Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கூனஞ்சேரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
கூனஞ்சேரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
கூனஞ்சேரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
மூலவர் : கைலாசநாதர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : பார்வதி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : கூனஞ்சேரி
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
பிரதோஷம், சிவராத்திரி
தல சிறப்பு:
உடல் ஊனமுற்றோர், இளம்பிள்ளை வாதநோயால் பாதிக்கப்பட்டோர் இங்கு வழிபாடு செய்து பலனடைவது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கூனஞ்சேரி, தஞ்சாவூர்.
பொது தகவல்:
வெளிப்பிரகாரத்தில் அஷ்டாவக்கிரன் வழிபட்ட எட்டு லிங்கங்கள் உள்ளன. இவர்கள் தவிர, அழகு மிகுந்த ஜடாமகுட சௌர்ந்தர்ய நாயகி என்று அழைக்கப்படும் அம்மன் சன்னதியும் உள்ளது.
பிரார்த்தனை
உடல் ஊனமுற்றோர், இளம்பிள்ளை வாதநோயால் பாதிக்கப்பட்டோர் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கும்பகோணத்தையடுத்து சுவாமிமலையிலிருந்து திருவைகாவூர் செல்லும் வழியில் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆதனூர், புள்ளப்புதங்குடி என்ற இரு வைணவத் திருப்பதிகளுக்கு இடையேயுள்ள இந்தத் திருத்தலத்தில் மூலவராக கைலாசநாதர் அருள்பாலிக்கிறார். அவரே அஷ்டா வக்கிரனின் குறைகளைக் களைந்தவர். அன்னையின் திருநாமம் பார்வதி.
தல வரலாறு:
மிதிலா நகரில் ஜனக மகாராஜன் மிகப்பெரிய வேள்வி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தான். அந்த வேள்விச் சாலைக்குள் செல்வதற்காக சிறுவன் ஒருவன் காத்திருந்தான். அவன் உடலில் அத்தனை கோணல். முதுகில் கூன். ஒரு கை பின்புறமும் முதுகை முன்புறமும் திரும்பி மடங்கியவாறு கோணல். கால்களில் ஒன்று மழிந்து மடங்கி, சரிவர நடக்க முடியாத ஒரு பரிதாப நிலை. வேள்விச் சாலைக்குள் நுழைந்து, தலைமைப் பண்டிதர் வந்தியை சந்திக்க வேண்டும் என்று அந்த பாலகன் கேட்டான். காவலர்களோ அவனது தோற்றத்தைக் கண்டு தடுத்து நிறுத்தினர். அவர்களுக்கிடையே பெருத்த வாக்குவாதம் ஏற்பட்டது. வேள்விச்சாலை முன்னால் ஏற்பட்ட குழப்பத்தைக் கண்ணுற்ற ஜனகமகாராஜன், தன் இருக்கையை விட்டு அகன்று, வேள்விச் சாலையின் வாசலுக்கு வந்தான். விவரம் தெரிந்து கொண்டான். எனது தலைமைப் பண்டிதன் வந்தி அத்தனை சாத்திரங்களையும் கற்றறிந்த அறிஞர். பல நூற்றுக்கணக்கான முனிவர்களும், வேத விற்பன்னர்களும் அவரிடம் வாதத்தில் தோற்று விட்டனர். தன்னிடம் தோற்றவர்களை வந்திப் பண்டிதர் கங்கையில் மூழ்கும்படி செய்துள்ளார். இதையெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா ? அப்படியிருந்தும், இப்படி ஒரு துணிச்சல் ஏன் ? என்று கோணல் சிறுவனைக் கேட்டார் ஜனகமகாராஜன்.
அதற்கும் பதிலளித்தான் அந்தச் சிறுவன், உம்முடைய தலைமைப் பண்டிதர், என் போன்ற வேதாந்தப் பயிற்சி பெற்றவர்களை இதுவரை சந்திக்கவில்லை. தன்னிடம் தோற்றவர்களை கங்கையில் மூழ்கடித்து விட்டதாக தற்பெருமை கொண்டுள்ளார். அறிஞனுக்கும் அகம்பாவம் சத்ரு ! எனது தந்தையாரையும் அவர் மூழ்கடித்துள்ளார். அந்த சோக வரலாற்றை என் அன்னை எனக்குக் கூறியுள்ளாள். அந்தக் கடனைத் தீர்க்க வந்திருக்கிறேன் நான். வேத சாஸ்திரங்களை பிறருக்கு உபதேசித்து வந்த பெரியோர்களில் ஒருவர், உத்தாலகர். அவரிடம் கஹோனகர் என்ற ஒரு சீடனும் இருந்தான். பக்தியும், ஒழுக்கமும் மிகுந்திருந்தாலும், கல்வி கற்கும் திறமை அவனிடம் பளிச்சிடவில்லை. எனவே, பிற சீடர்கள் அவனை எள்ளி நகையாடுவர். கல்வியில் மேன்மையுறாவிடினும், அவனது நியமம், பக்தி, குணம் ஆகியவற்றைக் கருதி, தனது மகள் சுஜாதாவையே அவனுக்கு மணமுடித்தார் உத்தாலகர்.
அவர்கள் இருவருக்கும் புத்திரனாகப் பிறந்தவன்தான் அந்தக் கோணல் சிறுவன். கருவிலிருந்தபோதே உத்தாலகர் மாணவர்களுக்கு அளித்த உபதேசங்களை உருப் போட்டு வந்தது அந்தச் சிசு. கஹோனகர், முற்றிலுமாக சாத்திர அறிவு பெறாததால், இரவு நேரங்களில், தான் கூறவேண்டிய பாடங்களை தப்பும் தவறுமாகப் படித்து வருவாராம். அன்னையின் வயிற்றில் இருந்தவாறே. இவற்றைக் கேட்ட அந்தச் சிசு. அய்யகோ ! வேத சாஸ்திரங்களை இப்படி உருக்குலைத்துவிடுகிறாரே என் தந்தை என மனமொடிந்து, தன் உடலைத் தானே பல வகையாக முறுக்கிக் கொண்டதாம். அதன் விளைவு, பிறக்கும்போது எட்டுக்கோணலுடன் விகாரமாக உருவெடுத்துப் பிறந்தது அந்தச் சிசு. அதற்கு அஷ்டா வக்கிரன் (எட்டுக் கோணல்) என்றே பெயரும் நிலைத்தது. அந்தக் குழந்தையும் வளர்ந்து, பன்னிரண்டு வயதை எட்டினான். அதற்குள்ளாகவே அத்தனை மறைகளையும், சாத்திரங்களையும், பிராமணங்களையும் முற்றும் கற்றறிந்தான். தாயின் மூலம் தன் தந்தை கஹோனகரும், ஜனகமகாராஜனின் சபைக்குச் சென்று வீடு திரும்பாத வரலாற்றைக் கேட்டறிந்தான். வந்தியை வாதத்தில் தோற்கடிக்கும் முடிவோடு வந்தவன் தான் இந்தக் கோணல் சிறுவன்.
அதன்பிறகு அஷ்டாவக்கிரன், வந்தியுடன் பல நாட்கள் வாதம் புரிந்தான். அவனது நாவன்மையில் அறிவொளி பளிச்சிட்டது கண்டவர் வியந்தனர். இறுதியில் வந்தி படுதோல்வி கண்டான். போட்டியின் விதிகளின்படி அவனும் கங்கையில் மூழ்கவேண்டியவன்தானே! அப்போதுதான் ஒரு ரகசியம் வெளிப்பட்டது. வருணலோகத்தில், அவனது தந்தையான வருணன் பெரியதொரு வேள்வி நடத்திட சான்றோர்கள் தேவைப்பட்டனர். தன்னுடன் போட்டியில் தோல்வியுற்றோரை கங்கையில் மூழ்கடித்து, வருண லோகத்திற்கு அனுப்பி வைத்ததாகவும், அவர்கள் அனைவரையுமே உயிருடன் மீட்டுத் தருவதாகவும், தன்னை மன்னிக்க வேண்டுமெனவும் மன்றாடினான் வந்தி. கஹோனகரையும், இதர முனிவர்களையும் துன்புறுத்திய காரணத்தால், அவர்களது சாபத்தை வருணன் ஏற்க நேர்ந்தது. இத்தனை பெருமைகளை சாதித்த அந்தச் சிறுவன், இன்னும் எட்டுக் கோணலுடன் நடமாடக்கூடாது என்பதற்காக அவனது அத்தனை கோணலும் நீங்கி, அவனும் பிறரைப் போல அழகுபொருந்தியவன் ஆனான். அப்படி அவன் புது உருக் கொண்ட திருத்தலம், காவிரிக் கரையில் உள்ளது. அதுதான் கூனஞ்சேரி.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: உடல் ஊனமுற்றோர், இளம்பிள்ளை வாதநோயால் பாதிக்கப்பட்டோர் இங்கு வழிபாடு செய்து பலனடைவது சிறப்பு.
நன்றி தினமலர்
மூலவர் : கைலாசநாதர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : பார்வதி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : கூனஞ்சேரி
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
பிரதோஷம், சிவராத்திரி
தல சிறப்பு:
உடல் ஊனமுற்றோர், இளம்பிள்ளை வாதநோயால் பாதிக்கப்பட்டோர் இங்கு வழிபாடு செய்து பலனடைவது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கூனஞ்சேரி, தஞ்சாவூர்.
பொது தகவல்:
வெளிப்பிரகாரத்தில் அஷ்டாவக்கிரன் வழிபட்ட எட்டு லிங்கங்கள் உள்ளன. இவர்கள் தவிர, அழகு மிகுந்த ஜடாமகுட சௌர்ந்தர்ய நாயகி என்று அழைக்கப்படும் அம்மன் சன்னதியும் உள்ளது.
பிரார்த்தனை
உடல் ஊனமுற்றோர், இளம்பிள்ளை வாதநோயால் பாதிக்கப்பட்டோர் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கும்பகோணத்தையடுத்து சுவாமிமலையிலிருந்து திருவைகாவூர் செல்லும் வழியில் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆதனூர், புள்ளப்புதங்குடி என்ற இரு வைணவத் திருப்பதிகளுக்கு இடையேயுள்ள இந்தத் திருத்தலத்தில் மூலவராக கைலாசநாதர் அருள்பாலிக்கிறார். அவரே அஷ்டா வக்கிரனின் குறைகளைக் களைந்தவர். அன்னையின் திருநாமம் பார்வதி.
தல வரலாறு:
மிதிலா நகரில் ஜனக மகாராஜன் மிகப்பெரிய வேள்வி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தான். அந்த வேள்விச் சாலைக்குள் செல்வதற்காக சிறுவன் ஒருவன் காத்திருந்தான். அவன் உடலில் அத்தனை கோணல். முதுகில் கூன். ஒரு கை பின்புறமும் முதுகை முன்புறமும் திரும்பி மடங்கியவாறு கோணல். கால்களில் ஒன்று மழிந்து மடங்கி, சரிவர நடக்க முடியாத ஒரு பரிதாப நிலை. வேள்விச் சாலைக்குள் நுழைந்து, தலைமைப் பண்டிதர் வந்தியை சந்திக்க வேண்டும் என்று அந்த பாலகன் கேட்டான். காவலர்களோ அவனது தோற்றத்தைக் கண்டு தடுத்து நிறுத்தினர். அவர்களுக்கிடையே பெருத்த வாக்குவாதம் ஏற்பட்டது. வேள்விச்சாலை முன்னால் ஏற்பட்ட குழப்பத்தைக் கண்ணுற்ற ஜனகமகாராஜன், தன் இருக்கையை விட்டு அகன்று, வேள்விச் சாலையின் வாசலுக்கு வந்தான். விவரம் தெரிந்து கொண்டான். எனது தலைமைப் பண்டிதன் வந்தி அத்தனை சாத்திரங்களையும் கற்றறிந்த அறிஞர். பல நூற்றுக்கணக்கான முனிவர்களும், வேத விற்பன்னர்களும் அவரிடம் வாதத்தில் தோற்று விட்டனர். தன்னிடம் தோற்றவர்களை வந்திப் பண்டிதர் கங்கையில் மூழ்கும்படி செய்துள்ளார். இதையெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா ? அப்படியிருந்தும், இப்படி ஒரு துணிச்சல் ஏன் ? என்று கோணல் சிறுவனைக் கேட்டார் ஜனகமகாராஜன்.
அதற்கும் பதிலளித்தான் அந்தச் சிறுவன், உம்முடைய தலைமைப் பண்டிதர், என் போன்ற வேதாந்தப் பயிற்சி பெற்றவர்களை இதுவரை சந்திக்கவில்லை. தன்னிடம் தோற்றவர்களை கங்கையில் மூழ்கடித்து விட்டதாக தற்பெருமை கொண்டுள்ளார். அறிஞனுக்கும் அகம்பாவம் சத்ரு ! எனது தந்தையாரையும் அவர் மூழ்கடித்துள்ளார். அந்த சோக வரலாற்றை என் அன்னை எனக்குக் கூறியுள்ளாள். அந்தக் கடனைத் தீர்க்க வந்திருக்கிறேன் நான். வேத சாஸ்திரங்களை பிறருக்கு உபதேசித்து வந்த பெரியோர்களில் ஒருவர், உத்தாலகர். அவரிடம் கஹோனகர் என்ற ஒரு சீடனும் இருந்தான். பக்தியும், ஒழுக்கமும் மிகுந்திருந்தாலும், கல்வி கற்கும் திறமை அவனிடம் பளிச்சிடவில்லை. எனவே, பிற சீடர்கள் அவனை எள்ளி நகையாடுவர். கல்வியில் மேன்மையுறாவிடினும், அவனது நியமம், பக்தி, குணம் ஆகியவற்றைக் கருதி, தனது மகள் சுஜாதாவையே அவனுக்கு மணமுடித்தார் உத்தாலகர்.
அவர்கள் இருவருக்கும் புத்திரனாகப் பிறந்தவன்தான் அந்தக் கோணல் சிறுவன். கருவிலிருந்தபோதே உத்தாலகர் மாணவர்களுக்கு அளித்த உபதேசங்களை உருப் போட்டு வந்தது அந்தச் சிசு. கஹோனகர், முற்றிலுமாக சாத்திர அறிவு பெறாததால், இரவு நேரங்களில், தான் கூறவேண்டிய பாடங்களை தப்பும் தவறுமாகப் படித்து வருவாராம். அன்னையின் வயிற்றில் இருந்தவாறே. இவற்றைக் கேட்ட அந்தச் சிசு. அய்யகோ ! வேத சாஸ்திரங்களை இப்படி உருக்குலைத்துவிடுகிறாரே என் தந்தை என மனமொடிந்து, தன் உடலைத் தானே பல வகையாக முறுக்கிக் கொண்டதாம். அதன் விளைவு, பிறக்கும்போது எட்டுக்கோணலுடன் விகாரமாக உருவெடுத்துப் பிறந்தது அந்தச் சிசு. அதற்கு அஷ்டா வக்கிரன் (எட்டுக் கோணல்) என்றே பெயரும் நிலைத்தது. அந்தக் குழந்தையும் வளர்ந்து, பன்னிரண்டு வயதை எட்டினான். அதற்குள்ளாகவே அத்தனை மறைகளையும், சாத்திரங்களையும், பிராமணங்களையும் முற்றும் கற்றறிந்தான். தாயின் மூலம் தன் தந்தை கஹோனகரும், ஜனகமகாராஜனின் சபைக்குச் சென்று வீடு திரும்பாத வரலாற்றைக் கேட்டறிந்தான். வந்தியை வாதத்தில் தோற்கடிக்கும் முடிவோடு வந்தவன் தான் இந்தக் கோணல் சிறுவன்.
அதன்பிறகு அஷ்டாவக்கிரன், வந்தியுடன் பல நாட்கள் வாதம் புரிந்தான். அவனது நாவன்மையில் அறிவொளி பளிச்சிட்டது கண்டவர் வியந்தனர். இறுதியில் வந்தி படுதோல்வி கண்டான். போட்டியின் விதிகளின்படி அவனும் கங்கையில் மூழ்கவேண்டியவன்தானே! அப்போதுதான் ஒரு ரகசியம் வெளிப்பட்டது. வருணலோகத்தில், அவனது தந்தையான வருணன் பெரியதொரு வேள்வி நடத்திட சான்றோர்கள் தேவைப்பட்டனர். தன்னுடன் போட்டியில் தோல்வியுற்றோரை கங்கையில் மூழ்கடித்து, வருண லோகத்திற்கு அனுப்பி வைத்ததாகவும், அவர்கள் அனைவரையுமே உயிருடன் மீட்டுத் தருவதாகவும், தன்னை மன்னிக்க வேண்டுமெனவும் மன்றாடினான் வந்தி. கஹோனகரையும், இதர முனிவர்களையும் துன்புறுத்திய காரணத்தால், அவர்களது சாபத்தை வருணன் ஏற்க நேர்ந்தது. இத்தனை பெருமைகளை சாதித்த அந்தச் சிறுவன், இன்னும் எட்டுக் கோணலுடன் நடமாடக்கூடாது என்பதற்காக அவனது அத்தனை கோணலும் நீங்கி, அவனும் பிறரைப் போல அழகுபொருந்தியவன் ஆனான். அப்படி அவன் புது உருக் கொண்ட திருத்தலம், காவிரிக் கரையில் உள்ளது. அதுதான் கூனஞ்சேரி.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: உடல் ஊனமுற்றோர், இளம்பிள்ளை வாதநோயால் பாதிக்கப்பட்டோர் இங்கு வழிபாடு செய்து பலனடைவது சிறப்பு.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கூனஞ்சேரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
கூனஞ்சேரி சிவனைத் தரிசித்தேன் அய்யா எனக்காகக்
கொ ஞ்சம் பிரார்த்தனைச் செய்யுஙகள்.
கொ ஞ்சம் பிரார்த்தனைச் செய்யுஙகள்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Similar topics
» செவிலிமேடு-அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
» கோடகநல்லூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திருநெல்வேலி
» லால்குடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திருச்சி
» திடியன் மலை அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், மதுரை
» ராஜபதி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தூத்துக்குடி
» கோடகநல்லூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திருநெல்வேலி
» லால்குடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திருச்சி
» திடியன் மலை அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், மதுரை
» ராஜபதி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தூத்துக்குடி
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|