நமக்கு
இலவசமாய்
எங்கு பார்த்தாலும்
கனக தாரா ஸ்தோத்திரமாய்
பொன் மழை கொட்டும் வரை
நம் நிழலானா
டாஸ்மாக்
நம்மையே தான்
ஆலிங்கனம் செய்து கொண்டிருக்கும்.
======================================================ருத்ரா
=============================================ருத்ரா
அழகிய புள்ளிமான்.
அதை விரட்டிக்கொண்டு
கொடிய புலி.
இரண்டும் ஓடுகிறது.
புழுதி பறக்கிறது.
கடைசியில்
மானின் தொடை
புலியின் வாயில்.
துள்ளுகின்ற மானின்
குரல் வளையைக்குதறி
அதன் திமிறலுக்கு
ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது புலி.
அப்புறம்
அதை இழுத்துக்கொண்டு
புலி தன் புதருக்கு கொண்டுபோகிறது
அங்கே
அந்த அழகிய புள்ளி
ஒவ்வொன்றும்
மறைந்து போகிறது.
இதன் விலா எலும்புகள்
விறைத்துக்கிடக்கின்றன.
மாட்டு ஈக்கள் மொய்க்கின்றன.
அவற்றின் நீலச்சிறகுகளிடயே
மானின் அழுகும் குருதி
"அனிமல் ப்ளேனட்" டி.வி.யில்
அற்புதமாய் கள களத்து
குமிழி காட்டிக்கொண்டு ஓடுகிறது.
எங்கோ ஒரு பெருமாள் கோயிலில்
கிருஷ்ணன்
"நானே புலியும் மானுமாய்
அவதரித்திருக்கிறேன்"
என்று
சொற்பொழிவு நிகழ்த்துகிறான்.
இதிலே
"சம்பவாமி யுகே யுகே" என்று
தம்பட்டம் வேறு.
நாம் தான்
நம் எண்டெர்டெயின்மெண்டுக்கு
"டாஸ்மாக்" டி.வி.
நடத்துகிறோம்.
இது ஒரு
சோசியல் சேடிஸம்.
மொத்த சமுதாயம்
ஒரு பகுதி அழுகி
புரையோடும்போது
அல்லது
மொத்த சமுதாயமுமே
ரத்த சகதியில்
புதைந்து கிடக்கும்போதும் அதில்
கீதையின் தேர்
உருட்டுகிறோம்.
சங்கத்தமிழின்
"நறியவும் உளவோ நீ அறியும் பூவே"
என்று
அந்த தும்பியிடம்
வேறு எங்கு நல்ல "டாஸ்மாக்"
கிடைக்கும்
என்று கேட்கிறோம்.
சோமம் எனும்
ஒரு வகை கஞ்சாச்செடியின்
சாறு பிழியும்
எந்திர இயக்கங்கள்
இத்யாதி இத்யாதி பற்றியும்
அந்தக்கள்ளை
இந்திரன்
மூக்கு மூட்டக்குடிக்கும் வரை
இந்திரனையே
இந்திரன் சந்திரன் என்று
புகழ்வது பற்றியும்
வரும் ஸ்லோகங்களையெல்லாம்
கழித்து விட்டால்
நமக்கு
ரிக்வேதமே கிடைக்காது.
மனிதனைக்
கரடு முரடாக
பொது நன்மையைக்கருதும்
ஒரு ரோபாவாக மட்டுமே
ஆக்க வேண்டும் என்று
மூர்க்கத்தோடு
எந்திரத்தனமாய்
மாற்றிவிடலாம்
என்று மனப்பால் குடித்த
மாபெரும் கம்யூனிசத்தையே
"நைட் க்ளப்"களும்
"வாட் 69 அல்லது ஒரு
ஷாம்பெய்ன்"பாட்டிலும்
கவிழ்த்துப்போட்டதே.
அறநூல்களையெல்லாம்
கூழாக்கி
அதில் ஒரு
"இறை மனிதனை"வார்த்து
அப்படியே
பில்லியன் கணக்காய்
அவனை அச்சடித்து விடவேண்டும்
என்று கனவு கண்டு
ஏறக்குறைய
அதையும் ஒரு
"டாஸ்மாக்"போதையாக்கி
கூவி கூவி
விற்றுக்கொண்டிருக்கும்
மதங்களும்
இப்படி
மண்ணைக் கவ்விக்கொண்டிருக்கிறதே.
ஆம்.
அந்த சோசியல் சேடிஸம் தான்
அதாவது
அந்த "சமுதாய வதையின்பம்"
நமக்கு
இலவசமாய்
எங்கு பார்த்தாலும்
கனக தாரா ஸ்தோத்திரமாய்
பொன் மழை கொட்டும் வரை
நம் நிழலானா
டாஸ்மாக்
நம்மையே தான்
ஆலிங்கனம் செய்து கொண்டிருக்கும்.
======================================================ருத்ரா
Similar topics
» கவிதை எனும் தீவு (2) -ருத்ரா (ஹைக்கூ)
» இது நம் நாடு - ருத்ரா
» ருத்ரா - சென்ரியூக்கள்
» சாதனை முரண்பாடுகள்
» அது வரை காத்திரு - ருத்ரா
» இது நம் நாடு - ருத்ரா
» ருத்ரா - சென்ரியூக்கள்
» சாதனை முரண்பாடுகள்
» அது வரை காத்திரு - ருத்ரா
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|