தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாரதர் மகிமைகள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

நாரதர் மகிமைகள்  - Page 2 Empty நாரதர் மகிமைகள்

Post by முழுமுதலோன் Tue Feb 11, 2014 3:26 pm

First topic message reminder :

நாரதர் மகிமைகள்  - Page 2 2Q==

நாரதர் பகுதி-1

கந்தர்வ லோகம் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தது. இவர்களில் உபன் மிக மிக சந்தோஷத்தில் இருந்தான். ஆம்... அன்று அவனுக்கு மகன் பிறந்திருந்தான். அவன் மனைவி குழந்தையை அருகில் படுக்க வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தாள். குழந்தை அழுதது. என்ன ஆச்சரியம்... அந்த அழுகுரல் புல்லாங்குழலின் இனிமையை ஒத்திருந்தது. எல்லாரும் குழந்தையைப் பார்த்தால், கண்ணே சிரிடா என கொஞ்சுவார்கள். ஆனால், இந்தக் குழந்தையைப் பார்த்தால், தம்பி! அழுடா என்றார்கள். அந்தளவுக்கு குழந்தையின் குரலில் இனிமை இழையோடி இருந்தது. குழலினிது என்பார்களே...அது இந்த குழந்தைக்கு முற்றிலும் சரியாகப் பொருந்தும்.சரி.... கந்தர்வர்கள் என்றால் யார்? பூலோகத்தில் வாழும் நமக்கு நரன் அல்லது மனிதன் என்று பெயர். இந்திரலோகத்தில் வாழ்பவர்களுக்கு தேவர்கள் என்று பெயர். இதுபோல, இந்த பிரபஞ்சத்தில் 14 லோகங்கள் உள்ளதாம். இதில் தேவலோகத்துக்கு கீழ்ப்பட்ட பூலோகம். பாதாளலோகம் உள்ளிட்ட உலகிலுள்ளவர்கள் சகல நோன்புகள் நோற்பதின் மூலமோ, யாகங்கள் செய்து தேவர்களை மகிழ்விப்பதன் மூலமோ, கடும் ஆன்மிகப்பயிற்சிகளை திடசித்தத்துடன் செய்வதன் மூலமோ அல்லது இம்மியளவு கூட பிற உயிர்களுக்கு துன்பம் செய்வது பற்றிய நினைவு கூட எழாமல் இருப்பார்களோ, பாடுவதன் மூலமோ அல்லது இசைக்கருவிகளை மீட்டுவதன் மூலமோ இறைவனைத் துதித்தவர்கள் ஆகியோர் கந்தவர்கள் என்ற அந்தஸ்தைப் பெறுவார்கள். இவர்களுக்கு சுகபோக சுகவாழ்வு கிடைக்கும். செல்வம், குடும்ப சுகம் எதற்கும் குறைவிருக்காது. இப்படிப்பட்ட ஒரு குலத்தில் பிறந்த குழந்தை என்றால் கொண்டாட்டத்துக்கு என்ன குறைவாகவா இருக்கும்? உபனின் வீட்டிற்கு கந்தவர்களும், கந்தர்வ மாதர்களுமாக வந்து குழந்தையை நீடுழி வாழ வாழ்த்திப் போய்க் கொண்டிருந்தனர்.இந்நேரத்தில் வந்த ஒரு கந்தர்வ தம்பதியிடம் குழந்தை குறும்பு செய்தது. தன்னை அவர்கள் கொஞ்சிக் கொண்டிருந்த போது, கந்தர்வனின் அங்கவஸ்திரத்தையும், அவனது மனைவியின் புடவைத் தலைப்பையும் முடிச்சுப் போட்டு விட்டது. அவர்கள் குழந்தையை தாயிடம் ஒப்படைக்க எழுந்த போது, முடிச்சுப் போட்டிருந்ததால், ஒருவருக்கொருவர் இடித்துக் கொண்டனர். அந்தப் பெண் தன் கணவனை கடிந்து கொண்டாள்.

ஒரு வீட்டுக்கு வந்தால் இப்படியா நடந்து கொள்வீர்கள். ஏன் என்னை இடிக்கிறீர்கள்? என்றாள் மெல்லிய குரலில்.அவன் அவளிடம், அடி போடி! நீதான் ஏதோ சில்மிஷ வேலை செய்திருக்கிறாய். இங்கே பார். உன் புடவைத்தலைப்பை நான் அறியாமல் என் வஸ்திரத்தில் முடிச்சு போட்டுள்ளாய், என்றான். அவர்கள் முடிச்சை அவிழ்த்து விட்டு சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள். குழந்தை கலகலவென சிரித்தது. இப்படியாக குழந்தை பிறந்த அன்றே தன் கலகத்தை துவக்கிவிட்டான். இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே..பிறந்திருப்பது யாரென்று.16 நாட்கள் கடந்தன. குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. கந்தர்வர்கள் இல்ல விசேஷங்களுக்கு தவத்தில் உயர்ந்த பெரியவர்கள் எல்லாம் வருவார்கள். இங்கேயும் கூட்டத்துக்கு குறைவில்லை. முனிவர்களின் நல்லாசி குழந்தைக்கு கிடைத்தது. அவர்களின் ஞான திருஷ்டியில், இக்குழந்தை 14 லோகங்களுக்கும் சென்று வருவான். ஏன்...அசுரர்கள் கூட இவனிடத்தில் சிக்கி திண்டாடப் போகிறார்கள். இறைவன் காரணமில்லாமல் இக்குழந்தையைப் படைக்கவில்லை என புரிந்தது. குழந்தைக்கு உபவருக்கன் என பெயர் சூட்டப்பட்டது. உபவருக்கன் வளர்ந்தான். தந்தை உபன் மிகப்பெரிய இசைஞானி என்பதால், குழந்தைக்கும் அதையே கற்றுக் கொடுத்தான். ஆனால், இசையில் தந்தையையும் மிஞ்சினான் உபவருக்கன். தந்தை உபன் அகம் மகிழ்ந்து அவனுக்கு மகதி என்னும் இசைக்கருவியை வழங்கினான். அது வீணையை விட இனிமையாக இருந்தது. இந்த இசைக்கருவியை கொண்டு அவன் மீட்டிய ராகமும், இசைத்த பாடலும் கந்தர்வலோகத்தை மட்டுமின்றி, தேவலோகத்தையும் ஈர்த்தது. தேவலோகத்தினர் கூட கந்தர்வலோகம் வந்து குழந்தை உபவருக்கனை தங்கள் இல்லங்களுக்கு அழைத்துச் சென்று பாடச்சொல்லி கேட்டபார்கள். எங்காவது யாகம் நடந்தால், அங்கே உபவருக்கனின் இசைநிகழ்ச்சிக்கும் ஏற்பாடாகி இருக்கும். இப்படி உபவருக்கனின் இசைஞானம் எங்கும் புகழ் பெற்றது.

சிறுவனாயிருந்த உபவருக்கன் இளமைப் பருவத்தையும் அடைந்தான். இளமை வரும் போது, எங்கிருந்து தான் வருமோ அந்தக் காதல். அது உபவருக்கனையும் விட்டு வைக்கவில்லை. மன்மத பாணங்களுக்கு இரையாக வேண்டிய நிலைமை அவனுக்கு ஏற்பட்டது. பிரமசிரேஷ்டர் என்ற அந்தணர் ஒரு யாகத்திற்கு ஏற்பாடு செய்தார். யாகத்திற்கு உபவருக்கனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. யாகத்தைக் காண பல இளம் யுவதிகளும் வந்திருந்தனர். உபவருக்கன் சாமவேதத்தை தன் வீணையில் மீட்ட ஆரம்பித்தான். வந்திருந்த கூட்டம் அவனது இசையில் லயித்தது. குறிப்பாக யுவதிகள் அதில் கட்டுண்டனர். ருக்மாங்கனா என்ற யுவதி உபவருக்கனின் அருகிலேயே வந்து அமர்ந்து, அவன் இசை மீட்டுவதை ரசித்தாள். அத்துடன் அவனது கட்டுடலையும் ரசித்தாள். யாகநிகழ்ச்சிகள் முடிவடைந்தன. ருக்மாங்கதா, உபவருக்கனின் அருகில் சென்றாள். இவனோ கந்தர்வன். அவளோ அந்தணப் பெண். உபவருக்கா! கொஞ்சம் நில்லுங்கள், நான் தங்களோடு சற்று பேச வேண்டும், என்றாள். உபவருக்கன் திரும்பிப் பார்த்தான். கட்டுடல் கொண்ட அந்த கட்டழகியைப் பார்த்தவுடனேயே பற்றிக் கொண்டது காதல் தீ. ஆனால், அந்தக்காதலே அவனது கந்தர்வலோக வாழ்வுக்கு உலை வைக்கப் போகிறது என்பதை அவன் அப்போது உணரவில்லை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


நாரதர் மகிமைகள்  - Page 2 Empty Re: நாரதர் மகிமைகள்

Post by முழுமுதலோன் Tue Feb 11, 2014 3:50 pm

நாரதர் பகுதி-26

நாரதமுனிவரே! அசுரமன்னனான மகாபலி, எனக்கும் மேலாக புகழ்பெற்று விளங்கினான். நாராயணனின் திருக்காட்சியைப் பெற்றான். அவரால் ஆட்கொள்ளப்பட்டான். ஒரு அசுரனுக்கு கிடைத்த இந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் அவனை கேலி செய்யச் சென்றேன். அவனது நல்ல மனதை நான் புரிந்து கொள்ளாமல், அவமானப்பட்டு திரும்புகிறேன். நான் ஏற்கனவே விமர்சனங்களுக்கு ஆளானவன். இன்னும், எனக்கு என்ன கதி வரப்போகிறதோ?என்றான் இந்திரன்.அவனை நாரதர் தேற்றினார். இந்திரா! பிறக்கும் குலம் முக்கியமல்ல. எக்குலத்தில் பிறந்தாலும், ஒருவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதே முக்கியம். அசுரனான மகாபலி, நன்மையை மட்டும் நினைத்தான். நாராயணனுக்காக தன்னையே கொடுத்தான். குலத்தால் தாழ்ந்திருந்தாலும், நல்லவர்களை அணைப்பதே தேவர்களின் கடமை. இதற்காக வருந்தாதே. ஆனாலும், அவனது வயிற்றெரிச்சல் உன்னை சும்மாவிடாது. என்ன செய்யப் போகிறாயோ? என்று இந்திரனின் வயிற்றைக் கலக்கினார் நாரதர். இந்திரன் நிஜமாகவே கலங்கிப் போனான். நாரதரே! நீங்கள்தான் இந்த சிக்கலில் இருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும். ஏதாவது ஒரு வழி சொல்லுங்களேன், என்றான். நாரதர் அவனிடம், இந்திரனே! இப்போது உன்னிடம் திருமகள் குடிகொண்டிருக்கிறாள். மகாபலியை இகழ்ந்து பேசியதன் மூலம் அவள் உன்னை விட்டு அகன்றுவிடுவாள். பிறரை குறைசொல்பவர்களிடம் திருமகள் தங்குவதில்லை. குறிப்பாக ஏழைகளை யார் ஒருவர் பழிக்கிறாரோ அவரிடம் திருமகள் அறவே தங்கமாட்டாள். இதிலிருந்து நீ விடுதலை பெற வேண்டுமானால் சில காலம் மண்ணுலகில் வாழ்ந்துதான் ஆகவேண்டும். அங்கிருந்தபடியே நீ சிவபூஜை செய். கங்கையில் சென்று நீராடு. உன் பாவம் தீரும் என்றார். இந்திரனும் அவ்வாறே செய்து திருமகளை தன்னிடம் தக்கவைத்துக் கொண்டான். ஒரு வழியாக மகாபலியின் சாபத்திலிருந்து நாரதரின் உதவியால் தப்பிப் பிழைத்தான்.

இந்திரனைக் காப்பாற்றிய மகிழ்ச்சியுடன் நாரதர் பிரம்மலோகம் சென்றார். அவர் மனதில் நீண்ட நாளாக ஒரு சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகத்தை தன் தந்தையிடம் கேட்டு தெரிந்துகொள்ள விரும்பினார். தந்தையே! சிவபெருமானுக்கு ரிஷப வாகனம் எப்படி அமைந்தது? அவர் ஏன் உடலெங்கும் சாம்பலைப் பூசுகிறார்? அவருடைய உருவத்தின் தத்துவம்தான் என்ன? என்று கேட்டார். பிரம்மாவுக்கு பதில் தெரியும் என்றாலும்கூட, ஏற்கனவே ஒருமுறை முருகனிடம் சிக்கிக்கொண்டது நினைவு வந்தது. ஓம் என்ற பிரணவத்திற்கு பொருள் தெரியாததால் சிறைப்பட்ட தன் பழைய கதையை நினைத்துப் பார்த்தார். மகனே என்றாலும்கூட கலகக்காரன் என்பதால் நாரதருக்கு விடைசொல்ல தயங்கினார். நாரதா! நீ என் பிள்ளையாய் இருந்தாலும் கலகக்காரன் என்பதை ஊரே அறியும். இதுபோன்ற சந்தேகங்களுக்கு நான் ஏதாவது விடை சொல்ல, அதை நீ சிவலோகத்தில் போய் சொல்ல, பிரச்னைகள் ஏற்படும். எனவே நீ திருத்தணிக்கு போ. அங்கே முருகப் பெருமானிடம் உன் சந்தேகத்தைக் கேள். அவர் உனக்கு பதில் சொல்வார், என சொல்லி லாவகமாக தப்பிவிட்டார். தன் தந்தையின் முன்னெச்சரிக்கையைக் கண்டு மனதிற்குள் சிரித்துக்கொண்ட நாரதர், உங்களையா நான் மாட்டிவிடுவேன்? இருப்பினும், தாங்கள் பதில் சொல்ல மறுத்துவிட்டதால் நான் முருகனிடமே போய் தெரிந்துகொள்கிறேன், என சொல்லிவிட்டு, முருகப்பெருமான் குடியிருக்கும் ஆனந்த லோகமான திருத்தணிகை மலைக்கு வந்து சேர்ந்தார். அங்கே வள்ளி தெய்வானை யுடன் முருகப் பெருமான் களித்திருந்தார். நாரதரின் வருகையை அறிந்ததும் அவரை வரவேற்றார். அவர் முருகனை வணங்கி, குமரப் பெருமானே! ஒரு சந்தேகத்தைத் தீர்த்துப் போவதற்காக வந்தேன். இதுகூட தெரியவில்லையே என, என் தந்தையைப் பால் என்னையும் சிறையில் அடைத்துவிடாதீர்கள். இதற்கு ஒப்புக்கொண்டால்தான் கேள்வியே கேட்பேன், என சொல்லிவிட்டு அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டார். முருகன் சிரித்தபடியே, நாரதரே! தங்களைப் போன்ற தபஸ்விகளுக்கு இது தெரியாத விஷயமல்ல.

ஒரு பழத்தை வைத்துக் கொண்டு, நீங்கள் என்னையே உலகம் சுற்ற வைத்தவர். மாபெரும் அறிவாளி. அன்னையும், பிதாவுமே முதல் தெய்வம் என்பதை எனக்கு உணர்த்தியவர். அப்படிப்பட்ட தங்களுக்கு இது தெரியாத விஷயமல்ல. இருப்பினும், தெரியாத ஒன்றை பிறர் பணிவுடன் கேட்டால் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதை ஞானதானம் என்பர். தங்கள் தந்தை பிரம்மன் எல்லாம் தெரிந்தவர் போல் என்னிடம் பேசினார். அதன் காரணமாகவே அவரை சிறையில் அடைத்தேன். தாங்களோ மிகுந்த பணிவோடு இக்கேள்வியை என்னிடம் கேட்டீர்கள். பதிலைக் கேளுங்கள், என்றவர் தொடர்ந்தார். ரிஷபமாகிய காளை தர்மத்தின் சின்னமாக விளங்குகிறது. ஒரு காலத்தில் இந்த ரிஷபம் சிவபெருமானை நோக்கி தவம் செய்தது. ரிஷபத்தின் நான்கு கால்களும் மனம், புத்தி, எண்ணம், அகங்காரம் என்ற நான்கு வடிவங்களைக் குறிக்கிறது. மற்ற மூன்றாலும், அகங்காரம் என்ற காலை அடக்கி தவம் செய்தது. மேலும், ரிஷபம் கடுமையான உழைப்பின் சின்னம். எவ்வளவு உழைத்தாலும் அகங்காரம் கொள்ளாதவன் யாரோ, எவ்வளவு சிறப்புடையவனாய் இருந்தாலும் ஆணவம் இல்லாதவன் யாரோ அவர் சிவனுக்கு பிரியமானவர். இதனால், சிவபெருமான் அந்தக்காளையை தனது வாகனமாகவே கொண்டார், என்றார். முருகா! நான் இதுவரை யாரிடமும் எதுவும் கேட்டதில்லை. ஆனால், ஞானகுருவான உன்னிடம் ஒன்று கேட்கிறேன். செய்வாயா? என்றார் நாரதர். எல்லாம் வல்ல முருகன் அவர் கேட்கப்போவதை அறிந்தார். நாரதரே! பூலோகத்தில் எதிர்கால தலைமுறையினர் தங்களைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில், திருத்தணியான இங்கு, ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வணங்கிச் செல்லுங்கள், உங்கள் பெயரால் அந்த லிங்கம் நாரதேஸ்வரர் என அழைக்கப்படும். இத் திருக் கோயிலில் உள்ள தீர்த்தம் தங்கள் பெயரால் நாரதர் தீர்த்தம் என வழங்கப்படும், என்றார். நிறைந்த அருள்பெற்ற மகிழ்ச்சியில் நாரதர் வைகுண்டம் சென்றார். நாராயணப் பெருமாளின் திருப் பாதத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.


முற்றும்.



முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நாரதர் மகிமைகள்  - Page 2 Empty Re: நாரதர் மகிமைகள்

Post by ஸ்ரீராம் Tue Feb 11, 2014 5:41 pm

அருமை அருமை அண்ணா
பகிர்வுக்கு மிக்க நன்றி!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நாரதர் மகிமைகள்  - Page 2 Empty Re: நாரதர் மகிமைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum