தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சமாதி நிலை என்பது...

View previous topic View next topic Go down

சமாதி நிலை என்பது... Empty சமாதி நிலை என்பது...

Post by முழுமுதலோன் Tue Mar 25, 2014 10:30 am


சமாதி நிலை என்பது எந்த வித எண்ணங்களும் இல்லாது கண்களை மூடி அமர்ந்திருப்பது என்பதாகவே நம்மில் பலரும் புரிந்து கொண்டிருக்கிறோம். உண்மையில், சமம் + ஆதி = சமாதி, அதாவது ஆதியும் அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை நிலைக்கு சமனான ஒன்றுமற்ற அல்லது வெறுமையான மனநிலையில் இருப்பதே சமாதி எனப்படும்.

இன்னொரு வகையில் சொல்வதானால், கண்ணை திறந்து கொண்டு அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று கொண்டே, உள்ளார்ந்த விழிப்புணர்வுடன் "நான்" "எனது" "என்னுடையது" என்ற அகங்காரம் இல்லாத பக்குவமும் சமாதி நிலையாக சொல்லப் படுகிறது.

இதனை திருமூலர் தனது திருமந்திரத்தில் பின் வருமாறு கூறுகிறார்.
"சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்

சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி

சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே

சமாதி யமாதி தலைப்படுந் தானே"

- திருமந்திரம் -

"சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்

சமாதிகள் வேண்டாம் இறையுடன் னேகிற்

சமாதிதா னில்லை தானவ னாகிற்

சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே"

- திருமந்திரம் -
இந்த நிலை எல்லோருக்கும் சாத்தியமில்லை. குருவருளுடன் கூடிய விடாமுயற்சியும், பயிற்சியுமே இந்த நிலைக்கு இட்டுச் செல்லும். பதஞ்சலி முனிவர் தனது பதஞ்சலி யோகம் என்னும் நூலில் சாமாதி நிலைக்கு இட்டுச் செல்லும் எட்டுப் படிநிலைகளின் வகைகளை விரிவாக அருளியிருக்கிறார்.

கொங்கணவர் தனது “கொங்கணவர் வாதகாவியம்” என்ற நூலில் சமாதி நிலைகளைப் பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார். ஆறுவகையான சமாதி நிலைகள் இருப்பதாக கொங்கணவர் குறிப்பிடுகிறார்.
அவையாவன...

தத்துவல்ய சமாதி
சவிகற்ப சமாதி
நிருவிகற்ப சமாதி
அகண்டவிர்த்தி சமாதி
சஞ்சார சமாதி
ஆரூட சமாதி

தத்துவல்ய சமாதி:
முப்பத்தாறு வகை தத்துவங்களைக் கொண்ட இப்பௌதிக தேகத்தை சூட்சுமத்தில் அடக்கி, அந்த சூட்சமத்தை அழித்து அதனை காரணத்தில் அடக்கி, இந்த காரணத்தை மூலப்பிரகிருதியில் லயப்படுத்தி, அப்பிரகிருதியை சுத்த சைதந்யமாகவும் எங்கும் வியாபித்தவனாகவும் உணர்ந்து கொள்வதுடன் எல்லாம் என்று தெளிந்து அனைத்து பந்தங்களையும் அகற்றி நிற்பதே தத்துவல்ய சமாதியாகும்.

இதனை எளிமைப் படுத்தி எழுதினால் நான் என்பதை கரைத்து, தாமே எல்லாவற்றிலும் நிறைந்தும், மறைந்தும் நிற்பதை உணர்ந்த ஒரு உயர் நிலையாக கூறப் படுகிறது.

சவிகற்ப சமாதி:
இந்த சமாதி நிலை என்பது யோகத்தின் மிக உயர்ந்த நிலையாகும். வெறும் வார்த்தைகளால் இவற்றை விவரித்து உணர்த்துவதும், உணர்வதும் கடினமானது. இவை யாவும் உணர்ந்து அறிந்து அனுபவிக்க வேண்டிய அதி உயர்நிலைகள்.இந்த சுவிகற்பச் சமாதி இரண்டு வகைகளாக கூறப் படுகிறது. அவையாவன “சத்தானு சமாதி”, “திரைய சமாதி” என்கிறார் கொங்கணவர்.
தத்துவலய சமாதி நிலையில் இருக்கும் போது தன்னுள்ளே பட்சியின் ஓசை எழும்புவதை உணர்ந்து அதில் லயப்பட்டிருப்பதே சத்தானு சமாதி எனப்படுமாம்.
தத்துவலய சமாதி நிலையில் தன்னைத் தானே அனுசந்தானம் செய்து நிற்றலே திரைய சமாதி என்கிறார்.

நிருவிகற்ப சமாதி:
நாம் பார்த்த தத்துவலய சமாதியம், சத்தானு சமாதியும் முழுமையாக சித்தியாகி விட்டால், தன்னை மறந்த துக்கத்தைப் போல் ஒரு மயக்க நிலை ஏற்படுமாம்.இந்நிலையில் எந்த ஒரு சத்தமும் அவர்களுக்கு கேட்காதாம். சுத்தமானது பூரணத்துடன் சேர்ந்து சுத்த சைதந்ய நிலையை அடைந்துவிடும் என்கிறார். இந் நிலைக்கே நிருவிகற்ப சமாதி பெயர்.

மேலும்,சமாதியை விட்டு எழுந்த பிறகும், சமாதியிலிருக்கும் பொழுதும் காலத்திற்குட்பட்டு இயங்கும் இப் பிரபஞ்சமெல்லாம் பொய் என்றும், இவை யாவும் மாயா விகாரத்தால் தோன்றியது என எண்ணி இவற்றின் மேலுள்ள பாசத்தை நீக்கி எதையும் நினைக்காமல் இருத்தலே முழுமையான நிருவிகற்ப சாமாதியாகும் என்கிறார் கொங்கணவர்.
அகண்டவிர்த்தி சமாதி..

இந்த அகண்டவிர்த்தி சமாதி நிலையானது எப்படி இருக்குமென்றால் காற்றில்லாத இல்லத்தில் வைக்கப்பட்ட ஒரு விளக்கின் சுடரைப்போலவும், தண்ணீரில் கரைக்கப்பட்ட உப்பைப் போலவும் யோகத்தில் மனமானது முதிர்ந்து நிற்க்குமாம். இந்த ஆனந்த நிலையில் ஒரு கடிகை நேரம் லயித்தாலும் கிடைக்கும் பலன்கள் அதிகம் என்கிறார். அந்த பலன்களை பின் வருமாறு பட்டியலிடுகிறார் கொங்கணவர்.

கோடி அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்குமாம். மேற் சொன்னவாறு தினமும் பழகி வந்தால் மனமானது சுழித்தியில் அடங்குமாம். இதை வெறும் சுழித்தீ தானே என்று எண்ணி கைவிட்டு விடாமல் சரியாக தொடர்ந்து செய்து வந்தால் அனைத்துமே சித்தத்தில் அடங்குமாம் அப்படி சித்தத்தில் அடங்கி பின் சித்தமும் பிரம்மத்தில் அடங்குமாம். அப்போது நீயே பிரம்மம் என்பதை அறிவாய் என்கிறார். இதுவே அகண்டவிர்த்தி சமாதி யாகும்.

சஞ்சார சமாதி:
அகண்டவிர்த்தி சமாதியை விட்டு எழுந்து வெளியுலகமான பிரபஞ்சத்தில் உலாவும் போதும், பிரபஞ்சத்தில் கடமைகள் மற்றும் வேலைகளில் ஈடுபடும் பொழுதும் சமுத்திர அலையால் உண்டான கடல் நுரையைப் போல அனைத்துமே மாயை என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும்.
சிலந்திப் பூச்சியானது தான் உருவாக்கும் ஒருவகையான பசைத்தன்மை கொண்ட பொருளால் வலையை உண்டாக்கிக் கொண்டு அதில் தானே அதில் வசிப்பதை போலவும், கூர்மம் என்று அழைக்கப்படும் ஆமையானது தன்னுடன் தோன்றிய ஓட்டினுள் தன்னை அடக்கிக் கொள்வது போலவும், கனவு போன்ற இந்த பூலோகவாழ்கை அழிவடையும் தன்மை உடையது என்றும் உணர்ந்து, என்னை தவிர வேறொன்றும் இல்லை என்பதை நினைவில் நிறுத்தி பூலோக வாழ்வியல் விவகாரங்களில் ஈடுபடும்போது எதுவும் உன்னை சலனப்படுத்தாது என்பதை உணர்ந்திருக்கும் நிலையே சஞ்சார சமாதி என்கிறார்.

ஆரூட சமாதி:
உலகில் இருக்கும் அனைத்துப் பொருட்களும் என்னிடம் இருந்தே உண்டாயிற்று, நான் தான் அனைத்து பொருட்களிலும் நிறைந்திருக்கிறேன் என்பதாக உணர்வதுடன், தானே பிரம்மம், தானே அனைத்திற்க்கும் ஆதாரமானவன் என்ற உயரிய நிலையில் இருந்துகொண்டு, உன் முன்னால் தேவதைகள் தோன்றினாலும் கூட அவற்றை பொருட் படுத்தாமல் நீயே பிரம்மமாய் இருக்கும் நிலையான சஞ்சார சமாதியில் எல்லாம் மாயை என்பதை தெளிந்த பின்னர் மேலான தேவதைகள் முதல் வேறு எவரும் உன் முன்னால் வந்து நின்றாலும் அவற்றை காற்றைப் போல் நினைத்து அவை அனைத்துமே உன்னிடம் இருந்து தோன்றியதே என்ற உண்மையை உணர்ந்து மலை போல அசைந்து கொடுக்காது நீயே பிரம்மம் என்ற நிலையில் இருத்தல் ஆருட சமாதி எனப்படும். இதுவே இறுதி முடிவான நிலையும் ஆகும் என்கிறார் கொங்கணவர்.

via: Sasithara Sarma




muganool
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமாதி நிலை என்பது... Empty Re: சமாதி நிலை என்பது...

Post by rammalar Tue Mar 25, 2014 10:34 am

-
இதெல்லாம் படிக்கிற வயசு இன்னும்
வரலையே...!!
-
 பயந்து ஓடு பயந்து ஓடு 
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum