Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஊடல் எல்லை கடந்தால்...
Page 1 of 1 • Share
ஊடல் எல்லை கடந்தால்...
[You must be registered and logged in to see this image.]
-
'ஊடல்' என்பது தலைமகனது புறத்தொழுக்கம் பற்றி வருந்தி,
தலைவி அவனுடன் மனம் வேறுபட்டு நிற்றல்.
இது "உப்பமைந் தற்றால் புலவி' எனப்படுகிறது. மிகினும்
குறையினும் சுவை தராது; துன்பம் தரும். அகநானூற்றில்
ஒரு பாடல், ஊடல் மிகுதலால் வரும் துன்பத்தை வெளிப்
படப் புனைவது சற்று வித்தியாசமாக உளது.
தோழி தலைவியிடம் அவனது கூடா ஒழுக்கம் பற்றி,
""ஒரேயடியாக மிகவும் முரண்டு பிடிக்காதே. அவ்வாறு புலந்து
நின்றவர்கள், அவனால் கைவிடப்பட்டு பரிதாப நிலையை
அடைந்து வறுமையில் வாடுவதைப் பார்!'' என்று கடிந்து
பேசுகிறாள். "எருமைப் போத்து, பெருவீரனைப் போல்' வரும்
ஊரன் அவன்
-.
"ஊர்கொள் கல்லா மகளிர் தரத்தர
பரத்தைமை தாங்கலோ இலனென வறிதுநீ
புலத்தல் ஒல்லுமோ? மனைகெழு மடந்தை!'' (316)
ஊர் கொள்ள முடியாத அத்தனை பரத்தை மகளிரைக்
கொண்டு வருகிறான். தாங்க முடியாத அளவு பரத்தையரை
அழைத்துவரும் இவனுடன் வீணாகப் புலந்து பயன் என்ன?
இல்லக் கிழத்தியே எண்ணிப் பார்! அவனுடன் மிக மாறு
பட்டுப் புலந்து நின்றவர்கள் கதி பரிதாபமானது.
-
""அதுபுலந் துறைதல் வல்லி யோரே
செய்யோள் நீங்க, சில்பதம் கொழித்துத்
தாம்அட்டு உண்டு தமியராகித்
தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப
வைகுந ராகுதல் அறிந்தும்
அறியா ரம்ம அஃது உடலு மோரே'' (அகம்.316)
-
தலைவனது பரத்தைமை காரணமாக, புலந்து நீங்கும்
மனவலிமையுடைய மகளிர், தம்மிடமிருந்து செல்வத்
திருமகள் நீங்க, சிறிதளவே சமைத்து உண்டு, தனித்துக்
கிடந்து, பாலில்லா மார்பைப் புதல்வர் சுவைத்து அழ,
தனித்து விடப்பட்டு உழலுதலை அறிந்தும்,
தலைவனுடன் மாறுபடுவோர் அறிவில்லாதவரல்லவா?
-
ஊடல் எல்லை கடந்தால் என்ன ஆகும் என்ற தோழியின்
இவ் அறிவுரை, அன்றைய மனையுறை மகளிரின் அவல
நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. வெளிப்படப்
புனைந்த இப்பாடலின் ஆசிரியர் ஓரம்போகியார்!
-
=============================
By தமிழண்ணல்
நன்றி: தமிழ்மணி
-
'ஊடல்' என்பது தலைமகனது புறத்தொழுக்கம் பற்றி வருந்தி,
தலைவி அவனுடன் மனம் வேறுபட்டு நிற்றல்.
இது "உப்பமைந் தற்றால் புலவி' எனப்படுகிறது. மிகினும்
குறையினும் சுவை தராது; துன்பம் தரும். அகநானூற்றில்
ஒரு பாடல், ஊடல் மிகுதலால் வரும் துன்பத்தை வெளிப்
படப் புனைவது சற்று வித்தியாசமாக உளது.
தோழி தலைவியிடம் அவனது கூடா ஒழுக்கம் பற்றி,
""ஒரேயடியாக மிகவும் முரண்டு பிடிக்காதே. அவ்வாறு புலந்து
நின்றவர்கள், அவனால் கைவிடப்பட்டு பரிதாப நிலையை
அடைந்து வறுமையில் வாடுவதைப் பார்!'' என்று கடிந்து
பேசுகிறாள். "எருமைப் போத்து, பெருவீரனைப் போல்' வரும்
ஊரன் அவன்
-.
"ஊர்கொள் கல்லா மகளிர் தரத்தர
பரத்தைமை தாங்கலோ இலனென வறிதுநீ
புலத்தல் ஒல்லுமோ? மனைகெழு மடந்தை!'' (316)
ஊர் கொள்ள முடியாத அத்தனை பரத்தை மகளிரைக்
கொண்டு வருகிறான். தாங்க முடியாத அளவு பரத்தையரை
அழைத்துவரும் இவனுடன் வீணாகப் புலந்து பயன் என்ன?
இல்லக் கிழத்தியே எண்ணிப் பார்! அவனுடன் மிக மாறு
பட்டுப் புலந்து நின்றவர்கள் கதி பரிதாபமானது.
-
""அதுபுலந் துறைதல் வல்லி யோரே
செய்யோள் நீங்க, சில்பதம் கொழித்துத்
தாம்அட்டு உண்டு தமியராகித்
தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப
வைகுந ராகுதல் அறிந்தும்
அறியா ரம்ம அஃது உடலு மோரே'' (அகம்.316)
-
தலைவனது பரத்தைமை காரணமாக, புலந்து நீங்கும்
மனவலிமையுடைய மகளிர், தம்மிடமிருந்து செல்வத்
திருமகள் நீங்க, சிறிதளவே சமைத்து உண்டு, தனித்துக்
கிடந்து, பாலில்லா மார்பைப் புதல்வர் சுவைத்து அழ,
தனித்து விடப்பட்டு உழலுதலை அறிந்தும்,
தலைவனுடன் மாறுபடுவோர் அறிவில்லாதவரல்லவா?
-
ஊடல் எல்லை கடந்தால் என்ன ஆகும் என்ற தோழியின்
இவ் அறிவுரை, அன்றைய மனையுறை மகளிரின் அவல
நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. வெளிப்படப்
புனைந்த இப்பாடலின் ஆசிரியர் ஓரம்போகியார்!
-
=============================
By தமிழண்ணல்
நன்றி: தமிழ்மணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஊடல்,InfoAmbiga
» உன் ஊடல் பொழுதுகளில்....
» வானமே நம் எல்லை
» வானமே நம் எல்லை
» வானமே எல்லை.: இரா. சுந்தரேசன்
» உன் ஊடல் பொழுதுகளில்....
» வானமே நம் எல்லை
» வானமே நம் எல்லை
» வானமே எல்லை.: இரா. சுந்தரேசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|