Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சலிப்பாய் இருக்கிறதா?
Page 1 of 1 • Share
சலிப்பாய் இருக்கிறதா?
செயல்திறனை சீர்குலைய வைப்பது சலிப்பு. செய்வதற்கு என்று வேலை நேரம் – செய்ய வேண்டிய தேவை எல்லாம் இருந்தும்கூட தள்ளிப் போடச் சொல்லும் உணர்வுக்கு சலிப்பு என்று பெயர். இந்தச் சலிப்பை வளர விடுவதில் இரண்டு விதமான சிரமங்கள் இருக்கின்றன. ஒன்று செய்ய வேண்டிய வேலை தள்ளிப் போகும். சலிப்பின் பெயரால் சோம்பலும் அதன் தொடர்ச்சியாய் மன அழுத்தமும் எதிர்விளைவுகளாய் ஏற்படும்.
ஆரம்ப நிலையிலேயே சலிப்பின் அறிகுறிகளை அடையாளம் கண்டு அவற்றை அடியோடு நீக்க வேண்டியது அவசியம். இதைக் கொஞ்சம் உன்னிப்பாகப் பார்த்தால் ஓரிரு விஷயங்களை உங்கள் ஆழ்மனம் அடிக்கோடிட்டுக் கொள்ளும். சலிப்பு என்பது உணர்வு சார்ந்தது. நிறையபேர், சலிப்பு தொடங்கியதுமே அதற்கு மாற்றாக உற்சாகம் என்ற உணர்வைத் தூண்டிவிட்டு, மனதை உற்சாகப்படுத்தி வேலைக்குத் திரும்ப முயல்வார்கள். நேரெதிர் திசையில் பயணம் நேர்கிறபோது உற்சாகத்தில் மனம் உலுக்கப்பட்டதுபோல் உதறிக்கொண்டு எழும் என்பது உண்மைதான். ஆனால் பொழுதுபோக்கில் உடனே நாட்டம் சென்று மீண்டும் வேலையை நோக்கி மனதைக் குவிப்பதால் கணிசமான நேரம் காணாமல் போய்விடும்.
மனம் சலிப்பு என்கிற உணர்வால் சீண்டப்படும்போது அதை அறிவின் துணைகொண்டு கையாள்வதே நல்லது. உதாரணமாக, உங்கள் அன்றாட வேலையைச் செய்வதில் சலிப்பு ஏற்படுகிறதா? உங்கள் மனதுடன் ஒரு பேச்சுவார்த்தை நடத்துங்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியடையாமல் இருப்பதற்காக கொஞ்சம் மௌனமாகவே அந்தப் பேச்சுவார்த்தையை நடத்துங்கள்.
முதலில், இந்த வேலையை எதற்காக செய்யவேண்டும் என்கிற கேள்வியை எழுப்பிக்கொள்ளுங்கள். 1) இந்த வேலையைச் செய்வதால் நமக்கு சம்பளம் / வருமானம் கிடைக்கிறது. 2) இதை சரியாகச் செய்தால் நல்ல பெயர் கிடைக்கிறது. 3) இதை இப்போதைக்குத் தள்ளிப்போட்டால் இன்னும் கொஞ்சம் நேரம் கழித்தோ, நாட்கள் கழித்தோ, நாம்தான் செய்ய வேண்டும். அப்போது செய்வதை இப்போதே செய்தால் என்ன?
இதை மனதுடன் நிகழ்த்தும் மானசீகமான கலந்துரையாடலாக்கிக் கொண்டு, “இந்த வேலையை இப்போதே செய்ய வேண்டும்” என்பதை தீர்க்கமாகத் தீர்மானித்துக்கொண்டு வேலையைத் தொடங்குங்கள். சலிப்பு எட்டிப் பார்க்கிறபோதெல்லாம் இப்படி சொல்லிப் பார்த்துக் கொள்வதால் உணர்வு எழுப்பிய தடையை அறிவு அகற்றுகிறது. இதே நிலை பல சூழல்களிலேயும் தொடர்கிறபோது சலிப்புணர்வு தோன்றுவது மெல்ல மெல்லக் குறைந்து காலப்போக்கில் காணாமலேயே கூடப் போய்விடும்.
அலுவலகங்களில் சலிப்புணர்வைத் தடுக்க, அலுவலக சூழலுக்குள்ளேயே சின்னச் சின்ன மாற்றங்களை அவ்வப்போது செய்யுங்கள். இடங்களை – முடிந்தால் அறைகளை மாற்றுவது, போன்ற சிறிய புதுமைகள் அவ்வப்போது தேவை.
படைப்பாளர்கள், தங்கள் பணிச் சூழலை அடிக்கடி மாற்றுவதன் அடிப்படை இதுதான். ஈடுபட்டுச் செய்யும் எந்த வேலையிலும் சலிப்பு வருவதற்கு சாத்தியமில்லை. சிலருக்கு சிறிது நேரத்துக்குப் பிறகு வரப்போகிற சந்தோஷத்தை நினைத்து, இப்போது செய்கிற வேலையில் சலிப்புத்தட்டும்.
மாலையில் குடும்பத்தோடு திரைப்படத்துக்குப் போவதென்று தீர்மானம். ஆனால் அதுவரை மனம் வேலையில் ஈடுபடாமல், “பர பர” வென்றிருக்கும். இது பக்குவக் குறைவின் விளைவு. போகப் போகச் சரியாகிவிடும். கடமையை நன்றாகச் செய்வதே அதிகபட்ச ஆனந்தம் என்ற விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். சலிப்பு நீங்கி சந்தோஷம் உருவாகும்.
http://www.no1tamilchat.com/
ஆரம்ப நிலையிலேயே சலிப்பின் அறிகுறிகளை அடையாளம் கண்டு அவற்றை அடியோடு நீக்க வேண்டியது அவசியம். இதைக் கொஞ்சம் உன்னிப்பாகப் பார்த்தால் ஓரிரு விஷயங்களை உங்கள் ஆழ்மனம் அடிக்கோடிட்டுக் கொள்ளும். சலிப்பு என்பது உணர்வு சார்ந்தது. நிறையபேர், சலிப்பு தொடங்கியதுமே அதற்கு மாற்றாக உற்சாகம் என்ற உணர்வைத் தூண்டிவிட்டு, மனதை உற்சாகப்படுத்தி வேலைக்குத் திரும்ப முயல்வார்கள். நேரெதிர் திசையில் பயணம் நேர்கிறபோது உற்சாகத்தில் மனம் உலுக்கப்பட்டதுபோல் உதறிக்கொண்டு எழும் என்பது உண்மைதான். ஆனால் பொழுதுபோக்கில் உடனே நாட்டம் சென்று மீண்டும் வேலையை நோக்கி மனதைக் குவிப்பதால் கணிசமான நேரம் காணாமல் போய்விடும்.
மனம் சலிப்பு என்கிற உணர்வால் சீண்டப்படும்போது அதை அறிவின் துணைகொண்டு கையாள்வதே நல்லது. உதாரணமாக, உங்கள் அன்றாட வேலையைச் செய்வதில் சலிப்பு ஏற்படுகிறதா? உங்கள் மனதுடன் ஒரு பேச்சுவார்த்தை நடத்துங்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியடையாமல் இருப்பதற்காக கொஞ்சம் மௌனமாகவே அந்தப் பேச்சுவார்த்தையை நடத்துங்கள்.
முதலில், இந்த வேலையை எதற்காக செய்யவேண்டும் என்கிற கேள்வியை எழுப்பிக்கொள்ளுங்கள். 1) இந்த வேலையைச் செய்வதால் நமக்கு சம்பளம் / வருமானம் கிடைக்கிறது. 2) இதை சரியாகச் செய்தால் நல்ல பெயர் கிடைக்கிறது. 3) இதை இப்போதைக்குத் தள்ளிப்போட்டால் இன்னும் கொஞ்சம் நேரம் கழித்தோ, நாட்கள் கழித்தோ, நாம்தான் செய்ய வேண்டும். அப்போது செய்வதை இப்போதே செய்தால் என்ன?
இதை மனதுடன் நிகழ்த்தும் மானசீகமான கலந்துரையாடலாக்கிக் கொண்டு, “இந்த வேலையை இப்போதே செய்ய வேண்டும்” என்பதை தீர்க்கமாகத் தீர்மானித்துக்கொண்டு வேலையைத் தொடங்குங்கள். சலிப்பு எட்டிப் பார்க்கிறபோதெல்லாம் இப்படி சொல்லிப் பார்த்துக் கொள்வதால் உணர்வு எழுப்பிய தடையை அறிவு அகற்றுகிறது. இதே நிலை பல சூழல்களிலேயும் தொடர்கிறபோது சலிப்புணர்வு தோன்றுவது மெல்ல மெல்லக் குறைந்து காலப்போக்கில் காணாமலேயே கூடப் போய்விடும்.
அலுவலகங்களில் சலிப்புணர்வைத் தடுக்க, அலுவலக சூழலுக்குள்ளேயே சின்னச் சின்ன மாற்றங்களை அவ்வப்போது செய்யுங்கள். இடங்களை – முடிந்தால் அறைகளை மாற்றுவது, போன்ற சிறிய புதுமைகள் அவ்வப்போது தேவை.
படைப்பாளர்கள், தங்கள் பணிச் சூழலை அடிக்கடி மாற்றுவதன் அடிப்படை இதுதான். ஈடுபட்டுச் செய்யும் எந்த வேலையிலும் சலிப்பு வருவதற்கு சாத்தியமில்லை. சிலருக்கு சிறிது நேரத்துக்குப் பிறகு வரப்போகிற சந்தோஷத்தை நினைத்து, இப்போது செய்கிற வேலையில் சலிப்புத்தட்டும்.
மாலையில் குடும்பத்தோடு திரைப்படத்துக்குப் போவதென்று தீர்மானம். ஆனால் அதுவரை மனம் வேலையில் ஈடுபடாமல், “பர பர” வென்றிருக்கும். இது பக்குவக் குறைவின் விளைவு. போகப் போகச் சரியாகிவிடும். கடமையை நன்றாகச் செய்வதே அதிகபட்ச ஆனந்தம் என்ற விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். சலிப்பு நீங்கி சந்தோஷம் உருவாகும்.
http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சலிப்பாய் இருக்கிறதா?
என்னதான் பிளான் பண்ணினாலும் சிலநேரங்களில் சலிப்பாகத்தான் இருக்கிறது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» சலிப்பாய் இருக்கிறதா?
» உங்களிடம் தனித்துவம் இருக்கிறதா?
» வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா?
» கருப்பட்டி ( வெல்லம் ) நினைவில் இருக்கிறதா?
» மன்னிக்கும் குணம் உங்களுக்கு இருக்கிறதா?
» உங்களிடம் தனித்துவம் இருக்கிறதா?
» வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா?
» கருப்பட்டி ( வெல்லம் ) நினைவில் இருக்கிறதா?
» மன்னிக்கும் குணம் உங்களுக்கு இருக்கிறதா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|