தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை - Page 2 Empty சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 02, 2014 10:42 pm

First topic message reminder :

நன்றி [You must be registered and logged in to see this link.]

தமிழகத்து வரலாற்றுக்குட்பட்ட காலம் சங்க காலம் ஆகும். இக்காலத்தில் தமிழரின் நாகரிகம் முழு வளர்ச்சியுற்றிருந்தது. மூன்று பேரரசுகள் சங்க காலத்தில் அமைந்திருந்ததைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இம்மூன்று பேரரசுகளை ஆண்ட மன்னர்கள் தங்கள் நாட்டிற்கு நன்மையைச் செய்து மேன்மையடையச் செய்தனர். ஒவ்வோர் மன்னர்க்கும் இடையே ஆதிக்கப்போட்டி நடைபெற்று வந்தாலும் நாட்டின் நலனில் அக்கறை கொண்டிருந்தனர். இச்சங்க காலத்தின் அரசியலில் மக்களின் பங்கும் அவசியமாகிறது. எனவே அக்கால மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகிறது.
சங்க காலத்தில் நாடானது நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு அந்நிலத்தின் வழியே மக்களும் தங்களது வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தனர். குறிப்பாகக் காடும் காட்டைச் சார்ந்த இடத்தை முல்லை என்றும், மலையும், மலையைச் சார்ந்த இடத்தை குறிஞ்சி என்றும், வயலும் வயலைச் சார்ந்த இடத்தை மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த பகுதியை நெய்தல் என்றும் பிரித்து அவ்வந்நிலத்தை ஒட்டியே வாழ்ந்து வந்தனர்.
இவ்வாறு நிலத்தை ஒட்டிவாழ்ந்த சங்க கால மக்கள் மொழிக்கு மட்டும் இலக்கணம் வகுத்துக் கொள்ளாமல் அவர்களுடைய வாழ்க்கை முறைக்கும் இலக்கணம் வகுத்துக் கொண்டு வாழ்ந்த பெருமைக்குரியவர் ஆவர்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை - Page 2 Empty Re: சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 03, 2014 5:57 pm

படை
சங்க கால மன்னர்கள் எப்போதும் தம்முடைய அண்டை நாடுகளைக் கைப்பற்றும் எண்ணத்துடனே இருந்து வந்தனர். இதற்காகப் போர்க்கருவிகள், காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை போன்றவைகளை நிரந்தரமாக வைத்திருந்தனர். இப்படைகளில் வீரம் பொருந்திய மறவர், மள்ளர், எயினர், மழவர், வல்லம்பர், பரதவர் போன்றோர் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். சங்ககால மன்னர்கள் பல இடங்களை வெற்றி கொண்டுள்ளார்கள். சான்றாக, கரிகால் சோழன், நெடுஞ்செழியன், செங்குட்டுவன் ஆகியோரைக் கூறலாம். இவர்களுள் கரிகால் சோழன் வட இந்தியா மட்டும் அல்லாமல் இலங்கைக்கும் படையெடுத்துச் சென்று வெற்றிகொண்டான்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை - Page 2 Empty Re: சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 03, 2014 5:57 pm

கடவுளும் சமயமும்
தமிழகத்தில் தமிழருக்கு முன்பு வாழ்ந்திருந்த ஆதிகுடிமக்களின் கடவுள் கொள்கைகளும், தமிழ் மக்களின் சமயக் கொள்கைகளும், ஆரியரின் சமயக் கொள்கைகளும் ஒன்று கலந்து சங்க காலத்து மக்கள் சமுதாயத்தில் இடம் பெற்றிருந்தன. தமிழர் உயிர் துறந்த வீரர்களுக்கு வீரக்கல் நட்டு வணங்கினர். அக்கல் நடுகல் எனப்பட்டது. அந்நடுகல்லுக்கு மலர்மாலை அணிவித்து மயிற்பீலி சூட்டிச் சிறப்புச் செய்தனர்.
அணிமயில் பீலி சூட்டிப் பெயர் பொறித்து
இனி நட்டனரே கல்லும்
(புறநானூறு, 264:3-4)
பழந்தமிழர் பேய், பூதம் போன்றவைகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
கவைத் தலைப் பேய் மகள் கழுது ஊர்ந்து இயங்க
(பதிற்றுப்பத்து,13:15)
மேலும் தெய்வம் மரத்தின் அடியில் தங்கியிருந்தது என நம்பினர்.
கடவுள் மரத்தமுள் மிடை குடம்பைச்
(அகநானூறு. 270-12)
பழந்தமிழ் மக்கள் தாங்கள் வாழ்ந்து வந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து நிலங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே கடவுளர் உண்டு என எண்ணி அவர்களை வழிபட்டனர். குறிஞ்சி நில மக்கள் சேயோனையும், முல்லை நில மக்கள் மாயோனையும், மருத நில மக்கள் வேந்தனையும், நெய்தல் நில மக்கள் வருணனையும், பாலை நில மக்கள் கொற்றவையையும் கடவுளராக வழிபட்டனர்.
ஆரியர்கள் பல வேள்விகளை அரசனின் உதவியுடன் செய்தனர். பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற மன்னன் சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்திருந்தவன். அம்மன்னன் அந்தணருக்குப் பல வேள்விச் சாலைகளை அமைத்துக் கொடுத்தான். ஆதலால் இவனுக்குப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பெயர் வந்தது. கடவுளை நம்பிவந்த சங்க காலத்தில் ஊழையும், கடவுளையும் பொய்யெனக் கருதியவர்களும் வாழ்ந்து வந்தனர். கடவுள் என்ற சொல் நன்கு வளர்ச்சியுற்றிருந்தது. சிவனே முழுமுதற் கடவுளாகக் கொள்ளப்பட்டான்.
சிறு தெய்வவழிபாடும் சங்க காலத்தில் நிலவி வந்தது. கள்ளி நிழற் கடவுள், கூளி போன்ற சிறுதெய்வங்களுக்கும் வழிபாடு நடத்தப்பட்டது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை - Page 2 Empty Re: சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 03, 2014 5:57 pm

சங்க காலத்தின் இறுதி
மதுரை மாநகரில் நடைபெற்று வந்த கடைச்சங்கம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முடிவுற்றது. பாண்டிய நாட்டில் மிகக் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. இப்பஞ்சம் சுமார் பன்னிரண்டாண்டு நீடித்ததாகத் தெரிகிறது. இதனால் பலர் வெளியில் சென்று வாழ்ந்தனர்.
மேலும் ஆரியப் பண்பாட்டின் கலப்பினால் பழந்தமிழரின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்பட்டது.
களப்பிரர் என்னும் பிரிவினர் தமிழகத்துள் படையெடுத்துச் சேர, சோழ, பாண்டியர்களை வென்று ஆட்சி புரிந்தனர். இவர்களது காலத்தில் பல இலக்கியங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் தமிழக வரலாற்றில் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்பர். இக்குலத்தவரின் காலத்தில் யாதொரு முன்னேற்றத்தையும் தமிழகம் அடையவில்லை. பலகலைகள் அழிந்தன. இவைகளோடு பழைய பண்பாடும் அழியத் தலைப்பட்டது. இவ்வாறாச் சங்க கால அரசியல் ஒரு முடிவுக்கு வந்தது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை - Page 2 Empty Re: சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum