Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
போறேன்யா போறேன்!
Page 1 of 1 • Share
போறேன்யா போறேன்!
(தன் காதலைக் காதலனிடம் சொல்லிவிட முடிவு செய்யும் நேரத்தில் அவளை அவளது வீட்டார் வேறொருவனுக்கு முடிவு செய்து விடுகிறார்கள். நெஞ்சில் அவன் நினைப்பையும் மார்பில் வேறொருவன் தாலியையும் சுமந்தபடி கணவன் வீட்டுக்குப் புறப்படுகையில் அவள் காதலித்த இளைஞன் எதிரில் வருகிறான். அதுவரையில் அடக்கி வைத்திருந்த கண்ணீர் அவனைப் பார்த்ததும் அணைகடக்கிறது. எல்லோரைப்போலவே அவனும் நினைக்கிறான் அது பிறந்த வீட்டுப் பாசம் என்று. ஓர் ஒருதலைக் காதலியின் உயிர்த்துடிப்பு இது....)
ஆச மகராசா
அழுதபடி நான்போறேன்
ஓசை இல்லாம
உன்நெனப்ப சொமந்துகிட்டு
நெஞ்சுல உன்நெனப்பு
மாருல யார்தாலி?
கண்ணுல கருணவச்சி
பாக்கலையே ஊர்காளி!
இல்லாத சாமிக்கெல்லாம்
ராப்பகலா நேந்துகிட்டு
சொல்லாம சொன்னதுக்கு
செஞ்சிருச்சே கைம்மாறு!
போறேன்யா போறேன்யா
பொசக்கெட்ட சிறுக்கி
பொல்லாத விதியத்தான்
யாரெழுத திருத்தி?
நெஞ்சுல இனிச்சது
நாவரக் கசந்துருச்சே
பகலுல ஜொலிச்சநெலா
ராவுல மங்கிருச்சே!
இல்லாத உறவுக்கு
இப்படியா ஏங்கவிடும்?
பொல்லாத சாமிக்கு
அடுக்காது அடுக்காது!
ஆம ஓடாட்டம்
அடகாத்து வச்சேனே
ஊம இடிவிழுந்து
உசுரோட கருகிருச்சே!
செவுத்தோட ஒட்டிக்கிட்டு
சத்தமிடும் பல்லியாட்டம் -உன்
நெனப்போட ஒட்டிக்கிட்டு -என்
நெஞ்சுந்தான் கத்துதையா!
சொல்லி முடியாதே
சிறுக்கிமவ என்பாடு -ரொம்பத்
தள்ளி இருக்குதே
எனக்குமட்டும் சுடுகாடு!
உன்முத்த எச்சிக்கு
வீங்கின மாரிப்போ
என்கண்ணீர் வழிஞ்சோடி
எரியுதையா என்னசெய்வேன்?
நெஞ்சுல கையடிச்சி
நெக்குருகி நானழத்தான்
வயித்துல செறகடிச்சி
வல்லூறா விதிவருதே!
அணச்சி வாழ்ந்திருக்க
அன்னாடம் கனாகண்டேன்
நெனச்சி சாவுடீன்னு
என்சாமி சபிச்சிருச்சே!
பாழும் தெய்வத்துக்கு
பந்தபாசம் கெடையாதா? -இனி
ஏழு ஜென்மத்துக்கு -நான்
உன்னசேர முடியாதா?
நெஞ்சுக் குழியோட -உன்
நெனப்பிருக்கு அசங்காம
விதவைக்குக் கூந்தலு
எத்தனஅடி இருந்தென்ன?
தாவணி போட்டப்பவே
முந்தி உனக்குத்தான்னு
வச்சேனே ஆச -நான்
வெந்தாலும் வெலகிடுமா?
வெதச்ச ஆசஎல்லாம்
விதிஅருவா அறுத்தாலும் -என்ன
பொதச்ச மண்கூட
பொலம்புமையா உன்பேர!
--------------ரௌத்திரன்
ஆச மகராசா
அழுதபடி நான்போறேன்
ஓசை இல்லாம
உன்நெனப்ப சொமந்துகிட்டு
நெஞ்சுல உன்நெனப்பு
மாருல யார்தாலி?
கண்ணுல கருணவச்சி
பாக்கலையே ஊர்காளி!
இல்லாத சாமிக்கெல்லாம்
ராப்பகலா நேந்துகிட்டு
சொல்லாம சொன்னதுக்கு
செஞ்சிருச்சே கைம்மாறு!
போறேன்யா போறேன்யா
பொசக்கெட்ட சிறுக்கி
பொல்லாத விதியத்தான்
யாரெழுத திருத்தி?
நெஞ்சுல இனிச்சது
நாவரக் கசந்துருச்சே
பகலுல ஜொலிச்சநெலா
ராவுல மங்கிருச்சே!
இல்லாத உறவுக்கு
இப்படியா ஏங்கவிடும்?
பொல்லாத சாமிக்கு
அடுக்காது அடுக்காது!
ஆம ஓடாட்டம்
அடகாத்து வச்சேனே
ஊம இடிவிழுந்து
உசுரோட கருகிருச்சே!
செவுத்தோட ஒட்டிக்கிட்டு
சத்தமிடும் பல்லியாட்டம் -உன்
நெனப்போட ஒட்டிக்கிட்டு -என்
நெஞ்சுந்தான் கத்துதையா!
சொல்லி முடியாதே
சிறுக்கிமவ என்பாடு -ரொம்பத்
தள்ளி இருக்குதே
எனக்குமட்டும் சுடுகாடு!
உன்முத்த எச்சிக்கு
வீங்கின மாரிப்போ
என்கண்ணீர் வழிஞ்சோடி
எரியுதையா என்னசெய்வேன்?
நெஞ்சுல கையடிச்சி
நெக்குருகி நானழத்தான்
வயித்துல செறகடிச்சி
வல்லூறா விதிவருதே!
அணச்சி வாழ்ந்திருக்க
அன்னாடம் கனாகண்டேன்
நெனச்சி சாவுடீன்னு
என்சாமி சபிச்சிருச்சே!
பாழும் தெய்வத்துக்கு
பந்தபாசம் கெடையாதா? -இனி
ஏழு ஜென்மத்துக்கு -நான்
உன்னசேர முடியாதா?
நெஞ்சுக் குழியோட -உன்
நெனப்பிருக்கு அசங்காம
விதவைக்குக் கூந்தலு
எத்தனஅடி இருந்தென்ன?
தாவணி போட்டப்பவே
முந்தி உனக்குத்தான்னு
வச்சேனே ஆச -நான்
வெந்தாலும் வெலகிடுமா?
வெதச்ச ஆசஎல்லாம்
விதிஅருவா அறுத்தாலும் -என்ன
பொதச்ச மண்கூட
பொலம்புமையா உன்பேர!
--------------ரௌத்திரன்
Re: போறேன்யா போறேன்!
நீங்க சினிமாக் கவிஞரா!
எல்லா நடையும் உங்களுக்கு கை வந்த கலையா ?
உங்களை இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி
எல்லா நடையும் உங்களுக்கு கை வந்த கலையா ?
உங்களை இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: போறேன்யா போறேன்!
சினிமாவுக்கு முயன்று கொண்டிருக்கிறேன்...விரைவில் வருவேன்...என் பழைய பதிவுகளையும் தேடி வாசித்து, ரசித்துப் பாராட்டிய உமக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
-----------ரௌத்திரன்
-----------ரௌத்திரன்
Re: போறேன்யா போறேன்!
முயல்வது நிறைவேறி வெற்றி பெற வாழ்த்துக்கள்சினிமாவுக்கு முயன்று கொண்டிருக்கிறேன்...விரைவில் வருவேன்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|