Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பிள்ளையார் கோயிலில் அனுமன்
Page 1 of 1 • Share
பிள்ளையார் கோயிலில் அனுமன்
-
பொதுவாக ஓர் ஊர் என்றால் அங்கே பிள்ளையார் கோயில்,
சிவாலயம், முருகன் கோயில், பெருமாள் கோயில் என
தனித்தனி ஆலயங்கள் இருக்கலாம்.
-
ஆனால் அத்தனை தெய்வங்களும் ஒரு சேர அருள்பாலிக்கும்
கோயில் இருப்பது அபூர்வம்! அப்படி ஒரு கோயில் திருச்சி
சுந்தரராஜ நகரில் இருப்பதை கண்டு நாம் வியக்காமல் இருக்க
முடியாது.
-
கோயிலின் பெயர் என்னவோ சுந்தர விநாயகர் ஆலயம்
என்றுதான் இருக்கிறது. கணபதிக்குள் அத்துணை கடவுளும்
அடக்கம் என்பதால் இப்படிப் பெயர் இருக்கலாம் என்று
தோன்றுகிறாது.
-
அழகான முன் முகப்புடன் கூடிய அந்த ஆலயம் கீழ் திசை
நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் மிகப் பெரிய
மகாமண்டபம் கருவறையில் சுந்தர விநாயகர் அமைதியாக
அருள்பாலிக்க எதிரே மூஞ்சுறுவும் பலிபீடமும் உள்ளன.
-
கருவறையின் தேவகோட்டத்தில் தென்புறம் கருடாழ்வார்,
தட்சிணாமூர்த்தி கிருஷ்ணர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
வடபுறம் விஷ்ணுதுர்க்கையில் திருமேனி உள்ளது.
-
திருச்சுற்றின் தென்கிழக்கு மூலையில் ஆஞ்சனேயரின் தனிச்
சன்னதி உள்ளது. மேற்கு திருச்சுற்றில் ராமபிரான்,
சீதாபிராட்டியார், லட்சுமணன், ஆஞ்சனேயர் ஆகியோர் அருள்
பாலிக்கும் தனி சன்னதி இருக்கிறது.
-
அடுத்து, சிவபெருமான் ராஜலிங்கேஸ்வரர் என்ற பெயருடன்
ராஜராஜேஸ்வரி சமேதராக காட்சியளிக்கிறார். முருகப் பெருமான்
கல்யாண முருகன் என்ற திருநாமத்துடன் வள்ளி-தெய்வானையுடன்
திகழ்கிறார்.
வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.
அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கும் இந்த அற்புதமான
ஆலயத்தில் திருவிழாக்களுக்கும் பஞ்சமில்லை.
மூலவரான சுந்தர விநாயகருக்கு வெள்ளிக் கிழமைகள், சதுர்த்தி
நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
விநாயகர் சதுர்த்தி அன்று சிறப்பு ஹோமத்தில் ஏராளமான
பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.
சனிக்கிழமைகளிலும், மூலநட்சத்திரத்தன்றும், அனுமன் ஜெயந்தி
அன்றும் ஆஞ்சநேயருக்க சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடை
பெறுகின்றன.
இங்குள்ள விஷ்ணு துர்க்கை சுற்று வட்டாரப் பெண்களின் இஷ்ட
தெய்வமாகத் திகழ்கிறாள். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்
கிழமைகளில் ராகு காலத்தில் நடைபெறும் பூஜையின்போது
பெண்கள் கூட்டம் அலைமோதும்.
ஆடி மாதத்தில் துர்க்கையின் முன் கூட்டு வழிபாடு நடை
பெறுகிறது. குழந்தைப் பேறு வேண்டியும், திருமணத் தடை அகல
வேண்டியும், நல்ல பணி கிடைக்க வேண்டியும் மட்டுமன்றி உலக
மக்கள் நன்மைக்காகவும் நடைபெறும் இந்த கூட்டு வழிபாட்டில்
லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையுடன் குங்கும அர்ச்சனையும்
நடைபெறுகிறது.
ஆடி மாத கடைசி வெளளிக்கிழமையும், தை மாத கடைசி
வெள்ளியன்றும் குத்துவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
தை மாத சுவாதி நட்சத்திரம் துர்க்கை அன்னை பிரதிஷ்டை
செய்யப்பட்ட புனித நாள். அந்த நாளை ஆண்டு விழாவாகக்
கொண்டாடுகின்றனர். அன்று உற்சவ அன்னை வீதியுலா வருவதுண்டு.
-
முருகனுக்குரிய சிறப்பு நாட்களில் வள்ளி, தெய்வானை சமேத
கல்யாண முருகனை கண்கள் குளிர தரிசித்து பயன்பெறுகின்றனர்.
கார்த்திகை மாத கார்த்திகையில் ஆலயத்திற்கு முன் சொக்கப்
பனை ஏற்றும் வைபோகம் சிறப்பாக நடைபெறுகிறது.
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் அபிஷேக ஆராதனைகள்
நடைபெறுகின்றன.
ஆலயத்தினுள் சென்று அனைத்து தெய்வங்களையும் மனதார
தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது நம் மனதினுள் அமைதியும்
நிம்மதியும் குடிகொள்வதை முழுமையாக உணர முடிவதே
இத்தலத்தின் சிறப்பு.
எங்கே இருக்கு: திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து
புதுக்கோட்டை சாலையில் மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது
இந்த ஆலயம்.
எப்படிச் செல்வது: திருச்சி சத்திரம் மற்றும் மத்தியப் பேருந்து
நிலையத்திலிருந்து நகர பேருந்து வசதி உள்ளது. சுப்ரமணியபுரம்
கடை வீதியில் இறங்கி, சுந்தரராஜ் நகரில் உள்ள சுந்தர விநாயகர்
ஆலயத்தை எளிதில் அடையலாம்.
தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை;
மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
-
——————————–
- ஜெயவண்ணன்
நன்றி: குமுதம் பக்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அனுமன் வழிபாடு
» இன்று அனுமன் ஜெயந்தி
» அனுமன் ஜயந்தி விழா நாளை தொடக்கம்
» பிள்ளையார் எறும்பு பிறந்த கதை
» பிள்ளையார் பெருமை
» இன்று அனுமன் ஜெயந்தி
» அனுமன் ஜயந்தி விழா நாளை தொடக்கம்
» பிள்ளையார் எறும்பு பிறந்த கதை
» பிள்ளையார் பெருமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|